என் மலர்
நீங்கள் தேடியது "Legislative Assembly"
- மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்கு றையாக இருப்பதாக தலைமை மருத்துவர் தெரிவித்தார்.
- அரசு மருத்துவமனையை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் தமிழ்நாடு சட்ட பேரவை பொது கணக்குழு தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் உறுப்பினர்கள் சிந்தனைச் செல்வன், ஜவாஹிருல்லா ஆகியோர் ஆய்வு மேற்கொ ண்டனர்.
அப்பொழுது வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் விதைகள் மற்றும் உரக்கிடங்கை பார்வையிட்டு போதுமான கையிருப்பு உள்ளதா என அதிகாரிளிடம் கேட்டறிந்தனர்.
மேலும் 15 விவசாயிகளுக்கு தென்னங் கன்றுகளையும் இரு விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான், ஐந்து விவசாயிகளுக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட் மூன்று விவசாயிகளுக்கு 200 கிலோ ஜிப்சம் நான்கு விவசாயிகளுக்கு 20 கிலோ பாசிப்பயிறு உளுந்து உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதைத்தொடர்ந்து சீர்காழி அரசு மருத்துவமனை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் அப்பொழுது சிடிஸ்கேன் மையத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் எனவும் சீர்காழி மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக தலைமை மருத்துவர் தெரிவித்தார்.
இதனை அடுத்து தொலைபேசியில் சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரம ணியனிடம் தொடர்பு கொண்டு சீர்காழி அரசு மருத்துவ மனையில் மருத்துவர்கள் குறைவாக இருப்பதாக கூறி கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் லலிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா.முருகன், பன்னீர்செல்வம், ராஜ்குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
- சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு மறைந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.
- இரங்கல் தீர்மானம் முடிந்து அவை நாளை வரை ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆம் நாள் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது.சபாநாயகர் அப்பாவு தலைமையிலான தமிழக சட்டப்பேரவை கூடியது.
இந்த கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு மறைந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார். இதில், மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ராவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து, க.நெடுஞ்செழியன், ஆரூர் தாஸ், தமிழறிஞர் ஒளவை நடராஜனுக்கு இரங்கல் தீர்மானம், ஓவியர் மனோகர் தேவதாஸ், மருத்துவர் மஸ்தான், கால்பந்து ஜாம்பவான் பீலே ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதன்பிறகு, மறைந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிலையில், இரங்கல் தீர்மானம் முடிந்து அவை நாளை வரை ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.
- சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
- உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக சட்டப்பேரவையில் பதிலளிக்க எழுந்தபோது திமுக உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கைதட்டி ஆராவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.
தமிழக சட்டசபையில் இன்று 3வது நாளாக கூட்டம் தொடங்கியது. இன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
இன்று காலை சட்டப்பேரவை கூடியவுடன் திருப்பூரில் விளையாட்டு மைதானம் அமைப்பது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜின் கேள்விக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக சட்டப்பேரவையில் பதிலளிக்க எழுந்தபோது திமுக உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கைதட்டி ஆராவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.
இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் 8 ஏக்கர் பரப்பளவில் ரூ. 18 கோடி மதிப்பில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டு வருகின்றது.
இதில், பார்வையாளர்கள் அமரும் வகையிலான திறந்தவெளி விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம், 400 மீட்டர் தடகள ஓடு பாதை, கால்பந்து மைதானம், டென்னீஸ், கையுந்துப் பந்து, கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான ஆடுகள் வசதிகள் உருவாக்கப்படும்.
அதேபோல், திறந்தவெளி மைதானத்திற்கான கட்டுமானப் பணிகள் பொதுப்பணித்துறையால் நவம்பர் 2021 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தற்போது 60 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளது. ஏப்ரல் 2023-க்குள் மற்றும் கைப்பந்து ஆடுகளப் பணிகள் முடிப்பதற்கான நடவடிக்கைகள் பார்வையாளர்கள் அமரக்கூடிய கேலரி, 400 மீ தடகள் பாதை, கால்பந்து மைதானம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
- சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
- சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
நாகப்பட்டினம்:
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
அதை வரவேற்று நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் சட்டமன்றத்தில் பேசியதாவது, ஒன்றிய அரசின் திட்டம் என்றாலே நாம் கண்மூடித்தனமாக எதிர்க்கிறோம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
ஆனால் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தரும் நல்ல திட்டங்கள் எதையும் நாம் எதிர்த்ததில்லை என்பதற்கு சேதுக் கால்வாய் திட்டம் ஒரு சான்று. எய்ம்ஸ் இன்னொரு சான்று.
தமிழ்நாட்டிற்கு நிறைய ரயில்கள் விடப்பட வேண்டுமென்று ஒன்றிய அரசிடம் தான் கேட்கிறோம். ஆனால் அவர்கள் தான் தர மறுக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக நாகை திருவாரூர் மாவட்டங்கள் ரயில்வேயால் புறக்கணிக்கப்பட்டு, அதன் காரணமாக போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்கிவிடக் கூடாது என்பதற்காகவே இத்தகைய முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன.
சேது சமுத்திர திட்டம் நமது கனவுத் திட்டமாகும்.
பழவேற்காடு முதல் தேங்காய்பட்டணம் வரை தமிழரின் கடல் வழி வணிகமும் துறைமுகங்களும் சிறந்து விளங்கியிருந்தன. ஆனால் இப்போது அவை எல்லாம் செயலற்றுப் போய் விட்டன.
வரலாற்றுச் சிற்ப்புமிக்க நாகப்பட்டினம் துறைமுகம் செயலற்றுக் கிடக்கிறது.
எனவே சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போர்க்குணம் மிக்கவர்.
அவர் காலத்தில் இது கட்டாயம் நிறைவேறும். விசிக சார்பில் இந்த தீர்மானத்தை வரவேற்கிறோம்.
இவ்வாறு நாகை எம்.எல்.ஏ பேசினார்.
- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.
- கல்லூரியை இடமாற்றம் செய்ய வேண்டாம் என 30.09.2022-ல் வலியுறுத்தியுள்ளேன்.
திருவாரூர்:
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-
2017-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் குடவாசலில் அரசு கலைக் கல்லூரி அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டு தற்போது கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இதனை வேறு பகுதிக்கு மாற்றுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கல்லூரியை இடமாற்றம் செய்ய வேண்டாம் என 30.09.2022-ல் வலியுறுத்தியுள்ளேன்.
இந்த கல்லூரியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவ மாணவிகள் சிறப்பாக கல்வி கற்று வருகின்றனர்.
இக்கல்லூரி இடமாற்றம் செய்யப்படும் தகவல் அறிந்த அப்பகுதியினர் குடவாசலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்ததன் பேரில் அந்த போராட்ட விலக்கிக் கொள்ளப்பட்டது.
எனவே குடவாசலில் உள்ள அரசு கல்லூரியை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யாமல், அதே பகுதியிலேயே இடம் தேர்வு செய்து கல்லூரியை அமைக்க வேண்டும்.
இக்கல்லூரி நன்னிலம் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. தனது தொகுதிக்கு கோரிக்கை வைத்து பெறப்பட்ட கல்லூரி ஆகும். எனவே அந்த தொகுதியிலேயே இக்கல்லூரி அமைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதற்கு பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, குடவாசல் அரசு கலைக் கல்லூரிக்கு இடம் பார்க்கும்பணி நடைபெற்று வருகிறது.
உரிய இடம் கலெக்டரால் தேர்வு செய்யப்பட்டு, கல்லூரி கட்டிடம் கட்டப்படும்.
இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
- அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதியை வீடியோவாக வெளியீடு.
- தான் பேசியதை ஆளுநர் ஆர்.என்.ரவி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பரேவையில் பேசிய வீடியோவை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் தான் பேசியதை ஆளுநர் ஆர்.என்.ரவி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதியை வீடியோவாக, ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ சமூக வளைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
- பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்கு பதிவு நடந்தது.
- ஜெகன் மோகன் ரெட்டி தனது எக்ஸ் தளத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஆந்திரா மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி பாராளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் தனது ஒய்எஸ்ஆர்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த ஐந்து மாதங்களாக பரபரப்பான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்கு பதிவு நடந்தது. தேர்தலை தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி தனது எக்ஸ் தளத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, ஜெகன் மோகன் ரெட்டி தனது குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க லண்டன் சென்றுள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டி நேற்று இரவு விஜயவாடாவில் உள்ள கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் விஸ்ட்ஜெட் மூலம் புறப்பட்ட நிலையில் இன்று லண்டன் சென்றடைந்தார்.
முதலமைச்சருடன் அவரது மனைவி ஒய்.எஸ். பாரதி மற்றும் மகள்கள் ஹர்ஷா மற்றும் வர்ஷா உள்ளனர்.
லண்டனை தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி குடும்பத்துடன் பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்திற்குச் செல்கின்றனர்.
நாடு முழுவதும் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே ஜெகன் மோகன் ரெட்டி ஜூன் 1 ஆம் தேதி அன்று நாடு திரும்புகிறார்.
- 89,429 தனி வீடுகளுக்கான கட்டுமான பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகிறது.
- 1,146 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த மூன்று ஆண்டுக்குள் மறு கட்டுமானம்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய துறையின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, 79,094 அடுக்குமாடி குடியிருப்புகள், 89,429 தனி வீடுகளுக்கான கட்டுமான பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகிறது.
நீண்ட கால பயன்பாடு மற்றும் தட்பவெப்பநிலை காரணமாக சிதிலமடைந்த குடியிருப்புகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 6,746 அடுக்குமாடி குடியிருப்புகள் 1,146 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த மூன்று ஆண்டுக்குள் மறு கட்டுமானம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஹாசன் பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால்
- பாதிக்கப்பட்ட பெண் பேசாமல் இருக்க அவரை கடத்திய குற்றத்திற்காக எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
முன்னாள் இந்தியப் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை உருவாக்கியவருமான தேவகௌடாவின் மகன் எச்.டி.ரேவண்ணா கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். இவரது மனைவி பவானி ரேவண்ணா. இவர்களது மகன்கள் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் சூரஜ் ரேவண்ணா.
ஹாசன் பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் இடையிலேயே பல்வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிக்கியதால் ஜெர்மனிக்கு தப்பியோடினார். பிரஜ்வல் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிறகே இவை வெளிச்சத்துக்கு வந்தன. சமீபத்தில் பிரஜ்வல் நாடு திரும்பிய நிலையில் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று கூடிய கர்நாடக சட்டமன்றக் கூட்டத்தில் எச்.டி.ரேவண்ணா இந்த விவகாரம் குறித்து காரசாரமாக பேசியுள்ளார். அங்கு அவர் பேசியதாவது,எனது மகன் தவறு செய்திருந்தால் அவனை தூக்கில் போடுங்கள், நான் அதற்கு மறுப்பு தெரிவிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
'கர்நாடக காவல்துறை தலைமை இயக்குனர் அலோக் மோகன் மீதும் ரேவண்ணா குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தனக்கு எதிராக சில பெண்களை இயக்குநகரகத்துக்கு அழைத்து வந்து வாக்குமூலம் அளிக்க வைத்து அலோக் மோகன் புகார் அளிக்க வைத்துள்ளார்.அவர் தலைமை இயக்குனராக இருப்பதற்கு தகுதியற்றவர்' என்று சட்டமன்றத்தில் ரேவண்ணா தெரிவித்துள்ளார். ரேவண்ணாவின் பேச்சுக்கு துணை முதலவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட பலர் கடனைகளை தெரிவித்தனர். முன்னதாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருவர் பின் ஒருவராக முன்வந்து புகார் அளித்து வருகின்றனர். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண் பேசாமல் இருக்க அவரை கடத்திய குற்றத்திற்காக எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- 20 அரிய கனிம வள சட்டம் 2023 ஆம் ஆண்டிலேயே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- அப்போதே திமுக எம்பிக்கள் தடுத்திருக்க வேண்டும்
இன்று நடந்த தமிழக சட்டசபை கூட்டத்தின் பின் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சட்டசபை வளாகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 20 அரிய கனிம வள சட்டம் 2023 ஆம் ஆண்டிலேயே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதை அப்போதே திமுக எம்பிக்கள் தடுத்திருக்க வேண்டும்.
டங்ஸ்டன் சுரங்க ஏலம் கடந்த 9 மாதங்கள் முன்பே நடந்து முடிந்தது. ஆனால் கடந்த 9 மாதமாக தமிழக அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு எந்த கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை.
ஆரம்பத்திலேயே பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருக்க வேண்டும். ஆனால் மழுப்பலான பதிலைத்தான் திமுக அரசு அளித்துக்கொண்டிருக்கிறது.
அரசு அலட்சியமாக இருந்தது என எடுத்துக் கூறினால் அனைவர்க்கும் கோபம் வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
- தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது மரபு.
- ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியம்.
தமிழக சட்டசபையில் இன்று உரையை புறக்கணித்து ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றது தொடர்பாக தவெக தலைவர் விஜய் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு" என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சட்டம்-ஒழுங்கு சிறந்த முறையில் நிர்வகிக்கப்படுகிறது என்ற வாசகம் ஆளுநர் உரையில் இடம் பெற்றிருக்கிறது.
- ஒரு வேளை, இதன் காரணமாக, ஆளுநர் உரையை ஆளுநர் படிக்காமலேயே புறக்கணிந்துவிட்டாரோ என்ற எண்ணமும் எழுந்துள்ளது.
சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சட்டசபைக்குள் நுழைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் சட்டசபையில் இருந்து சென்றார். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆளுநர் உரையை சபாநாயகர் வாசித்தார்.
இந்நிலையில் பொய்மையின் மறு உருவமாகத் திகழும் ஆளுநர் உரை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ஆளுநர் பேருரை என்பது ஆட்சியாளர்கள் இனி செய்யப் போகின்ற காரியங்களையும், கடைப்பிடிக்க இருக்கின்ற கொள்கைகளின் விளக்கத்தையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும் என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள், ஆனால். இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநரின் உரை பேரறிஞர் அண்ணா அவர்களின் கூற்றுக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், திட்டங்களே இல்லாத உரையாக, உண்மைகளை மறைக்கின்ற உரையாக ஆளுநர் உரை அமைந்தள்ளது. ஆளுநர் ஆற்றிய உரை என்று புத்தகத்தில் அச்சிடப்பட்டு இருந்தாலும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குள் ஏற்பட்ட அமளி காரணமாக உணயை வாசிக்காமல் ஆளுநர் சென்றுவிட்டார். ஒருவேனை, ஆளுநர் அவர்கள் இந்த உரையை வாசித்து இருந்தால், அந்த உரையில் இடம்பெற்றுள்ள கருத்துகளுக்கு ஆளுநர் அவர்கள் ஒப்புதல் கொடுத்தது போல் ஆகிவிடும்.
அந்த அளவுக்கு உண்மைக்கு மாறான தகவல்கள் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளன. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரை, "சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது" என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு போதைப் பொருட்களின் புகலிடமாக விளங்குகிறது என்பதும்; அன்றாடம் பல கொலை, கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன என்பதும்; திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கொலை வழக்கு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு, வேங்கைவயலில் உள்ள பட்டியல் பிரிவினர் பயன்படுத்திய மேல்நிலைக் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது குறித்த வழக்கு என பல வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும்; மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்படுவதும், அண்ணா பல்கலைக்கழக மாலாவி அந்தப் பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதும் நாடறிந்த உண்மை.
இவற்றையெல்லாம் மறைத்து, சட்டம்-ஒழுங்கு சிறந்த முறையில் நிர்வகிக்கப்படுகிறது என்ற வாசகம் ஆளுநர் உரையில் இடம் பெற்றிருக்கிறது. ஒரு வேளை, இதன் காரணமாக, ஆளுநர் உரையை ஆளுநர் படிக்காமலேயே புறக்கணிந்துவிட்டாரோ என்ற எண்ணமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆளுநர் உரையின் 58-வது பத்தியில், "மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அவர்களது எதிர்பார்ப்புகளுக்கும் மேலாகவே நிறைவேற்றியுள்ளதுடன், குறுகிய காலத்தில் செய்த இச்சாதனைகள் குறித்தும், ஒருபித்த முன்னேற்றம் குறித்தும் இந்த அரசு பெருமிதம் கொள்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கான சம வேலைக்கு சம ஊதியம், மருத்துவர்களுக்கான பதவி மற்றும் ஊதிய உயர்வு, சத்துணவுப் பணியாளர்களுக்கான கால முறை ஊதியம்.
மாதம் ஒரு முறை மின் கட்டணம், கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து, ரேஷன் கடைகளில் கூடுதலாக உ தவாக உகு உளுத்தம் பருப்பு மற்றும் கூடுதலாக ஒரு கிலோ அரிசி, 100 ரூபாய் எரிவாயு மானியம், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான வஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு என பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் யதார்த்தம்.
இதற்கு முற்றிலும் முரணாக ஆளுநர் உரையில் தெரிவிப்பது என்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல், ஆளுநர் உரையின் பத்தி 4-ல், மகளிர் உரிமைத் தொகை 1.15 கோடி குடும்பங்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 2.20 கோடி குடும்பங்கள் இருக்கின்ற நிலையில், 1.15 கோடி குடும்பங்களுக்கு மட்டும் மகளிர் உரிமைத் தொகை வழங்கியிருப்பது ஒருதலைபட்சமானது. இது தவிர, ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு மின் கட்டண உயர்வு வாகன வரி உயர்வு பத்திரப் பதிவு உயர்வு விலைவாசி உயர்வு என பல்வேறு காரணிகள் மூலம் மாதம் 5,000 ரூபாய் வரை கூடுதல் நிதிச் சுமை சுமத்தப்பட்டிருக்கிறது.
தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 1,000 மின்சாரப் பேருந்துகள் உட்பட, 7,713 பேருந்துகள் புதிதாக வாங்கப்படும் என்றும், 500 பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கைகள் வாயிலாக அறிவிக்கப்பட்டன. ஆனால், இதுவரை 2,578 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அறிவிக்கப்பட்டதில் 33 விழுக்காடு மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.
தி.மு.க. அரசின் எல்லாத் திட்டங்களும் இந்த நிலையில் தான் உள்ளன. நீட் தேர்வு ரத்து என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. இன்று அதுபற்றி வாய் திறக்காதது ஏழையெளிய மாணவ, மாணவியரை வஞ்சிக்கும் செயல்.