search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Student Hostel"

    • விருதுநகரில் சட்டபேரவை உறுதிமொழிக்குழு ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • ஆதிதிராவிட மாணவர் விடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழிக்குழு சார்பில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழுத் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கலெக்டர் ஜெயசீலன், எம்.எல்.ஏ.க்கள் ரகுராமன், அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்கள் அருள், ஜெயக்குமார், ரூபி.ஆர்.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்து, சட்டப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் பல்வேறு துறைசார்ந்த அமைச்சர்கள் மானிய கோரிக்கையில் அறிவித்த உறுதி மொழிகளின் தற்போதைய நிலை குறித்தும், துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகைகள், நடைபெற்ற திட்டங்கள் மற்றும் திட்டத்தின் கால வரையறை, தற்போதைய நிலை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.

    மேலும் தாமதமாகும் திட்டப்பணிகள் குறித்தும், அதனை செயல்படுத்து வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விரிவான அறிக்கை அளிக்க சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், துணை இயக்குநர் (திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திலீப்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, இணைச் செயலாளர் கருணாநிதி, துணைச் செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள், ஆர்.ஆர்.நகர் சிமெண்ட் தொழிற்சாலை, சிவகாசி தீயணைப்பு நிலையம், ஆமத்தூர் ஆதிதிராவிட மாணவர் விடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

    • இயக்குனர் சாய்.இளங்கோவன் பங்கேற்பு
    • விடுதி வளாகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கரியமாணிக்கத் தில் உள்ள அரசு ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் இயங்கும் அரசு மாணவர் விடுதியில் விடுதி நாள் விழா கொண்டாடப்பட்டது.

    விடுதி நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் சாய்.இளங் கோவன் கலந்து கொண்டார். அவர், விடுதி வளாகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் விடுதி நாள் விழாவை யொட்டி மாணவர்களுக்கு இடையே நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு இயக்குனர் சாய்.இளங்கோவன் பரிசு வழங்கி பாராட்டினார்.

    பின்னர் விடுதி மாண வர்களுடன் சேர்ந்து உணவ ருந்தினார். இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கண்காணிப்பாளர்கள் பழனி, வேல்முருகன் லெபாஸ், விடுதி காப்பாளர் ஏழுமலை, ஊழியர் ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.1.32 கோடியில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர் விடுதி திறக்கப்பட்டது.
    • அமைச்சர் பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் கொம்புக்காரனேந்தல் கிராமத்தில் ரூ.1.32 கோடியில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர் விடுதி புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

    இந்த விடுதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன்பின்னர் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றி விடுதியை பார்வையிட்டார்.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி னார். மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி முன்னிலை வகித்தார். பின்னர் அைமச்சர் பேசியதாவது:-

    கல்வி வளர்ச்சி பெற்ற மாநிலம் அனைத்து வளமும் பெற்ற மாநிலமாக கருத ப்படும் என்ற அடிப்படையில் அனைவரும் தரமான கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறையில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, வருகிறார்.

    இதுபோன்று, மாணவர்க ளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி, அவர்கள் தரமான கல்வியை பெற்று, வாழ்வில் வளம் பெறவேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருவது மட்டுமன்றி, தரமான கல்வியை பெறுவதற்கு அடிப்படையாக விளங்கி வரும் பள்ளிகளின் உட்கட்ட மைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறார்.

    இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு நல்லமுறையில் படித்து எதிர்காலத்தில் உயர்ந்த நிலையை பெற்று பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மானாமதுரை யூனியன் தலைவர் லதா அண்ணாத் துரை, நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பாஸ்கரன், மானா மதுரை வட்டாட்சியர் (பொறுப்பு) ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, சங்கர பரமேசுவரி, தீத்தான்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் ராஜலட்சுமி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை குடிமைப் பணி அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற சாய்.இளங்கோவனுக்கு ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனராக பதவி வழங்கப்பட்டது.
    • ஆதிதிராவிடர் மாணவர் விடுதி சென்ற இயக்குனர் சாய்.இளங்கோவன் விடுதியின் சமையலறையில் ஆய்வு மேற்கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசுத் துறையில் சூப்பரண்டாக பணியாற்றி புதுவை குடிமைப் பணி அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற சாய்.இளங்கோவனுக்கு ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனராக பதவி வழங்கப்பட்டது.

    இதையடுத்து தட்டா ஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் இயக்குனராக பொறுப்பேற்ற சாய்.இளங்கோவன் முதல் நாளாக அலுவல் பணியை மேற்கொண்டார்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் சில குறைபாடுகள் மற்றும் மாணவர்களின் கோரிக்கை தொடர்பான மனுவை விசாரித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற் கொண்டார். உடனே ஆதிதிராவிடர் மாணவர் விடுதி சென்ற இயக்குனர் சாய்.இளங்கோவன் விடுதியின் சமையலறையில் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் மாணவர்களுக்கு சமைத்த உணவின் தரத்தை பார்வையிட்டார். மேலும் மாணவர்களோடு அமர்ந்து விடுதி உணவினை சாப்பிட்ட இயக்குனர் சாய். இளங்கோவன் மாண வர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    தொடர்ந்து சேதம் அடைந்த விடுதியில் கட்டிடப் பகுதிகளை பார்வையிட்டார். அதே போல் விடுதியின் கழிவறை,குளியலறை, மாணவர்கள் படிக்கும் அறை, கீழ் தளம் மற்றும் மேல் தளத்தில் உள்ள மாணவர்கள் தங்கும், உறங்கும் அறைகளை பார்வையிட்டு மாண வர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    மேலும் மாணவர்களின் பிரச்சனைகளை துறையின் அமைச்சருக்கு கொண்டு சென்று ஆதிதிராவிடர் விடுதி மாணவர்களுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.

    • சிவகங்கை மாணவர் விடுதியில் வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.
    • ஆய்வின்போது மாணவர்களின் வருகை பதிவேடு, வரவு-செலவு கணக்குகள் முதலியவற்றை பார்வையிட்டார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது மாணவர்களின் வருகை பதிவேடு, வரவு-செலவு கணக்குகள் முதலியவற்றை பார்வையிட்டார். மேலும் உணவுகள் பற்றிய விவரங்கள், மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகள் முதலியவற்றை நேரில் பார்வையிட்டு மாணவர்களின் வருகை குறித்து காப்பாளரிடம் கேட்டறிந்தார்.

    அப்போது வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

    • திட்டக்குடியில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • முறைகேடுகள் குறித்தும் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தவேண்டும்.

    கடலூர்:

    திட்டக்குடியில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் சார்பாக தி.இளம ங்கலத்தில் பகுதியில் உள்ள ஆதிதிராவிட மாணவர்கள் விடுதி சேதமடைந்தது இருப்பதை கண்டித்தும், மாணவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் தயா.பேரின்பம் தலைமையில் உண்ணா நிலை அறப்போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொரு ளாளர் பாண்டுரங்கன், மாநிலத் துணைச் செயலாளர் முருகானந்தம், மாநில இளைஞரணி துணை செயலாளர் வீரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆதிதிராவிட மாணவர்கள் தங்கி பயிலும் மாணவர்களின் நலன் கருதி ஆதிதிராவிட நல விடுதியின் கட்டிடத்தின் தன்மை குறித்தும் அதில் நடந்த முறைகேடுகள் குறித்தும் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தவேண்டும்.

    போர்கால அடிப்ப டையில் ஆதிதிராவிட மாண வர்களின் பாது காப்பை உறுதிப்படுத்த தற்காலி கமாக விடுதியை மாற்று இடத்தில் அமைத்து தர வலியுறுத்தியும்.அரசி னர் ஆண்கள் மேல்நி லைப் பள்ளியின் அருகி லேயே ஆதிதிராவிட மாணவர் விடுதி அமைக்க வலியுறுத்தியும் உண்ணா நிலை போராட்டம் நடை பெற்றது. இதில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா, கலை இலக்கிய பேரவை மாவட்ட செயலாளர் முரு கேசன்,மங்களூர் ஒன்றிய செயலாளர் பாலமுரு கன், கிராம தெருக்கூத்து கலை பேரவை திட்டக்குடி தொகுதி செயலாளர் ராயர், கிளைச் செயலாளர் சாமிதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×