search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Officer Inspection"

    • உரிய நேரத்தில் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
    • அதிகாரிகள் உடனிருந்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை திட்ட இயக்குனர் கு. செல்வராசு நேற்று ஆய்வு செய்தார்.

    அப்போது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புங்கனூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும், அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பாடனூர், கொட்டையூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் அங்கன்வாடி பணிகளையும், கொட்டையூர், தாயலூர், புங்கனூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் பசுமை வீடு திட்ட பணிகளையும் திட்ட இயக்குனர் ஆய்வு செய்து பணிகள் உரிய நேரத்திலும் தரமாகவும் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணை தலைவர் அ.திருமால், ஒன்றிய கவுன்சிலர் எஸ்.லட்சுமி செந்தில் குமார் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • வண்ணம் தீட்டுதல் போன்ற பணிகளை பார்வையிட்டார்
    • அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த ராமசாணிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேற்கு ஆரணி வட்டாரக்கல்வி அலுவலர் அருணகிரி திடீர் ஆய்வு செய்தார்.

    பள்ளி வளாகம், வகுப்பறை வண்ணம் தீட்டுதல் பள்ளியின் நுழைவு வாயில் போன்ற பணிகளை பார்வையிட்டார்.

    இதில் பள்ளி தலைமையாசிரியை தாமரைச்செல்வி சமூக ஆர்வலர் க.பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட கட்டு மான பணி நடந்து வருகிறது
    • புதிய ரேஷன் கடை அமைக்கும் இடத்தை பார்வையிட்டார்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள சுடுகாட்டிற்க்கு சுற்றுச்சுவர், அரசு பள்ளிக்கு கழிப்பறை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட கட்டு மான பணி நடந்து வருகிறது.

    இதனை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது பழையமனை பகுதிக்கு நடைப்பயிற்சி பூங்காவும், செயல்படாத அங்கன்வாடி மையத் தினையும் செயல்படுத்த அறிவுறுத்தினார். மேலும் அப்பகு தியில் பழுதடைந்து இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் சமுதாயக்கூடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட உத்தரவிட்டார்.

    கீழ்கன்றாம்பல்லி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாண வர்களுக்கு கழிப்பறை வசதி மற்றும் அதே பகுதியில் புதிய ரேஷன் கடை அமைக்கும் இடத்தினையும் பார்வையிட்டார். 

    • இன்னூயிர் காப்போம் திட்டம் அரசு மருத்துவமனையில் சரியாக பயன்படுத்தி வருகின்றனரா?
    • முதல்- அமைச்சர் விரிவான காப்பீடு திட்டம் குறித்து எடுத்துரைத்தார்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள கலைஞர் தெருவில் அமைந்துள்ள நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் தினம்தோறும் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதார மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திடீரென்று நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் தங்களது ஒதுக்கப்பட்ட பணிகள் சரிவர செய்கின்றன என ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழக அரசின் இன்னூயிர் காப்போம் திட்டம் அரசு மருத்துவமனையில் சரியாக பயன்படுத்தி வருகின்றனரா எனவும் மற்றும் நிலுவையில் உள்ள தணிக்கைகள் முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டம் குறித்து என டாக்டர்களிடம் எடுத்துரைத்தார்.

    அதன் பிறகு புறநோயாளிகளிடமும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிகள் தங்கி உள்ள அனைத்து வார்டுகளில் நேரிடையாக சென்று டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் அரசு மருத்துவமனை முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தூய்மையாக வைத்து இருக்க வேண்டும் என இணை இயக்குநர் மாரிமுத்து டாக்டர்களிடம் கூறினார்.

    • மாணவர்களுக்கு வழங்கும் உணவுகள் சோதனை
    • வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தர வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் 14 சிறிய கிராமங்களை கொண்டு தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.

    இங்கு சுமார் 10,000 மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இம்மலையில் அத்தனாவூர் அடுத்த பழதோட்டம் அருகில் அரசு உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது.

    ஏலகிரி மலையில் ஒரே ஒரு அரசு உயர்நிலைப் பள்ளி மட்டுமே இயங்கி வருகிறது. இங்கு ஏலகிரி மலையில் உள்ள மாணவ, மாணவிகளும், ஜவ்வாது மலை, ஆலங்காயம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

    மற்ற பகுதிகளில் இருந்து படிக்கும் மாணவர்களுக்கு அரசு தங்கும் விடுதி அருகிலேயே அமைந்துள்ளது. மாணவிகளுக்கு விடுதிகள் இல்லாமல் இருந்தது. பின்பு 2 வருடங்களுக்கு முன் தாட்கோ நிதியின் மூலம் பள்ளி மாணவிகளுக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டது.

    இந்நிலையில் நேற்று பழங்குடியினர் நலம் மாவட்ட இணை இயக்குனர் சுரேஷ்குமார் அரசு பழங்குடியினர் விடுதிகளை திடிரென ஆய்வு செய்தார்.

    மேலும் இங்குள்ள மாணவர்கள் தங்கும் இடத்தையும், கழிப்பிடங்களையும், குடிநீர், சமையலறைகளையும், மாணவர்களுக்கு வழங்கும் உணவுகளையும் ஆய்வு செய்தார். மேலும் இதுவரை சமையலறையில் எரிவாயு இணைப்பு இல்லாத நிலையில் உடனடியாக இணைப்பை வழங்க உத்தரவிட்டார்.

    மேலும் புதிதாக கட்டி உள்ள மாணவிகளின் தங்கும் விடுதியை ஆய்வு செய்த பின்னர் வரும் கல்வியாண்டில் அதனை திறந்து சேர்க்கை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    அப்போது ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் புதியதாக கட்டப்பட்ட பழங்குடியினர் மாணவர்கள் தங்கும் விடுதி விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் ஏலகிரி மலையில் வாழும் பழங்குடியினர் மக்களுக்கு நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் கொடுத்து வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியினர் நலத்துறை இணை இயக்குனரிடம் கோரிக்கை வைத்தார்.

    மேலும் இந்த ஆய்வின் போது மாவட்ட பழங்குடியினர் அலுவலர் கலைச்செல்வி, ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணை தலைவர் திருமால் மற்றும் விடுதி பாதுகாப்பாளர் ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • கெஜ்ஜல்நாயக்கன்பட்டி-பனமரத்துப்பட்டி-சேசன்சாவடி நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் பழுது ஏற்பட்டது.
    • மேலும், வளைவுகளில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டியிருந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி-பனமரத்துப்பட்டி-சேசன்சாவடி நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் பழுது ஏற்பட்டது. மேலும், வளைவுகளில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டியிருந்தது. இதற்காக நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், ஒருங்கிணைந்த சாலை உட்கட்மைப்பு மேம்பாட்டு திட்டத்தில் சாலை பாதுகாப்பு நிதியின் கீழ் ரூ.2 கோடியை ஒதுக்கீடு செய்தது.

    அந்த நிதியின் மூலம் அச்சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் நிறைந்த இடங்களில் சாலையை விரிவாக்கம் செய்தும், பல்வேறு இடங்களில் பழுது நீக்கியும் சீரமைத்தனர்.இப்பணி முழுமையாக நிறைவடைந்த நிலையில், சாலையை சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். அவர், சாலையை அகலப்படுத்திய இடத்தை பார்வையிட்டு அதன் தரத்தையும், தளத்தின் அளவுகளையும் பார்வை யிட்டார்.

    தொடர்ந்து, சாலை பராமரிப்பு பணி மேற்கொள்வது குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். ஆய்வின்போது, சேலம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.

    • காரியாபட்டி அருகே அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.96 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட நூலக கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும், அரசு பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலு வலர்- மாற்றுத்தி றனாளி நலத்துறை செயலாளர் ஆனந்த்குமார், கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் பி.புதுப்பட்டி ஊராட்சியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்ப டும் உணவு மற்றும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்து மாணவர்களு டன் அமர்ந்து சாப்பிட்டனர்.

    பி.புதுப்பட்டி ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் பி.புதுப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.96 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட நூலக கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பி.புதுப்பட்டி ஊராட்சி யில், துணை சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து மருந்துகளின் இருப்பு குறித்தும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் மருந்துகள், வழங்கப்படும் சிகிச்சைகள், மருத்துவர்களின் வருகை குறித்தும், நாய்க்கடி மூலம் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். மின் ரத்த அழுத்தம் கண்டறியும் கருவியில் மறுமுறை சார்ஜ் செய்யும் வசதி உள்ள மின்கலத்தை பயன்படுத்துமாறு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    காரியாபட்டி வட்டம் கம்பிக்குடி ஊராட்சி மந்திரிஓடை கிராமத்தில் நரிக்குறவர் காலனியில் வசிக்கும் 54 குடும்பங்களுக்கு ரூ.3.19 கோடி மதிப்பில், வீடுகள் கட்டுப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து அந்த பணிகளை விரைவாகவும், தரமாகவும், முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

    காரியாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஆய்வகத்தில் மாணவர்கள் செய்முறை தேர்வு செய்து வருவதை பார்வையிட்டு பழுதடைந்த கட்டிடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    பி.புதுப்பட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் உயரம், எடை, குழந்தைகளின் வருகைப் பதிவேடு மற்றும் அங்குள்ள சமையலறை ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை)தண்டபாணி, செயற்பொறியாளர் சக்தி முருகன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) யசோதாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முக பிரியா, சிவகுமார், வட்டாட்சியர் விஜயலட்சுமி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • தனியார் உரக்கடைகளில் விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரம், யூரியா, உயிர் நுண்ணுட்டச்சத்து இடு பொருட்கள் ஆகியவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
    • இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி  பகுதியில் இயங்கும் தனியார் உரக்க டைகளில் விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரம், யூரியா, உயிர் நுண்ணுட்டச்சத்து இடு பொருட்கள் ஆகியவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

    வாங்கும் பொருட்களுக்கு ரசீது வழங்குவதில்லை. தரமற்ற போலியான உயிர் நுண்ணூட்ட இடுபொருட்களை விற்பனை செய்வ தாகவும், இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் புகார் தெரிவித்தனர். வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கா விட்டால் போராட்டம் நடத்தப்படுமென, சேலம் மாவட்ட பா.ம.க. உழவர் பேரியக்க செயலாளர் முருகன் தெரிவித்தார்.

    இதன் எதிரொலியாக, வாழப்பாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மணிமேகலாதேவி தலைமையில், வாழப்பாடி மற்றும் பேளூர் பகுதியில் இயங்கும் தனியார் உரக்க டைகள் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில், வேளாண்மைத்துறையினர் திடீர் ஆய்வு நடத்தினர்.

    அப்போது யூரியா, உரம் உள்ளிட்ட இடுபொருட்க ளின் இருப்பு நிலை சரி பார்த்ததோடு, பயோ பூச்சிக்கொல்லி மருந்துகளின் மாதிரிகளின் உண்மை த்தன்மையை அறிய மாதிரி கள் சேகரித்து பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.எந்த பொருளையும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய க்கூடாது. விவசாயிகள் கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும். யூரியா, உரம் வாங்க வரும் விவசாயிகளிடம், இந்த தயாரிப்பு நிறுவனங்களின் மற்ற பொருட்களை வாங்க கட்டாயப்ப டுத்தக்கூடா தென, உரக்கடை விற்பனை யாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. விதிமுறை களை பின்பற்றாத 2 தனியார் உரக்கடைகள், இடுபொருட்கள் விற்பனைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.

    • வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு கட்டித்தரப்படுகிறது
    • தாசில்தார், வருவாய் ஆய்வாளர் உடன் ெசன்றனர்

    நெமிலி:

    நெமிலி அடுத்த வேப்பேரி, சிறுநமல்லி, நாகவேடுபோன்ற கிராமங்களில் குடிசைப் பகுதிகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

    வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள அனைத்து குடும்பதாரர்களுக்கும் வறுமை கோட்டிற்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி துறையின் வாயிலாக பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்திற்கு இடத்தை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றுவருகிறது.

    அவர்களுக்கு வீடு கட்டுவதற்காக நெமிலி வட்டத்திற்கு உட்பட்ட இடத்தை வருவாய் துறை அதிகாரிகளால் தேர்ந்தேடுக்கப்பட்டு நேற்று அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா நேரில் சென்று இடத்தை ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் நெமிலி தாசில்தார் சுமதி, வருவாய் ஆய்வாளர் சுந்தரம், விஏஒ தமிழ்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை
    • விரைவாக பணிகளை முடிக்க அறிவுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறைகளின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நேற்று நடைபெற்றது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கி உள்ள மக்களின் 10 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றிடும் 10 மனுக்களின் பணிகளை தனி கவனம் செலுத்தி அவற்றினை நிறைவேற்றிட துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இக்கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வி.சம்பத் தலைமை தாங்கினார்.

    மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் செயல்படுத்தி வரும் பல்வேறு புதிய திட்டங்கள் குறித்தும், அப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் பிரச்சனைகள் நிலுவைகள் குறித்தும், நேரடியாக மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் மாநில பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளர் வி.சம்பத் நேரடியாக கள ஆய்வுகளை மேற்கொண்டு அதன் பின்னர் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் ஆற்காடு நகராட்சியில் உணவுகள் வழங்கப்பட்டு வரும் விவரங்கள் மற்றும் திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் உணவின் தரம் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்களின் கருத்துக்கள் குறித்தும் கிடைக்கப்பெறுகிறதா என கேட்டு அறிந்தார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்தை மேலும் பள்ளிகளுக்கு விரிவு படுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். ஆகவே இத்திட்டம் முறையாக செல்வதை கண்காணிக்க வேண்டும்.

    மேலும் நான் முதல்வன் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் மாதாந்திர உதவித் தொகை வழங்குவது குறித்தும், அதில் புதிதாக சேர்க்கைகள் சேர்ப்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து கலைஞரின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த வேளாண்மை தரிசனம் மேம்பாட்டு திட்டங்கள் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார். வங்கியின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் புதிய தொழில் முனைவோர்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்படுவதும் தெருவோர வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கப்படுவது குறித்தும், நிலுவையில் உள்ள வங்கிகள் அதனை உடனடியாக முடிக்கவும் உத்தரவிட்டார்.

    நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் குடிநீர் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தங்கள் தொகுதியின் முக்கிய பத்து மக்களின் பிரச்சினைகளை தீர்த்திட அதற்கான திட்ட அறிக்கையினை வழங்கிட உத்தரவிட்டிருந்தார்.

    அதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனுக்களை வழங்கி அதனை நிறைவேற்றிட மனுக்களை அனுப்பி வைத்துள்ளனர்.

    இத்திட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அரசு தலைமைச் செயலாளருடன் நேரடியாக விவரங்களை கேட்டு அறிந்து வருகின்றனர். ஆகவே சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ள கோரிக்கைகளை ஒவ்வொரு துறை சார்ந்த அலுவலர்களும் நேரடியாக கண்காணித்து அதற்கான ஆய்வு பணிகளையும் அதனை நிறைவேற்றிட தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    இதில் எவ்வித தொய்வு இருக்கக் கூடாது விரைவாக பணிகளை முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, இணை இயக்குநர் வேளாண்மை வடமலை, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் முத்துசாமி உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விதிமுறைகள் குறித்து ஆலோசனை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி தாலுகா புதுப்பேட்டையை அடுத்த கல்நார் சாம்பட்டி கிராமத்தில் இன்று (புதன்கிழமை) எருதுவிடும் விழா நடக்கிறது. எருது விடும் விழாவிற்கான முன்னேற்பா டுகள் குறித்து திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர்லட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விழாவில் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றியும், ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர் கவுரி, கிராமநிர்வாக அலுவலர் மனோகரன் மற்றும் பொதுப்ப ணித்துறையினர், கால்நடை மருத்துவ குழுவினர், விழாக் குழுவினர் உடன் இருந்தனர்.

    • சிவகங்கை மாணவர் விடுதியில் வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.
    • ஆய்வின்போது மாணவர்களின் வருகை பதிவேடு, வரவு-செலவு கணக்குகள் முதலியவற்றை பார்வையிட்டார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது மாணவர்களின் வருகை பதிவேடு, வரவு-செலவு கணக்குகள் முதலியவற்றை பார்வையிட்டார். மேலும் உணவுகள் பற்றிய விவரங்கள், மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகள் முதலியவற்றை நேரில் பார்வையிட்டு மாணவர்களின் வருகை குறித்து காப்பாளரிடம் கேட்டறிந்தார்.

    அப்போது வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

    ×