என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேங்மேன்"

    • தமிழக மின் வாரியத்தில் கேங்மேன் பணிக்கு 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
    • 2 ஆண்டுகளாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சேலம்:

    தமிழக மின் வாரியத்தில், உடல் தகுதி மற்றும் எழுத்து தேர்வு வாயிலாக , கேங்மேன் பணிக்கு 10 ஆயி ரம் பேர் தேர்வு செய்யப்படு வதாக அறிவிக்கப்பட்டது. தேர்வான, 9,600 பேரின் பட்டியல், 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.

    எழுத்து தேர்வில் பங்கேற்று வேலை கிடைக் காத 5,400 பேர் வேலை கேட்டு, 2 ஆண்டு களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சி னைக்கு தீர்வு காண, செய லர், 3 தலைமை பொறியாளர்கள் அடங்கிய குழுவை, மின் வாரியம், கடந்த ஆண்டு நியமித்தது.

    அக்குழு ஆய்வு செய்து, தற்போது அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், 54 ஆயிரம் காலி பணி யிடங்கள் இருப்பதால், எழுத்து தேர்வில் பங்கேற்று விடுபட்ட 5,400 பேரை வேலைக்கு நியமிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

    • கேங்மேன் உள்ளிட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
    • பல இடங்களில் மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்க பயிற்சி இல்லாத தனியார்கள் அனுப்பப்படுவதாகவும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் மின் கம்பியாளர், கணக்கீட்டாளர், கேங்மேன் உள்ளிட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

    இதில், கிட்டத்தட்ட முப்பதாயிரம் கேங்மேன் பணியிடங்கள் அடக்கம். இதன் காரணமாக, பணிபுரிகின்ற ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும், பல இடங்களில் மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்க பயிற்சி இல்லாத தனியார்கள் அனுப்பப்படுவதாகவும், அவர்களுடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை நிலவுவதாகவும், அவர்கள் மின் பழுதை நீக்கிவிட்டு அதற்கான பணத்தை மின் நுகர்வோர்களிடம் கேட்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

    எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் உள்ள 30 ஆயிரம் கேங்மேன் காலிப் பணியிடங்களையும், இதரப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×