search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lok sabha elections"

    • மொத்தம் 8 வேட்பாளர்கள் தங்களது தொகுதியில் இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதால் அவற்றை சோதிக்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்
    • சோதனையை மேற்கொள்வதற்கான வழிகாட்டு நேரிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்படும் இவிஎம் மின்னணு இயந்திரங்களின் மீதான நம்பகத்தன்மை குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்றன. மக்களவைத் தேர்தலில் மின்னணு இயந்திரங்களை ஒழித்து வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கலும் செய்யப்பட்டது.

    இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடப்பது நிரூபிக்கப்படாததால் இந்த மனுவை கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அதற்கு பதிலாக தேர்தலில் இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்து தோல்வியைத் தழுவும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் பணம் செலுத்தி விண்ணப்பித்து இவிஎம் இயந்திரங்களை சோதனையிடலாம் என்று தெரிவித்திருந்தது.

    அதன்படி நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சமீபத்திய சட்டமன்ற தேர்தலில் இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்து தோல்வியடைந்த பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பலவேறு காட்சிகளை சேர்ந்த மொத்தம் 8 வேட்பாளர்கள் தங்களது தொகுதியில் இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதால் அவற்றை சோதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில் இந்த சோதனையை மேற்கொள்வதற்கான வழிகாட்டு நேரிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி வேட்பாளர்கள் தங்களின் தொகுதியில் வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட எந்த இவிஎம் இயந்திரங்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதை அவர்களே தேர்ந்தெடுக்கலாம். எந்த இயந்திரத்தை சோதிக்க வேண்டும் என்ற வேட்பளர்களின் முடிவில் அதிகாரிகளின் தலையீடு இருக்காது.

    தேர்தெடுக்கப்பட்ட இவிஎம் இயந்திரங்களை பயன்படுத்தி அதிகபட்சமாக 1400 வாக்குகள் செலுத்தி மாதிரி வாக்குப்பதிவு நடத்தி அவை சரியாக இயங்குகிறதா என்று என்று சோதிக்கலாம். அதிகப்பாடசாமாக வேட்பாளர்கள் தங்களின் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட 5 சதவீத இயந்திரங்களை சோதிக்க முடியும்.

    இவிஎம் இயந்திரமானது பேலட் யூனிட், கண்ட்ரோல் யூனிட் [விவிபேட்] யூனிட்டை உள்ளடிக்கியது. இந்த யூனிட்களை வெவ்வேறு இயந்திரங்களில் இடைமாற்றியும் [ஒரு இவிஎம் இயந்திரத்தில் உள்ள பேலட் யூனிட்டையும் மற்றொரு இயந்திரத்தில் உள்ள விவிபேட் யூனிட்டையும்] இணைத்து சோதித்து பார்க்கலாம்.

    ஆனால் ஒரு தொகுதியில் மொத்தம் 5 சதவீத இயந்திரங்களை சோதிக்க முடியும் என்ற நிலையில் ஒரு வாக்குச்சாவடியில் ஒரு இவிஎம் இயந்திரத்தை மட்டுமே சோதிக்க முடியும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளின் படி  விரைவில் மாதிரி வாக்கெடுப்பு நடத்தி இவிஎம் இயந்திரங்கள் சோதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • வட மாநிலங்களில் இந்தியா கூட்டணி அதிக வெற்றி பெற்றது பாஜாகாவுக்கு பேரிடியாக அமைந்தது.
    • 'நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் உள்ளே சில வெளிநாட்டு கைகள் இயங்கிவந்தன'

    இந்தியாவில் மக்களவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் காங்கிரசின் இந்தியா கூட்டணி 235 இடங்களிலும், பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களிலும் வெற்றி பெற்றது. 400 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று கூறி தேர்தலை சந்தித்த பாஜக, கூட்டணி வெற்றியை சேர்க்காமல் தனித்து 240 இடங்களில் மட்டுமே வென்றது.

    இந்நிலையில் கூட்டணி கட்சிகளின் தயவில் மோடி தலைமையில் மீண்டும் பாஜக அரசு ஆட்சியமைதுள்ளது. பாஜகவின் கோட்டையாக விளங்கும் உத்தரப் பிரதேசம் உள்ள மாநிலங்களில் இந்தியா கூட்டணி அதிக வெற்றி பெற்றது பாஜாகாவுக்கு பேரிடியாக அமைந்தது.

    இந்த நிலையில்தான் தற்போதைய பாஜக அரசில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சராக உள்ள சிவராஜ் சிங் சவுகான் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக நிறைய இடங்களில் தோற்பதற்கு வெளிநாட்டு சக்திகளின் தலையீடே காரணம் என்று பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

    இன்று ராஜஸ்தானில் நடந்த சுமார் 88,000 உறுப்பினர்கள் பாஜக கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற சிவராஜ் சிங் சவுகான், 'நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் உள்ளே சில வெளிநாட்டு கைகள் இயங்கிவந்தன. அந்த வெளிநாட்டு சக்திகள் பாஜக வெற்றி பெறுவதை விரும்பவில்லை' என்று தெரிவித்தார். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் சுமார் 16 ஆண்டுகள் அம்மாநிலத்தின் முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • குஜராத், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இஸ்ரலாமியளார்ளுக்கு எதிரான தாக்குதல் மற்றும் கொலை சம்பவங்களை அறிக்கையில் APCR மேற்கோள் காட்டியுள்ளது.
    • இஸ்லாமியர்கள் மீது கலெறிந்தது, கடைக்கு தீவைத்தது, மதராசாவில் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

    2024 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு இஸ்லாமிய சமூகத்தினரின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக ட சமூக உரிமைகள் பாதுகாப்பு அமைப்பான [APCR] வெளியிட்டுள்ள அறிக்கையின் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆகியுள்ளார். இந்துத்துவ சித்தாந்தத்தை வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு நெருங்கிய தொடர்புடைய பாஜகவின் ஆட்சியில் சிறுபான்மையினர்களுக்கு குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பப்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த அறிக்கை மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

     

    டெல்லியை தலைமையிடமாக கொண்ட APCR வெளியிட்டுள்ள அறிக்கையில், '2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு நாட்டின் பல பகுதிகளில் வெவ்வேறு சமயங்களில் இஸ்லாமியர்கள் மீது தனிநபர் மற்றும் குழு தாக்குதல்கள் நடந்துள்ளன. மேலும் இஸ்லாமியர்களின் கட்டடங்கள் சட்டவிரோதமாக இடிக்கப்பட்டுள்ளன' என்று கூறப்பட்டுள்ளது. குஜராத், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இஸ்ரலாமியளார்ளுக்கு எதிரான தாக்குதல் மற்றும் கொலை சம்பவங்களை அறிக்கையில் APCR மேற்கோள் காட்டியுள்ளது.

    மேலும் தெலங்கானா, ஒடிசா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீது கலெறிந்தது, கடைக்கு தீவைத்தது, மதராசாவில் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. பசு வதை, மாட்டிறைச்சியை வைத்திருந்தது, மதம் தொடர்பான கொடிகளை நிறுவியது, பசு பலியிடப்படும் காட்சிகளை இணையத்தில் பகிர்ந்தது உள்ளிட்டவற்றை காரணங்காட்டி இந்த தாக்குதல்கள் நடத்துள்ளதகாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் மத்தியப் பிரேதசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் அரசு அதிகரிகளாலேயே இஸ்லாமியர்களின் கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேசம் மாண்டலா மற்றும் ரத்தலம் பகுதியில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இஸ்லாமியர்களின் வீடுகளை அரசு அதிகாரிகள் இடித்துள்ளனர் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

     

    மிகவும் தீவிரமான பிரச்சனையான இதுபோன்ற தாக்குதலைகளை தடுத்து இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளை APCR வலியுறுத்தியுள்ளது. 

    • மோடி 3-வது முறையாக பதவியேற்றுள்ள நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சி மீண்டும் இன்று [ஜூன் 30] ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டது.
    • இந்திய அரசியலமைப்பு மீதும் ஜனநாயகத்தின்மீதும் மக்களின் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்தார்.

    பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். பாராளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த 3 மாதங்களாக இந்த நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் மோடி 3-வது முறையாக பதவியேற்றுள்ள நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சி மீண்டும் இன்று [ஜூன் 30] ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணி அளவில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசத் தொடங்கிய மோடி, நண்பர்களே கடந்த பிப்ரவரி முதல் வந்த ஒவ்வொரு ஞாயிற்றுஇக்கிழமையும் உங்களுடன் பேசும் இந்த வாய்பபு கிடைக்காமல் நான் தவித்தேன்.

     

    தற்போது மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நான் மீண்டும் எனது குடும்ப உறுப்பினர்களான நாட்டுமக்கள் மத்தியில் வந்துள்ளேன் என்று கூறினார். அவரது உரையில், 2024 மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

     

    இந்திய அரசியலமைப்பு மீதும் ஜனநாயகத்தின்மீதும் மக்களின் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்தார். மேலும் ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் வகையில் இன்று கொண்டாடப்படும் ஹூல் நிவாஸ் இன்று கொண்டாடப்படுவதை சுட்டிக்காட்டி மோடி பேசினார்.

    மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச யோகா தினம் குறித்தும், அடுத்த வருடம் நடக்க உள்ள பாரீஸ் ஒலிம்பிக் குறித்தும் அவர் பேசினார். தொடர்ந்து அவரது இன்றைய உரையில் டி20 கோப்பையில் இந்தியா அணியின் வெற்றி குறித்து பேசுவார் என்றும் தெரிகிறது. 

    • பிரதான மேற்கூரை ஒழுகுவதாகவும் மழைநீர் உள்ளே வருகிறது என்றும் கோவிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திரா தெரிவித்துள்ளார்.
    • மழைநீர் வடியும் வண்ணம் கோவிலுக்கு முறையான வடிகால் கட்டுமானம் செய்யப்படவில்லை

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் மத்திய பாஜக அரசால் பிரமாண்டமான முறையில் ரூ.1800 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கிய கோவிலின் கட்டுமானப் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த வருடம் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி கோவிலில் ராமர் சிலை நிறுவப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

     

    இந்த விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்த அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர். கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டு தற்போது அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது தொடக்கத்திலிருந்தே இந்திய அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசியல் லாபத்துக்காகவே பாஜக ராமர் கோவிலை காட்டியுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றமாசாட்டி வருகின்றன.

    மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அளவுக்கு அதிகமான ஊடக வெளிச்சத்துடன் நடத்தப்பட்ட ராமர் கோவில் திறப்பு எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பதாக இருந்தது. இருப்பினும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அயோத்தி தொகுதியில் பாஜகவை படுதோல்வி அடையச் செய்து இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அப்பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறாத நிலையில் ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்ட ராமர் கோவிலும், விமான முனையமும் அந்த பகுதிக்கு புதிய பளபளப்பை கொடுத்தாலும் அங்குள்ள மக்களின் மனநிலை தேர்தலில் வெளிப்பட்டுள்ளதாகவே இந்த முடிவுகளை பார்க்கமுடிகிறது.

    இதற்கிடையில் அயோத்தி ராமர் கோவிலில் சமீப காலமாக நடந்து வரும் சமபவங்கள் நாட்டு மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. சமீபத்தில் ராமர் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தனது துப்பாக்கியை கையாளும்போது தவறுதலாக அது வெடித்ததால் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

    இந்நிலையில் தற்போது ரூ.1800கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் மழை காரணமாக கருவரை உள்ள பிரதான மேற்கூரை ஒழுகுவதாகவும் மழைநீர் உள்ளே வருகிறது என்றும் கோவிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திரா தெரிவித்துள்ளார். ராமர் சிலைக்கு முன் பூசாரிகள் அமர்ந்து பூஜை செய்யும் இடத்தில் நீர் ஒழுகுவதால் பூசாரிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

     

     

     

    மேலும் மழைநீர் வடியும் வண்ணம் கோவிலுக்கு முறையான பாதாள சாக்கடை கட்டுமானம் செய்யப்படவில்லை என்றும் அவர் குற்றமசாட்டியுள்ள்ளது மக்களிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கோவில் கட்டி முடிக்கப்படும் முன்னதாகவே அவசர அவசரமாக திறக்கப்பட்டதால் இன்னும் அங்கு கட்டுமனாப் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் ராமர் கோவில் கட்டுமானம் என்று பெயரில் பாஜக செய்துள்ள மிகப்பெரிய ஊழலையே காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டத்தொடங்கியுள்ளன. 

     

    • வயநாடு தொகுதியில் உள்ள மக்களுக்கு ராகுல் காந்தி நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை தற்போது எழுதியுள்ளார்.
    • நான் பிரச்சனைகளை எதிர்கொண்டபோது உங்களின் அளவற்ற அன்பு ஒன்றே என்னைப் பாதுகாத்தது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரசின் இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் அபார வெற்றிபெற்ற ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் ஒன்றை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வடக்கில் காங்கிரசை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதால் வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி.

    இதைத்தொடர்ந்து நடக்க உள்ள மறு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ராகுலின் தங்கை பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளார். ராகுல் காந்தி நம்பி வாக்களித்த வயநாடு மக்களை ஏமாற்றி விட்டார் என்ற குற்றச்சாட்ட்டை பாஜக தொடர்ந்து முனைவைத்து வருகிறது.

    இந்நிலையில் தான் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற வயநாடு தொகுதியில் உள்ள மக்களுக்கு ராகுல் காந்தி நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை தற்போது எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தங்களின் எல்லையற்ற அன்பையும் நிபந்தனைகளற்ற பாசத்தையும் நீங்கள் என்னிடத்தில் காட்டினீர்கள். அரசியல் கட்சி சார்பு, சமுதாயம், மதம், மொழி ஆகிய்வற்றைத் தாண்டி எனக்கு நீங்கள் எனக்கு ஆதரவளித்தீர்கள். நான் பிரச்சனைகளை எதிர்கொண்டபோது உங்களின் அளவற்ற அன்பு ஒன்றே என்னைப் பாதுகாத்தது.

     

    நீங்களே எனக்கான அடைக்கலம், எனது வீடு மற்றும் எனது குடும்பமும் நீங்கள் தான். என்னை ஒரு நொடி கூட நீங்கள் சந்தேகித்தாக நான் கருதவில்லை. இதுபோலவே மறு தேர்தலில் நிற்க உள்ள பிரியங்கா காந்திக்கு நீங்கள் எம்.பி வாய்ப்பு வழங்கினால் உங்களுக்காக சிறப்பாக செயல்படுவார் என்று உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். 



     


    • வடக்கில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய சூழல் உள்ளதால் ராகுல் இறுதியாக ரேபரேலியை தேர்ந்தெடுத்து வயநாட்டை விட்டுக்கொடுத்துள்ளார்.
    • வயநாடு எம்.பி பதவியிலிருந்து தான் விலகுவதாக ராகுல் காந்தி ராஜினாமா கடிதம் அளித்தார்.

    இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்த நிலையில் காங்கிரசின் இந்தியா கூட்டணி 235 இடங்களில் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளிலும் தனது வெற்றியை பதிவு செய்தார்.

     

    வழக்கமாக அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் இந்த முறை தாய் சோனியா காந்தியின் நட்சத்திரத் தொகுதியான ரேபரேலியில் முதல் முறையாக நின்ற நிலையில் தாய் சோனியா கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் வென்ற இரண்டு தொகுதிகளில் ஏதெனும் ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே நீடிக்க முடியும் என்ற சூழலில் ராகுல் வயநாட்டை தேர்ந்தெடுப்பாரா அல்லது ரேபரேலியைத் தேர்தெடுப்பாரா என்ற கேள்வி எழுந்தது.

     

    வடக்கில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய சூழல் உள்ளதால் ராகுல் இறுதியாக ரேபரேலியை தேர்ந்தெடுத்து வயநாட்டை விட்டுக்கொடுத்துள்ளார். அதன்படி வயநாடு எம்.பி பதவியிலிருந்து தான் விலகுவதாக ராகுல் காந்தி, அளித்த ராஜினாமா கடிதம் ஜூன் 18 அதிகாரபூர்வமாக ஏற்கப்பட்டுள்ளது என்று மக்களவைச் செயலகம் தனது செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது. இதற்கிடையில் வயநாடு தொகுதியில் நடக்கும் மறுதேர்தலில் ராகுலின் தங்கையும் காங்கிரஸ் முக்கியத் தலைவருமான பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

     

    • ராகுல் எடுத்த முடிவு நாளை மறுநாள் (ஜூன் 17) திங்கள்கிழமை தெரியவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
    • 2 தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்துள்ள நிலையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 235 இடங்களில் வென்று பாராளுன்றத்தில் தங்களது கைகளை ஓங்கச் செய்துள்ளது.

    காங்கிரஸ் சார்பில் கேரளாவின் வயநாடு, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரண்டில் ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே ராகுல் நீடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் எந்த தொகுயை அவர் தேர்ந்தெடுப்பார் என்ற கேள்வி தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதலே எழத் தொடங்கியது.

    இதற்கிடையில் கேரளா வந்த ராகுல் காந்தி, தான் எந்த தொகுதியில் தொடர் வேண்டும் என்று மக்களைக் கேட்டே முடிவெடுப்பேன் என்று தெரிவித்தார். வடக்கில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் காங்கிரஸூக்கு உள்ளதால் ராகுல் ரேபரேலியையே தேர்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

    அப்படி நடக்கும் பட்சத்தில் வயநாட்டில் மறுதேர்தல் நடக்கும்போது பிரியங்கா காந்தி அங்கு போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராகுல் எடுத்த முடிவு நாளை மறுநாள் (ஜூன் 17) திங்கள்கிழமை தெரியவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் பேசுகையில், ஜூன் 17 க்குள் இதுகுறித்து முடிவெடுப்பது அவசியம் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியாகி புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 99 சதேவீதம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
    • புதிய அமைச்சரவையில் இடப்பெற்றுள்ள 71 அமைச்சர்களில் 28 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மொத்தம் உள்ள 543 இடங்களில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. கடந்த ஜூன் 9 ஆம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார். அவருடன் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 71 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

    இந்த தேர்தலில் என்.டி.ஏ கூட்டணிக்கு வலுவான போட்டியை வழங்கிய காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 235 இடங்களைக் கைப்பற்றி பாராளுமன்றத்தில் வலுவான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளது.

    இந்த தேர்தலில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி சார்பில் நட்சத்திர வேட்பாளர்களும் கோடீஸ்வர வேட்ப்பாளர்களும் அதிகம் களமிறக்கப்பட்டனர். அந்த வகையில் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியாகி புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 99 சதேவீதம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதில் 6 பேருக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளது.

    ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, 71 அமைச்சர்களில் 70 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர், அவர்களின் சொத்துமதிப்பு சராசரியாக ரூ.107.94 கோடியாக உள்ளது. குறிப்பாக என்.டி.ஏ கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் சார்பில் ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சராகியுள்ள சந்திர சேகர பெம்மசானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5705.47 கோடியாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

     

     

    முன்னதாக புதிய அமைச்சரவையில் இடப்பெற்றுள்ள 71 அமைச்சர்களில் 28 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வயநாடு தொகுதியிலும், ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டு இடங்களிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
    • வயநாட்டை கைவிடும் தர்மசங்கடத்தைத் தவிர்க்க காங்கிரஸ் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 235 இடங்களைக் கைப்பற்றி பாஜகவின் என்.டி.ஏ கூட்டணிக்கு கொடுங்கனவாக மாறியுள்ளது. வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணியின் பிரதிநிதித்துவம் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கேரளாவின் வயநாடு தொகுதியிலும், உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டு இடங்களிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    இந்நிலையில் ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே ஒருவர் தொடரமுடியும் என்பதால் ராகுல் காந்தி எந்த தொகுதியை தியாகம் செய்வார் என்ற கேள்வி தேர்தல் முடிவுகள் வெளியான கடந்த ஜூன் 4 முதலே எழத் தொடங்கியது. இதற்கிடையில் கேரளா வந்த ராகுல் காந்தி, தான் எந்த தோகுதி எம்.பியாக தொடர வேண்டும் என்பதை மக்களைக் கேட்டே முடிவெடுப்பேன் என தெரிவித்திருந்தார்.

     

    வடக்கில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் காங்கிரசுக்கு உள்ளதால் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதி எம்.பி யாக தொடர முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. வயநாட்டை கைவிடும் தர்மசங்கடத்தைத் தவிர்க்க காங்கிரஸ் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.அதாவது வயநாட்டில் மறுதேர்தல் நடக்கும்பட்சத்தில் அங்கு ராகுலின் தங்கையும் காங்கிரஸின் முக்கியத் தலைவருமான பிரியங்கா காந்தி போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

     

    முன்னதாக வாரணாசி தொகுதியில் மோடி கடந்த தேர்தலை விட குறைத்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வென்றுள்ளதை விமர்சித்திருந்த ராகுல் காந்தி, வலுவான எதிர்ப்பு இல்லாமலேயே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்ற மோடி, வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால் நிச்சயம் தோற்றிருப்பார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ராகுல் காந்தி பிரச்சாரங்களில் கையில் வைத்துக்கொண்டு வளம் வந்த பாக்கெட் சைஸ் அரசியலமைப்புச் சட்டப் புத்தகம் அனைவரின் கவனத்தையும் ஈர்ததது.
    • ஒரு வருடத்தில் விற்கப்பட்ட அளவுக்கு கடந்த ஒரே மாதத்தில் விற்கப்பட்டுள்ளது.

    இந்திய மக்களவைத் தேர்தல் வழக்கம்போல பரபரப்புக்கும் ஆரவாரத்துக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாத வகையில் நடந்து முடிந்துள்ளது. வெற்றி தோல்வி என்பதையும் தாண்டி பிரச்சாரத்தின்போது மக்களை வசீகரிப்பதற்கு தேசிய அளவிலும் மாநில அளவிலும் மினி முதல் மெகா அரசியல் தலைவர்கள் தங்களால் என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் பிரச்சாரத்தின்போது செய்து வாக்குகளை அறுவடை செய்துள்ளனர். அந்த வகையில் இந்தியா கூட்டணி சார்பில் ராகுல் காந்தியும், என்.டி.ஏ கூட்டணி சார்பாக நரேந்திர மோடியும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக்கொண்டனர்.

    இந்த மொத்த தேர்தலிலும் ராகுல் காந்தி பேட்டிகளிலும் பிரச்சாரங்களிலும் கையில் வைத்துக்கொண்டு வளம் வந்த சிவப்பு அட்டையிடப்பட்ட பாக்கெட் சைஸ் அரசியலமைப்புச் சட்டப் புத்தகம் அனைவரின் கவனத்தையும் ஈர்ததது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலும் ராகுல் காந்தியின் மைக்கின் அருகே அந்த சட்டப் புத்தகம் இருந்தது.

     

    இந்நிலையில் ராகுல் காந்தியால் கவனம் பெற்ற இந்த சிறிய சைஸ் பாக்கெட் சட்டப்புத்தக எடிஷனை அதிகம் பேர் வாங்கிவருவதால் வேகமாக விற்றுத் தீர்ந்து வருகிறது. லக்னோவைச் சேர்ந்த EBC புத்தக நிறுவனம் தயாரித்த இந்த 624 பக்கங்கள் கொண்ட சட்டப்புத்தக 16 வது எடிஷன் கடந்த ஒரு வருடத்தில் விற்கப்பட்ட அளவுக்கு கடந்த ஒரே மாதத்தில் விற்பக்கட்டு மொத்தமாக தீர்ந்துள்ளது. கோபால் சங்கரநாராயணன் தொகுத்த இந்த புத்தகத்துக்கான முன்னுரையை முன்னாள் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

     

    • புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் 39 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது
    • பந்தி சஞ்சய் குமார், தாக்கூர், மஜூம்தார், சுரேஷ் கோபி ஜூசால் ஓரம் ஆகிய 5 அமைச்சர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட வழக்குகள் உள்ளது.

    இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. கடந்த ஜூன் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மோடி 3 வது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்றார். அவருடன் 72 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.

    இந்த 72 அமைச்சர்களில் 28 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இவர்களில் 19 பேர் மீது கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றம், கலவரத்தைத் தூண்டும் வெறுப்பு பேச்சு ஆகிய கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என ஜனநாயக சீர்திருத்த சங்கம் [ ADR ] அறிக்கை வெளியிட்டுள்ளது.

    துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாந்தனு தாக்கூர் மற்றும் தென் கிழக்கு பகுதிகளின் கல்வி - மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க எம்.பி சுகந்தா மஜூம்தார் ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி குற்றம் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    28 அமைச்சர்களில் பந்தி சஞ்சய் குமார், தாக்கூர், மஜூம்தார், சுரேஷ் கோபி ஜூசால் ஓரம் ஆகிய 5 அமைச்சர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட வழக்குகள் உள்ளது. 8 அமைச்சர்கள் மீது வெறுப்பு பேச்சு வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆக புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் 39 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

    ×