என் மலர்
நீங்கள் தேடியது "Plan"
- ஆய்வு நடத்தி அழிக்கப்பட்டாலும் முழுமையாக தடுக்க முடியவில்லை.
- இந்த திட்டத்தை 2023 ஏப்ரல் மாதம் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் உத்தரவின் பேரில் அவ்வப்போது ஆய்வுகள் நடத்தப்பட்டு போலி, காலாவதி மருந்துகள் கண்டறியப்படுகிறது.காய்ச்சல், இதய நோய், வயிற்றுவலி, தைராய்டு உள்ளிட்ட பிரச்னைகளுக்கான போலி மருந்துகள் புழக்கத்தில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆய்வு நடத்தி அழிக்கப்பட்டாலும் முழுமையாக தடுக்க முடியவில்லை.
இதனால் மத்திய அரசு அதிகம் விற்பனையாகும், முக்கியத்துவம் வாய்ந்த மருந்துகளில், போலி மற்றும் தரமற்றவற்றை தடுக்கும் வகையில் டிராக் அண்ட் டிரேஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகமுதல் கட்டமாக அதிகம் விற்பனையாகும் 300 மருந்து பொருட்களின் லேபிள்கள் மீது பார் கோடு அல்லது க்யூஆர் கோடுபிரின்ட் செய்யப்பட உள்ளது. முதல்கட்டமாக அதிகம் விற்பனையாகும் நோய் எதிர்ப்பு மருந்துகள், இதய நோய், வலி நிவாரணி மாத்திரை, அலர்ஜிக்கான மாத்திரை, அட்டையின் விலை, 100 ரூபாய்க்கும் மேல் இருக்கும் மருந்துகளில் இந்த வசதி அறிமுகமாக உள்ளது. இந்த திட்டத்தை 2023 ஏப்ரல் மாதம் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த க்யூஆர் கோடு ஸ்கேன் செய்தால் மருந்தின் தயாரிப்பு தேதி, உண்மை விலை உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இடம் பெறும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், போலி, தரமற்ற, காலாவதியான மருந்துகளை தடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட மருந்து வணிகர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், க்யூ ஆர் கோடு ஸ்கேனர் மூலம் மருந்து தயாரிப்பு நிறுவனம், தயாரிப்பு தேதி, காலவதி தேதி உள்ளிட்ட விபரங்களை வாடிக்கையாளர் நேரடியாக தெரிந்து கொள்ள முடியும். மத்திய அரசின் இத்திட்டம் வரவேற்கதக்கது என்றார்.
- ஓய்வூதியர்களின் முறையிட்டு மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் ஓய்வூதிய குறைத்தீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமையில், அரசு கூடுதல் செயலாளர், நிதித்துறை இயக்குநர் (ஓய்வூதிய இயக்குநரகம்) ஸ்ரீதர் முன்னிலையில் நடைபெற்றது.
- 13315 ஓய்வூதிய புதிய மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை ஓய்வூதியர்களுக்கு வழங்குவதற்காக மாவட்ட கருவூல அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பல்வேறு அரசு அலுவலகங்களில் தீர்வு செய்யப்படாமல், நிலுவையில் உள்ள ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால பயன்கள் குறித்த ஓய்வூதியர்களின் முறையிட்டு மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் ஓய்வூதிய குறைத்தீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமையில், அரசு கூடுதல் செயலாளர், நிதித்துறை இயக்குநர் (ஓய்வூதிய இயக்குநரகம்) ஸ்ரீதர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஓய்வூதி யம், குடும்ப பாதுகாப்பு நிதி, புதிய மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு இனங்களில் பெறப்பட்ட 19 மனுக்கள் மீது உடனடி தீர்வு காண சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஓய்வூதியர் மருத்துவ காப்பீடு திட்டத்தின்படி 6 பயனாளிகளுக்கு ரூ.74,297 மதிப்பிலான திருப்பப்பட்ட காசோலைகளை வழங்கினர். மேலும் 13315 ஓய்வூதிய புதிய மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை ஓய்வூதியர்களுக்கு வழங்குவதற்காக மாவட்ட கருவூல அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது. பின்னர் 5 ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட கருவூல அலுவலர் திரு.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்ரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) அபர்ணா தேவி ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
- நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் நமக்கு நாமே திட்டம்.
- எண்ணும் எழுத்தும் திட்டம், பள்ளி கட்டமைப்புகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையருமான நிர்மல்ராஜ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் ஆணையர் நிர்மல்ராஜ் தெரிவித்ததாவது, தமிழக அரசின் ஆணைகிணங்க திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது.
இக்கூட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் வளர்ச்சிப்பணிகள், நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் நமக்கு நாமே திட்டம், கலைஞரின் மேம்பாட்டு திட்டம், மழை நீர் சேகரிப்பு, வருவாய் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் நலத்திட்டங்கள், பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டுவரும் எண்ணும் எழுத்தும் திட்டம், பள்ளி கட்டமைப்புகள், சாலை விரிவாக்க பணிகள் ஆகியவைகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வின் அடிப்படையில் பணிகளின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வளர்ச்சி பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார் முன்னதாக, அனைத்து துறைகளில் செயல்படுத்தப்பட்டுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து துறைவாரியாக ஆணையர் கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் உள்ளிட்ட அனைத்துதுறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அரசின் திட்டங்களை இடையூறின்றி பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பது எனது பணி.
- திருவாரூர் நகராட்சியின் மேம்பாட்டிற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டராக சாரூஸ்ரீ பொறுப்–பேற்றுக் கொண்டார்.
இவர் 2014 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்து ஒருகிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் துணைஆ ட்சியராக பதவியேற்று, பின்பு வணிகவரித்துறையின் இணை இயக்குநராக பதவி வகித்து, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பதவி வகித்து,தற்போது திருவாரூர் மாவட்ட கலெக்டராக பொறுப்–பேற்றுள்ளார்.
பொறுப்பேற்றதற்கு பின் நிருபர்களிடம் கலெக்டர் கூறிய தாவது:-
திருவாரூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு முழுமையாக பாடுபடுவேன். அரசின் திட்டங்களை இடை யூறின்றி பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பது எனது தலையாய பணி.
திருவாரூர் நகராட்சியின் மேம்பாட்டிற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்தார்.
- (1 முதல் 5-ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15.09.2022 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார்.
- சேலம் மாவட்டத்தில் 54 மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 5447 மாணவ, மாணவியர்கள் காலை உணவுத் திட்டத்தின்கீழ் பயன்பெற்று வருகின்றனர்.
சேலம்:
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படும் 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 தொடக்கப்பள்ளி (1 முதல் 5-ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15.09.2022 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 16.09.2022 அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட மணக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 54 மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 5447 மாணவ, மாணவியர்கள் காலை உணவுத் திட்டத்தின்கீழ் பயன்பெற்று வருகின்றனர்.
இத்திட்டத்தின் மூலம் மாணவ-மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்வதோடு, ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருத்தலை உறுதி செய்ய முடியும்.
மேலும், மாணவ / மாணவியரின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல் குறிப்பாக ரத்த சோகை குறைபாட்டினை நீக்குதல், பள்ளிகளில் மாணவ-மாணவியர்களின் வருகையை அதிகரித்தல் மற்றும் கல்வியில் தக்க வைத்துக் கொள்ளுதல் மற்றும் வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையைக் குறைத்தல் உள்ளிட்டவைகள் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
சேலம் மாநகராட்சியில் காலை உணவாக உப்புமா வகைகள், கிச்சடி வகைகள் மற்றும் பொங்கல் வகைகள் உள்ளிட்டவை சுழற்சி முறையில் நாள்தோறும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக சேலம் மாநகராட்சியில் மணக்காடு சமுதாயக் கூடம், இரும்பாலை மெயின் ரோட்டில் உள்ள டாக்டர்ஸ் காலணி, அம்மாப்பேட்டை வித்யா நகர், களரம்பட்டி சமுதாயக்கூடம், மணியனுர் காத்தாயம்மாள் நகர் சமுதாயக்கூடம் ஆகிய 5 ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தினை சேலம் மாவட்டத்தில் திறம்பட செயல்படுத்திடவும், கண்காணித்திடவும் ஏதுவாக 54 பள்ளிகள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு தினசரி காலை உணவு முறையாக வழங்கப்படுவதை உறுதிசெய்திட துணை கலெக்டர் நிலையில் ஒருவர் தினசரி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைத்தார்.
- அதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்திலும் முதற் கட்டமாக தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
நாமக்கல்:
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்திலும் முதற் கட்டமாக தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
இதை தொடர்ந்து நாமக்கல் நகராட்சி, கொண்டிசெட்டிபட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் வழங்கும் திட்டத்தின், 2-ம் கட்டத்தினை கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்.
அப்போது கலெக்டர் ஸ்ரேயாசிங் கூறியதாவது:-
நாமக்கல் நகராட்சியில் முதல் அமைச்சரின் காலை உணவு வழங்கும் 2-ம் கட்டத் திட்டம், சின்ன முதலைப்பட்டி, அழகுநகர், பெரியப்பட்டி, போதுப்–பட்டி, அய்யம்பாளையம், கிருஷ்ணாபுரம், பெரியூர், கருப்பட்டிபாளையம் மற்றும் நாமக்கல் ரங்கர் சன்னதி ஆகிய பகுதிகளில் உள்ள 9 தொடக்கப் பள்ளிகளை சேர்ந்த 1,088 மாணவ – மாணவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.
ராமாபுரம் புதூர், முதலைப்பட்டி, கொண்டி செட்டிபட்டி, முதலைப்–பட்டிபுதூர் மற்றும் காவேட்–டிப்பட்டி பகுதிகளில் உள்ள 5 நடுநி–லைப்பள்ளிகளைச் சேர்ந்த 533 மாணவ – மாணவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்–படுகிறது.
அதேபோல் திருச்செங்கோடு நகராட்–சிக்குட்பட்ட கூட்டப்–பள்ளி, மலையடி–வாரம், சீத்தா–ரம்பாளையம், சாணார்பாளையம், சூரியம்பாளையம் மற்றும் கொல்லப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 6 தொடக்கப்–பள்ளிகளை சேர்ந்த 973 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 2,594 மாணவ, மாணவிகள் முதல்- அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்ட 2-ம் கட்டத்தில் பயன்பெறு கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, நகராட்சி கமிஷனர் சுதா, கவுன்சிலர்கள் ஈஸ்வரன், தவராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டியளித்தார்.
- வருகிற கோடை காலத்தில் மதுரை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை வர வாய்ப்புள்ளது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 50 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. அ.தி.மு.க. பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கவிஞர் மோகன் தாஸ் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா பூமி பூஜைக்கு தலைமை தாங்கி கட்டிட பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
மதுரையில் தமிழக முதல்வரின் கள ஆய்வு குறித்து முறையான முடிவுகள் வெளி வரவில்லை. கள ஆய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடா ளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் அழைக்கவில்லை. குறைந்தபட்சம் உள்ளாட்சி பிரதிநிதிகளையாவது அழைத்து மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதித்திருக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் ரூ.540 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டது. அது தற்போது எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை. இதேபோல மதுரை டைட்டல் பார்க், மதுரைக்கு முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் எந்த நிலையில் உள்ளது என்றும் தெரியவில்லை.
வருகிற கோடை காலத்தில் மதுரை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை வர வாய்ப்புள்ளது. அது தொடர்பாகவும் ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாக தெரியவில்லை. மொத்தமாக முதல்வரின் கள ஆய்வு கூட்டம் என்பது அவரது சுற்றுப்பயணமாக அமைந்ததே தவிர மதுரை மக்களுக்கு எந்தவித திட்டப் பணிகளும் நடைபெற்றதாக தெரியவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை 2026-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என்றுஅறிவித்த நிலையில் நிதி உதவி செய்யும் ஜப்பான் நிறுவனத்திடம் சுகாதாரத்துறை அமைச்சர் இது தொடர்பாக ஏதேனும் முயற்சி செய்தார்களா? என்பது தெரியவில்லை.
இவர்கள் மத்திய அரசை குறை கூறுவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் கல்லூரி, பள்ளிகள் அருகிலேயே மாணவர்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கும் இடத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழடி அருங்காட்சி யகத்தை முதல்வர் திறந்து வைத்தார். இந்த பணி 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டு அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்தது அ.தி.மு.க. தான். மதுரைக்கு ஆய்வுக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட துணை செயலாளர் ஓம்.கே.சந்திரன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், துணைச் செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர்கள் நாகரத்தினம், பாலா, பொன்.முருகன், எம்.ஆர்.குமார், பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- வேளாண் அடுக்கு திட்டம் என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
- உதவி வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
பூதலூர்:
பூதலூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள விவசாயிகள் தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களின் பயன்களையும் ஒற்றைச் சாளர முறையில் பயன்பெறும் வகையில் வேளாண் அடுக்குத்திட்டம் என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சி துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்பு, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், விதை சான்றளிப்பு, சர்க்கரை துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உள்ளடங்கிய 12 துறைகளில் விவசாயிகளுக்கு அனைத்து திட்ட பயன்களும் கிடைக்க செய்யும் வகையில் கிரன்ஸ் வலைத்தளத்தில் விவசாயிகளுடைய நில உடமை விவரம் சரிபார்க்க ப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இதில் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் தங்களது நில உடமை குறித்த ஆவணம், ஆதார் அட்டை நகல் தங்களுடைய புகைப்படம், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் அல்லது உதவி வேளா ண்மை அலுவல ர்கள் அல்லது உதவி தோட்ட க்கலை அலுவலர்க ளை தொடர்பு கொண்டு விவரங்க ளை சரிபார்த்துக் கொள்ளவும் மற்ற விவசாயிக ளுக்கு இதை தெரிவித்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.
- நவீன கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு
- இந்த மாதம் இறுதியில் டெண்டர் விடப்படுகிறது
திருச்சி,
திருச்சி மாநகராட்சி பகுதியில் வெளியேற்றப்படும் கழிவுநீர் பஞ்சப்பூரில் ஏற்கனவே அமைந்துள்ள டபிள்யூ.எஸ்.பி. மாடல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. இதில் நாள் ஒன்றுக்கு 58 எம்.எல்.டி. அளவுக்கு கழிவு நீரை சுத்திகரிக்கப்படுகிறது. இந்த நிலையில் மேலும் 3 இடங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக கல்கண்டார் கோட்டை மற்றும் பஞ்சகரையில் புதிய மொத்தம் 40 எம்.எல்.டி. அளவுக்கு 2 சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே பஞ்சப்பூரில் ஏற்கனவே இருக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்துக்கு மாற்றாக 100 எம்.எல்.டி. அளவுக்கு நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் ரூ. 200 கோடியில் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அந்தத் திட்டத்துக்கான ரூ.200 கோடி நிதியை மாநில அரசு ஒதுக்கி உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் வைத்திநாதன் தெரிவித்தார்.இதுதொடர்பாக மேலும் அவர் கூறும்போது, ஏற்கனவே பஞ்சப்பூரில் அமைந்துள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ஆனால் அதற்கு மாற்றாக இனிமேல் புதிதாக அமைக்கப்பட இருக்கும் நவீன சுத்திகரிப்பு மையத்துக்கு 10 ஏக்கர் இடம் போதும்.ஸ்ரீரங்கம் மண்டலம் தவிர்த்து மீதமுள்ள அனைத்து மண்டலங்களில் இருந்தும் வெளியேற்றப்படும் கழிவு நீரை இங்கு சுத்திகரிக்க முடியும். இந்த மாத இறுதிக்குள் அதற்கான டெண்டர் விடப்பட்டு அடுத்த மாத தொடக்கத்தில் திட்ட பணிகள் தொடங்கும் என்றார்.
- பிரதமரின் நீர்பாசன திட்டம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
- உதவி பொறியாளர் ராஜகோபால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சார்பில் நடை பெற்று வரும் பிரதமரின் விவசாய நீர்பாசன திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில், சவ்வாஸ்புரம் ஊராட்சியில் பண்ணை உற்பத்தி திட்டத்தின் கீழ் ரூ.5 ஆயிரம் மதிப்பில் கொய்யா பழமரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். பண்ணை உற்பத்தி திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு கலெக்டர் தார்பாலின் வழங்கினார்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றி யத்தில், குலசேகரநல்லூர் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ1.5லட்சம் மதிப்பில் வரத்து கால்வாய் சீரமைத்தல் பணிகளையும், ரூ5லட்சம் மதிப்பில் பெரிய தடுப்பணை அமைக்கும் பணிகளையும், கல்லூரணி ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ5லட்சம் மதிப்பில் பெரிய தடுப்பணை அமைக்கும் பணிகளையும், ரூ1.5 லட்சம் மதிப்பில் வரத்து கால்வாய் சீரமைக்கும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முத்துராமலிங்கபுரம் ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ1.5 லட்சம் மதிப்பில் வரத்து கால்வாய் சீரமைக்கும் பணிகளையும், பொம்மகோட்டை ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ2.5 லட்சம் மதிப்பில் நடுத்தர தடுப்பணை கட்டும் பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காளையார் கரிசல்குளம் ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ2.5லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் நடுத்தர தடுப்பணை கட்டும் பணி களையும், புல்லநாயக்கன் பட்டி ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ2.5லட்சம் மதிப்பிலான வரத்துக்கால்வாய் சீரமைக்கும் பணிகளையும், ரூ.5லட்சம் மதிப்பில் பெரியதடுப்பணை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.
பரளச்சி ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5லட்சம் மதிப்பீட்டில் பெரிய தடுப்பணை அமைக்கும் பணிகளையும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ11.5 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சித்துறை மேம்பாட்டு முகமையின் கீழ் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூட விரிவாக்க பணிகளையும், பரளச்சியில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்தும், பின் பொது மக்களிடம் அவர்க ளுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்தும் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் பத்மாவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியார் அம்மாள், வேளாண்மை துணை இயக்குநர் மோகன்தாஸ் சவுமியன், உதவி பொறியாளர் ராஜகோபால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பள்ளி மாண வர்களுக்கான பல் பாது காப்புக்கான புன்னகை திட்டத்தை சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டன.
- மாணவர்களுக்கு ஏற்படும் வாய் வழித் தொற்று நோய்களைத் தடுக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
சேலம்:
தமிழக பள்ளிக்கல்வித் துறையும்,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையும் இணைந்து பள்ளி மாண வர்களுக்கான பல் பாது காப்புக்கான புன்னகை திட்டத்தை சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டன. மாணவர்களுக்கு ஏற்படும் வாய் வழித் தொற்று நோய்களைத் தடுக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
இதன்படி அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி கள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்க ளின் பற்களை பரிசோதித்து, அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சிகிச்சை குறித்து அறிவு றுத்தப்படுகிறது. முதல் கட்டமாக 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பல் பரிசோதனை செய்யப் பட உள்ளது.
உத்தரவு
இந்த திட்டம், வரும் மாதங்களில் மாநிலம் முழு வதும் உள்ள பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளி களில் ஏராளமானமாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த திட்டத் தின் மூலம் மாணவ, மாண வியருக்கு பல் பரிசோதனை களை செய்து அதன்மூலம் அவர்களுக்கு வாயில் ஏற்படுகின்ற பொது வான நோய்களான பல் சொத்தை, ஈறு போன்ற பிரச்சினை களுக்கு தீர்வு காணப்படும்.
மேலும் வாய் வழி நோய்கள், பல் சொத்தை, ஈறு பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வும், தீர்வு காண்பதற்கும் இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.
- ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான தவணைத் தொகையை பெற பி.எம் கிசான் இணையதளத்தில் ஆதார் தகவல்களை பதிவேற்றம் செய்தால் மட்டுமே தவணை தொகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- விவசாயிகள் பொது இ-சேவை மையத்தில், கணினி உபகரணத்தில் கைவிரல் ரேகை வைத்து பி.எம். கிசான் இணையதளம் சென்று தங்களுடைய விவரங்களை நிறைவு செய்ய வேண்டும்
மேட்டூர்:
விவசாயிகள் ஆதார் எண் அடிப்படையில் விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் வாங்க மத்திய அரசு ஆண்டுதோறும் 3 தவணையாக ரூ.6000 உதவித்தொகை வழங்குகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான தவணைத் தொகையை பெற பி.எம் கிசான் இணையதளத்தில் ஆதார் தகவல்களை பதிவேற்றம் செய்தால் மட்டுமே தவணை தொகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனவே விவசாயிகள் பொது இ-சேவை மையத்தில், கணினி உபகரணத்தில் கைவிரல் ரேகை வைத்து பி.எம். கிசான் இணையதளம் சென்று தங்களுடைய விவரங்களை நிறைவு செய்ய வேண்டும்.
மேலும் இது குறித்து விவரங்களை பெற வட்டார வேளாண் விரிவாக்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கொளத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜகோபால் தெரிவித்து உள்ளார்.






