search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்டவாளத்துக்கு கீழ் தரைப்பாலம் அமைப்பதற்கான இடத்தை அதிகாரி ஆய்வு
    X

    தண்டவாளத்துக்கு கீழ் தரைப்பாலம் அமைப்பதற்கான இடத்தை அதிகாரி ஆய்வு

    • ரெயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படுகிறது
    • மாற்று பாதை அமைகிறது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் ரெயில் நிலையம் அருகே கே.பந்தாரப்பள்ளி பகுதியில் அரசனப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ரெயில்வே கேட் எண் 94 நிரந்தரமாக மூடப்படுகிறது.

    இதனால் அப்பகுதியில் வசித்து வரும் பாலன் வட்டம் பொது மக்களுக்கு மாற்று பாதை வழியாக கீழ் தரைப்பாலம் அமைப்பதற்கான இடத்தை திருப்பத்தூர் கோட்டாட்சியர் லட்சுமி நேற்று இடத்தை திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது நாட்டறம்பள்ளி தாசில்தார் த.குமார், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சந்தீப், உதவி கோட்ட பொறியாளர் விக்ரம் கஹானோலியா, மற்றும் பெங்களூர் கோட்டம் பாலன் வட்டம் பகுதி பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×