என் மலர்
நீங்கள் தேடியது "crime"
- பல்வேறு அரசியல் அமைப்பினர், பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்
- சாதாரணமாக நடமாடும் நாய், பூனை, எலிகளை ஆஸ்பத்திரி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும்
புதுச்சேரி:
காரைக்கால் நகரின் மையப் பகுதியில் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரி கடந்த பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வருவதாக பல்வேறு அரசியல் அமைப்பினர், பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். சாதாரண ஜுரம், விபத்து என சென்றால்கூட, அண்டை மாநிலங்களுக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்யும் அவல நிலை உள்ளது. இந்நிலையில், அண்மையில் அரசு ஆஸ்பத்திரியின் உள்ள லிப்ட் உடைந்த நிலையில் உள்ளது.
கடந்த சில நாட்களாக நகரின் பல இடங்களில் சுற்றித்திரிந்த நாய்களின் கூட்டம், ஆஸ்பத்திரியில் உள்ளே குறிப்பாக பிரசவ பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் சர்வ சாதாரணமாக சுற்றித் திரிவதால், நோயாளிகள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் பெருச்சாளி மற்றும் பூனைகள் பாதுகாக்கப்பட்ட அறுவை சிகிச்சை கூடம், மருந்தகம், கேண்டின் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பகலில் கூட நடமாடுவதால் நோயாளிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே ஆஸ்பத்திரியில் சர்வ சாதாரணமாக நடமாடும் நாய், பூனை, எலிகளை ஆஸ்பத்திரி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- சைபர் கிரைம் எவ்வாறு நடக்கிறது? என மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
- பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நீடாமங்கலம்:
வலங்கைமானில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நி லைப்பள்ளிகளில் படிக்கும் 11, 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வலங்கைமான் போலீஸ் சப்- இன்ஸ்பெ க்டர் ராஜேஷ்குமார் கலந்துகொண்டு, சைபர் கிரைம் எவ்வாறு நடக்கிறது? எவ்வாறு அதை எதிர்கொள்வது? என்பது குறித்து மாணவ- மாணவி களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- போலீசார் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வரவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
- சிறப்பு தணிக்கையின் மூலம் சென்னையில் இதுவரை 2,493 பேர் மீது சட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும், குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். மேலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்கள், கொள்ளை, திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பில் ஈடுபடுபவர்கள், ஆபாச படம் தயாரித்து மிரட்டு பவர்கள், மணல் கடத்தல், உணவு பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் ஆகியோரை கண்காணித்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் கொலை, கொலைமுயற்சி வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் போலீசாருக்கு உததரவிட்டார். அதன்படி சென்னையில் ரவுடிகளுக்கு எதிராக ஒருநாள் சிறப்பு தணிக்கையை போலீசார் மேற்கொண்டனர். இந்த தணிக்கையின் போது கொலை, கொலைமுயற்சி வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் மற்றும் ஜாமீனில் வெளியே வந்த ரவுடிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். இனி குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்தனர். போலீசார் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வரவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும் பல்வேறு குற்றங்களில் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து கடந்த 2 மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்த 6 ரவுடிகளையும் போலீசார் கைது செய்தனர். மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கை யாக 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இந்த சிறப்பு தணிக்கையின் மூலம் சென்னையில் இதுவரை 2,493 பேர் மீது சட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- குற்ற சம்பவ தொகுப்புகளை அடிப்படையாக கொண்டு ‘ஜி.ஐ.எஸ்’ எனப்படும் புவியியல் தகவல் அமைப்பு வரைபட திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
- ரூ.6.5 கோடி மதிப்பு கொண்ட இந்த புவியியல் தகவல் அமைப்பு வரைப்பட திட்டத்தை போலீஸ் கமிஷன் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
சென்னையில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக குற்றம் நடைபெறும் இடங்களை உடனே தெரிந்து கொண்டு அங்கு விரைந்து செல்லும் வகையிலும், குற்றங்கள் நடக்காதவாறு தடுக்கும் வகையிலும் குற்ற சம்பவ தொகுப்புகளை அடிப்படையாக கொண்டு 'ஜி.ஐ.எஸ்' எனப்படும் புவியியல் தகவல் அமைப்பு வரைபட திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டத்துக்காக கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளில் சென்னையில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, ஆள்கடத்தல் ஆகிய குற்ற சம்பவங்கள் நிகழ்ந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் துல்லியமாக சேகரித்து தொகுக்கப்பட்டு உள்ளன.
இவை எந்த வகை குற்றங்கள், எந்த இடத்தில், எந்த தினத்தில், எந்த நேரத்தில் நடைபெற்றது என்பது உள்பட அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டு வரைபடமாக்கப்பட்டு உள்ளது.
102 போலீஸ் நிலையங்களில் இருந்தும் 385 போலீசார் குற்ற சம்பவங்கள் அதிகம் நடக்கும் இடங்களை கண்டறிந்து தகவல்களை சேகரிக்க கிட்டத்தட்ட 6 மாதங்கள் செலவிட்டனர். இந்த வரை படம் ஒவ்வொரு நாளும் நிகழ்நேர அடிப்படையில் புதுப்பிக்கப்படுகிறது.
சென்னை நகரம் முழுவதும் உள்ள 67 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்களின் அமைவிடம் பள்ளிகள், கல்லூரிகள், பெண்கள் விடுதிகள், மருத்துவமனைகள், அரசு கட்டிடங்கள், வழிபாட்டுத் தலங்கள், வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள், விபத்து பகுதிகள் போன்றவையும் புவியியல் தகவல் அமைப்பு வரைபடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த வரைபடத்தில் ஒரு வழக்கு மட்டும் பதிவாகியுள்ள பகுதிகளை குறிக்க மஞ்சள் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 3-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகும் இடங்களில் ஆரஞ்சு புள்ளி உள்ளது. அதிக குற்றங்கள் நடைபெறும் பகுதி சிவப்பு நிறமாக உள்ளது.
பாலியல் தொல்லை, கற்பழிப்பு, போக்சோ போன்ற குற்றங்களுக்கு வெவ்வேறு குறியீடுகள் ஒதுக்கப்படுகிறது.
இந்த வரைப்படத்தின் படி கடந்த 7 ஆண்டுகளில் வடசென்னை பகுதிகளில் கொலை, பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை, கற்பழிப்பு குற்றங்கள் அதிகம் நிகழ்ந்து உள்ளன. குடிசைப்பகுதிகள் மற்றும் ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நடந்துள்ளன.
தென்சென்னை, மேற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திருட்டு சம்ப வங்கள் அதிகம் நடந்து உள்ளன. சென்னை நகரம் முழுவதும் பரவலாக வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்த வரைப்பட திட்டத்தின் மூலம் குற்றங்கள் ஒரு இடத்தில் நடைபெற்றால் அருகில் உள்ள ரோந்து போலீசாரை உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து செல்ல வைக்க முடியும். மேலும் குற்றவாளி தப்பிச் சென்றால் அவர் எந்த வழியாக தப்பிச் சென்றார், அவரது உருவம் எந்த கேமராவில் துல்லியமாக பதிவாகி இருக்கும் என்பது போன்ற விவரங்களையும் புவியியல் தகவல் அமைப்பு வரைபடம் மூலம் தெளிவாக உடனடியாக கண்டறிய முடியும்.
இதன் மூலம் ஒரு குற்றத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்க முடியும். குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய முடியும். குற்ற சம்பவங்களை உடனடியாக தடுக்கும் நடவடிக்கைகளில் 5 ஆயிரம் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்ட போலீஸ் ரோந்து வாகனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளது. சிறப்பு மொபைல் செயலியுடன் 2000 ரோந்து போலீசாரும் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இந்த வரைபட திட்டத்தில் உள்ள தானியங்கி வாகன இருப்பிட அமைப்பானது குற்றம் நடைபெறும் இடத்தின் அருகில் உள்ள ரோந்து வாகனத்தை அனுப்புவதற்கு பயன்படுத்தப்படும். இதனால் போலீசாருக்கு நேரம் மிச்சமாவதுடன் விரைவாக சம்பவ இடத்தை அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும்.
ரூ.6.5 கோடி மதிப்பு கொண்ட இந்த புவியியல் தகவல் அமைப்பு வரைப்பட திட்டத்தை போலீஸ் கமிஷன் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில்,
"சென்னை நகரில் நடக்கும் குற்றங்களின் முறைகள் மற்றும் அதன் போக்கை ஆய்வு செய்ய இது எங்களுக்கு உதவியாக இருக்கும். சென்னை நகரில் நடக்கும் பாலியல் குற்றங்கள், கற்பழிப்பு, போக்சோ குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அனைத்தையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ குற்றங்கள் அதிக மாக இருந்தால் குற்றங்களை தடுக்க அந்த பகுதிகளுக்கு போலீசார் அதிக ரோந்து வாகனங்களை ஒதுக்கலாம். அந்த பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் அல்லது அனைத்து பெண் போலீ சாரையும் போலீசார் நியமிக்கலாம்" என்றார்.
- திரெளபதி அம்மன் கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறுவது உறுதியான தகவல் கிடையாது.
- குலதெய்வ வழிபாடு என்பது ஜாதிக்கு அப்பாற்பட்டதாகும்.
திருப்பூர் :
இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜூன் சம்பத் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:- கீழ்பவானி பாசன விவசாயிகள் கடந்த 4 நாள்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களது கோரிக்கை நியாயமானது. எனவே நீா்பாசனத் துறை அமைச்சா், மாவட்ட கலெக்டர் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறுவது உறுதியான தகவல் கிடையாது. அப்படியே இருந்தாலும் குலதெய்வக் கோவில்களை பூட்டுவது சரியானது அல்ல. பல இடங்களில் பட்டியலின மக்கள் திரெளபதி அம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனா். எனவே இந்த விஷயத்தில் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வுகாண வேண்டும்.
அதேபோல கரூா் மாவட்டத்திலும் ஒரு கோவிலைப் பூட்டியுள்ளனா். குலதெய்வக் கோவில்களை பூட்டுவதை மிகப்பெரிய தெய்வ குற்றமாக நாங்கள் கருதுகிறோம். குலதெய்வ வழிபாடு என்பது ஜாதிக்கு அப்பாற்பட்டதாகும். எனவே குலதெய்வக் கோவில்களை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக அரசு நிறுத்த வேண்டும் என்றாா்.
இதையடுத்து, சக்தி திரையரங்கம் அருகில் இந்து மக்கள் கட்சி சாா்பில் சனாதன இந்து தா்ம எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சமூக செயற்பாட்டாளா் நடிகை கஸ்தூரி, இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அலாரம், சிசிடிவி கேமரா ஆகியவை செயல்படவில்லை.
- தமிழகத்தில் கோயில்களின் பாதுகாப்புக்காக ஆண்டுதோறும் ரூ.44 கோடி செலவு செய்யப்படுகிறது.
அவினாசி:
திருப்பூா் மாவட்டம், அவிநாசிலிங்கேஸ்வரா் கோவிலில் அண்மையில் திருட்டுச் சம்பவம் நடைபெற்றது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில் முன்னாள் ஐ.ஜி.யும், உலக சிவனடியாா்கள் திருக்கூட்டத்தின் மாநில தலைமை ஆலோசகருமான பொன்மாணிக்கவேல் அவிநாசிலிங்கேஸ்வரா் கோவிலை பாா்வையிட்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:- அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற திருட்டுச் சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்த அவிநாசி போலீசாருக்கு பாராட்டுகள். இச்சம்பவம் தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா், ஆணையா் ஆகியோா் ஆய்வு செய்திருக்க வேண்டும்.
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அலாரம், சிசிடிவி கேமரா ஆகியவை செயல்படவில்லை. இதை கவனிக்காமல் இருந்த கோயில் இணை ஆணையா், செயல் அலுவலரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். மேலும், இருவருக்கும் குறைந்தபட்சம் 6 மாதம் வரை 50 சதவீத சம்பளம் மட்டுமே வழங்க வேண்டும். இச்சம்பவத்தில் பிடிபட்ட குற்றவாளி உண்மையில் மனநோயாளியா என்பதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கோயில்களின் பாதுகாப்புக்காக ஆண்டுதோறும் ரூ.44 கோடி செலவு செய்யப்படுகிறது. ஆனால், பாதுகாப்பு பணிக்கு உடல் தகுதியில்லாத முதியவா்கள் நியமிக்கப்படுகின்றனா். இவா்கள் தூங்கிவிட்டு சம்பளம் வாங்கிச் செல்கின்றனா். அதேநேரம் கோயில் அா்ச்சகா்கள் மற்றும் மங்கள வாத்தியக்காரா்களுக்கு முறையாக சம்பளமும் வழங்கப்படுவதில்லை. எந்தெந்த கோயிலில் அா்ச்சகா்கள் உள்ளிட்டவா்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளதோ, அந்தக் கோயிலில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும். மேலும், தமிழகத்தில் எந்தவொரு கோயிலிலும் குற்றச் சம்பவங்கள் நடக்கக் கூடாது என்றாா்.
- உங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.
- குற்றச் செயல்களில் ஈடுபட்டால் ஜாமீனில் வெளியே வர முடியாதபடி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
சென்னை:
சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, முன்விரோத மோதல்கள் உள்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக ரவுடிகளுக்கு எதிரான ஒருநாள் சிறப்பு நடவடிக்கையை சென்னை போலீசார் மேற்கொண்டனர். அதன்படி சரித்திர பதிவேடு குற்றவாளிகள், குற்றப் பின்னணி கொண்ட ரவுடிகள், குற்றச் செயல்களில் ஈடுபட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளவர்கள் என 804 பேரின் வீடு தேடிச் சென்று தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
மேலும் "உங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் ஜாமீனில் வெளியே வர முடியாதபடி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்தனர். மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "சென்னையில் ஏற்கனவே, 459 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,262 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெறப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தலை மறைவாக இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் தேடுதலை அறிந்து மேலும் 10 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் நீதிமன்றங்களில் சரணடைந்து வழக்குகளில் ஆஜராகி உள்ளனர். போலீசாரின் இதுபோன்ற முன்எச்சரிக்கை நடவடிக்கை தொடரும்" என்றனர்.
- சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டதில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் சாராய கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்தும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மேலும் பல்வேறு மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள வேட்டைக்காரனிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பூமிக்கு அடியில், பேரல்களில் 200 லிட்டர் சாராய ஊரல்கள் புதைத்து வைக்கப்ப ட்டிருந்தை கண்டு பிடித்தனர்.
பின்னர் 200 லிட்டர் சாராய ஊரலை தரையில் கொட்டி அழித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கண்டிய ன்காடு பகுதியை சேர்ந்த குழந்தை வேல் என்பவரை கைது செய்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு ஹர்ஷ் சிங் சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதுபோன்ற குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும், மேலும் குற்றவாளிகள் அதிரடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
- சகோதரி குழந்தைகளின் காதணி விழா எதிர்ப்பை மீறி செல்ல முயன்றதால் வெறிச்செயல்
திருச்சி,
திருச்சியை அடுத்த திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள இனாம்குளத்தூர் காவல்காரர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 56). கோவில் பூசாரியான இவருக்கு பெரியண்ணன் (36) என்ற மகனும், சுமதி, லட்சுமி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் செய்து கொடுத்து வெளியூர்களில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரியண்ணனுக்கும் அவரின் இரண்டு சகோதரிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் சகோதரிகளுடன் அவர் பேசுவதை நிறுத்திக்கொண்டார். இதற்கிடையே வீரப்பூரில் வசிக்கும் லட்சுமி தனது இரு குழந்தைகளுக்கு இன்று (புதன்கிழமை) காதணி விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்பேரக் குழந்தைகளின் இந்த காதணி விழாவுக்கு வேலாயுதம் தனது மனைவியுடன் செல்ல தயாரானார். இதை அறிந்த பெரியண்ணன் தனது தந்தையிடம் காதணி விழாவுக்கு நீங்கள் செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் மகனின் எதிர்ப்பை அவர் கண்டு கொள்ளவில்லை. இதனால் குடிபோதையில் இருந்த பெரியண்ணன் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து வேலாயுதத்தின் முதுகு மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக வெட்டினார். இதில் அவரது குடல் சரிந்து விழுந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். பின்னர் பெரியண்ணன் அங்கிருந்து தப்பி ஓடினார். தாய் ராசம்மாள் மற்றும் உறவினர்கள் வேலாயுதத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இனாம்குளத்தூர் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பெரிய ண்ணனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வழக்கம் போல் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நோக்கில் வலம் வந்து கொண்டிருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
- கொள்ளையடிப்பது மட்டுமின்றி நகை பறிப்பு போன்ற சம்பவங்களிலும் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இரண்டு திருடர்களை டெல்லி காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கைதான இரு கொள்ளையர்களும், தாங்கள் கொள்ளையடிக்கும் சம்பவங்களை வீடியோ பதிவு செய்து அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். இவ்வாறு செய்வதன் மூலம் அதிக இளைஞர்களை தங்களுடன் இணைத்துக் கொள்ள இந்த திருடர்கள் திட்டம் தீட்டினர்.
ஸ்வரூப் நகரை சேர்ந்த பண்டி (23 வயது) மற்றும் ராகுல் (22 வயது) ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நோக்கில் வலம் வந்து கொண்டிருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர் என்று டெல்லி வடமேற்கு பகுதிக்கான காவல் துறை துணை ஆணையர் ஜிதேந்திர குமார் மீனா தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட இருவரும் ஸ்வரூப் நகர், முகுந்த்பூர் மற்றும் நகரின் எல்லை பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து நான்கு துப்பாக்கிகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளையடிப்பது மட்டுமின்றி நகை பறிப்பு போன்ற சம்பவங்களிலும் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.