search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plan"

    • பனை விதைகள் சேகரிக்கும் பணியில் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டு வருகிறனர்.
    • இதுவரை 6 ஆயிரத்து 236 விதைகள் சேகரித்துள்ளார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் உள்ள 38 ஊராட்சிகளில் இந்த ஆண்டு ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தை பாலம் தொண்டு நிறுவனம் முன்னெடுப்பில் டெல்டா பனை மர பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்துகிறது.

    இத்திட்டத்தை கடந்த வாரம் மாரிமுத்து எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இதுவரை 22 ஆயிரத்து 640 பனை விதைகள் நடப்பட்டுள்ளது. இப்பணியில் சமூக ஆர்வலர்கள், சேவை அமைப்புகள் ஈடுபட்டு வருகிறனர்.

    தொடர்ந்து பனைவிதை சேகரிப்பும், நடவு பணியும் நடைபெற்று வருகிறது.இதில் பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் தனியாக சென்று இதுவரை 6 ஆயிரத்து 236 விதைகள் சேகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு காவிரி குடிநீர் வழங்க ரூ.2,195 கோடியில் புதிய திட்டம்
    • அமைச்சர் கே.என்.நேரு தகவல்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நகராட்சிக்கு கடந்த 1994-ம் ஆண்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் திருச்சி ஜீயபுரம், காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இதில் குழாய்கள் பல இடங்களில் சேதமடைந்த நிலையில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது.

    இதனை சரி செய்யும் வகையில் குடிநீர் குழாய்கள் சீரமைத்து ரூ.75.06 கோடியில் குடிநீர் அபிவிரு த்தி திட்ட பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி திருவப்பூ ரில் நடைபெற்றது. நிகழ்ச்சி க்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் அடிக்கல் நாட்டி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 2195 கோடி மதிப்பீட்டில் 23 லட்சம் மக்கள் பயன்படக்கூடிய அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொடுக்க அனைத்து நடவடி க்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதியை தவிர தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான அளவு குடி தண்ணீர் கொடுப்பதற்கு வடகிழக்கு பருவமழை மிக சிறப்பாக பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    • ஸ்ரீரங்கத்தில் கான்பரன்ஸ் ஹால், வணிக வளாகத்துடன் ரூ.11 கோடி செலவில் அமையும் புதிய பஸ் நிலையம் அமைய உள்ளது
    • விரிவான திட்ட அறிக்கை நகராட்சி நிர்வாக இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது

    திருச்சி, 

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் அமை க்க உத்தரவிட்டார். அதை த்தொடர்ந்து திருச்சி மாநக ராட்சி நிர்வாகம் ரங்கநாதர் கோவில் ராஜகோபுரம் அருகாமையில் ஒரு ஏக்கர் இடத்தை தேர்வு செய்து அதில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க பெங்களூர் நிறுவனத்துக்கு டெண்டர் கொடுத்தது.பின்னர் அந்த நிறுவனம் திட்ட அறிக்கை தயாரித்து மாநகராட்சியிடம் ஒப்படை த்தது. பின்னர் அந்த அறி க்கையை மாநகராட்சி நிர் வாகம் நிதி அனுமதிக்காக நகராட்சி நிர்வாக இயக்குன ரகத்துக்கு ரஅனுப்பி உள்ள னர்.அதன்படி அங்கு புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு ரூ. 11 கோடியே 10 லட்சம் செலவாகும் என மதிப்பி டப்பட்டுள்ளது.தரைத்தளத்தில் வணிக வளாகம் அமைக்கப்படு கிறது. அதில் 16 கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டு ள்ளது. முதல் தளத்தில் சிறிய நிகழ்ச்சிகளை நட த்தும் வகையில் கான்பரன்ஸ் ஹால் அமைக்க முன்மொ ழியப்பட்டுள்ளது.8 பஸ்களை நிறுத்தி வை க்கவும், பயணிகள் பஸ்களில் ஏறி இறங்குவதற்கு தனி வசதி அமைக்க ப்படுகிறது.ஒரு கேண்டீன் மற்றும் நேர கண்காணிப்பு அலுவ லகம், ஆண் பெண் இருபா லருக்கும் தனித்தனி கழி ப்பறைகள் அமைக்கப்பட உள்ளது.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கும் ஸ்ரீரங்கம் மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைக்கப்படும் இந்த பஸ்லயத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 80 பஸ்களை கையாள உள்ளன.நிதி ஒதுக்கியதும் டெண்டர் விட்டு பணிகளை தொடங்க உள்ளனர்.இது தொடர்பாக மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, தற்போது அனுப்பி உள்ள விரிவான திட்ட அறிக்கை முன்மொ ழிவுக்கு நிர்வாக அனுமதி கிடைத்ததும் தொழில்நுட்ப அனுமதிக்கு அனுப்பப்படும்.அதன் பிறகு மாநகராட்சி திட்டத்துக்கான டெண்டரை வெளியிடுவோம். அனேக மாக டிசம்பர் மாதத்தில் கட்டுமான பணிகள் தொட ங்கப்படும் என எதிர்பார்க்கி றோம் என்றனர்.

    • 1 கோடியே 45 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர்.
    • இரு முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு கள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார்.

    எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், ஒன்றியக்குழு தலைவர்கள் நந்தினி ஸ்ரீதர், காமாட்சி மூர்த்தி, பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கிவைத்து, பயனா ளிகளுக்கு திட்டத்தின் வங்கி கணக்கு பற்று அட்டை வழங்கி பேசினார்.

    அப்போது அமைச்சர் பேசியதாவது: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை நாடு முழுவதும் கொண்டாடும் விதமாக, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1 கோடியே 6 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

    மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் 1000 உதவித்தொகை, நான் முதல்வன் திட்டம், காலை உணவு திட்டம், மகளிர் சுய உதவிக்குழு கடன் போன்ற பல திட்டங்கள் மூலம் பெண்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

    தமிழ்நாட்டில் 39 லட்சத்து 40 ஆயிரம் பேர் முதியோர் உதவித்தொகை, அமைப்புசாரா தொழி லாளர் உதவித்தொகை என மாதம் ரூ.1200 வழங்கப்பட்டு வருகிறது.

    இதனால் நேரடி யாக 1 கோடியே 45 இலட்சம் குடும்பங்கள் பயன்பெற்ற வருகின்றனர்.

    ஆகவே, சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் அரசுக்கு நீங்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என அமைச்சர் பேசினார்.

    முன்னதாக மாவட்ட கலெக்டர் பேசியதாவது:

    நமது மாவட்டத்தில் கலைஞர் உரிமைத்திட்டம் விண்ணப்பங்கள் வழங்க இரு முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, அவ்விண்ணப்பங்களை ஆய்வு செய்யப்பட்டது.

    விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மணி மேகலை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், திமுக வினர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் கண்மணி நன்றி கூறினார்.

    • தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடக்கப்பள்ளி களில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
    • அதில் சேலம் மாநகரில் 54 பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவு படுத்தப்படுகிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடக்கப்பள்ளி களில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அதில் சேலம் மாநகரில் 54 பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவு படுத்தப்படுகிறது.

    தொடக்க விழா

    சேலம் மாவட்டம் ஓம லூர் அருகே உள்ள காமலா பும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாளை காலை இந்த திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் கார்மேகம், ராஜேந்திரன் எம்.எல்.ஏ ஆகியோர் பார்வையிட்டனர்.

    அப்போது மேற்கு மாவட்ட செயலாளர் செல்வகணபதி, ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்பிர மணி, ரமேஷ், என்ஜினீயர் காமராஜ், ஒன்றிய கவுன்சிலர் செல்வி ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் பழனிகவுண்டர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    சேலம் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டம் நாளை முதல் 1,418 பள்ளி களில் தொடங்கப்படுகிறது. இதனை அந்தந்த பகுதி எம்.பி., எம்.எல்.ஏக்கள் தொடங்கி வைக்கிறார்கள். இதன் மூலம் 1 லட்சத்து ஆயிரத்து 318 மாணவ-மாணவிகள் பயன் பெறு வார்கள். இதனால் இந்த திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    நாமக்கல் மாவட்டம்

    நாமக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக கொல்லி மலை வட்டாரத்தில் உள்ள 41 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான 1,588 மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் முதல் அமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

    தற்போது முதல்-அமைச்சரின் காலை உண வுத் திட்டம் 15 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 673 பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை யிலான 27,128 மாணவ-மாணவிகளும் மற்றும் 15 பேரூராட்சிகளில் உள்ள 59 பள்ளிகளில் படிக்கும் 3,751 மாணவ-மாணவிகளும் பயன்பெறும் வகையில் நாளை வெள்ளிக்கிழமை முதல் விரிவுப்படுத்தப்பட உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 773 பள்ளிகளில் 32,497 மாணவ-மாண விகள் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் மூலம் பயன்பெற உள்ளனர். முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல் பாட்டிற்கான சமையல் கூடங்களின் தயார் நிலை, உணவுப்பொட்களின் வினியோகம் மற்றும் கைபேசி செயலியில் தகவல் பதிவேற்றம் செய்வது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.

    முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி டவும், கண்காணித்திடவும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் டாக்டர்.உமா கூறி உள்ளார்.

    • ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான தவணைத் தொகையை பெற பி.எம் கிசான் இணையதளத்தில் ஆதார் தகவல்களை பதிவேற்றம் செய்தால் மட்டுமே தவணை தொகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    • விவசாயிகள் பொது இ-சேவை மையத்தில், கணினி உபகரணத்தில் கைவிரல் ரேகை வைத்து பி.எம். கிசான் இணையதளம் சென்று தங்களுடைய விவரங்களை நிறைவு செய்ய வேண்டும்

    மேட்டூர்:

    விவசாயிகள் ஆதார் எண் அடிப்படையில் விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் வாங்க மத்திய அரசு ஆண்டுதோறும் 3 தவணையாக ரூ.6000 உதவித்தொகை வழங்குகிறது.

    இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான தவணைத் தொகையை பெற பி.எம் கிசான் இணையதளத்தில் ஆதார் தகவல்களை பதிவேற்றம் செய்தால் மட்டுமே தவணை தொகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    எனவே விவசாயிகள் பொது இ-சேவை மையத்தில், கணினி உபகரணத்தில் கைவிரல் ரேகை வைத்து பி.எம். கிசான் இணையதளம் சென்று தங்களுடைய விவரங்களை நிறைவு செய்ய வேண்டும்.

    மேலும் இது குறித்து விவரங்களை பெற வட்டார வேளாண் விரிவாக்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கொளத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜகோபால் தெரிவித்து உள்ளார்.

    • பள்ளி மாண வர்களுக்கான பல் பாது காப்புக்கான புன்னகை திட்டத்தை சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டன.
    • மாணவர்களுக்கு ஏற்படும் வாய் வழித் தொற்று நோய்களைத் தடுக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

    சேலம்:

    தமிழக பள்ளிக்கல்வித் துறையும்,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையும் இணைந்து பள்ளி மாண வர்களுக்கான பல் பாது காப்புக்கான புன்னகை திட்டத்தை சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டன. மாணவர்களுக்கு ஏற்படும் வாய் வழித் தொற்று நோய்களைத் தடுக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

    இதன்படி அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி கள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்க ளின் பற்களை பரிசோதித்து, அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சிகிச்சை குறித்து அறிவு றுத்தப்படுகிறது. முதல் கட்டமாக 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பல் பரிசோதனை செய்யப் பட உள்ளது.

    உத்தரவு

    இந்த திட்டம், வரும் மாதங்களில் மாநிலம் முழு வதும் உள்ள பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளி களில் ஏராளமானமாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த திட்டத் தின் மூலம் மாணவ, மாண வியருக்கு பல் பரிசோதனை களை செய்து அதன்மூலம் அவர்களுக்கு வாயில் ஏற்படுகின்ற பொது வான நோய்களான பல் சொத்தை, ஈறு போன்ற பிரச்சினை களுக்கு தீர்வு காணப்படும்.

    மேலும் வாய் வழி நோய்கள், பல் சொத்தை, ஈறு பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வும், தீர்வு காண்பதற்கும் இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

    • பிரதமரின் நீர்பாசன திட்டம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • உதவி பொறியாளர் ராஜகோபால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சார்பில் நடை பெற்று வரும் பிரதமரின் விவசாய நீர்பாசன திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில், சவ்வாஸ்புரம் ஊராட்சியில் பண்ணை உற்பத்தி திட்டத்தின் கீழ் ரூ.5 ஆயிரம் மதிப்பில் கொய்யா பழமரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். பண்ணை உற்பத்தி திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு கலெக்டர் தார்பாலின் வழங்கினார்.

    திருச்சுழி ஊராட்சி ஒன்றி யத்தில், குலசேகரநல்லூர் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ1.5லட்சம் மதிப்பில் வரத்து கால்வாய் சீரமைத்தல் பணிகளையும், ரூ5லட்சம் மதிப்பில் பெரிய தடுப்பணை அமைக்கும் பணிகளையும், கல்லூரணி ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ5லட்சம் மதிப்பில் பெரிய தடுப்பணை அமைக்கும் பணிகளையும், ரூ1.5 லட்சம் மதிப்பில் வரத்து கால்வாய் சீரமைக்கும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முத்துராமலிங்கபுரம் ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ1.5 லட்சம் மதிப்பில் வரத்து கால்வாய் சீரமைக்கும் பணிகளையும், பொம்மகோட்டை ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ2.5 லட்சம் மதிப்பில் நடுத்தர தடுப்பணை கட்டும் பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    காளையார் கரிசல்குளம் ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ2.5லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் நடுத்தர தடுப்பணை கட்டும் பணி களையும், புல்லநாயக்கன் பட்டி ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ2.5லட்சம் மதிப்பிலான வரத்துக்கால்வாய் சீரமைக்கும் பணிகளையும், ரூ.5லட்சம் மதிப்பில் பெரியதடுப்பணை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.

    பரளச்சி ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5லட்சம் மதிப்பீட்டில் பெரிய தடுப்பணை அமைக்கும் பணிகளையும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ11.5 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சித்துறை மேம்பாட்டு முகமையின் கீழ் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூட விரிவாக்க பணிகளையும், பரளச்சியில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்தும், பின் பொது மக்களிடம் அவர்க ளுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்தும் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் பத்மாவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியார் அம்மாள், வேளாண்மை துணை இயக்குநர் மோகன்தாஸ் சவுமியன், உதவி பொறியாளர் ராஜகோபால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நவீன கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு
    • இந்த மாதம் இறுதியில் டெண்டர் விடப்படுகிறது

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சி பகுதியில் வெளியேற்றப்படும் கழிவுநீர் பஞ்சப்பூரில் ஏற்கனவே அமைந்துள்ள டபிள்யூ.எஸ்.பி. மாடல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. இதில் நாள் ஒன்றுக்கு 58 எம்.எல்.டி. அளவுக்கு கழிவு நீரை சுத்திகரிக்கப்படுகிறது. இந்த நிலையில் மேலும் 3 இடங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக கல்கண்டார் கோட்டை மற்றும் பஞ்சகரையில் புதிய மொத்தம் 40 எம்.எல்.டி. அளவுக்கு 2 சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே பஞ்சப்பூரில் ஏற்கனவே இருக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்துக்கு மாற்றாக 100 எம்.எல்.டி. அளவுக்கு நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் ரூ. 200 கோடியில் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அந்தத் திட்டத்துக்கான ரூ.200 கோடி நிதியை மாநில அரசு ஒதுக்கி உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் வைத்திநாதன் தெரிவித்தார்.இதுதொடர்பாக மேலும் அவர் கூறும்போது, ஏற்கனவே பஞ்சப்பூரில் அமைந்துள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ஆனால் அதற்கு மாற்றாக இனிமேல் புதிதாக அமைக்கப்பட இருக்கும் நவீன சுத்திகரிப்பு மையத்துக்கு 10 ஏக்கர் இடம் போதும்.ஸ்ரீரங்கம் மண்டலம் தவிர்த்து மீதமுள்ள அனைத்து மண்டலங்களில் இருந்தும் வெளியேற்றப்படும் கழிவு நீரை இங்கு சுத்திகரிக்க முடியும். இந்த மாத இறுதிக்குள் அதற்கான டெண்டர் விடப்பட்டு அடுத்த மாத தொடக்கத்தில் திட்ட பணிகள் தொடங்கும் என்றார்.

    • வேளாண் அடுக்கு திட்டம் என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
    • உதவி வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    பூதலூர்:

    பூதலூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தில் உள்ள விவசாயிகள் தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களின் பயன்களையும் ஒற்றைச் சாளர முறையில் பயன்பெறும் வகையில் வேளாண் அடுக்குத்திட்டம் என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

    வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சி துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்பு, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், விதை சான்றளிப்பு, சர்க்கரை துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உள்ளடங்கிய 12 துறைகளில் விவசாயிகளுக்கு அனைத்து திட்ட பயன்களும் கிடைக்க செய்யும் வகையில் கிரன்ஸ் வலைத்தளத்தில் விவசாயிகளுடைய நில உடமை விவரம் சரிபார்க்க ப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
    இதில் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் தங்களது நில உடமை குறித்த ஆவணம், ஆதார் அட்டை நகல் தங்களுடைய புகைப்படம், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் அல்லது உதவி வேளா ண்மை அலுவல ர்கள் அல்லது உதவி தோட்ட க்கலை அலுவலர்க ளை தொடர்பு கொண்டு விவரங்க ளை சரிபார்த்துக் கொள்ளவும் மற்ற விவசாயிக ளுக்கு இதை தெரிவித்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டியளித்தார்.
    • வருகிற கோடை காலத்தில் மதுரை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை வர வாய்ப்புள்ளது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 50 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. அ.தி.மு.க. பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கவிஞர் மோகன் தாஸ் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா பூமி பூஜைக்கு தலைமை தாங்கி கட்டிட பணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    மதுரையில் தமிழக முதல்வரின் கள ஆய்வு குறித்து முறையான முடிவுகள் வெளி வரவில்லை. கள ஆய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடா ளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் அழைக்கவில்லை. குறைந்தபட்சம் உள்ளாட்சி பிரதிநிதிகளையாவது அழைத்து மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதித்திருக்க வேண்டும்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் ரூ.540 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டது. அது தற்போது எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை. இதேபோல மதுரை டைட்டல் பார்க், மதுரைக்கு முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் எந்த நிலையில் உள்ளது என்றும் தெரியவில்லை.

    வருகிற கோடை காலத்தில் மதுரை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை வர வாய்ப்புள்ளது. அது தொடர்பாகவும் ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாக தெரியவில்லை. மொத்தமாக முதல்வரின் கள ஆய்வு கூட்டம் என்பது அவரது சுற்றுப்பயணமாக அமைந்ததே தவிர மதுரை மக்களுக்கு எந்தவித திட்டப் பணிகளும் நடைபெற்றதாக தெரியவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை 2026-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என்றுஅறிவித்த நிலையில் நிதி உதவி செய்யும் ஜப்பான் நிறுவனத்திடம் சுகாதாரத்துறை அமைச்சர் இது தொடர்பாக ஏதேனும் முயற்சி செய்தார்களா? என்பது தெரியவில்லை.

    இவர்கள் மத்திய அரசை குறை கூறுவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் கல்லூரி, பள்ளிகள் அருகிலேயே மாணவர்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கும் இடத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கீழடி அருங்காட்சி யகத்தை முதல்வர் திறந்து வைத்தார். இந்த பணி 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டு அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்தது அ.தி.மு.க. தான். மதுரைக்கு ஆய்வுக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட துணை செயலாளர் ஓம்.கே.சந்திரன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், துணைச் செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர்கள் நாகரத்தினம், பாலா, பொன்.முருகன், எம்.ஆர்.குமார், பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ராஜபாளையம் நகராட்சி கூட்டத்தில் ரூ. 4 கோடியில் திருமண மண்டபம் அமைத்து கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    ராஜபாளையம்


    ராஜபாளையம் நகராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளான தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடைத்திட்டப்பணிகள்,  ெரயில்வே மேம்பாலப்பணிகள் குறித்து எம்.பி தனுஷ்குமார், எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் தலைமையில் நகராட்சி சேர்மன் பவித்ரா ஷியாம் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. 

    இந்த கூட்டத்தில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் குறித்து பேசுகையில் குடியிருப்பு மற்றும் வணிகப்பயன்பாடுகளை சேர்த்து 48 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளது. இதில் 39 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 


    மீதமுள்ள 9 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் ஆகஸ்டு மாததத்திற்குள் வழங்கப்படும் எனவும், குடிநீர் கட்டணம் சதுரஅடி கணக்கீடு செய்யப்பட்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் குடிநீர் கட்டணம் அதிகமாக உள்ளதாக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு, பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார் வந்ததால் அதனை குறைக்க நகராட்சியில்,  வீட்டுப்பயன்பாட்டிற்கு 100 ரூபாயாகவும், வணிக பயன்பாட்டிற்கு 200 முதல் 300 ரூபாயாகவும் கட்டணம்  நிர்ணயம் செய்து தீர்மானம் நிறைவேற்றி சென்னையிலுள்ள நகராட்சிகளின் ஆணையாளர் அனுமதிக்கு அனுபி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் ராஜபாளையம் நகராட்சிக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் இந்தாண்டுக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.  பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. 

    ராஜபாளையம் பச்சமடம் பகுதியில் செயல்பட்டுவரும் குப்பைகளை பிரித்து உரமாக மாற்றும் நுண்ணுர செயலாக்க மையத்தை வேறு இடத்திற்கு மாற்றிடவும், அந்த இடத்தில் ஏழை-எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் எம்.பி. நிதியில் ரூ. 1 கோடியும், எம்.எல்.ஏ. நிதியில் ரூ. 1 கோடியும், பொதுநிதியில் ரூ. 2 கோடியும் ஒதுக்கீடு செய்து மொத்தம் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் குளிர்சாதன திருமண மண்டபம் அமைக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. 

    அதுபோல் செட்டியார்பட்டி சேத்தூர் மற்றும் கிராமப்பகுதிகளிலும் இதுபோல் திருமண மண்டபம் அமைக்கப்படும் என எம்.எல்.ஏ. தெரிவித்தார். 

    இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி,  தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா,துணை சேர்மன் கல்பனாகுழந்தைவேலு, மேம்பாலப்பணி கோட்டப்பொறியாளர் லிங்குசாமி, நகராட்சி பொறியாளர் ராமலிங்கம்,  தாமிரபரணி திட்டப்பணி உதவி பொறியாளர் கற்பகம், பாதாளசாக்கடைத்தி ட்டப்பணி உதவி நிர்வாக பொறியாளர் காளிராஜன், வருவாய்த்துறை ஆய்வாளர் வேல் பிரியா மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.

    ×