search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை
    X

    ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் பூமிபூஜை நடந்தது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டியளித்தார்.
    • வருகிற கோடை காலத்தில் மதுரை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை வர வாய்ப்புள்ளது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 50 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. அ.தி.மு.க. பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கவிஞர் மோகன் தாஸ் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா பூமி பூஜைக்கு தலைமை தாங்கி கட்டிட பணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    மதுரையில் தமிழக முதல்வரின் கள ஆய்வு குறித்து முறையான முடிவுகள் வெளி வரவில்லை. கள ஆய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடா ளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் அழைக்கவில்லை. குறைந்தபட்சம் உள்ளாட்சி பிரதிநிதிகளையாவது அழைத்து மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதித்திருக்க வேண்டும்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் ரூ.540 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டது. அது தற்போது எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை. இதேபோல மதுரை டைட்டல் பார்க், மதுரைக்கு முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் எந்த நிலையில் உள்ளது என்றும் தெரியவில்லை.

    வருகிற கோடை காலத்தில் மதுரை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை வர வாய்ப்புள்ளது. அது தொடர்பாகவும் ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாக தெரியவில்லை. மொத்தமாக முதல்வரின் கள ஆய்வு கூட்டம் என்பது அவரது சுற்றுப்பயணமாக அமைந்ததே தவிர மதுரை மக்களுக்கு எந்தவித திட்டப் பணிகளும் நடைபெற்றதாக தெரியவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை 2026-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என்றுஅறிவித்த நிலையில் நிதி உதவி செய்யும் ஜப்பான் நிறுவனத்திடம் சுகாதாரத்துறை அமைச்சர் இது தொடர்பாக ஏதேனும் முயற்சி செய்தார்களா? என்பது தெரியவில்லை.

    இவர்கள் மத்திய அரசை குறை கூறுவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் கல்லூரி, பள்ளிகள் அருகிலேயே மாணவர்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கும் இடத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கீழடி அருங்காட்சி யகத்தை முதல்வர் திறந்து வைத்தார். இந்த பணி 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டு அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்தது அ.தி.மு.க. தான். மதுரைக்கு ஆய்வுக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட துணை செயலாளர் ஓம்.கே.சந்திரன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், துணைச் செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர்கள் நாகரத்தினம், பாலா, பொன்.முருகன், எம்.ஆர்.குமார், பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×