search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடியில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியினர் உண்ணாவிரதம்
    X

    திட்டக்குடியில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    திட்டக்குடியில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியினர் உண்ணாவிரதம்

    • திட்டக்குடியில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • முறைகேடுகள் குறித்தும் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தவேண்டும்.

    கடலூர்:

    திட்டக்குடியில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் சார்பாக தி.இளம ங்கலத்தில் பகுதியில் உள்ள ஆதிதிராவிட மாணவர்கள் விடுதி சேதமடைந்தது இருப்பதை கண்டித்தும், மாணவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் தயா.பேரின்பம் தலைமையில் உண்ணா நிலை அறப்போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொரு ளாளர் பாண்டுரங்கன், மாநிலத் துணைச் செயலாளர் முருகானந்தம், மாநில இளைஞரணி துணை செயலாளர் வீரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆதிதிராவிட மாணவர்கள் தங்கி பயிலும் மாணவர்களின் நலன் கருதி ஆதிதிராவிட நல விடுதியின் கட்டிடத்தின் தன்மை குறித்தும் அதில் நடந்த முறைகேடுகள் குறித்தும் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தவேண்டும்.

    போர்கால அடிப்ப டையில் ஆதிதிராவிட மாண வர்களின் பாது காப்பை உறுதிப்படுத்த தற்காலி கமாக விடுதியை மாற்று இடத்தில் அமைத்து தர வலியுறுத்தியும்.அரசி னர் ஆண்கள் மேல்நி லைப் பள்ளியின் அருகி லேயே ஆதிதிராவிட மாணவர் விடுதி அமைக்க வலியுறுத்தியும் உண்ணா நிலை போராட்டம் நடை பெற்றது. இதில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா, கலை இலக்கிய பேரவை மாவட்ட செயலாளர் முரு கேசன்,மங்களூர் ஒன்றிய செயலாளர் பாலமுரு கன், கிராம தெருக்கூத்து கலை பேரவை திட்டக்குடி தொகுதி செயலாளர் ராயர், கிளைச் செயலாளர் சாமிதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×