என் மலர்
நீங்கள் தேடியது "Travancore Devaswom Board"
- திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழா நடைபெறவுள்ளது.
- தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பர்"
கேரளா மாநிலம், பம்பையில் செப்டம்பர் 20 அன்று நடைபெறவுள்ள திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழா நிகழ்ச்சியான "லோக அய்யப்ப சங்கமம்" நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டுமென கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் கேரள தேவசம் துறை அமைச்சர் வி.என். வாசவன் அவர்கள் சுடிதம் வாயிலாக கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தனர் .
இந்நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "முன்னரே முடிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழாவில் தான் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளது என்றும் இவ்விழாவில், தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர் பாபு அவர்களும், மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்களும் பங்கேற்பார்கள்" என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கு ரூ.3லட்சம் இன்சூரன்ஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து கட்டணமாக ரூ.5 வசூலிக்கவும் ஆலேசிக்கப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு திட்டங்களை திருவிதாங்கூர் தேவசம்போடு அமல்படுத்தி வருகிறது. அதன்படி சபரிமலை செல்லும் பக்தர்கள் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5லட்சம் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது.
ஆனால் பத்தினம்திட்டா, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா ஆகிய 4 மாவட்டங்களில் நடக்கக்கூடிய விபத்தில் சிக்கினால் மட்டுமே இந்த தொகை கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இந்தநிலையில் கேரள மாநிலத்தில் எங்கு விபத்து நடந்து ஐயப்ப பக்தர்கள் பலியானாலும், ரூ.5லட்சம் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறியிருப்பதாவது:-
சபரிமலைக்கு வரக்கூடிய ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5லட்சம் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது.
ஆனால் சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் விபத்துகளில மரணமடைபவர்களுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் தொகை வழங்க முடியும் என்று இன்சூரன்ஸ் நிறுவனம் நிபந்தனை விதித்திருந்தது.
இந்த நிபந்தனை தற்போது தளர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி கேரள மாநிலத்தில் எந்த பகுதியில் சாலை விபத்தில் சிக்கி ஐயப்ப பக்தர்கள் மரணமடைந்தாலும், அவர்களது குடும்பத்துக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும்.
சபரிமலை வரும் வழியில் மாரடைப்பு மற்றும் பல்வேறு நோய்கள் காரணமாக இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கும் இன்சூரன்ஸ் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கை தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கு ரூ.3லட்சம் இன்சூரன்ஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக நன்கொடையாளர்களிடம் இருந்து நிதி சேகரிக்க திட்டம் இருக்கிறது. மேலும் ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து கட்டணமாக ரூ.5 வசூலிக்கவும் ஆலேசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பலத்த எதிர்ப்பு மற்றும் போராட்டத்துக்கு மத்தியில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் கடந்த வாரம் தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து கோவிலின் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜை செய்யப்பட்டது. இது தொடர்பாக சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவருக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக கண்டரரு ராஜீவருவை தந்திரி பதவியில் இருந்து நீக்க மாநில அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த செய்தியை தேவசம்போர்டு மறுத்து உள்ளது. மகரவிளக்கு பண்டிகையை சீர்குலைக்கவே இந்த சர்ச்சை கிளப்பி விடப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது. #Sabarimala #SabarimalaTantri
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சபரிமலை ஐயப்பன் கோவில் ஆசாரத்திற்கு எதிரானது என்றும், எனவே இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் ஐயப்ப பக்தர்கள் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.
50-க்கும் மேற்பட்டோர் தாக்கல் செய்த மறு சீராய்வு மனுக்களை ஜனவரி மாதம் 22-ந்தேதி விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.
அதேநேரம் சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் கூறி விட்டது. இதனால் ஜனவரி 22-ந்தேதி மறுஆய்வு மனுக்கள் விசாரணை நடைபெறும் வரை சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற நிலை ஏற்பட்டது.

இதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்தால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை செய்யப்படவில்லை. அந்த வசதிகளை சபரிமலையில் ஏற்படுத்தும் வரை பெண்களை அனுமதிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.
இந்த கோரிக்கையின்மீது சுப்ரீம் கோர்ட்டு எடுக்கும் முடிவை பொருத்தே சபரிமலையில் இனிவரும் நாட்களில் சுமூக நிலை ஏற்படுமா? என்பது தெரியவரும். #Sabarimalaverdict #TravancoreDevaswomBoard #SC

கேரளாவில் பெய்த கனமழை மற்றும் அணைகளில் இருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அங்குள்ள மக்கள் கடும் இன்னலுக்கு ஆளானார்கள். வரலாறு காணாத பாதிப்பில் இருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை.
கேரளாவில் பெய்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் இருந்து கோவில்களும் தப்பவில்லை. ஏராளமான கோவில்கள் சேதமடைந்தன. திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சுமார் 200 கோவில்களில் மழை வெள்ளம் சூழ்ந்ததால், பூஜைகள் நடைபெறவில்லை.
சபரிமலை பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கிருந்த கட்டிடங்கள் சிதைந்து அடித்துச் செல்லப்பட்டன. ஆற்றின் குறுக்கே பக்தர்கள் நடந்து செல்லும் 2 பாலங்கள் பலமில்லாததால் வீழ்ந்து போனது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் தங்கி ஓய்வெடுக்கும் ராமமூர்த்தி மண்டபம், 200 மீட்டர் நீளமுள்ள பிரதான நடை பந்தல், அன்னதான மண்டபம், கழிப்பறை கூடங்கள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
தற்போது பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்து உள்ளது. இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தலைமையில் குழுவினர் பம்பையில் முகாமிட்டு மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதை தொடர்ந்து திரு விதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் பம்பையில் நிருபர்களிடம் கூறியதாவது;-
கேரளாவில் மழையால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் சுமார் 200 கோவில்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகி உள்ளது. நீர் மட்டம் குறைந்த நிலையில் கோவிலை சுற்றி உள்ள சகதி மற்றும் கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சபரிமலை பம்பையில் ஏற்பட்ட சேதம் உள்பட தேவஸ்தானத்திற்கு ரூ.300 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இருந்த போதிலும், நடப்பு மண்டல, மகர விளக்கு சீசன் தொடங்குவதற்கு முன்பாக சபரிமலை பம்பை முற்றிலுமாக சீரமைக்கப்படும். மறு சீரமைப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு பக்தர்கள் தாராளமாக நிதி உதவி வழங்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #KeralaFloods






