search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Job"

    • தன்னை சொந்த ஊருக்கு மீட்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
    • உறவினர்களுடன் சேலம் வந்து அங்கு டி.ஐ.ஜி. உமாவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    சேலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 45). இவரை திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது அலி, சென்னையை சேர்ந்த முத்து ஆகியோர் மலேசியாவில் நல்ல வேலை இருப்பதாக கூறி அங்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சரியான வேலை கிடைக்காத நிலையில் வீட்டு வேலை செய்ய சொல்லி மகேஸ்வரியை அடித்து கொடுமைப்படுத்தினர். ரூ.1.26 லட்சத்திற்கு தன்னை விற்றுள்ளது மகேஸ்வரிக்கு தெரியவந்தது.

    இது பற்றி தனது உறவினர்களிடம் தெரிவித்து அவர் கதறினார். மேலும் தன்னை சொந்த ஊருக்கு மீட்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    இதையடுத்து அவரை மீட்பதற்காக உறவினர்கள் மாவட்ட நிர்வாகத்தை அணுகினார்கள். மேலும் சேலம் சரக டி.ஐ.ஜி. உமாவிடம் புகார் மனு கொடுத்தனர். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மகேஸ்வரியை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் மகேஸ்வரி மலேசியாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். காலையில் விமானம் சென்னை வந்தடைந்தது. பின்னர் மகேஸ்வரி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் அவரை உறவினர்கள் வரவேற்றனர். அப்போது மகேஸ்வரி உறவினர்களை பார்த்து நெகிழ்ச்சியுடன் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

    பின்னர் அவர் தனது உறவினர்களுடன் சேலம் வந்து அங்கு டி.ஐ.ஜி. உமாவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    முன்னதாக மகேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், தனக்கு மலேசியாவில் நல்ல வேலை இருப்பதாக அழைத்து சென்று கழிவறையை கழுவ சொன்னதுடன் அங்கு அடித்து கொடுமைப்படுத்தினர். இதனால் எனக்கு தற்போது வரை காது சரியாக கேட்காத நிலை உள்ளது. எனவே இதற்கு காரணமான முகமது அலி, முத்து, அருள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    • கடைசி நேரத்தில் கூட்டணிக்கு ஏதாவது கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்ளலாம்.
    • தொகுதிகளில் வேலைகளையும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பலமான கூட்டணியை அமைக்கும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். ஆனால் அவர் எதிர்பார்க்கும் வகையில் கட்சிகள் சேருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

    எனவே கடைசி நேரத்தில் கூட்டணிக்கு ஏதாவது கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்ளலாம். தொகுதி பங்கீடு பற்றியும் அப்போது பார்த்து கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

    கூட்டணி அமைந்தாலும் சரி. அமையாவிட்டாலும் சரி தேர்தலை சந்திக்கும் வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

    தொகுதி நிலவரம், செல்வாக்கு, தி.மு.க.வுடன் நேரடி போட்டி ஏற்பட்டா லும் வெற்றி பெறும் ஆற்றல் ஆகியவற்றை ஆராய்ந்து வேட்பாளர்களை தேர்வு செய்வதாக கூறப்படுகிறது.

    இதுவரை 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டாராம். அதில் டாக்டர் ஜெயவர்தன் (தென்சென்னை), எஸ்.ஆர்.விஜயகுமார் (மத்திய சென்னை), ராயபுரம் மனோ (வடசென்னை), மா.பா.பாண்டியராஜன் (விருது நகர்), செம்மலை (சேலம்), சந்திரசேகர் (கோவை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), கே.வி.ராமலிங்கம் (ஈரோடு), ராஜ்சத்யன் (மதுரை), கண்ணன் (திண்டுக்கல்), கே.பி.எம்.சதீஷ்குமார் (கிருஷ்ணகிரி), ராதா கிருஷ்ணன் (கள்ளக்குறிச்சி), சண்முகநாதன் அல்லது சரவண பெருமாள் (தூத்துக்குடி) உள்பட 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முடிவு செய்து விட்டாராம்.

    தான் வேட்பாளராக முடிவு செய்திருப்பவர்களை அந்த அந்த தொகுதிகளில் தேர்தல் வேலையை தொடங்கும்படி ரகசியமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

    இதையடுத்து தொகுதி களில் வேலைகளையும் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

    • நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இம்ரான் மகன் தஸ்தகீர் (வயது 23) என்பவர் சவுதி அரேபியாவுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 6.95 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
    • தலைவாசல் போலீசார் கைது செய்து ஆத்தூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்தவர்கள் அன்சர், ரஹீம், நசீம்.

    இவர்களிடம் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இம்ரான் மகன் தஸ்தகீர் (வயது 23) என்பவர் சவுதி அரேபியாவுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 6.95 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து திரும்பி வந்த அவர்கள் தங்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தஸ்தகீர் பணம் வாங்கி மோசடி செய்ததாக தலைவாசல் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மேலும் அவர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் பகுதியில் 7 பேரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளதும், நாகப்பட்டினம் சிறையில் தஸ்தகீர் அடைக்கப்பட்டு ள்ளதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவரை தலைவாசல் போலீசார் கைது செய்து ஆத்தூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் அருண்குமார், தஸ்தகீரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    • மோசடியில் தேனியை சேர்ந்த முரளி (24) என்பவர் உள்பட மேலும் 3 பேருக்கு தொடர்பு உள்ளது.
    • நாகர்கோவிலில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் புதுக்கடை ஐரேனியபுரம் கோணத்துவிளையை சேர்ந்தவர் பிரவிதா (வயது 29). இவர் நாகர்கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    எனக்கு ஐரேனிய புரத்தைச் சேர்ந்த அபிஷா (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர், தற்போது பெங்களூரு கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த மத்திய அரசு ஊழியர் ஜோயல் தேவா (37) என்பவரை திருமணம் செய்து பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அபிஷாவும், அவருடைய கணவர் ஜோயல் தேவாவும், தங்களுக்கு ரெயில்வே துறையில் முக்கிய அதிகாரிகளை தெரியும் என்றும், அவர்கள் மூலமாக ரெயில்வேயில் வேலை வாங்கி தர முடியும் என்றும் என்னிடம் கூறினர். ஆனால் வேலை வாங்கித் தர வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என்றும் கூறினார்கள்.

    இதனை நம்பி நான் ரூ.20 லட்சம் கொடுத்தேன். இதே போல கிள்ளியூர் பண்டாரவிளையை சேர்ந்த பிறைஜா என்பவரிடம் ரூ.10 லட்சமும், முள்ளுவிளையை சேர்ந்த அரவிந்த் என்பவரிடம் ரூ.14 லட்சமும், ராஜ்குமார் என்பவரிடம் ரூ.12 லட்சமும் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி அவர்கள் வாங்கினர். அந்த வகையில் 4 பேரிடமும் மொத்தம் ரூ.56 லட்சம் வாங்கினார்கள். ஆனால் அவர்கள் கூறியது போல ரெயில்வேயில் வேலை வாங்கித் தரவில்லை. எனவே நாங்கள் பணத்தை திரும்பத் தரும்படி கேட்டோம். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்கவில்லை. வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை வாங்கி மோசடி செய்துவிட்டனர். இந்த மோசடியில் தேனியை சேர்ந்த முரளி (24) என்பவர் உள்பட மேலும் 3 பேருக்கு தொடர்பு உள்ளது. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சார்லெட் விசாரணை நடத்தி ஜோயல் தேவா, அவருடைய மனைவி அபிஷா, முரளி உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தார். அப்போது சம்பந்தப்பட்ட 3 பேரும் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சார்லெட் தலைமையிலான போலீசார் பெங்களூர் சென்று ஜோயல் தேவா, அபிஷா மற்றும் முரளி ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • மதுரையில் வேலை வாய்ப்பு முகாம் வருகிற 5-ந்தேதி நடக்கிறது.
    • தனியார் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    மதுரை

    மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    கலைஞர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்கள் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் நடத்தப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வரும் 5-ந்தேதி (சனிக்கிழமை) அன்று மதுரை கோரிப்பாளையம் அமெரிக்கன் கல்லூரியில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் அலுவ லகத்தை தொடர்பு கொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான காலிப்பணியிட விவரத்து டன் நேரிலோ அல்லது ddemptmdu@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தெரிவிக்கலாம்.

    இந்த முகாமில் 200 -க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த முகாமில் அனைத்து கல்வித்தகுதியுடைய 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கல்வித் தகுதிக்கேற்ற தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தங்களது அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரப் படிவம் ஆகிய வற்றுடன் முகாமிற்கு வரவேண்டும்.

    மேலும், இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்.

    மேலும் விவரங்களுக்கு மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் தொலைபேசி எண். 0452 -2566022 வாயிலாக தொடர்பு கொள்ளவும்.

    இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளு மாறும், இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவ தால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு வேலை தேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
    • முகாமிற்கு வரும் போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால் அதனை சரி செய்து கொள்ளலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 21ந்தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு வேலை தேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலை நாடுபவர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்பு படிவத்துடன் கலந்து கொள்ளலாம். வேலை அளிப்பவர்கள் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில்முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

    எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை , ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் என கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் வேலை தேடுபவர்களும் வேலை அளிப்பவர்களும் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

    முகாமிற்கு வரும் போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால் அதனை சரி செய்து கொள்ளலாம். புதுப்பித்துக் கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்து கொள்ளலாம்.

    தகுதியிருப்பின் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படாது. இந்த பணி முற்றிலும் இலவசமானது.

    மேலும் விவரங்களுக்கு 0421-2999152, 9499055944 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • இப்போதே மாண்டிசோரி ஆசிரியர்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது.
    • கல்லூரி மாணவிகள், குடும்ப தலைவிகள்... என யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.

    கடந்த மூன்று வாரங்களாக ஆசிரியர் பணி குறித்தும், பல்வேறு விதமான ஆசிரியர் பயிற்சி முறைகள் பற்றியும், ஆசிரியர் பணிக்கு தகுதி பெறும் படிப்புகளை பற்றியும் தெரிந்து கொண்டோம். இந்த வாரம், வருங்காலத்தில் ஆதிக்கம் செலுத்த இருக்கும் மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி பற்றியும், அது ஏன் ஆதிக்கம் செலுத்த இருக்கிறது என்பது குறித்தும் சென்னையை சேர்ந்த கல்வியாளர் அன்ன ஸ்டெபி விளக்குகிறார்.

    ''நாம் பயின்ற பள்ளிகளுக்கும், இப்போது இயங்கும் பள்ளிகளுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். கல்வி கற்பிக்கும் விதமும், குழந்தைகளை வழிநடத்தும் விதமும் ரொம்பவே மாறிவிட்டது. குழந்தைகளை திட்டக்கூடாது, துன்புறுத்தக்கூடாது... என்பது போன்ற பல்வேறு அரசு வழிகாட்டுதல்கள் நடைமுறையில் இருக்கிறது. இவை வருங்காலத்தில் அதிகரிக்கும் பட்சத்தில், மாண்டிசோரி கல்வி முறையே எல்லோருக்கும் சிறப்பானதாக இருக்கும். மேலும் பெற்றோர்களின் கவனமும் மாண்டிசோரி பள்ளிகள் மீது பதிந்திருக்கிறது'' என்றவர், அதற்கான காரணங்களை பட்டியலிடுகிறார்.

    ''இந்த காலத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகள், போட்டி நிறைந்த சமூகத்தை சமாளிக்கும் வகையில் வளர, படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். கல்வி மட்டுமின்றி, பல்வேறு திறமைகளுடன் வளர்க்க ஆசைப்படுகிறார்கள். பெற்றோர் இருவருமே பணிக்கு செல்வதால், பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு பிள்ளைகள் அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களே செய்து கொள்ளும்படியாக வளர வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

    சமூக பொறுப்புகளையும், சமூக ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்க ஆசைப்படுகிறார்கள். இவை அனைத்தும்தான் மாண்டிசோரி கல்வி முறையின் தூண்கள் என்பதால்... பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகளை மாண்டிசோரி பள்ளிகளில் சேர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்'' என்றவர், இன்னும் சில வருடங்களில், தமிழகத்தின் எல்லா நகரங்களிலும், பல்வேறு மாண்டிசோரி பள்ளிகள் ஆரம்பமாகிவிடும் என்கிறார்.

    ''இப்போதே மாண்டிசோரி ஆசிரியர்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. எதிர்காலத்தில் இது அதிகமாகிவிடும். மேலும் மற்ற ஆசிரியர் பணிகளை விட மாண்டிசோரி ஆசிரியர் பணி மிகவும் எளிமையானது, வித்தியாசமானது என்பது நிறைய மாணவ-மாணவிகள் மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி பெறுவதற்கு முக்கிய காரணமாகிறது. ஆம்..! மாண்டிசோரி ஆசிரியர் பணியில், 'லெசன் பிளான்' இல்லை. ஏனெனில் படிப்பதற்கான வழிமுறைகளை மாணவர்கள்தான் உருவாக்க வேண்டும்.

    ஆசிரியர்கள், அவர்களது கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்து வழிநடத்தினால் மட்டும் போதும். ஒரே வகுப்பறையில் அடைத்து வைத்து கல்வி கற்றுக்கொடுக்கும் அவசியமும் இல்லை. பல்வேறு வழிமுறைகளை (டீச்சங் எயிட்) பயன்படுத்தி கல்வி கற்பிக்கலாம். இது மற்ற ஆசிரியர் பணிகளை போல கட்டாய பணியாக இல்லாமல், விரும்பி செய்யக்கூடிய பணியாகவே இருக்கும் என்பதாலும், இதற்கான வரவேற்பு அதிகரித்திருக்கிறது'' என்றவர், இந்த பயிற்சி பெற வயது வித்தியாசங்கள் எதுவுமில்லை என்பதும் மிக முக்கிய காரணம் என்கிறார்.

    ''கல்லூரி மாணவிகள், குடும்ப தலைவிகள்... என (10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் வரை) யார் வேண்டுமானாலும் படிக்கலாம். வீட்டில் இருந்து ஆன்லைன் முறையில் கூட படிக்கலாம். ஆன்லைன் அல்லது தொலைதூர கல்வியாக படிப்பதனால் அதற்கு மதிப்பு குறைந்துவிடும் என்பது போன்ற கருத்துக்கள் எல்லாம் மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சியில் கிடையாது. முக்கியமான வகுப்புகளுக்கு மட்டும், நேரடி வகுப்பில் கலந்து கொண்டு மற்றபடியான வகுப்புகளை ஆன்லைன் முறையிலேயே மேற்கொள்ளலாம். இதுபோன்ற பல்வேறு காரணங்கள்தான், மாண்டிசோரி கல்வியையும், ஆசிரியர் பயிற்சியையும் எதிர்காலத்திற்கானதாக மாற்றி இருக்கிறது.

    ஒருகாலத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பிரபலமாக இருந்தன. ஆனால் சி.பி.எஸ்.இ. கல்விமுறை வந்ததும், மெட்ரிகுலேஷனை விட சி.பி.எஸ்.இ. பிரபலமாகின. இந்த பட்டியல் இன்று இண்டர்நேஷனல் கல்விமுறை வரை சென்றுவிட்டது. அதன்படி, எதிர்காலத்தில் மாண்டிசோரி நிச்சயம் தவிர்க்க முடியாத கல்வி முறையாகவும், ஆசிரிய பயிற்சியாகவும் மாற இருக்கிறது'' என்று புதுநம்பிக்கை கொடுக்கும் அன்ன ஸ்டெபி, இறுதி கருத்தை பதிவு செய்தார்.

    ''ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மாஸ்க், அமேசான் நிறுவனர் ஜெப் பேசோ, கூகுள் நிறுவனர்களில் ஒருவரான லாரி பேஜ்... இவர்கள் எல்லாம் மாண்டிசோரி கல்வி முறையில் படித்தவர்கள். இந்த கல்விமுறை நீண்ட காலமாக இருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் யாரும் எதிர்பார்க்காததை விட, ரொம்ப பிரபலமாக இருக்க போகிறது'' என்ற கருத்துடன் விடைபெற்றார்.

    • வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் பணியிடங்கள் தகுதி அடிப்படையில் தோ்வு செய்யப்படுவார்கள்.
    • பேச்சுத்திறன் மற்றும் தலைமைத்திறன் கொண்டவராகவும், சம்பந்தப்பட்ட வட்டாரத்தை சாா்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் காலிப் பணியிடங்களுக்கு வருகிற 13 ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:-

    திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் அவிநாசி, காங்கயம், பல்லடம், பொங்கலூா், திருப்பூா், வெள்ளகோவில் ஆகிய வட்டாரங்களில் காலியாக உள்ள 10 வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் பணியிடங்கள் கீழ்கண்ட தகுதி அடிப்படையில் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

    இதற்கு விண்ணப்பிக்க ஒரு பட்டப்படிப்புடன் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கான எம்.எஸ்.ஆபிஸ் சான்றிதழுடன் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் 28 வயதுக்கு உள்பட்டவராகவும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் இதுபோன்ற திட்டங்களில் பணியாற்றியிருக்கவும் வேண்டும். பேச்சுத்திறன் மற்றும் தலைமைத்திறன் கொண்டவராகவும், சம்பந்தப்பட்ட வட்டாரத்தை சாா்ந்தவராகவும் இருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுநா் உரிமம் வைத்திருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மாத ஊதியமாக ரூ.12 ஆயிரம் வழங்கப்படும்.

    இந்த வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு (75 மதிப்பெண்) ஜூலை 20 -ந்தேதியும், நோ்முகத் தோ்வு (25 மதிப்பெண்) ஜூலை 24 ந்தேதியும் நடைபெறும்.

    ஆகவே இதற்கு தகுதிவாய்ந்த நபா்கள், இணை இயக்குநா்-திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டம், அறை எண் 305, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூா்-641604 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 13 -ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கரூர் வள்ளுவர் கல்லூரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கபட்டுள்ளது
    • மாணவர்கள் சென்ற வாரம் 23-ந்தேதி பணியில் சேர்ந்தனர்.

    கரூர்,

    இந்திய தொழில் நுட்பக் கழகம் (மெட்ராஸ்) தென்னிந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியாகும். இந்திய அரசினால் தேசிய இன்றியமையாக் கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தியாவின் தலைசிறந்த கல்விக்கூடங்களில் ஒன்றாகும். இதன் துணை நிறுவனமான ப்ரவர்தக் டெக்நாலோஜிஸ் திறமையான வள்ளுவர் கல்லூரி மாணவர்களை ஒவ்வொரு வருடமும் பணியமர்த்தி வருகிறது. இந்தவருடமும் கணினி அறிவியல் பயின்று முடித்த மூன்று மாணவர்களை தேர்வு செய்துள்ளது. இந்த மாணவர்கள் சென்ற வாரம் 23-ந்தேதி பணியில் சேர்ந்தனர். வேறெந்த கல்லூரிக்கும் கிடைக்காத வாய்ப்பும் பெருமையும் வள்ளுவர் கல்லூரிக்கு கிடைத்திருப்பதாக கல்லூரியின் தலைவர் செங்குட்டுவன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதற்F மாணவர்களின் திறமை மற்றும் கல்லூரியில் அளிக்கப்படும் தலைசிறந்த பயிற்சியுமே காரணம் என்றும் அவர் கூறினார்.

    • செல்போனில் வந்த பகுதி நேர வேலை விளம்பரத்தை பார்த்துவிட்டு அதில் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு உள்ளார்.
    • விளம்பரத்தை பார்த்து ரூ.2,58,921 பணம் செலுத்தி, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் சிவதாபுரம் அருகே உள்ள திருமலைகிரி கொல்லர் தெரு பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 38). இவரது செல்போனில் வந்த பகுதி நேர வேலை விளம்பரத்தை பார்த்துவிட்டு அதில் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு உள்ளார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ரூ.12,99,534 பணம் செலுத்தி பதில் அளித்துள்ளார்.

    ஆனால் இவருக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வரதராஜன் இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் சேலம் மெய்ய னூர் அர்த்தனாரி தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (37). இவரும் ஆன்லைனில் வேலை என்ற விளம்பரத்தை பார்த்து ரூ.2,58,921 பணம் செலுத்தி, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். இவருக்கும் எந்த ஒரு வேலையும் கிடைக்காத தால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மகேந்திரன், இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • அரசு தங்களது சில பணக்கார நண்பர்களின் பயனுக்காக மட்டுமே செயல்படுகிறது.
    • அரசாங்கத்தின் கீழ் நாடு வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி தவிக்கிறது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    ஒரு காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் பெருமையாக இருந்தது. இளைஞர்கள் பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரிவதை தங்களது கனவாக கொண்டு இருந்தனர்.

    ஆனால் இன்று பொதுத்துறை நிறுவனங்கள் தங்களது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன. கடந்த 2014-ம் அண்டு 16.9 லட்சமாக இருந்த பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரிபவர்கள் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 14.6 லட்சமாக குறைந்தள்ளது.

    வளர்ச்சியை நோக்கி செல்லும் நாட்டில் இது போன்ற வேலை வாய்ப்புகள் குறையுமா?

    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 1,81,127 பேர் வேலை இழந்துள்ளனர். செய்ல்-61,920, எம்.டி.என்.எல். 34,997, எஸ்.இ.சி.எல். 29,140, இந்திய உணவு கழகம் 28,663, ஒ.என்.ஜி.சி.யில் 21,120 பேர் வேலையை இழந்துள்ளனர்.

    ஆண்டுதோறும் 2 கோடி வேலை வாய்ப்பு என்று பொய் வாக்குறுதி அளித்தவர்கள் வேலைகளை அதிகரிப்பதற்கு பதிலாக 2 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை நீக்கியுள்ளது. இதன் மூலம் இளைஞர்களின் நம்பிக்கை நசுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிறுவனங்களில் ஒப்பந்த ஆட்களை சேர்ப்பது இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிறுவனங்களை தனியார் மயமாக்கும் சதியா?

    இந்த அரசு தங்களது சில பணக்கார நண்பர்களின் பயனுக்காக மட்டுமே செயல்படுகிறது. இந்த அரசாங்கத்தின் கீழ் நாடு வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி தவிக்கிறது.

    பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டு மக்களின் சொத்து. அவை இந்தியாவின் முன்னேற்றப் பாதையை வலுப்படுத்தும் வகையில் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

    • கடந்த மார்ச் மாதம் தொடர்பு கொண்ட காதர் நூருல்லா என்ற நபர், தான் இடியாப்பம் தயாரிக்கும் எந்திரம் செய்யும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருவதாக அறிமுகம் ஆகி உள்ளார்.
    • சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் கிச்சிப்பாளையம் புதுதெரு பகுதியை சேர்ந்தவர் சாலை சேகரன் (வயது 49). இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த மார்ச் மாதம் தொடர்பு கொண்ட காதர் நூருல்லா என்ற நபர், தான் இடியாப்பம் தயாரிக்கும் எந்திரம் செய்யும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருவதாக அறிமுகம் ஆகி உள்ளார்.

    மேலும் தலைமைச் செயலகத்தில் உள்ள முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தனக்கு நண்பர் என்றும், அவர் மூலம் உங்களது மகனுக்கு அரசு வேலை வாங்கி கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

    மேலும் ராதாகிருஷ்ணன் என்பவரையும் போனில் பேச வைத்துள்ளார். இதை உண்மை என்று நம்பிய சாலை சேகரன், அந்த நபர்கள் கூறிய வங்கிக் கணக்கிலும், கூகுள்பே மூலமும் ரூ.7 லட்சத்து 55 ஆயிரத்து 273 செலுத்தியுள்ளார்.

    அதன் பிறகு அந்த 2 நபர்களும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சாலை சேகரன், இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×