என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலை உணவு"

    • தினமும் காலை உணவைத் தவிர்ப்பது மதிய உணவை அதிகமாக சாப்பிட வைத்துவிடும்.
    • காலையில் எழுந்ததும் ஒரு மணி நேரத்துக்குள் காலை உணவை உட்கொள்வது சிறந்தது.

    காலை உணவு என்பது அன்றைய நாளின் முதல் உணவு மட்டுமல்ல, முக்கியமான உணவும் கூட. நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் அந்த உணவு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும் உதவும். காலை உணவை தொடர்ந்து தவிர்த்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவில் மாற்றம் ஏற்பட்டு டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க செய்துவிடும். ஏனெனில் இன்சுலின் உணர்திறன், குளுக்கோஸ் செயல்திறனை பாதிக்கும். அதன் காரணமாக நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

    தினமும் காலை உணவைத் தவிர்ப்பது மதிய உணவை அதிகமாக சாப்பிட வைத்துவிடும். இதுவும் ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்க செய்வதோடு உடல் எடை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும். தொடர்ந்து காலை உணவை தவிர்ப்பது உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்கள் ஏற்படவும் காரணமாகிவிடும்.

    காலையில் எழுந்ததும் ஒரு மணி நேரத்துக்குள் காலை உணவை உட்கொள்வது சிறந்தது. அந்த உணவில் புரதம், நார்ச்சத்து நிறைய இடம் பெறுவது நல்லது. காலை உணவைத் தவிர்ப்பது நாள் முழுவதும் எரிச்சல் உணர்வை உண்டாக்கலாம். உடலில் செரோடோனின் அளவு குறைவது அதற்கு காரணமாக அமைந்திருக்கும்.

    • இன்று காலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
    • கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு மாணவர்கள் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த ஆலங்குடி பூனாயிருப்பு கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம்வகுப்பு வரை மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் இன்று காலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதனை மாணவர்கள் சாப்பிட்டனர். அப்போது சில மாணவர்கள் சாம்பாரில் பல்லி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் ஆசிரியர்களிடம் கூறினர்.

    இதையடுத்து காலை உணவை சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை ஆசிரியர்கள் ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு மாணவர்கள் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்களான சஞ்சித், சுகேஷ், வீரராஜ், சரவணன் ஆகிய 4 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
    • மாணவர்கள் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கொழிஞ்சி வாடி, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 215 மணவர்கள் படித்து வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். பின்னர் காலை உணவுத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. 42 மாணவர்கள் உணவு சாப்பிட்டனர்.

    சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்களான சஞ்சித், சுகேஷ், வீரராஜ், சரவணன் ஆகிய 4 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்களை ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் ஆகியோர் சென்று மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.

    மாணவர்கள் சாப்பிட்ட உணவில் பல்லி விழுந்துள்ளதாகவும், அதனை சாப்பிட்டதால் மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பாதிக்கப்பட்ட மாணவர்கள் கடத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
    • மாணவர்கள் பாதிக்கப்பட்டதையடுத்து உணவு மாதிரியை பரிசோதனைக்காக உணவு பாதுகாப்புத்துறைக்கு ஆசிரியர்கள் அனுப்பி வைத்தனர்.

    தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அரசுப் பள்ளியில் இன்று காலை உணவு வழங்கப்பட்டது. காலை உணவை 80 மாணவர்கள் சாப்பிட்டனர்.

    சிறிது நேரம் கழித்து காலை உணவு சாப்பிட்ட 16 மாணவர்கள் வயிறு வலிப்பதாக கூறினர். மற்ற மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கடத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    காலை உணவு சாப்பிட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டதையடுத்து உணவு மாதிரியை பரிசோதனைக்காக உணவு பாதுகாப்புத்துறைக்கு ஆசிரியர்கள் அனுப்பி வைத்தனர்.

    • ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    • கன்னியாகுமரியில் கொட்டாரம் , நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் உள்ள 3 மேல்நிலைப்பள்ளிகளுக்கு என்.சி.சி. முகாம் நடைபெற்றது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கொட்டாரம் , நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் உள்ள 3 மேல்நிலைப்பள்ளிகளுக்கு என்.சி.சி. முகாம் நடை பெற்றது.

    முகாமில் இந்த பள்ளி களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளுக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்டவர்களில் சுமார் 43 பேர் வாந்தி, மயக்கம் எடுத்தனர். இதனால் அவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 13 பேர் ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து சிகிச்சை பெற்று வரும் மாணவ-மாணவிகளிடம் ஆறுதல் கூறினார். அப்போது அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெஸீம், தென்தாமரைகுளம் பேரூர் செயலாளர் தாமரை தினேஷ்உள்பட பலர் உடனிருந்தனர்.

    • சொந்த பணத்தை செலவு செய்து தேர்வுக்கு தயார்படுத்துகிறார்கள்.
    • காலையில் சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவ-மாணவிகள் பசியோடு இருக்கக்கூடாது என்பதால் அவர்களுக்கு காபி, டீ, இட்லி, தோசை, சப்பாத்தி கொடுக்கிறோம்.

    பெரம்பூர்:

    சென்னை அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கற்பித்தல், பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவிகளுக்கு தனிக்கவனத்துடன் ஆசிரியர்கள் தங்களது சொந்த பணத்தை செலவு செய்து காலை உணவு மற்றும் மாலையில் டிபனுடன் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவது அனைவரது புருவத்தையும் உயர்த்தி உள்ளது.

    கொடுங்கையூர், காமராஜர் சாலையில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சுமார் 950 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 54 மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.

    இந்த ஆண்டு பொதுத் தேர்வில் தங்களது பள்ளி சாதனை படைக்க வேண்டும் என்ற இலக்குடன் பள்ளி ஆசியர்-ஆசிரியைகள் மாணவ-மாணவிகளுக்கு கற்பித்து வருகிறார்கள்.

    மேலும் பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் தினந்தோறும் மாணவ-மாணவிகளுக்கு காலையும், மாலையும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    காலையில் சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவர்களின் காலை உணவில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆசிரியர்-ஆசிரியைகளே தங்களது சொந்த பணத்தை செலவு செய்து காலை உணவு வாங்கி கொடுத்து வருகிறார்கள்.

    காலையில் சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு காபி, டீ, மற்றும் ஒவ்வொரு நாளும் இட்லி, வடை, தோசை, சப்பாத்தி வழங்கப்படுகிறது. இதேபோல் மாலையில் டீ, பிஸ்கட், வாழைப்பழம், சுண்டல் வழங்கப்படுகிறது. இதற்கான செலவை பள்ளி ஆசிரியர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து சமாளித்து வருகிறார்கள்.

    இவ்வளவு செய்யும் ஆசிரியர்களின் கனவை நினைவாக்க மாணவ-மாணவிகளும் போட்டி,போட்டு படித்து வருகின்றனர். வருகிற பொதுத்தேர்வை சிறப்பாக எழுதி சாதனை படைப்போம் என்று பெருமிதத்துடனும், உற்சாகத்துடனும் அவர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் முனிராமையா கூறியதாவது:-

    இந்த பள்ளியில் சுமார் 950 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் மீது தனிக்கவனம் செலுத்தி பாடம் கற்பித்து வருகிறோம். காலை 7.30 மணி முதல்9 மணிவரையும், மாலை 3.30 மணிமுதல் 7.30 மணி வரையும் சிறப்பு வகுப்புகள் நடந்து வருகின்றன. ஆசிரியர்கள் சிறப்பான முறையில் கற்பிப்பதால் எந்த மாணவ-மாணவிகளும் சிறப்பு வகுப்பை தவற விடுவதில்லை. அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து வருகிறோம்.

    காலையில் சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவ-மாணவிகள் பசியோடு இருக்கக்கூடாது என்பதால் அவர்களுக்கு காபி, டீ, இட்லி, தோசை, சப்பாத்தி கொடுக்கிறோம். மாலையிலும் டீ கொடுப்போம். இதற்கான செலவை ஆசிரியர், ஆசிரியைகள் அனைவரும் பகிர்ந்து அளித்து வருகிறோம். நண்பர்கள், சமூக ஆர்வலர்களும் உதவி வருகின்றனர்.

    இந்த ஆண்டு பொதுத்தேர்வில் மாணவ-மாணவிகள் நிச்சயம் சாதனை படைப்பார்கள் என்று நம்புகிறோம். இதற்கு வகுப்பு ஆசிரியர் சுபாஷ் சந்திரன், கணித ஆசிரியர் தேவிகா ஆகியோர் உறுதுணையாக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல் கட்டமாக 19 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது
    • குமரி மாவட்டத்தில் தற்போது 42 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குமரி மாவட்டத்தில் 19 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் 2-ம் கட்டமாக காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கன்னி யாகுமரியிலும் 2-ம் கட்டமாக 23 பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி நாகர்கோவில் தம்மத்து கோணம் அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று நடந்தது. விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதை தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு உணவுகளை பரிமாறினார். பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார். பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் கூறுகையில்:-

    குமரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 19 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலமாக 973 மாணவ மாணவிகள் பயனடைந்தனர்.

    தற்பொழுது 2-ம் கட்டமாக 23 பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 3175 குழந்தைகள் பயனடைவார்கள். மொத்தத்தில் குமரி மாவட்டத்தில் தற்போது 42 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலமாக 4152 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள் என்றார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் துணை மேயர் மேரிபிரின்சிலதா முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். காலை உணவு திட்டம் தந்த முதல்-அமைச்சருக்கு மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்தனர். பின்னர் அவரது பிறந்த நாளான இன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் மாணவ மாணவிகள் கூறினார்கள்.

    • காரியாபட்டி அருகே அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.96 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட நூலக கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும், அரசு பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலு வலர்- மாற்றுத்தி றனாளி நலத்துறை செயலாளர் ஆனந்த்குமார், கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் பி.புதுப்பட்டி ஊராட்சியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்ப டும் உணவு மற்றும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்து மாணவர்களு டன் அமர்ந்து சாப்பிட்டனர்.

    பி.புதுப்பட்டி ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் பி.புதுப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.96 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட நூலக கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பி.புதுப்பட்டி ஊராட்சி யில், துணை சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து மருந்துகளின் இருப்பு குறித்தும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் மருந்துகள், வழங்கப்படும் சிகிச்சைகள், மருத்துவர்களின் வருகை குறித்தும், நாய்க்கடி மூலம் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். மின் ரத்த அழுத்தம் கண்டறியும் கருவியில் மறுமுறை சார்ஜ் செய்யும் வசதி உள்ள மின்கலத்தை பயன்படுத்துமாறு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    காரியாபட்டி வட்டம் கம்பிக்குடி ஊராட்சி மந்திரிஓடை கிராமத்தில் நரிக்குறவர் காலனியில் வசிக்கும் 54 குடும்பங்களுக்கு ரூ.3.19 கோடி மதிப்பில், வீடுகள் கட்டுப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து அந்த பணிகளை விரைவாகவும், தரமாகவும், முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

    காரியாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஆய்வகத்தில் மாணவர்கள் செய்முறை தேர்வு செய்து வருவதை பார்வையிட்டு பழுதடைந்த கட்டிடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    பி.புதுப்பட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் உயரம், எடை, குழந்தைகளின் வருகைப் பதிவேடு மற்றும் அங்குள்ள சமையலறை ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை)தண்டபாணி, செயற்பொறியாளர் சக்தி முருகன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) யசோதாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முக பிரியா, சிவகுமார், வட்டாட்சியர் விஜயலட்சுமி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • காலை உணவுத் திட்டத்திற்கு பாத்திரங்கள் கொள்முதல் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • சுய உதவிக்குழுவினர்க்கு தரமான பாத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விரைவில் வழங்கப்படும் என கூறினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், முதல மைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு பாத்திரங்கள் கொள்முதல் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசினார் அப்போது அவர் பேசிய தாவது:- 1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஊட்டச்சத்து நிலை பாது காக்கும் பொருட்டு முதல மைச்சரின் காலை உணவு திட்டத்தினை தமிழக அரசு தொடங்கி வைத்தது.

    அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வரா யன்மலை வட்டத்திற் குட்பட்ட 8 ஊராட்சிகளில் உள்ள 15 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதல மைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி செயல் படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 8 வட்டா ரங்களில் உள்ள ஊராட்சி, நகராட்சி மற்றும் பேருராட்சி களுக் குட்பட்ட 638 அரசுத் தொடக்கப்பள்ளியில் இத்திட்டம் செயல் படுத்தப் பட உள்ளது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினால் தொடக்கப் பள்ளி மாண வர்கள் ஆர்வமுடனும், ஆரோக்கிய முடனும் கல்வி கற்கும் சூழல் உருவாக்கப்பட உள்ளது. இத்திட்டம் செயல்படுத் தப்படவுள்ள பள்ளிகளில், காலை உணவு சமைத்து வழங்கும் பணி களில் ஈடுபடவுள்ள சுய உதவிக்குழுவினர்க்கு தரமான பாத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விரைவில் வழங்கப்படும் என கூறினார். இக்கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் சுந்த ராஜன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் ரெத்தின மாலா மற்றும் அரசு அலு வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • காலை உணவின் சுவை மற்றும் தரத்தினை மாவட்ட கலெக்டர் பழனி, ஆய்வு செய்தார்.
    • ஊரகப்பகுதிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் காலை உணவு திட்டம்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியம், ஆயந்தூர் ஊராட்சியில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ், 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கும் பொருட்டு, முன்னோட்டமாக தயாரிக்க ப்பட்ட காலை உணவின் சுவை மற்றும் தரத்தினை மாவட்ட கலெக்டர் பழனி, ஆய்வு செய்தார். அவர் பேசியதாவது, 

    காலை உணவு திட்டம், அறிவித்து, முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில் தொடக்கி வைத்து, செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது, 2-ம் கட்டமாக அனைத்து ஊரகப்பகுதிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு திட்டம் ஆகஸ்ட் 25-ந்தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. மேலும், மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளில் உள்ள 988 பள்ளிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள 32 பள்ளிகள் என மொத்தம் 1020 பள்ளிகளில் முன்னோட்டமாக காலை உணவு தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் உணவினை உண்டு சுவை மற்றும் தரத்தினை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார்.

    • காலை உணவு வழங்கும் திட்டம் முன்னோட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆய்வு செய்தார்.
    • 8 வட்டாரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் இத்திட்டம் விரிவுப்படு த்தப்படவுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் பேரூராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய உருது தொடக்கப்பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் முன்னோட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது,

    1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசுத் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஊட்ட ச்சத்து நிலைபாதுகாக்கும் பொருட்டு முதல்-அமைச்சர் காலை உணவு திட்டத்தினை அறிவித்து செயல்படு த்தினார். அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராய ன்மலை வட்டாரத்திற்குட்ப ட்ட 8 ஊராட்சிகளில் உள்ள 14 அரசு தொடக்கப் பள்ளிகளில் கடந்த ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதம் உள்ள 8 வட்டாரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 638 அரசுப்பள்ளிகளில் வருகின்ற 25-ந்தேதி முதல் இத்திட்டம் விரிவுப்படு த்தப்படவுள்ளது.

    இத்திட்டம் விரிவுபடுத்துவதற்கான முன்னோட்டமாக தியாகது ருகம் பேரூராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய உருது தொடக்கப்பள்ளியில் (பெண்கள்) நடத்தப்பட்டது. காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ள அனைத்து பள்ளிகளிலும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவு சமைக்கப்பட்டு சரியாக நேரத்தில் குழந்தைகளுக்கு உணவு வழங்கிட அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ள வேண்டு மென தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சுந்தராஜன், உதவி திட்ட அலுவலர் மாதேஷ், பேரூராட்சி மன்ற தலைவர் வீராசாமி, துணைத்தலை வர் சங்கர், தி.மு.க. நகர செயலாளர் மலையரசன், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • தமிழ்நாடு முதலமைச்சரால் 25.8.2023 அன்று இரண்டாம் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
    • குறித்த நேரத்தில் உணவு வழங்குவது குறித்தும், தேவையான நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறு த்தப்பட்டுள்ளது.

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்து வது தொடர்பான ஆலோச னைக்கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.இதில் கலெக்டர் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக முதலமை ச்சரின் காலைஉணவுத்திட்டம் செயல்படுத்துவது தொட ர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த திட்டத்தின் நோக்கமானது மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்க ப்படாமல் இருத்தலை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து நிலையை உயர்த்தவும், குறிப்பாக ரத்த சோகை குறைபாட்டினை நீக்கவும், பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் வருகையை அதிகரிக்கவும் மற்றும் கல்வியை தக்க வைத்துக்கொள்ளவும், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமை யை குறைக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    காலை உணவுத்திட்டத்தினை கண்காணிக்க மாவட்ட அளவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஊரக வாழ்வாதார இயக்கம், பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் துறை, உணவுப்பாதுகாப்புத்துறை ஆகிய துறைகளின் அலுவ லர்களை உறுப்பினர்களாக கொண்ட மாவட்ட கண்கா ணிப்பு குழு அமைக்கப்பட்டு வாரந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

    வட்டார அளவில் காலை உணவுத்திட்டத்தினை கண்காணிக்க உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊர் நல அலுவலர்கள், விரிவுஅலுவ லர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு மையங்களை பார்வையிட்டு வாரந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் 25.8.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் இரண்டாம் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் 251 கிராம ஊராட்சிகளில் 797 பள்ளிகளில் பயிலும் 37,018 மாணவ, மாணவிகளுக்கும், 14 பேரூராட்சிகளில் 95 பள்ளிகளில் பயிலும் 4,555 மாணவ, மாணவிகளுக்கும், 6 நகராட்சிகளில் 59 பள்ளிகளில் பயிலும் 5,648 மாணவ,மாணவிகளுக்கும் சென்ட்ரலைசடு கிட்சன் மூலம் நகராட்சி பகுதியில் உள்ள 2 பேரூராட்சிகளில் 10 பள்ளிகளில் பயிலும் 784 மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் மாநகராட்சியில் உள்ள 120 பள்ளிகளில் பயிலும் 27,477 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 1,081 பள்ளிகளில் 75,482 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமை ச்சரின் காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

    எனவே சமையலறையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், குறித்த நேரத்தில் உணவு வழங்குவது குறித்தும், தேவையான நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறு த்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (சத்துணவு) ஹேமலதா மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×