பள்ளியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆய்வு

கோரிக்கை மனுக்கள் அளித்தனர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்
பள்ளியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆய்வு
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விரைவில் பவளவிழா நடைபெறுவதற்கான பல்வேறு ஏற்பாடுகள் முன்னாள் மாணவர்கள் சார்பாக செய்யப்பட்டு வருகிறது.

விளையாட்டு மைதானத்தில் விளை யாட்டரங்கம் அமைப்பு தொடர்ச்சியாக அமைச்சர் எ.வ.வேலு, கலெக்டர் முருகேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆகியோரிடம் ஏற்கனவே கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து நேற்று

மாலை, திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் பாலமுருகன் பள்ளிக்கு வருகை தந்து, பள்ளி விளையாட்டு மைதானத்தையும், காலியாக உள்ள இடத்தையும் பார்வையிட்டார்.மேலும் விளையாட்டு மைதானத்தை மற்றும் ஒருங்கிணைந்த விளையாட்டு திடலுக்கு உரிய இடத்தையும் தேர்வு செய்தார்.

இதற்கு பின்னர் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து விளக்கினார். கிராமப்புற மாணவர்கள் மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற தமது ஆர்வத்தை தெரிவித்தார். பள்ளி சார்பாகவும், முன்னாள் மாணவர் சங்கம் சார்பாகவும் சால்வை அணிவித்து பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com