search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Odisha Assembly elections"

    • இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தேர்தல் முடிவுகள் ஜூன் 4 -ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

    தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.

    அப்போது, இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, ஒரே கட்டமாக 175 தொகுதிகள் கொண்ட ஆந்திரப் பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 13-ம் தேதி நடைபெறுகிறது.

    ஒடிசா மாநிலத்தில் 4 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. மே 13-ம் தேதி 28 தொகுதிகளும், மே 20-ம் தேதி 35 தொகுதிகளுக்கும், மே 25-ம் தேதி 42 தொகுதிகளுக்கும், ஜூன் 1-ம் தேதி மீதமுள்ள 42 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

    தேர்தல் முடிவுகள் ஜூன் 4 -ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    2019 ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும், ஒடிசா சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெறும் என அமித்சா நம்பிக்கை தெரிவித்துள்ளார். #BJP #AmitShah
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதாதளம் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    147 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. பாராளுமன்றத் தேர்தலோடு அங்கு சட்ட சபை தேர்தலும் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒடிசா மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் ஆர்வத்துடன் பா.ஜனதா இருக்கிறது. இதற்காக பா.ஜனதா மேலிடம் அங்கு அடிமட்டத்தில் இருந்து கட்சியை பலப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஒருநாள் பயணமாக ஒடிசா சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    2,400-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து அளவிலான உறுப்பினர்களை அவர் சந்தித்து ஆலோசனை செய்தார். கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து மூத்த நிர்வாகிகளிடம் அமித்ஷா விரிவாக விவரித்தார்.

    ஒடிசா மாநிலத்தில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறிய தாவது:-

    நவீன் பட்நாயக் அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டது. இந்துக்களை பாதுகாக்க இந்த அரசு தவறிவிட்டது.

    2019 ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும், ஒடிசா சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெறும். மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 120 இடங்களில் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார். #BJP #AmitShah
    ×