search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதமரின் நீர்பாசன திட்டம் குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    பிரதமரின் நீர்பாசன திட்டம் குறித்து கலெக்டர் ஆய்வு

    • பிரதமரின் நீர்பாசன திட்டம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • உதவி பொறியாளர் ராஜகோபால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சார்பில் நடை பெற்று வரும் பிரதமரின் விவசாய நீர்பாசன திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில், சவ்வாஸ்புரம் ஊராட்சியில் பண்ணை உற்பத்தி திட்டத்தின் கீழ் ரூ.5 ஆயிரம் மதிப்பில் கொய்யா பழமரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். பண்ணை உற்பத்தி திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு கலெக்டர் தார்பாலின் வழங்கினார்.

    திருச்சுழி ஊராட்சி ஒன்றி யத்தில், குலசேகரநல்லூர் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ1.5லட்சம் மதிப்பில் வரத்து கால்வாய் சீரமைத்தல் பணிகளையும், ரூ5லட்சம் மதிப்பில் பெரிய தடுப்பணை அமைக்கும் பணிகளையும், கல்லூரணி ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ5லட்சம் மதிப்பில் பெரிய தடுப்பணை அமைக்கும் பணிகளையும், ரூ1.5 லட்சம் மதிப்பில் வரத்து கால்வாய் சீரமைக்கும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முத்துராமலிங்கபுரம் ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ1.5 லட்சம் மதிப்பில் வரத்து கால்வாய் சீரமைக்கும் பணிகளையும், பொம்மகோட்டை ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ2.5 லட்சம் மதிப்பில் நடுத்தர தடுப்பணை கட்டும் பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    காளையார் கரிசல்குளம் ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ2.5லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் நடுத்தர தடுப்பணை கட்டும் பணி களையும், புல்லநாயக்கன் பட்டி ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ2.5லட்சம் மதிப்பிலான வரத்துக்கால்வாய் சீரமைக்கும் பணிகளையும், ரூ.5லட்சம் மதிப்பில் பெரியதடுப்பணை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.

    பரளச்சி ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5லட்சம் மதிப்பீட்டில் பெரிய தடுப்பணை அமைக்கும் பணிகளையும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ11.5 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சித்துறை மேம்பாட்டு முகமையின் கீழ் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூட விரிவாக்க பணிகளையும், பரளச்சியில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்தும், பின் பொது மக்களிடம் அவர்க ளுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்தும் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் பத்மாவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியார் அம்மாள், வேளாண்மை துணை இயக்குநர் மோகன்தாஸ் சவுமியன், உதவி பொறியாளர் ராஜகோபால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×