search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.1.32 கோடியில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர் விடுதி திறப்பு
    X

    ஆதி திராவிடர் நலப்பள்ளி மாணவர் விடுதி திறப்பு விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றினார். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, தமிழரசி எம்.எல்.ஏ., மானாமதுரை யூனியன் தலைவர் லதா அண்ணாதுரை, நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன் உள்ளனர்.

    ரூ.1.32 கோடியில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர் விடுதி திறப்பு

    • ரூ.1.32 கோடியில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர் விடுதி திறக்கப்பட்டது.
    • அமைச்சர் பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் கொம்புக்காரனேந்தல் கிராமத்தில் ரூ.1.32 கோடியில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர் விடுதி புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

    இந்த விடுதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன்பின்னர் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றி விடுதியை பார்வையிட்டார்.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி னார். மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி முன்னிலை வகித்தார். பின்னர் அைமச்சர் பேசியதாவது:-

    கல்வி வளர்ச்சி பெற்ற மாநிலம் அனைத்து வளமும் பெற்ற மாநிலமாக கருத ப்படும் என்ற அடிப்படையில் அனைவரும் தரமான கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறையில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, வருகிறார்.

    இதுபோன்று, மாணவர்க ளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி, அவர்கள் தரமான கல்வியை பெற்று, வாழ்வில் வளம் பெறவேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருவது மட்டுமன்றி, தரமான கல்வியை பெறுவதற்கு அடிப்படையாக விளங்கி வரும் பள்ளிகளின் உட்கட்ட மைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறார்.

    இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு நல்லமுறையில் படித்து எதிர்காலத்தில் உயர்ந்த நிலையை பெற்று பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மானாமதுரை யூனியன் தலைவர் லதா அண்ணாத் துரை, நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பாஸ்கரன், மானா மதுரை வட்டாட்சியர் (பொறுப்பு) ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, சங்கர பரமேசுவரி, தீத்தான்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் ராஜலட்சுமி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×