search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "abroad"

    • வெளிநாடுகளில் இல்லாமல் நாட்டுக்குள்ளே இந்தியர்கள் திருமண கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
    • திருமணத்திற்காக பொருட்கள் வாங்கும் போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

    107-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்தியர்கள சிலர் தங்களது திருமணங்களை வெளிநாடுகளில் வைக்கின்றனர். இது தேவைதானா ? நமது நாட்டிலேயே திருமணத்தை வைத்துக் கொண்டால், இந்தியாவின் பணம் வெளியே எங்கும் செல்லாமல் நாட்டுக்குள்ளேயே இருக்கும். பொருளாதாரத்தை மேம்படுத்த அது உதவியாக இருக்கும்.

    வெளிநாடுகளில் இல்லாமல் நாட்டுக்குள்ளே இந்தியர்கள் திருமண கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

    அதேபோல், திருமணத்திற்காக பொருட்கள் வாங்கும் போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனால் இந்திய சந்தை மதிப்பில் ரூ.5 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும் என வணிக அமைப்புகள் கணித்துள்ளன

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இம்ரான் மகன் தஸ்தகீர் (வயது 23) என்பவர் சவுதி அரேபியாவுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 6.95 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
    • தலைவாசல் போலீசார் கைது செய்து ஆத்தூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்தவர்கள் அன்சர், ரஹீம், நசீம்.

    இவர்களிடம் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இம்ரான் மகன் தஸ்தகீர் (வயது 23) என்பவர் சவுதி அரேபியாவுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 6.95 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து திரும்பி வந்த அவர்கள் தங்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தஸ்தகீர் பணம் வாங்கி மோசடி செய்ததாக தலைவாசல் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மேலும் அவர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் பகுதியில் 7 பேரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளதும், நாகப்பட்டினம் சிறையில் தஸ்தகீர் அடைக்கப்பட்டு ள்ளதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவரை தலைவாசல் போலீசார் கைது செய்து ஆத்தூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் அருண்குமார், தஸ்தகீரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    • புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த அபுதாகிர் என்பவரே போலி பாஸ்போர்ட்டை தயாரித்து கொடுத்தது தெரியவந்தது.
    • முக்கிய குற்றவாளியான அபுதாகிரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் பாஸ்போர்ட்டுகளை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அந்தோணிசாமி என்பவர் போலி பாஸ்போர்ட்டுடன் வந்திருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக குடியுரிமை அதிகாரிகள் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரிடம் புகார் அளித்தனர். இதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது. உதவி கமிஷனர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் எமர்சன் ஆகியோர் நடத்திய விசாரணையில் கோவிந்தசாமிக்கு போலி பாஸ்போர்ட் வழங்கியது ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூரை சேர்ந்த புரோஷ்கான் என்பது தெரியவந்தது.

    சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். புரோஷ்கானிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த அபுதாகிர் என்பவரே போலி பாஸ்போர்ட்டை தயாரித்து கொடுத்தது தெரியவந்தது. அவரது வீட்டுக்கு போலீசார் சென்றபோது அபுதாகிர் தப்பி ஓடிவிட்டார். அவரது வீட்டில் இருந்து 100 பாஸ் போர்ட்டுகள் போலி ஆவணங்கள், மலேசியா சிம்கார்டுகள், ரூ.57 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் வெளிநாடு பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் புரோஷ்கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முக்கிய குற்றவாளியான அபுதா கிரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • விவசாயிகள் வெளிநாட்டில் உயர் தொழில்நுட்ப பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
    • விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    வேளாண் அமைச்சர் 2023-24 நிதியாண்டின் நிதி நிலை அறிக்கை உரையில் உழவர்களுக்கு அயல்நாட்டில் உயர் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி தோட்டக்கலை, வேளாண் பயிர் சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்களை பெறும் வகையில் இஸ்ரேல், நெதர்லாந்து போன்ற அயல்நாடுகளுக்கு சென்று பயன்பெறுவதற்கு உழவர் பெரு மக்களுக்கு இது வரப்பிரசாதமாகும்.

    எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் tnhorticulture.tn.gov.in/thnortinet/registration-new.php என்ற இணையதள முகவரியில் நேரடியாகவோ அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலர் மூலமாகவோ பதிவு செய்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    • எங்களை போலீசார் பிடித்து வைத்து ஜெயிலில் அடைத்து வைத்துள்ளனர்.
    • வயிற்று பிழைப்புக்காக வெளிநாட்டுக்கு சென்றவர்கள் தற்போது உயிருடன் உள்ளார்களா.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பாபநாசம் தாலுகா கீழ கோவில் பத்து உடையார் கோயிலை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தை சேர்ந்த யுவராஜ், ராமு, சிகாமணி, மணிமாறன் ஆகிய 4 பேர் தோட்ட வேலைக்காக மலேசியா நாட்டிற்கு செல்ல முடிவு செய்தனர்.

    இதற்காக அவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூர் சென்று அங்கிருந்து விமானம் மூலம் தாய்லாந்து சென்றனர். அங்கிருந்து மலேசியா செல்ல இருப்பதாக அவர்களின் குடும்பத்தினரிடம் கூறினர்.

    ஆனால் அதன் பிறகு ஒரு எண்ணில் இருந்து எங்களுக்கு ஒரு குரல் செய்தி வந்தது.

    அதில் இது போலீஸ்காரர் தொலைபேசி என்றும், எங்களை போலீசார் பிடித்து வைத்து ஜெயிலில் அடைத்து வைத்துள்ளனர் எனவும் கூறி துண்டிக்கப்பட்டது.

    அதன் பிறகு எந்த ஒரு தகவலும் இல்லை.

    இதனால் மன வேதனை அடைந்த அந்த நான்கு பேரின் குடும்பத்தினரும் திரும்பவும் அவர்களை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக வெளிநாட்டுக்கு சென்றவர்கள் தற்போது உயிருடன் உள்ளார்களா ? இல்லையா ? என்ற எந்த தகவலும் எங்களுக்கு தெரியவில்லை.

    எனவே மலேசியா நாட்டிற்கு வேலைக்கு சென்ற 4 பேரையும் பத்திரமாக மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டு வாழ் கேரள மக்களிடம் நிதி திரட்டும் யோசனையை கைவிட வேண்டும் என அரசுக்கு கேரள மாநில காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது. #KeralaFlood #KVThomas
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பெய்த கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சுமார் 483 பேர் இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். மேலும் பலர் தங்கள் வீடு, உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

    கேரள மாநிலத்தின் இந்த நூறாண்டு காணாத மிகப்பெரிய துயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும், பன்மொழி பேசும் மக்களும் பங்கெடுத்தனர். அவர்கள் அழித்த நிவாரணத்தொகை மட்டும் ஆயிரம் கோடியை எட்டியது. மேலும், பல கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களும் கேரளாவுக்கு வழங்கப்பட்டது.



    இந்த கனமழையால் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சேதத்தை சரிசெய்ய நிதி திரட்டும் முனைப்பில் தற்போது கேரள அரசு உள்ளது. முன்னதாக கேரள மாநிலத்துக்கு நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் அளிக்க முன்வந்தது. ஆனால் அதை மத்திய அரசு வாங்க மறுத்துவிட்டது.

    இதையடுத்து, கேரளாவில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய வெளிநாடுகளிடமும், வெளிநாட்டு வாழ் கேரள மக்களிடமும் நிதி திரட்ட கேரள அரசு முடிவு செய்தது. இதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு வெளிநாடுகளுக்கு சென்று நிதி திரட்டும் என தெரிவிக்கப்பட்டது.



    இந்நிலையில், அரசின் இந்த முடிவை கைவிடுமாறு கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.வி. தாமஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், வெளிநாடுகளுக்கு அமைச்சர்களை அனுப்பி கையேந்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் எனவும், இதனால், இந்தியா மற்றும் கேரள மக்களின் சுயமரியாதை பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதேபோல், கேரள மந்திரிகள் நிதி திரட்டுவதாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை கைவிட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைந்து புணரமைக்க பாடுபட வேண்டும் என கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்மந்திரி உம்மன்சாண்டி கூறியுள்ளார். #KeralaFlood #KVThomas
    திருவாரூர் அருகே வெளிநாடு அனுப்புவதாக கூறி ரூ.23½ லட்சம் பணம் பெற்று ஏமாற்றிய கணவன்-மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் அருகே திருக்கண்ணமங்கை பகுதியை சேர்ந்தவர் சுதிர்தராஜ். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(வயது55). கொல்லாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி செல்வபாக்ய செந்தில் குமாரி(50). பூந்தோட்டம் உதவிபெறும் நடுநிலைப்பள்ளி ஆசிரியை. இவர்களது மகன் அருண் பாக்கியராஜ். இவர்களது தோழி சுப்புலட்சுமி.

    அருண்பாக்கியராஜ் அடிக்கடி வெளிநாடு சென்று வருவார். இதனால் அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் வெளிநாடு அனுப்புவதாக முத்துராமலிங்கம், அவரது மனைவி செல்வபாக்ய செந்தில்குமாரி, இவர்களது மகன் அருண்பாக்கியராஜ் மற்றும் சுப்புலட்சுமி ஆகியோர் ஆசை வார்த்தை கூறி பணம் பெற்றுள்ளனர். இவ்வாறு கடந்த 2 வருடங்களாக அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் ரூ.23½ லட்சம் வரை பணம் வாங்கியுள்ளனர்.

    ஆனால் அவர்கள் கூறியபடி யாரையும் இதுவரை வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை. இதனால் பணத்தை திரும்ப தரும்படி பலமுறை கேட்டும் தரவில்லை. எனவே வெளிநாடு அனுப்புவதாக கூறி ஏமாற்றிய 4 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும்.

    இவ்வாறு அவர் புகார் மனுவில் கூறியுள்ளார்.

    அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அரசு பள்ளி ஆசிரியர்களான கணவன்-மனைவி மற்றும் இவர்களது மகன், தோழி உட்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    பிரதமர் நரேந்திர மோடி ருவாண்டா, உகாண்டா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக இன்று புறப்பட்டு செல்கிறார். #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி ருவாண்டா, உகாண்டா, தென்ஆப்பிரிக்கா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக இன்று (திங்கட்கிழமை) புறப்படுகிறார். முதல் நாள் பயணமாக ருவாண்டா நாட்டுக்கு மோடி இன்று செல்கிறார்.

    கடந்த 20 ஆண்டுகளில் ருவாண்டா செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். இந்த பயணத்தின் போது கிகாலி என்ற இடத்தில் 1994-ம் ஆண்டு இனப்படுகொலை நடந்த இடத்தை பார்வையிடுகிறார்.

    அதை தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) உகாண்டாவுக்கு மோடி செல்கிறார். உகாண்டா நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். உகாண்டா நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ள முதல் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.



    பின்னர் 25-ந் தேதி தென்ஆப்பிரிக்காவுக்கு மோடி செல்ல உள்ளார். அங்கு நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் சர்வதேச நாடுகளிடையே அமைதி, பாதுகாப்பு குறித்த முக்கிய அம்சங்கள் இடம்பெறுகின்றன.

    ஆப்பிரிக்க பயணத்தின் போது 3 நாடுகளின் அதிபர்களை தனித்தனியாக சந்தித்து, இந்தியாவுடன் உறவை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் அங்குள்ள இந்திய சமூகத்தினருடன் அவர் கலந்துரையாட உள்ளார் என இந்திய வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.  #PMModi
    இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் தரமற்ற பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவேண்டாம் என்று மத்திய மந்திரி சுரேஷ் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சென்னை:

    மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி சுரேஷ் பிரபு நேற்று சென்னைக்கு வந்திருந்தார். சென்னை கிண்டியில், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (எப்.ஐ.இ.ஓ.) ஏற்பாடு செய்திருந்த ஏற்றுமதியாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

    அப்போது மத்திய மந்திரி சுரேஷ் பிரபு பேசியதாவது:-

    ஏற்றுமதியாளர்களை எப்போதும் என் குடும்பத்தினராகவே கருதுகிறேன். நாம் எந்த வகையில் சேர்ந்து செயல்பட்டால் இந்தியாவின் பொருளாதார நிலையை உயர்த்த முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.

    தற்போது இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் அளவு 7.6 சதவீதமாக உள்ளது. இது 8 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது.

    வரும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியின் அளவு 5 லட்சம் கோடி டாலராக இருக்கும். இதை நான் தீர்க்கதரிசனமாக கூறவில்லை. இதுதான் இந்திய பொருளாதாரத்தின் உண்மை நிலை. இதில், உற்பத்திப் பிரிவு, சேவைப் பிரிவு, வேளாண்மைப் பிரிவு, ஏற்றுமதி ஆகியவற்றில் இருந்து உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி அமைகிறது.

    ஏற்றுமதியில் தற்போது நாங்கள் புதிய பட்டியல் ஒன்றை தயாரித்திருக்கிறோம். அதன்படி, எந்த நாட்டுக்கு என்னென்ன ஏற்றுமதி செய்யப்படலாம் என்ற விவரங்கள் தரப்படும்.

    விற்பனைக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் இடங்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட தயாரிப்புகள் அனுப்பப்பட வேண்டும். இதற்காக தனி பருவ இதழை வெளியிட இருக்கிறோம். இந்த பருவ இதழ் அனைத்து ஏற்றுமதியாளருக்கும் அனுப்பப்படும்.

    தரமற்ற பொருட்களை தயாரிக்கவோ, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவோ வேண்டாம். யார் அதை அனுப்பினாலும், இந்தியாவில் இருந்து தரமற்ற பொருட்கள் வருகின்றன என்றுதான் வெளிநாடுகளில் பேசப்படும். இதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதி பொருளாதாரம் பாதிக்கப்படும்.

    ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள், சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும்.

    வேளாண் உற்பத்தி ஏற்றுமதிக் கொள்கையை உருவாக்கி இருக்கிறோம். இந்த ஆண்டு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை மூலம் பெறப்பட்ட 620 மில்லியன் டன் உற்பத்திப் பொருட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படக்கூடும்.

    காய்கறி, பழம் போன்றவற்றின் உற்பத்தியில் இந்தியா பெரிய அளவில் செயல்பட்டாலும், அவற்றை ஏற்றுமதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் நிருபர்களுக்கு, மத்திய மந்திரி சுரேஷ் பிரபு அளித்த பேட்டி வருமாறு:-

    சென்னையில் முதல்-அமைச்சரை நான் சந்தித்துப் பேசினேன். அப்போது புதிய தொழில் தொடங்கும் கொள்கைகளை உருவாக்கும்படி அவரிடம் கேட்டுக்கொண்டேன். இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

    சென்னையில் 2-ம் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டேன். வேளாண் உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதிக்கொள்கை உருவாக்கப்பட வேண்டும். விமானம் மூலம் கொண்டு செல்வதற்கான இணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.

    ஏற்றுமதியில் திருப்பூர், உலக மையமாக விளங்குவதைப் போல, தமிழகத்தில் மேலும் பல உலக மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் முதல்-அமைச்சரை கேட்டுக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, தனது உடல் பரிசோதனைக்காக நேற்று இரவு வெளிநாடு சென்றார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, தனது உடல் பரிசோதனைக்காக நேற்று இரவு வெளிநாடு சென்றார். அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் சென்றுள்ளார்.

    இந்தநிலையில் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, மந்திரிசபை அமைப்பது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால் இருவரும் வெளிநாடு சென்றிருப்பதால் இந்த சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. 
    ×