search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலை சிற்றுண்டி சமையலர் பணிக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்
    X

    காலை சிற்றுண்டி சமையலர் பணிக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்

    • கலெக்டர் எச்சரிக்கை
    • சமையல் செய்யும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில், முதல் அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 288 கிராம ஊராட்சிகள், 8 பேரூராட்சிகளிலும் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வேலை நாட்களில் தினசரி காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

    முகாலைச் சிற்றுண்டித் திட்டத்தின் கீழ் பள்ளி சமையல் கூடங்களில் சமையல் செய்யும் பணி தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இந்த சமையலர் பணிக்கு தகுதியுடைய மகளிரை, சம்மந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பு மூலம் தேர்வு செய்து, கிராம அளவிலான முதன்மைக் குழு, பேரூராட்சி அளவிலான முதன்மைக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு பணிநியமிக்கப்பட உள்ளனர்.

    சமையல் செய்யும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் 10-ந் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 3 ஆண்டுகள் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும், சமையல் செய்யும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவரின் மகன் அல்லது மகள், சம்மந்தப்பட்டபள்ளியில் 1 முதல் 4 ஆம் வகுப்பு வரை படிக்க வேண்டும், சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி, பேரூராட்சியில் வசிக்க வேண்டும்.

    தகுதியான நபர்கள் அக்கிராம ஊராட்சியில் இல்லையெனில், அருகில் உள்ள கிராம ஊராட்சியை சேர்ந்தவராக இருக்கலாம். இந்த தகுதிகளை உடையவர்கள் மட்டுமே இப்பணிக்கு தேர்வுசெய்யப்படுவர். இப்பணிமுற்றிலும் தற்காலிகமானது.

    இதில் எவ்வித கையூட்டுக்கும் இடமில்லை. பொதுமக்கள் யாரும் பணிநிரந்தம் செய்யப்படும் என நம்பி, யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×