search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புன்னகை திட்டத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்
    X

    புன்னகை திட்டத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

    • பள்ளி மாண வர்களுக்கான பல் பாது காப்புக்கான புன்னகை திட்டத்தை சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டன.
    • மாணவர்களுக்கு ஏற்படும் வாய் வழித் தொற்று நோய்களைத் தடுக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

    சேலம்:

    தமிழக பள்ளிக்கல்வித் துறையும்,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையும் இணைந்து பள்ளி மாண வர்களுக்கான பல் பாது காப்புக்கான புன்னகை திட்டத்தை சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டன. மாணவர்களுக்கு ஏற்படும் வாய் வழித் தொற்று நோய்களைத் தடுக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

    இதன்படி அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி கள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்க ளின் பற்களை பரிசோதித்து, அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சிகிச்சை குறித்து அறிவு றுத்தப்படுகிறது. முதல் கட்டமாக 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பல் பரிசோதனை செய்யப் பட உள்ளது.

    உத்தரவு

    இந்த திட்டம், வரும் மாதங்களில் மாநிலம் முழு வதும் உள்ள பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளி களில் ஏராளமானமாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த திட்டத் தின் மூலம் மாணவ, மாண வியருக்கு பல் பரிசோதனை களை செய்து அதன்மூலம் அவர்களுக்கு வாயில் ஏற்படுகின்ற பொது வான நோய்களான பல் சொத்தை, ஈறு போன்ற பிரச்சினை களுக்கு தீர்வு காணப்படும்.

    மேலும் வாய் வழி நோய்கள், பல் சொத்தை, ஈறு பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வும், தீர்வு காண்பதற்கும் இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×