search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆன்லைனில் வேலை தருவதாக 2 பேரிடம் ரூ.15.50 லட்சம் மோசடி
    X

    ஆன்லைனில் வேலை தருவதாக 2 பேரிடம் ரூ.15.50 லட்சம் மோசடி

    • செல்போனில் வந்த பகுதி நேர வேலை விளம்பரத்தை பார்த்துவிட்டு அதில் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு உள்ளார்.
    • விளம்பரத்தை பார்த்து ரூ.2,58,921 பணம் செலுத்தி, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் சிவதாபுரம் அருகே உள்ள திருமலைகிரி கொல்லர் தெரு பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 38). இவரது செல்போனில் வந்த பகுதி நேர வேலை விளம்பரத்தை பார்த்துவிட்டு அதில் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு உள்ளார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ரூ.12,99,534 பணம் செலுத்தி பதில் அளித்துள்ளார்.

    ஆனால் இவருக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வரதராஜன் இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் சேலம் மெய்ய னூர் அர்த்தனாரி தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (37). இவரும் ஆன்லைனில் வேலை என்ற விளம்பரத்தை பார்த்து ரூ.2,58,921 பணம் செலுத்தி, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். இவருக்கும் எந்த ஒரு வேலையும் கிடைக்காத தால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மகேந்திரன், இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×