search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "insurance"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தாயை கொன்று, அவரது உடலை யமுனை ஆற்றின் கரையில் அப்புறப்படுத்த முயன்றுள்ளார் ஹிமான்சு
    • ஹிமான்சுவினுடைய தாயின் உடலை யமுனை ஆற்றில் இருந்து காவல்துறையினர் மீட்டெடுத்தனர்.

    உத்தர பிரதேச மாநிலம் படேக்பூரில் ஆன்லைன் சூதாட்டத்தால் ₹4 லட்சம் வரை கடன் வாங்கிய ஹிமான்சு என்ற நபர், காப்பீடு பணம் கிடைக்கும் என்பதால் தாயைக் கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

    ஹிமான்சு என்ற நபர், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ளார். குறிப்பாக அவர், ஸுபி (Zupee) என்ற செயலியில் சூதாட்டம் விளையாடி தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளார். இதன் விளைவாக நண்பர்களிடம் அவர் 4 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதன்பின் நண்பர்கள், இவரிடம் கடன் தொகையை திருப்பி தரும்படி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், அவரது தந்தை பக்கத்தில் உள்ள அனுமான் கோயிலில் வழிபாடு நடத்த சென்றிருந்த நேரத்தில், தாயை கழுத்தை நெரித்துக் கொன்று, அவரது உடலை யமுனை ஆற்றின் கரையில் அப்புறப்படுத்த முயன்றுள்ளார் ஹிமான்சு.

    இது தொடர்பாக ஹிமான்சுவை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம், "தனது உறவினர் வீட்டில் நகை திருடிய ஹிமான்சு, அதன் மூலம் தனது பெற்றோருக்கு ₹50 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு வாங்கியதாகவும், அதனை பெறுவதற்காக தாயை கொலை செய்து அவரது உடலை யமுனை ஆற்றில் வீசியதாகவும்" அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    கடந்த பிப்ரவரி 21-ம் தேதி ஹிமான்சுவினுடைய தாயின் உடலை யமுனை ஆற்றில் இருந்து காவல்துறையினர் மீட்டெடுத்தனர். 

    • தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர்க்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படு கிறது.
    • கிராம நிர்வாக அலுவலருக்கும், வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்திற்கும் தெரிவிக்க வேண்டும்.

    உடுமலை:

    மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் மடத்துக்குளம் வட்டாரத்தில், தக்காளி, சின்ன வெங்காயம் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இயற்கை சீற்றத்தினால் பயிர்கள் பாதித்து விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளை ஈடு செய்யும் வகையில் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மடத்துக்குளம் வட்டாரத்தில், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர்க்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படு கிறது.

    நடப்பு ராபி பருவத்தில் நடவு முதல் அறுவடை வரையிலான நிலைப்பயிர்களில் ஏற்படும் வறட்சி ,வெள்ளம், பூச்சி நோய்த்தாக்குதல், நிலச்சரிவு, ஆலங்கட்டி மழை, புயல், சூறாவளி, இடி, மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புக்கு இத்திட்டத்தின் கீழ் காப்பீடு பெறலாம். துங்காவி குறுவட்டத்தில் தக்காளி, வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகளும், மடத்துக்குளம் குறுவட்டத்தில் தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகளும் வருகிற 2024 பிப்ரவரி 28 வரை இத்திட்டத்தில் சேரலாம்.

    மடத்துக்குளம் வட்டாரத்தில் தக்காளி, வெங்காயம் பயிர்க்காப்பீடு செய்ய வருகிற 2024 ஜனவரி 31 கடைசி நாளாகும். காப்பீட்டு திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள், 95 சதவீதம் தொகையும், விவசாயிகள் பங்களிப்பு தொகை 5 சதவீதம் ஆகும். வெங்காயம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.2,228, தக்காளி ரூ. 1,495- பிரீமியம் செலுத்த வேண்டும். பயிர் காப்பீடு செய்து முழுமையான பாதிப்பு ஏற்பட்டால், வெங்காயம் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 44 ஆயிரத்து 550 ரூபாயும், தக்காளி பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 29 ஆயிரத்து 500 ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் பயிர்க்காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் முன்மொழிவு படிவம், பதிவு விண்ணப்பம், அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கி புத்தக நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் இ - சேவை மையங்கள், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காப்பீடு செய்து கொள்ளலாம். பங்களிப்பு கட்டணத்தை செலுத்தியதற்கான ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும். உள்ளூர் பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்டால் 72 மணி நேரத்திற்குள் காப்பீட்டு நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி 18001035490 என்ற எண்ணில் தெரிவிக்க வேண்டும்.

    மேலும் கிராம நிர்வாக அலுவலருக்கும், வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்திற்கும் தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தோட்டக்கலைத்துறை வருவாய்த்துறை மற்றும் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் கூட்டாய்வு மேற்கொண்டு பயிர்ச்சேத மதிப்பீட்டு அறிக்கை அளித்த பின்னர் இழப்பீட்டுத் தொகை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தாமோதரன் 96598 38787 என்ற எண்ணிலும், நித்யராஜ் 63821 29721 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    • இ-சேவை மையங்களுக்கு விவசாயிகள் சென்று பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
    • காப்பீட்டு தொகையில் 25 சதவீதம் இழப்பீட்டு தொகையாக பெறலாம்.

    பூதலூர்:

    பூதலூர் வேளாண்மை உதவி இயக்குநர் ராதா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுப்பிக்கப்பட்ட பாரதப்பிரதமரின் பயிர் காப்பீட்டுத்திட்டம் நடப்பு சம்பா, பருவத்திற்கு துவங்கி விட்டது. ஒரு ஏக்கர் சாகுபடி செய்திட ரூ.36,100- சாகுபடி செலவினமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஒரு ஏக்கருக்கு ரூ. 542 - மட்டும் செலுத்தி தங்கள் நெல் பயிரை காப்பீடு செய்து கொள்ளலாம். நடப்பாண்டில், தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் பயிர் காப்பீடு நிறுவனம் ப்யூச்சர் இன்சூரன்ஸ் நிறு வனம் மூலம் இப்பணி மேற்கொள்ளப்படஉள்ளது. 2023 நவம்பர் 15ம்தேதி வரையில் சம்பா, நெற்பயிரு க்கான காப்பீட்டுத் தொகை செலுத்தலாம். பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் நடவு முடிந்தவுடன் வாங்கிய சிட்டா, அடங்கல்,விதைப்பு சான்று ஆகிய சான்றுகளை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று, உடன் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

    பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகள் தங்கள்வங்கி அல்லது கூட்டுறவுகடன் சங்கம் மூலமாக பயிர் காப்பீடு செய்து கொள்ள லாம். மீதமுள்ள பரப்பிற்கு பொது இ சேவை மைய ங்களில் தங்களது வங்கி பாஸ்புத்தகம், ஆதார் அட்டை, சிட்டா, அடங்கல், விதைப்பு சான்று ஆகியவ ற்றுடன் சென்று பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாண்டு நடப்பு பருவத்தில் போதுமான மழை பெய்யாத நிலையில் விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட சம்பா தாளடிபருவ த்திற்கு காப்பீடு செய்வதன் மூலம் விதைப்பு செய்ய இயலாமை அல்லது விதைப்பு பொய்த்து போதல் அல்லது நடவு பொய்த்து போதல் போன்ற இனங்களில் இழப்பீடு பெறலாம். அதாவது ஒரு கிராமத்தில் சராசரியாக பயிர் சாகுபடி செய்யும் பரப்பில் 75 சதவீதத்திற்கும் மேலாக பயிர் செய்ய முடியாத நிலையில் இருந்தால் நிர்ணயிக்கப்பட்ட காப்பீட்டு தொகையில் 25 சதவீதம் இழப்பீட்டு தொகையாக பெறலாம். அவ்வாறு ஏற்படும் பட்ச்ச த்தில் அக்கிராமத்தில் பயிர் காப்பீட்டு செய்த விவசாயிகள் மட்டுமே இழப்பீடு பெற முடியும். ஆகவே விவசாயிகள் தங்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் சம்பா அல்லது தாளடி விதைப்பு / நடவு செய்ய உள்ளார் என்று விதைப்பு சான்று அல்லது அடங்கள் (பசலி 1433) பெற்று நவம்பர் 15ம் தேதிக்குள் பயிர் காப்பீட்டு செய்ய வேண்டும்.

    பயிர்கடன் பெற்ற விவசாயிகள் தங்களின் காப்பீட்டு பிரிமியத்தொகை வேளாண் பயிர் காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்த ப்பட்டுவிட்டதா? என உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூற ப்பட்டுள்ளது.

    • மனலூர் பேட்டை ஆகிய குறு வட்டங்களில் விவசாயிகள் பதிவு செய்யலாம்.
    • 2 வாரங்க ளுக்குள் ஏற்படும் இழப்பு களுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் ரபி குறுவை கால தோட்டப்பயிரான மரவள்ளி, வெங்காயம், கத்திரி ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம். இதற்காக அறிவிக்கை செய்யப்பட்ட சின்னசேலம், நயினார்பாளையம், இந்திலி, வடக்கநந்தல், ஆலத்தூர், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், நாகலூர், அரியலூர், ரிஷிவந்தியம், வடபொன்பரப்பி, சங்கரா புரம், சேராப்பட்டு, திருக்கோவிலூர், திருப்பா லப்பந்தல், ஆவிகொளப் பாக்கம், எறையூர், உளுந்தூர் பேட்டை, செங்குறிச்சி, திரு நாவலூர், எலவனாசூர் கோட்டை, வெள்ளிமலை, களமருதூர், மனலூர் பேட்டை ஆகிய குறு வட்டங்களில் விவசாயிகள் பதிவு செய்யலாம்.

    மேலும், தலா ஒரு ஏக்கருக்கு வெங்காயம் ரூ.909.17 மற்றும் கத்திரி ரூ.817.51 தொகையை வரும் ஜனவரி மாதம் 31- ந் தேதிக்குள்ளும், மரவள்ளி ரூ.1,517.51 தொகையை வரும் பிப்ரவரி மாதம் 29- ந் தேதிக்குள்ளும் செலுத்தி விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். எதிர்பா ராத திடீர் வெள்ளம் மற்றும் வறட்சி ஏற்படும் போது வழக்கத்தை விட 50 சதவீதம் பயிரின் மகசூல் குறைந்தி ருந்தால் காப்பீடு தொகை வழங்கப்படும். அறுவடை முடிந்த பின் 2 வாரங்க ளுக்குள் ஏற்படும் இழப்பு களுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படும்.

    எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் அடங்கல், இ-அடங்கல் நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களை கொண்டு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பொது சேவை மையங்கள் மற்றும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விபத்தால் ஏற்படும் நிரந்தர உடல் உறுப்பு செயலிழப்பு காப்பீடாக, 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு பெறலாம்.
    • ஆண்டுதோறும் ஜூன் 1 முதல் மே 31 வரை பிரிமியம் செலுத்தலாம்.

    திருப்பூர்,அக்.24-

    ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு திட்டம் குறித்து கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, மத்திய அரசு, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

    மத்திய அரசு சார்பில், ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு திட்டம், குறைவான பிரிமியத்துடன் செயல்படுத்தப்படுகிறது. பிரதமர் சுரக்ஷா காப்பீடு திட்டத்தில் 18 முதல் 70 வயது வரையுள்ள, வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் பயன்பெறலாம்.

    விபத்தால் ஏற்படும் நிரந்தர உடல் உறுப்பு செயலிழப்பு காப்பீடாக, 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு பெறலாம்.ஆண்டு பிரிமியமாக 20 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்.பிரதமர் ஜீவன்ஜோதி காப்பீடு திட்டத்தில் 18 வயது முதல் 50 வயது வரையுள்ளவர்கள், 2லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடு பெறலாம். ஆண்டு பிரிமியமாக 436 ரூபாய் செலுத்தி இணையலாம். காப்பீடுதாரர் மறைவுக்கு பிறகு அவரது குடும்பத்தினர் காப்பீடு தொகையாக இரண்டு லட்சம் ரூபாய் பெறலாம்.

    வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள், ஆண்டுதோறும் ஜூன் 1 முதல் மே 31 வரை பிரிமியம் செலுத்தலாம். அவரது வங்கி கணக்கில் இருந்து பிரிமியம் பிடித்தம் செய்யப்படும். ஏழை மக்கள், வங்கி கணக்கு இருந்தால் இத்திட்டங்களில் பயன்பெறலாம்.கிராமப்புற மக்களுக்கு முழு அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி காப்பீடு செய்ய அறுவுறுத்த வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, 31ந் தேதி வரை, அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.

    • நெல் சாகுபடி செய்த விவசாயிகள் நவம்பர் 15-ந் தேதி வரை காப்பீடு செய்யலாம்.
    • மேலும் விவரங்களுக்கு வேளாண்மை விரிவாக்க மையத்தை விவசாயிகள் அணுகலாம்.

    ராமநாதபுரம்

    வறட்சி, வெள்ளம், தொடர் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் மகசூல் இழப்பு ஏற்படுவதை விவசாயிகளுக்கு ஈடு செய்யும் வகையில் பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் 2016-ம் ஆண்டு முதல் செயல் படுத்தப்படுகிறது.

    இந்நிலையில் 2023-24ம் ஆண்டுக்கான பயிர் இன்சூரன்ஸ் செய்வதற்கான அறிவிப்பை கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டார்.

    அதில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் பிரிமியமாக ஏக்கருக்கு ரூ.361.50 செலுத்த வேண்டும். விவசாயம் பாதிக்கப்பட்டால் இழப் பீடாக ஏக்கருக்கு ரூ.24,100 வழங்கப்படும். நவம்பவர் 15-ந் தேதி வரை விவ சாயிகள் பதிவு மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. நெற்பயிர் போன்று சோளம், உளுந்து ஆகிய பயிர்களுக்கும் நவம்பவர் 15-ந் தேதி வரை இன்சூரன்ஸ் செய்யலாம்.

    கம்பு, சோளம் ஆகிய பயிர்களுக்கு நவம்பர் 30-ந் தேதி வரையும், நிலக்கடலை, சூரியகாந்திக்கு டிசம்பர் 30-ந் தேதி வரையும், பருத்திக்கு 2024 ஜனவரி 31-ந் தேதி வரையும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    விவசாயிகள் முன் மொழிவு படிவம், பதிவு படிவம், ஆதார் அட்டை நகல், வி.ஏ.ஓ., வழங்கும் சாகுபடி அடங்கல், வங்கி சேமிப்பு புத்தகம் ஆகிய வற்றுடன் பதிவு மேற் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மேலும் விவரங்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை விவசாயிகள் அணுகலாம், என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • காற்றினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் வறட்சியால் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு பெற முடியும்.
    • இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.44,550 வரை கிடைக்கும்.

    திருப்பூர்,செப்.24-

    வெங்காயம், வாழைப்பயிா்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.இது குறித்து பொங்கலூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஷர்மிளா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:-

    ராபி பருவத்தில் பிரதமரின் பயிா் காப்பீடு திட்டத்தில், சின்ன வெங்காயம் மற்றும் வாழைக்கு பயிா் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கலூர் குறுவட்டத்தில், வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள், தெற்கு அவிநாசிபாளையம் குறுவட்டத்தில், சின்ன வெங்காயம் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். நடவு முதல் அறுவடைக் காலங்கள் வரை ஏற்படும் வெள்ள பாதிப்பு, காற்றினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் வறட்சியால் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு பெற முடியும்.

    பயிர் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள், தங்கள் நிலத்தின் சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதாா் அட்டை நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் பொது இ-சேவை மையங்கள், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் விண்ணப்பிக்கலாம்.

    விவசாயிகள் தங்களின் பிரீமிய தொகையாக சின்ன வெங்காயம் பயிருக்கு ரூ.2,227ஐ அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.44,550 வரை கிடைக்கும். வாழைக்கு ஏக்கருக்கு ரூ.4,900ஐ அடுத்த ஆண்டு பிப்ரவரி 29-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். இதற்கு ஏக்கருக்கு ரூ. 98 ஆயிரம் வரை இழப்பீடாக கிடைக்கும்.

    மேலும் விவரம் தேவைப்படுவோா் 7708328657, 9095630870 என்ற செல்போன் எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

    • கால்வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் கடந்த ஆகஸ்டு மாதம் சிகிச்சை பெற்றேன்.
    • எனது தாயார் இறந்து விட்டார். தந்தைக்கு வயதாகி விட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் பலவஞ்சிப்பாளையம் வஞ்சிநகரை சேர்ந்த பிரியா என்பவர் இன்று ஆம்புலன்ஸ் மூலம் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்டு 19-ந்தேதி தனியார் பஸ் மூலம் விபத்து ஏற்பட்டு 3 மாதம் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். 7 வருடங்கள் ஆகியும் இன்னும் பாதிப்பில் இருந்து மீளவில்லை. தங்களின் உதவி மூலம் கிடைத்த வீரபாண்டி குடியிருப்பு வாரியத்தில் 2-ம் மாடியில் வசித்து வந்தேன்.

    ஏறி இறங்குவதில் சிரமம் ஏற்பட்டதால் மீண்டும் கால்வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் கடந்த ஆகஸ்டு மாதம் சிகிச்சை பெற்றேன். எனது தாயார் இறந்து விட்டார். தந்தைக்கு வயதாகி விட்டது. இதனால் எனது சித்தி வீட்டில் வசித்து வருகிறேன். நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் செலவுகள் செய்து வருகிறோம்.

    எனவே நீதிமன்ற வழக்கை விரைந்து முடித்து இன்சூரன்ஸ் பணம் கிடைக்கவும் ,குடியிருப்பில் கீழ் பகுதியை ஒதுக்கி தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டைகளையும் வழங்கினார்.
    • எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநல மருத்துவத்திற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    கும்பகோணம்:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கும்பகோணம் அடுத்த திப்பிராஜபுரம் ஊராட்சியில் உள்ள அரசினர் உயர்நிலை பள்ளியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.

    முகாமை சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கண் கண்ணாடிகளையும், காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டக ங்களையும், காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டைகளையும் வழங்கினார்.

    முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ, இ.சி.ஜி., முழு ரத்த பரிசோதனை, மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, தொழு நோய் கண்டறியும் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை நடைபெற்றது.

    மேலும், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநல மருத்துவத்திற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவரும், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கணேசன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவரும், மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான முத்துசெல்வம், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் திலகம், உதவி இயக்குநர் டாக்டர் ரவிச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கலாராணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாண்டியன், சசிகுமார், திப்பிராஜபுரம் ஊராட்சி தலைவர் முருகையன், கட்சி நிர்வாகிகள் எஸ்.வி.எஸ்.இளங்கோவன், பழனி, கீழச்சேத்தி ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பாலமேடு அருகே மருத்துவம், காப்பீட்டு திட்ட முகாம் நடந்தது.
    • மருத்துவர்கள், செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள வெள்ளையம்பட்டி அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட நோயாளிகள் பதிவு செய்யும் முகாம் நடந்தது. வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் தன்ராஜ், அவைத் தலைவர் பாலசுப்ரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், மகளிர் அணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் வசந்தி கலைமாறன், ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் சிகிச்சை அளித்தனர். வெள்ளையம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முன்னதாக வெள்ளையம்பட்டி அரசு பள்ளியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறையை வெங்கடேசன் திறந்து வைத்தார். முன்னாள் கவுன்சிலர் இளமாறன் நன்றி கூறினார்.

    • பிரீமியம் குறைவாக இருக்கிறது என்பதற்கான பாலிசியை தேர்ந்தெடுக்கக் கூடாது.
    • பாலிசி மூலம் கிடைக்கும் பலன்களை பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

    பொருளாதாரம் நாளுக்கு நாள் மாறிவரும் நிலையில், நமது வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. வசதிகள் அதிகரித்ததால் நாம் உடல் நலத்தில் கவனம் செலுத்தத் தவறிவிட்டோம். மருத்துவமனை செலவுகள் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில், அந்த செலவுகளை சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கி நின்ற அனுபவம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இருக்கவே செய்கிறது. இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறார்கள், நிதி ஆலோசகர்கள்.

    மருத்துவச் செலவுகளுக்கு என்று பணம் சேர்த்து வைப்பதைவிட ஒரு மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும். குறைந்த செலவில் குடும்பத்தினர் அனைவருக்குமான மருத்துவ செலவுகளை இதன் மூலம் சமாளிக்கலாம். இந்த காப்பீடு தனித்தனியாகவும், குடும்பத்தினருக்கும் சேர்த்து புளோட்டர் என இரண்டு வகையிலும் கிடைக்கிறது. தனிநபர் பாலிசியில், காப்பீடு செய்பவர் மட்டும் கிளைம் செய்து கொள்ளலாம். புளோட்டர் பாலிசியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கிளைம் செய்து கொள்ளலாம்.

    திருமணத்துக்கு முன்பு தனிநபர் பாலிசி எடுத்திருந்தால் திருமணத்துக்கு பிறகு மனைவி மற்றும் குழந்தைகளையும் இணைத்துக் கொண்டு புளோட்டர் பாலிசியாக மாற்றிக்கொள்ளலாம். முதியவர்களுக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும். எனவே இவர்களை புளோட்டர் பாலிசியில் சேர்க்காமல் தனிதனி தனிநபர் பாலிசி எடுத்துக் கொள்வதும் நல்லது. 3 மாத குழந்தை முதல் 86 வயது வரை இந்த பாலிசி அனுமதிக்கப்படுகிறது. நமது மருத்துவ தேவைகளைப் பொறுத்து மருத்துவக் காப்பீட்டை முடிவு செய்ய வேண்டும். பிரீமியம் குறைவாக இருக்கிறது என்பதற்கான பாலிசியை தேர்ந்தெடுக்கக் கூடாது. பாலிசி மூலம் கிடைக்கும் பலன்களை பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

    பாலிசியின் வரம்புகளுக்கு ஏற்ப கிளைம் செய்து கொள்ளலாம். மருத்துவக் காப்பீட்டை அனுமதிக்கும் மருத்துவமனைகள் குறித்த விவரம் பாலிசிதாரர்களுக்குக் கொடுக்கப்படும். இந்த மருத்துவமனைகளில் உள்நோயாளியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் காப்பீட்டு தொகையில் இருந்து மருத்துவ செலவுகளை கழித்துக் கொள்வார்கள். புறநோயாளியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவை கிளைம் செய்து கொள்ள முடியாது. ஆனால் பாலிசி அனுமதிக்கும் பட்சத்தில் இதற்கு ஆகும் செலவுகளையும் கிளைம் செய்து கொள்ளலாம். சில நோய்களுக்கு புற நோயாளியாக தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்போம். சில நோய்களுக்கு மருத்துவ பரிசோதனை அடிக்கடி எடுக்க வேண்டியிருக்கும். மேலும் சில நோய்கள் மருத்துவமனையை விட்டு வந்த பிறகும் நீடிக்கும். இது போன்று நிலைமைகளில் பாலிசி அனுமதிக்கும் வரை கிளைம் செய்து கொள்ள முடியும்.

    செல்ல பிராணிகளின் இனம், அளவு, வயது ஆகியவை பொறுத்து பிரீமியம் விகிதம் இருக்கும். ஆண்டுக்கு ரூ.200 முதல் ரூ.10 ஆயிரம் வரை இருக்கிறது.
    சென்னை:

    மனிதர்களை போலவே செல்ல பிராணிகளுக்கும் காப்பீட்டு திட்டங்கள் இருக்கிறது. ஆனால் சிலர் அவற்றை உபயோகப்படுத்துவதில்லை. அதன் பயன் தெரியாமல் தங்களுடைய செல்ல பிராணிகளுக்காக அதிகம் செலவிடுகிறார்கள்.

    உங்களுடைய செல்ல பிராணிகளான நாய், பூனை உடல்நலம் பாதிக்கப்பட்டால் காப்பீடு மூலம் எளிதில் மருத்துவ சிகிச்சை பெற முடியும். தொலைந்து போனாலோ, திருட்டு போனாலோ காப்பீடு செய்வதன் மூலம் அதற்கான தொகையை பெற முடியும். ஆபத்தான நோய்களால் இறந்தாலும் காப்பீடு தொகையை பெறலாம்.

    செல்ல பிராணிகளின் இனம், அளவு, வயது ஆகியவை பொறுத்து பிரீமியம் விகிதம் இருக்கும். ஆண்டுக்கு ரூ.200 முதல் ரூ.10 ஆயிரம் வரை இருக்கிறது.

    காப்பீடு நிறுவனத்தின் இணையதளத்துக்கு சென்று ஆவணங்களை பதிவேற்றம் செய்யலாம். 7 முதல் 8 தினங்களில் பணத்தை பெறலாம்.

    இப்போதைக்கு செல்ல பிராணி காப்பீடு நாய்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. முயல்களுக்கு மட்டுமே இறப்பு பாதுகாப்பு கிடைக்கும். இது படிப்படியாக மாறலாம்.

    காப்பீடு நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்ல பிராணிகளுக்கான காப்பீடு தேவை தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது என்றார். வாடிக்கையாளர் ஒருவர் கூறும்போது, “நான் சுமார் ரூ.4 ஆயிரம் பிரிமியம் செலுத்தினேன். எனது காப்பீடு ரூ.30 ஆயிரமாகும். சம்மந்தப்பட்ட ஆவணங்களை சமர்பித்தவுடன் காப்பீடு தொகை வழங்கப்பட்டது” என்றார்.

    கடந்த ஆண்டில் செல்ல பிராணி காப்பீட்டு சந்தை ரூ.792 கோடியாக மதிப்பிடப்பட்டு உள்ளது. 2028 ஆண்டுக்கு சுமார் ரூ.1956 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய-பசிபிக் பிராந்தியம் உலகளாவிய செல்ல பிராணி காப்பீட்டு சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×