என் மலர்

    நீங்கள் தேடியது "insurance"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காற்றினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் வறட்சியால் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு பெற முடியும்.
    • இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.44,550 வரை கிடைக்கும்.

    திருப்பூர்,செப்.24-

    வெங்காயம், வாழைப்பயிா்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.இது குறித்து பொங்கலூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஷர்மிளா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:-

    ராபி பருவத்தில் பிரதமரின் பயிா் காப்பீடு திட்டத்தில், சின்ன வெங்காயம் மற்றும் வாழைக்கு பயிா் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கலூர் குறுவட்டத்தில், வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள், தெற்கு அவிநாசிபாளையம் குறுவட்டத்தில், சின்ன வெங்காயம் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். நடவு முதல் அறுவடைக் காலங்கள் வரை ஏற்படும் வெள்ள பாதிப்பு, காற்றினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் வறட்சியால் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு பெற முடியும்.

    பயிர் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள், தங்கள் நிலத்தின் சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதாா் அட்டை நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் பொது இ-சேவை மையங்கள், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் விண்ணப்பிக்கலாம்.

    விவசாயிகள் தங்களின் பிரீமிய தொகையாக சின்ன வெங்காயம் பயிருக்கு ரூ.2,227ஐ அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.44,550 வரை கிடைக்கும். வாழைக்கு ஏக்கருக்கு ரூ.4,900ஐ அடுத்த ஆண்டு பிப்ரவரி 29-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். இதற்கு ஏக்கருக்கு ரூ. 98 ஆயிரம் வரை இழப்பீடாக கிடைக்கும்.

    மேலும் விவரம் தேவைப்படுவோா் 7708328657, 9095630870 என்ற செல்போன் எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கால்வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் கடந்த ஆகஸ்டு மாதம் சிகிச்சை பெற்றேன்.
    • எனது தாயார் இறந்து விட்டார். தந்தைக்கு வயதாகி விட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் பலவஞ்சிப்பாளையம் வஞ்சிநகரை சேர்ந்த பிரியா என்பவர் இன்று ஆம்புலன்ஸ் மூலம் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்டு 19-ந்தேதி தனியார் பஸ் மூலம் விபத்து ஏற்பட்டு 3 மாதம் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். 7 வருடங்கள் ஆகியும் இன்னும் பாதிப்பில் இருந்து மீளவில்லை. தங்களின் உதவி மூலம் கிடைத்த வீரபாண்டி குடியிருப்பு வாரியத்தில் 2-ம் மாடியில் வசித்து வந்தேன்.

    ஏறி இறங்குவதில் சிரமம் ஏற்பட்டதால் மீண்டும் கால்வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் கடந்த ஆகஸ்டு மாதம் சிகிச்சை பெற்றேன். எனது தாயார் இறந்து விட்டார். தந்தைக்கு வயதாகி விட்டது. இதனால் எனது சித்தி வீட்டில் வசித்து வருகிறேன். நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் செலவுகள் செய்து வருகிறோம்.

    எனவே நீதிமன்ற வழக்கை விரைந்து முடித்து இன்சூரன்ஸ் பணம் கிடைக்கவும் ,குடியிருப்பில் கீழ் பகுதியை ஒதுக்கி தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டைகளையும் வழங்கினார்.
    • எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநல மருத்துவத்திற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    கும்பகோணம்:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கும்பகோணம் அடுத்த திப்பிராஜபுரம் ஊராட்சியில் உள்ள அரசினர் உயர்நிலை பள்ளியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.

    முகாமை சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கண் கண்ணாடிகளையும், காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டக ங்களையும், காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டைகளையும் வழங்கினார்.

    முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ, இ.சி.ஜி., முழு ரத்த பரிசோதனை, மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, தொழு நோய் கண்டறியும் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை நடைபெற்றது.

    மேலும், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநல மருத்துவத்திற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவரும், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கணேசன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவரும், மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான முத்துசெல்வம், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் திலகம், உதவி இயக்குநர் டாக்டர் ரவிச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கலாராணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாண்டியன், சசிகுமார், திப்பிராஜபுரம் ஊராட்சி தலைவர் முருகையன், கட்சி நிர்வாகிகள் எஸ்.வி.எஸ்.இளங்கோவன், பழனி, கீழச்சேத்தி ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாலமேடு அருகே மருத்துவம், காப்பீட்டு திட்ட முகாம் நடந்தது.
    • மருத்துவர்கள், செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள வெள்ளையம்பட்டி அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட நோயாளிகள் பதிவு செய்யும் முகாம் நடந்தது. வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் தன்ராஜ், அவைத் தலைவர் பாலசுப்ரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், மகளிர் அணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் வசந்தி கலைமாறன், ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் சிகிச்சை அளித்தனர். வெள்ளையம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முன்னதாக வெள்ளையம்பட்டி அரசு பள்ளியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறையை வெங்கடேசன் திறந்து வைத்தார். முன்னாள் கவுன்சிலர் இளமாறன் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரீமியம் குறைவாக இருக்கிறது என்பதற்கான பாலிசியை தேர்ந்தெடுக்கக் கூடாது.
    • பாலிசி மூலம் கிடைக்கும் பலன்களை பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

    பொருளாதாரம் நாளுக்கு நாள் மாறிவரும் நிலையில், நமது வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. வசதிகள் அதிகரித்ததால் நாம் உடல் நலத்தில் கவனம் செலுத்தத் தவறிவிட்டோம். மருத்துவமனை செலவுகள் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில், அந்த செலவுகளை சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கி நின்ற அனுபவம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இருக்கவே செய்கிறது. இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறார்கள், நிதி ஆலோசகர்கள்.

    மருத்துவச் செலவுகளுக்கு என்று பணம் சேர்த்து வைப்பதைவிட ஒரு மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும். குறைந்த செலவில் குடும்பத்தினர் அனைவருக்குமான மருத்துவ செலவுகளை இதன் மூலம் சமாளிக்கலாம். இந்த காப்பீடு தனித்தனியாகவும், குடும்பத்தினருக்கும் சேர்த்து புளோட்டர் என இரண்டு வகையிலும் கிடைக்கிறது. தனிநபர் பாலிசியில், காப்பீடு செய்பவர் மட்டும் கிளைம் செய்து கொள்ளலாம். புளோட்டர் பாலிசியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கிளைம் செய்து கொள்ளலாம்.

    திருமணத்துக்கு முன்பு தனிநபர் பாலிசி எடுத்திருந்தால் திருமணத்துக்கு பிறகு மனைவி மற்றும் குழந்தைகளையும் இணைத்துக் கொண்டு புளோட்டர் பாலிசியாக மாற்றிக்கொள்ளலாம். முதியவர்களுக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும். எனவே இவர்களை புளோட்டர் பாலிசியில் சேர்க்காமல் தனிதனி தனிநபர் பாலிசி எடுத்துக் கொள்வதும் நல்லது. 3 மாத குழந்தை முதல் 86 வயது வரை இந்த பாலிசி அனுமதிக்கப்படுகிறது. நமது மருத்துவ தேவைகளைப் பொறுத்து மருத்துவக் காப்பீட்டை முடிவு செய்ய வேண்டும். பிரீமியம் குறைவாக இருக்கிறது என்பதற்கான பாலிசியை தேர்ந்தெடுக்கக் கூடாது. பாலிசி மூலம் கிடைக்கும் பலன்களை பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

    பாலிசியின் வரம்புகளுக்கு ஏற்ப கிளைம் செய்து கொள்ளலாம். மருத்துவக் காப்பீட்டை அனுமதிக்கும் மருத்துவமனைகள் குறித்த விவரம் பாலிசிதாரர்களுக்குக் கொடுக்கப்படும். இந்த மருத்துவமனைகளில் உள்நோயாளியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் காப்பீட்டு தொகையில் இருந்து மருத்துவ செலவுகளை கழித்துக் கொள்வார்கள். புறநோயாளியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவை கிளைம் செய்து கொள்ள முடியாது. ஆனால் பாலிசி அனுமதிக்கும் பட்சத்தில் இதற்கு ஆகும் செலவுகளையும் கிளைம் செய்து கொள்ளலாம். சில நோய்களுக்கு புற நோயாளியாக தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்போம். சில நோய்களுக்கு மருத்துவ பரிசோதனை அடிக்கடி எடுக்க வேண்டியிருக்கும். மேலும் சில நோய்கள் மருத்துவமனையை விட்டு வந்த பிறகும் நீடிக்கும். இது போன்று நிலைமைகளில் பாலிசி அனுமதிக்கும் வரை கிளைம் செய்து கொள்ள முடியும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் மூலம் காப்பீடு வழங்க வேண்டும்.
    • முதன்முதலாக இங்கிலாந்தில் தான் 1978-ம் ஆண்டில் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பிறந்தது.

    முதன்முதலாக இங்கிலாந்தில் தான் 1978-ம் ஆண்டில் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பிறந்தது. இந்த முறையில் இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 80 லட்சம் குழந்தைகள் பிறந்திருப்பதாக செயற்கை கருவூட்டலுக்கான இந்திய சங்கம் கூறுகிறது.

    2017-ம் ஆண்டு அறிக்கையின்படி இந்திய சந்தையில் இந்த சிகிச்சைக்கான மருந்துகள், கட்டணங்கள் மட்டும் ஆண்டுக்கு ரூ.1,832 கோடி வரை சந்தைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இது படிப்படியாக உயர்ந்து 2023-ல் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் அதிகரித்து இருப்பதாக மருத்துவ பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

    இன்றைய நவீன தொழில்நுட்பம் மூலம் 90 சதவீத குழந்தையில்லா பெண்களை கருத்தரிக்க வைக்க முடியும். மாத்திரைகள், ஊசிகள், IUI மூலம் குழந்தை கிடைக்காமல் போனால் IVF (டெஸ்ட் டியூப்) அல்லது ஜெர்மன் தொழில் நுட்பத்தில் ICSI எனப்படும் சிகிச்சை மூலம் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது. உயிரணுக்கள் எண்ணிக்கை 1 மில்லியன் அணுக்கள் இருந்தாலே இந்த சிகிச்சை மூலம் அணுக்களை கரு முட்டைக்குள் செலுத்தி கருத்தரிக்க செய்ய முடியும்.

    கருப்பையில் கணவனின் விந்தணுவை செயற்கையாக ஊசி மூலம் செலுத்துதல், சோதனைகுழாய் மூலம் கருத்தரித்தல், சோதனைக் குழாயில் கருவூட்டிய கருவை தாயின் கருப்பையில் பொருத்துதல் போன்ற சிகிச்சை முறைகளுக்கு காப்பீடு பெறும் வசதி இல்லை.

    கடின சிகிச்சை முறை, பணச்சுமை, உடல்நல பாதிப்பு போன்ற அம்சங்களால் அந்த சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள பலரும் தயங்குகின்றனர். எனவே அவற்றுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் மூலம் காப்பீடு வழங்க வேண்டும். அது கருத்தரித்தல் சிகிச்சை மேற்கொள்ளும் தம்பதிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எதிர்பாராத விபத்தால் வீடு சேதமடைய நேர்ந்தால் காப்பீட்டின் மூலம் தகுந்த இழப்பீடு கிடைக்கும்.
    • காப்பீடு செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை இதோ:

    நமது வாழ்நாளில் நாம் செய்யும் மிகப்பெரிய செலவு ஒரு வீட்டை வாங்குவது அல்லது கட்டுவது ஆகும். அவ்வாறு பல்வேறு கனவுகளுடன் கட்டி வாழ்ந்துகொண்டு இருக்கும் வீட்டை காப்பீடு செய்வது முக்கியமானது. நிலநடுக்கம், புயல், சூறாவளி, வெள்ளம் ஆகிய இயற்கை பேரழிவுகள், எதிர்பாராத விபத்துகள் போன்ற காரணங்களால் வீடு சேதமடைய நேர்ந்தால் காப்பீட்டின் மூலம் தகுந்த இழப்பீடு கிடைக்கும். அந்தத் தொகை வீட்டை சீர்படுத்துவதற்கும், இழப்பை ஈடு செய்வதற்கும் உதவும். காப்பீடு செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை இதோ:

    * நாம் தேர்ந்தெடுக்கும் காப்பீட்டைப் பற்றிய முழு விவரங்களையும், விதிமுறைகளையும் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான், தேவைப்படும் நேரத்தில் காப்பீட்டின் முழுப் பயனையும் பெற முடியும்.

    * உங்கள் தேவையைப் புரிந்து கொண்ட பின்னர் சிறந்த காப்பீட்டை வாங்கும் முயற்சியைத் தொடங்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தில், உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் பாலிசிகளின் பட்டியலை உருவாக்க வேண்டும். காப்பீட்டின் சிறப்புகள், வரம்புகள், விலக்குகள் மற்றும் காப்பீட்டுத் தொகை ஆகியவற்றின் அடிப்படையில் பாலிசிகளை ஒப்பிட வேண்டும்.

    * தேர்ந்தெடுக்கும் காப்பீடு தனிப்பட்ட விபத்துக்கள் மற்றும் டி.வி., கணினி போன்ற மின்னணு சாதனங்களுக்கு எதிராக, விரிவான பாதுகாப்பை வழங்குகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

    * காப்பீட்டாளர் நிதிச் சிக்கலை எதிர்கொண்டால், காப்பீட்டின் பயனை பெறுவதில் பாதிப்பு ஏற்படலாம். எனவே, காப்பீட்டாளரின் நிதிப் பின்னணியை உறுதி செய்வது அவசியம்.

    * காப்பீட்டு நிறுவனத்தின் இழப்பீடு வழங்கும் விகிதம், நிறுவனம் ஒரு ஆண்டில் எத்தனை இழப்பீடுகளை தந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு பாலிசி பத்திரங்களை கலெக்டர் வழங்கினார்.
    • தோட்டக்கலை துறையி னரால் அந்தந்த வட்டாரங்க ளிலேயே விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் ரூபவ் வேளாண்மை துறையின் சார்பில் ரூபவ் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் ரூபவ் 2022-2023-ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு ரூபவ் பாலிசி பத்திரங்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டு பயர் காப்பீடு பாலிசி பத்திரங்களை விவசாயிகளுக்கு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 60 ஆயிரத்து 109 விவசாயிகளால் 63 ஆயிரத்து 50.72 எக்டேர் பரப்பளவிலான நெல், மிளகாய், நிலக்கடலை மற்றும் வாழை உள்ளிட்ட பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் முதற்கட்டமாக நெல் பயிருக்கு காப்பீடு செய்துள்ள விவசாயிகளால் செலுத்தப்பட்டுள்ள பிரிமியம் தொகை, அரசால் வழங்கப்பட்டுள்ள காப்பீடு பிரிமியம் மானிய தொகை மற்றும் காப்பீடு செய்யப்பட்டுள்ள தொகை முதலான விபரங்கள் அடங்கிய பாலிசி பத்திரங் கள் விவசாயிகளுக்கு நேரடி யாக வழங்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து ரூபவ் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளின் பாலிசி பத்திரங்கள் ரூபவ் பஜாஜ் அலையன்ஸ் பொதுக் காப்பீட்டு நிறுவனம் மற்றும் வட்டார வேளாண்மை, தோட்டக்கலை துறையி னரால் அந்தந்த வட்டாரங்க ளிலேயே விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படு கிறது.

    காப்பீடு செய்துள்ள விவசாயிகள் தங்களின் பாலிசி பத்திரங்களை நேரடியாக பெற்று அதில்கு றிப்பிடப்பட்டுள்ள காப்பீடு குறித்த விபரங்களை சரி பார்த்து உறுதி செய்து பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தன பாலன் மற்றும் அரசு அலுவ லர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 17 ஊராட்சிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை.
    • திட்டை செல்லும் சாலை குண்டும் குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது.

    சீர்காழி,:

    சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது.ஒன்றிய க்குழு தலைவர் கமலஜோதிதேவேந்திரன் தலைமை வகித்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன் சரவணன் ஒன்றிய குழு துணை தலைவர் உஷாநந்தினி பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

    இளநிலை உதவியாளர் சரவணன் மன்ற தீர்மான ங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு: கவுன்சிலர் ரிமா பேசுகையில் சீர்காழி ஒன்றியத்தில் 37 ஊராட்சிகளில்17 ஊராட்சிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை என்றார்.

    கவுன்சிலர் விஜயகுமார் பேசுகையில் திட்டை செல்லும் சாலை குண்டும் குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது.

    இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் தென்னரசு பேசுகையில் எடக்குடி வட பாதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க முயற்சி எடுத்த ஒன்றிய குழு தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் பேசுகையில் தமிழக முதல்-அமைச்சர் டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து உடனடியாக விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை அறிவித்துள்ளார் இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

    முடிவில் மேலாளர் சுலோசனா நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரீமியம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும்.
    • பயிர் காப்பீடு தொடர்பாக மீண்டும் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்டத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்த மத்திய குழுவிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பிரதிநிதி ஜீவக்குமார் தலைமையில் விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.

    எனவே நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக கொள்முதல் செய்ய நிரந்தர உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மழையால் நெல் சாய்ந்து பாதிக்கப்படுவதால் அதற்கு ஏற்ற புதிய ரகங்களை அறிமுகம் செய்ய வேண்டும்.

    பயிர் காப்பீட்டு பிரீமியம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும். ஏற்கனவே சர்வே முடிந்த பிறகு தான் பருவம் தவறிய மழை பெய்தது.

    எனவே தற்போதைய நிலவரத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பயிர் காப்பீடு தொடர்பாக மீண்டும் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print