search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Breakfast"

    • நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க வேண்டும்.
    • தேவகோட்டை நகர்மன்ற கூட்டத்தில் தலைவர் வலியுறுத்தினார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகராட்சியில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில், நகர் மன்ற துணைத்தலைவர் ரமேஷ், ஆணையாளர் பார்கவி முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் பேசுகை யில், நகராட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்க அரசுக்கு நகர் மன்றம் வாயிலாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நகரில் டெங்கு பரவாமல் தடுக்க அதிகாரிகள் அனைவரும் தீவிர நடவடிக்கை எடுத்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    அனிதா சஞ்சய் கவுன்சிலர் :- நகரில் ஒரு பகுதி கழிவுநீர் அனைத்தும் இரவுசேரி ஊரணியில் கலப்பதால் தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டு வருகிறது. உடனே அதை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    தலைவர் : ஊரணியில் பல ஆண்டு காலமாக நகரில் உள்ள கழிவுநீர் செல்கிறது அதனை உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் உள்ள கழிவு நீர்கள் அனைத்தும் ஓரிடத்தில் ஒன்றிணைத்து அவற்றை மறுசுழற்சி செய்ய அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    துணைத் தலைவர் ரமேஷ் :- நகரில் உள்ள காலி இடங்களில் கருமேல மரம், மழைநீர் தேக்கம் மற்றும் குப்பைகள் இருந் தால் உரிமையாளர்களுக்கு முதலில் நகராட்சி சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்ட வேண்டும். இதனால் தொற்று நோய் பரவல் தடுக்க முடியும். 3,8,9 வார்டுகளில் குடிநீர் சரிவர வரவில்லை உடனே அதனை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    தலைவர் : காலி யிடங்களில் உள்ள உரிமை யாளர்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட வார்டுகளில் குடிநீர் சேவையை சரி செய்ய கூடுதல் போர்வல் போட நடவடிக்கை எடுக்கப்ப டும் என்றார்.

    இதேபோல் கவுன் சிலர்கள் ஷேக் அப்துல்லா, கோமதி பெரியகருப்பு, சுதா, நீேராஜா சுந்தரலிங்கம், வடிவேல் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார். அதற்கு நகர் மன்ற தலைவர் பதலளித்தார்.

    • முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தும் விழுப்புரம் கலெக்டர்.

    விழுப்புரம்:

    மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கபடாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    விழுப்புரம் மாவட்டத்தில், முதற்கட்டமாக விழுப்புரம் நகராட்சியில் 16 அரசுப்ப ள்ளிகளில் 1,902 பேருக்கும், திண்டிவனம் நகராட்சியில் 6 அரசுப்பள்ளிகளில் 261 பேருக்கும் என மொத்தம் 22 அரசுப்பள்ளிகளில் 2,163 மாணவ, மாணவியர்களுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் காலை உணவு வழங்கப்பட்டது. இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 2-ம் கட்டமாக விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தினை அமைச்சர் பொன்முடி, செஞ்சியில் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோரால் துவக்கி வைக்க ப்பட்டது. அன்றிலிருந்து, மாணவ, மாணவியர்களுக்கு தினமும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    விழுப்புரம் மாவட்டத்தில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ், விழுப்புரம் நகராட்சியில் 1 அரசுப்பள்ளியில் 293 பேருக்கும், கோட்டக்குப்பம் நகராட்சியில் 5 அரசுப்பள்ளி களில் 215 பேருக்கும், செஞ்சி பேரூராட்சியில் 5 அரசுப்பள்ளிகளில் 442 பேருக்கும், அனந்தபுரம் பேரூராட்சியில் 4 அரசுப்பள்ளி களில் 276 பேருக்கும், மரக்காணம் பேரூராட்சியில் 11 அரசு ப்பள்ளிகளில் 719 பேருக்கும், வளவனூர் பேரூராட்சியில் 4 அரசுப்ப ள்ளிகளில் 295 பேருக்கும், விக்கிரவாண்டி பேரூராட்சி யில் 3 அரசுப்பள்ளிகளில் 314 பேரு க்கும், அரகண்ட நல்லூர் பேரூராட்சியில் 3 அரசுப்பள்ளிகளில் 91 பேருக்கும், திருவெண்ணெ ய்நல்லூர் பேரூராட்சியில் 2 அரசுப்பள்ளிகளில் 249 பேருக்கும், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 100 அரசுப்பள்ளிகளில் 3,956 பேருக்கும், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் 69 அரசுப்பள்ளி களில் 3,628 பேருக்கும், வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில் 82 அரசுப்பள்ளிகளில் 2,756 பேருக்கும், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் 60 அரசுப்பள்ளி களில் 2,517 பேருக்கும், மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் 64 அரசுப்பள்ளிகளில் 3,405 பேருக்கும், மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தில் 86 அரசுப்பள்ளிகளில் 4,517 பேருக்கும், வானூர் ஊராட்சி ஒன்றியத்தில் 88 அரசுப்பள்ளி களில் 3,967 பேருக்கும், காணை ஊராட்சி ஒன்றியத்தில் 75 அரசுப்பள்ளிகளில் 5,180 பேருக்கும், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் அரசுப்பள்ளிகளில் 4,025 பேருக்கும், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 78 அரசு ப்பள்ளிகளில் 4,363 பேருக்கும், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 83 அரசுப்பள்ளிகளில் 3,394 பேருக்கும், முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் 64 அரசுப்பள்ளி களில் 5,116 பேரு க்கும், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 72 அரசுப்பள்ளிகளில் 6,101 பேருக்கும் என மொத்தம் 1,026 அரசு ப்பள்ளிகளில் 55,819 மாணவ, மாணவி யர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    விழுப்புரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக 22 அரசுப்ப ள்ளிகளில் 2,163 மாணவ, மாணவி யர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 1,026 அரசுப்பள்ளி களில் 55,819 மாணவ, மாணவியர்கள் என 1,048 அரசு ப்பள்ளி களில் பயிலும் 57,912 மாணவ, மாணவிய ர்களுக்கு முதல் -அமை ச்சரின் காலை உணவு திட்ட த்தின்கீழ், காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    • தேவகோட்டை நகராட்சி பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டம் தொடங்கப்பட்டது.
    • நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் 6 நகராட்சி பள்ளிகள் உள் ளன. இப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் 167 பேர் பயின்று வருகின்றனர். தமிழக அரசு முதலமைச் சரின் காலை உணவு திட் டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து தேவகோட்டை நகராட்சியில் ஜீவா நகரில் உள்ள ஒருங்கி–ணைந்த சமையல் கூடத்தில் இருந்து உணவுகள் நகராட்சி பள்ளிகளுக்கு உணவு எடுத்து செல்லப்பட்டது. 16-வது நகர்மன்ற தொடக் கப்பள்ளியில் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், நகர்மன்றத் துணைத் தலை–வர் ரமேஷ், ஆணையாளர் பார்கவி ஆகியோர் முதல்–மைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத் தனர். நகர்மன்ற தலைவர் மாணவர்களுக்கு உணவுகள் பரிமாறப்பட்டு மாணவ மாணவிகளுடன் அமர்ந்து அருகில் உள்ள மாணவருக்கு ஊட்டி விட்டு உணவு அருந் தினார். இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
    • குழந்தைக்கு உணவுகளை ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 1522 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் படிக்கும் 87,842 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.

    கொளக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

    அப்போது அருகில் அமர்ந்திருந்த ஒரு குழந்தைக்கு அமைச்சர் உணவுகளை ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இதில் மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே. கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்பி, தொழிலாளர் நல மேம்பாட்டு துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்தி வேல்மாறன், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, கோட்டாட்சியர் மந்தாகினி, ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, துணைத் தலைவர் ரமணன், ஒப்பந்ததாரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன், மக்கள் நண்பர்கள் குழு தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இலுப்பக்குடியில் அரசு தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கியது.
    • ஒன்றிய தலைவர் சரண்யா செந்தில்நாதன் தொடங்கி வைத்தார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இலுப்பக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விரிவாக்கப்பட்ட தமிழக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.சாக்கோட்டை ஒன்றிய தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமை தாங்கி குழந்தைகளுக்கு உணவு பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் ஒன்றிய தலைவர் முத்துராமலிங்கம், இலுப்பக்குடி ஊராட்சி துணை தலைவர் திருநெல்லை ரகுபதி, உறுப்பினர்கள் சீதா வைரவன், அமுதா லெட்சுமணன், இலுப்பக்குடி ஊராட்சி செயலர் வீரப்பன், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியை குழந்தை தெரஸ் நன்றி கூறினார்.

    • அமைச்சர் இ.பெரியசாமி திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், செட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதல்-அமை ச்சரின் காலை உணவுத் திட்டத்தை கலெக்டர் பூங்கொடி தலைமையில் தொடங்கி வைத்தார்.
    • மாணவ-மாணவிகள் என மொத்தம் 1111 பள்ளிகளில் பயிலும் 58,330 மாணவ-மாணவிகள் பயனடை கின்றனர்.

    திண்டுக்கல்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்க ப்பள்ளி மாணவ-மாணவி களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி படித்த நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார்.

    அதனைத்தொடர்ந்து அமைச்சர் இ.பெரியசாமி திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், செட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதல்-அமை ச்சரின் காலை உணவுத் திட்டத்தை கலெக்டர் பூங்கொடி தலைமையில் தொடங்கி வைத்தார்.

    இதில் அமைச்சர் தெரிவித்ததாவது:-

    திண்டுக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் பணி தொடங்கப்பட்டது. அதன்படி, ஊராட்சிப் பகுதிகளில் 34 பள்ளிகளைச் சேர்ந்த 951 மாணவ- மாணவிகளுக்கும், நகர்ப்புறங்களில் 15 பள்ளிகளைச் சேர்ந்த 1354 மாணவ- மாணவிகளுக்கும், என மொத்தம் 49 பள்ளிகளைச் சேர்ந்த 2,305 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து தொடக்கப்பள்ளி களிலும் காலை உணவு வழங்கும் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டு ள்ளது. அதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 1,034 பள்ளிகளைச் சேர்ந்த 53,715 மாணவ, மாணவிகளுக்கும், நகர்ப்புறத்தில் 28 பள்ளிகளைச் சேர்ந்த 2,310 மாணவ, மாணவிகளுக்கும், என மொத்தம் 1,062 பள்ளிகளைச் சேர்ந்த 56,025 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு இன்று முதல் காலை உணவு வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் வாயிலாக திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 1068 பள்ளிகளில் பயிலும் 54,666 மாணவ-மாணவிகள், நகர்ப்புற ங்களைச் சேர்ந்த 43 பள்ளிகளில் பயிலும் 3,664 மாணவ-மாணவிகள் என மொத்தம் 1111 பள்ளிகளில் பயிலும் 58,330 மாணவ-மாணவிகள் பயனடை கின்றனர்.

    இத்திட்டத்தின்படி பள்ளிகளில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் வெண் பொங்கலுடன் காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமைகளில் ரவா காய்கறி கிச்சடி,  புதன் கிழமைகளில் அரிசி உப்புமாவுடன் காய்கறி சாம்பார், வியாழக் கிழமைகளில்  வரகு பொங்கலுடன் காய்கறி சாம்பார், வெள்ளிக் கிழமைகளில் சாமை கிச்சடி மற்றும் ரவா கேசரி(இனிப்பு) ஆகியவை சமைத்து மாணவ, மாணவிகளுக்கு வழங்க ப்படுகிறது. சமையல் மையப் பொறுப்பா ளர்க ளுக்கு அந்தந்த வட்டாரங்க ளில் தனித்தனி குழுவாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சரவணன், மாவட்ட ஊராட்சித் தலை வர் பாஸ்கரன், ஆத்துார் ஊராட்சி ஒன்றிய க்குழு தலைவர் மகேஸ்வரி முரு கேசன், மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவி யாளர்(சத்துணவு) சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவர் லாரன்ஸ், செட்டியப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடக்கப்பள்ளி களில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
    • அதில் சேலம் மாநகரில் 54 பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவு படுத்தப்படுகிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடக்கப்பள்ளி களில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அதில் சேலம் மாநகரில் 54 பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவு படுத்தப்படுகிறது.

    தொடக்க விழா

    சேலம் மாவட்டம் ஓம லூர் அருகே உள்ள காமலா பும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாளை காலை இந்த திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் கார்மேகம், ராஜேந்திரன் எம்.எல்.ஏ ஆகியோர் பார்வையிட்டனர்.

    அப்போது மேற்கு மாவட்ட செயலாளர் செல்வகணபதி, ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்பிர மணி, ரமேஷ், என்ஜினீயர் காமராஜ், ஒன்றிய கவுன்சிலர் செல்வி ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் பழனிகவுண்டர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    சேலம் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டம் நாளை முதல் 1,418 பள்ளி களில் தொடங்கப்படுகிறது. இதனை அந்தந்த பகுதி எம்.பி., எம்.எல்.ஏக்கள் தொடங்கி வைக்கிறார்கள். இதன் மூலம் 1 லட்சத்து ஆயிரத்து 318 மாணவ-மாணவிகள் பயன் பெறு வார்கள். இதனால் இந்த திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    நாமக்கல் மாவட்டம்

    நாமக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக கொல்லி மலை வட்டாரத்தில் உள்ள 41 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான 1,588 மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் முதல் அமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

    தற்போது முதல்-அமைச்சரின் காலை உண வுத் திட்டம் 15 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 673 பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை யிலான 27,128 மாணவ-மாணவிகளும் மற்றும் 15 பேரூராட்சிகளில் உள்ள 59 பள்ளிகளில் படிக்கும் 3,751 மாணவ-மாணவிகளும் பயன்பெறும் வகையில் நாளை வெள்ளிக்கிழமை முதல் விரிவுப்படுத்தப்பட உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 773 பள்ளிகளில் 32,497 மாணவ-மாண விகள் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் மூலம் பயன்பெற உள்ளனர். முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல் பாட்டிற்கான சமையல் கூடங்களின் தயார் நிலை, உணவுப்பொட்களின் வினியோகம் மற்றும் கைபேசி செயலியில் தகவல் பதிவேற்றம் செய்வது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.

    முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி டவும், கண்காணித்திடவும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் டாக்டர்.உமா கூறி உள்ளார்.

    • தமிழ்நாடு முதலமைச்சரால் 25.8.2023 அன்று இரண்டாம் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
    • குறித்த நேரத்தில் உணவு வழங்குவது குறித்தும், தேவையான நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறு த்தப்பட்டுள்ளது.

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்து வது தொடர்பான ஆலோச னைக்கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.இதில் கலெக்டர் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக முதலமை ச்சரின் காலைஉணவுத்திட்டம் செயல்படுத்துவது தொட ர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த திட்டத்தின் நோக்கமானது மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்க ப்படாமல் இருத்தலை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து நிலையை உயர்த்தவும், குறிப்பாக ரத்த சோகை குறைபாட்டினை நீக்கவும், பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் வருகையை அதிகரிக்கவும் மற்றும் கல்வியை தக்க வைத்துக்கொள்ளவும், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமை யை குறைக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    காலை உணவுத்திட்டத்தினை கண்காணிக்க மாவட்ட அளவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஊரக வாழ்வாதார இயக்கம், பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் துறை, உணவுப்பாதுகாப்புத்துறை ஆகிய துறைகளின் அலுவ லர்களை உறுப்பினர்களாக கொண்ட மாவட்ட கண்கா ணிப்பு குழு அமைக்கப்பட்டு வாரந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

    வட்டார அளவில் காலை உணவுத்திட்டத்தினை கண்காணிக்க உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊர் நல அலுவலர்கள், விரிவுஅலுவ லர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு மையங்களை பார்வையிட்டு வாரந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் 25.8.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் இரண்டாம் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் 251 கிராம ஊராட்சிகளில் 797 பள்ளிகளில் பயிலும் 37,018 மாணவ, மாணவிகளுக்கும், 14 பேரூராட்சிகளில் 95 பள்ளிகளில் பயிலும் 4,555 மாணவ, மாணவிகளுக்கும், 6 நகராட்சிகளில் 59 பள்ளிகளில் பயிலும் 5,648 மாணவ,மாணவிகளுக்கும் சென்ட்ரலைசடு கிட்சன் மூலம் நகராட்சி பகுதியில் உள்ள 2 பேரூராட்சிகளில் 10 பள்ளிகளில் பயிலும் 784 மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் மாநகராட்சியில் உள்ள 120 பள்ளிகளில் பயிலும் 27,477 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 1,081 பள்ளிகளில் 75,482 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமை ச்சரின் காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

    எனவே சமையலறையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், குறித்த நேரத்தில் உணவு வழங்குவது குறித்தும், தேவையான நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறு த்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (சத்துணவு) ஹேமலதா மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • காலை உணவு வழங்கும் திட்டம் முன்னோட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆய்வு செய்தார்.
    • 8 வட்டாரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் இத்திட்டம் விரிவுப்படு த்தப்படவுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் பேரூராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய உருது தொடக்கப்பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் முன்னோட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது,

    1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசுத் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஊட்ட ச்சத்து நிலைபாதுகாக்கும் பொருட்டு முதல்-அமைச்சர் காலை உணவு திட்டத்தினை அறிவித்து செயல்படு த்தினார். அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராய ன்மலை வட்டாரத்திற்குட்ப ட்ட 8 ஊராட்சிகளில் உள்ள 14 அரசு தொடக்கப் பள்ளிகளில் கடந்த ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதம் உள்ள 8 வட்டாரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 638 அரசுப்பள்ளிகளில் வருகின்ற 25-ந்தேதி முதல் இத்திட்டம் விரிவுப்படு த்தப்படவுள்ளது.

    இத்திட்டம் விரிவுபடுத்துவதற்கான முன்னோட்டமாக தியாகது ருகம் பேரூராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய உருது தொடக்கப்பள்ளியில் (பெண்கள்) நடத்தப்பட்டது. காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ள அனைத்து பள்ளிகளிலும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவு சமைக்கப்பட்டு சரியாக நேரத்தில் குழந்தைகளுக்கு உணவு வழங்கிட அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ள வேண்டு மென தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சுந்தராஜன், உதவி திட்ட அலுவலர் மாதேஷ், பேரூராட்சி மன்ற தலைவர் வீராசாமி, துணைத்தலை வர் சங்கர், தி.மு.க. நகர செயலாளர் மலையரசன், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • காலை உணவின் சுவை மற்றும் தரத்தினை மாவட்ட கலெக்டர் பழனி, ஆய்வு செய்தார்.
    • ஊரகப்பகுதிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் காலை உணவு திட்டம்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியம், ஆயந்தூர் ஊராட்சியில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ், 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கும் பொருட்டு, முன்னோட்டமாக தயாரிக்க ப்பட்ட காலை உணவின் சுவை மற்றும் தரத்தினை மாவட்ட கலெக்டர் பழனி, ஆய்வு செய்தார். அவர் பேசியதாவது, 

    காலை உணவு திட்டம், அறிவித்து, முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில் தொடக்கி வைத்து, செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது, 2-ம் கட்டமாக அனைத்து ஊரகப்பகுதிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு திட்டம் ஆகஸ்ட் 25-ந்தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. மேலும், மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளில் உள்ள 988 பள்ளிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள 32 பள்ளிகள் என மொத்தம் 1020 பள்ளிகளில் முன்னோட்டமாக காலை உணவு தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் உணவினை உண்டு சுவை மற்றும் தரத்தினை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார்.

    • காலை உணவுத் திட்டத்திற்கு பாத்திரங்கள் கொள்முதல் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • சுய உதவிக்குழுவினர்க்கு தரமான பாத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விரைவில் வழங்கப்படும் என கூறினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், முதல மைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு பாத்திரங்கள் கொள்முதல் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசினார் அப்போது அவர் பேசிய தாவது:- 1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஊட்டச்சத்து நிலை பாது காக்கும் பொருட்டு முதல மைச்சரின் காலை உணவு திட்டத்தினை தமிழக அரசு தொடங்கி வைத்தது.

    அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வரா யன்மலை வட்டத்திற் குட்பட்ட 8 ஊராட்சிகளில் உள்ள 15 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதல மைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி செயல் படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 8 வட்டா ரங்களில் உள்ள ஊராட்சி, நகராட்சி மற்றும் பேருராட்சி களுக் குட்பட்ட 638 அரசுத் தொடக்கப்பள்ளியில் இத்திட்டம் செயல் படுத்தப் பட உள்ளது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினால் தொடக்கப் பள்ளி மாண வர்கள் ஆர்வமுடனும், ஆரோக்கிய முடனும் கல்வி கற்கும் சூழல் உருவாக்கப்பட உள்ளது. இத்திட்டம் செயல்படுத் தப்படவுள்ள பள்ளிகளில், காலை உணவு சமைத்து வழங்கும் பணி களில் ஈடுபடவுள்ள சுய உதவிக்குழுவினர்க்கு தரமான பாத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விரைவில் வழங்கப்படும் என கூறினார். இக்கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் சுந்த ராஜன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் ரெத்தின மாலா மற்றும் அரசு அலு வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • 14 வகையான காலை உணவுகளை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்ட சமையலர்க ளுக்கு பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவ லர் சையுப்தீன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஒன்றியக்குழு தலைவர் அனிதா குப்பு சாமி கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கிவைத்தார்.

    தமிழகம் முழுவதும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளுக்கு முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்த திட்டத்தால் 1545 பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் பயன டைவர். இதற்காக நியமிக்கப்பட்ட சமையலருக்கு ரவா பொங்கல், கோதுமை ரவா கிச்சடி, அரிசி உப்புமா உள்ளிட்ட 14 வகையான காலை உணவுகளை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சமையலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×