search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "election commissioner"

    • இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தேர்தல் முடிவுகள் ஜூன் 4 -ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

    தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.

    அப்போது, இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, ஒரே கட்டமாக 175 தொகுதிகள் கொண்ட ஆந்திரப் பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 13-ம் தேதி நடைபெறுகிறது.

    ஒடிசா மாநிலத்தில் 4 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. மே 13-ம் தேதி 28 தொகுதிகளும், மே 20-ம் தேதி 35 தொகுதிகளுக்கும், மே 25-ம் தேதி 42 தொகுதிகளுக்கும், ஜூன் 1-ம் தேதி மீதமுள்ள 42 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

    தேர்தல் முடிவுகள் ஜூன் 4 -ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இரண்டு தேர்தல் ஆணையர் பதவியிடங்கள் காலியாக உள்ளன.
    • சுதந்திர நிறுவனங்களின் திட்டமிட்ட அழிவை நாம் நிறுத்தாவிட்டால் நமது ஜனநாயக சர்வாதிகாரத்தால் அபகரிக்கப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர் பார்த்த நிலையில் தேர்தல் கமிஷனர் அருண் கோயல் நேற்று ராஜினாமா செய்தார். 2027-ம் ஆண்டு டிசம்பரில் பதவி காலம் நிறைவடைய உள்ள நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார்.

    ஏற்கனவே கடந்த பிப்ரவரியில் மற்றொரு தேர்தல் கமிஷனராக இருந்த அனூப் பாண்டே ஓய்வு பெற்றார். இதையடுத்து 3 பேர் கொண்ட தேர்தல் ஆணைய குழுவில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் மட்டுமே பதவியில் உள்ளார். இரண்டு தேர்தல் ஆணையர் பதவியிடங்கள் காலியாக உள்ளன.

    இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மத்திய அரசை கேள்வி எழுப்பி சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    தேர்தல் ஆணையமா? அல்லது தேர்தல் புறக்கணிப்பா? இன்னும் சில நாட்களில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்தியாவில் தற்போது ஒரே ஒரு தேர்தல் கமிஷனர் மட்டுமே இருப்பது ஏன்?

    நான் முன்பு கூறியது போல், சுதந்திர நிறுவனங்களின் திட்டமிட்ட அழிவை நாம் நிறுத்தாவிட்டால் நமது ஜனநாயக சர்வாதிகாரத்தால் அபகரிக்கப்படும். வீழ்ச்சி அடைந்த கடைசி அரசியலமைப்பு நிறுவனமாக இந்திய தேர்தல் ஆணையம் தற்போது இருக்கும்.

    மோடி அரசு பதில் அளிக்க வேண்டும்

    தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடு எடுக்கும் புதிய நடைமுறை தற்போது ஆளும்கட்சிக்கும், பிரத மருக்கும் அனைத்து அதி காரங்களை வழங்கியுள்ள நிலையில் 23-ந் தேதி பதவி காலம் முடிந்த பிறகும் புதிய தேர்தல் கமிஷனரை நியமிக்காதது ஏன்?

    இந்த கேள்விகளுக்கு மோடி அரசு பதில் சொல்லி நியாயமான விளக்கத்தை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

    • சட்ட திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
    • அதிகார பிரிவினைக்கு எதிரானது என்று காங்கிரஸ் சார்பில் ஆஜரான வக்கீல் விகாஸ் சிங் தெரிவித்தார்.

    தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனத்தில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. புதிய சட்டத்தின்படி தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் பிரதமர், எதிர்கட்சி தலைவர், பிரதமரின் பரிந்துரைக்கப்பட்ட மத்திய மந்திரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியை தவிர்த்து அவருக்கு பதிலாக மத்திய மந்திரி குழுவில் இடம்பெற்றார்.

    தலைமை தேர்தல் கமிஷனர் நியமனம் செய்யும் குழுவில் இருந்து தலைமை நீதிபதி தவிர்க்கப்பட்ட இந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது. இந்த சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இது அதிகார பிரிவினைக்கு எதிரானது என்று காங்கிரஸ் சார்பில் ஆஜரான வக்கீல் விகாஸ் சிங் தெரிவித்தார். ஆனால் இதை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது. இந்த புதிய சட்டத்தின் செயல்பாட்டுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

    • மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சக செயலாளராக பதவி வகித்து வந்தார்.
    • அண்மையில் ஓய்வு பெற்ற நிலையில் தேர்தல் ஆணையராக நியமனம்.

    குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலை தொடர்ந்து கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலும் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயலை மத்திய சட்ட அமைச்சகம் நியமனம் செய்துள்ளது. அவரது நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். மேலும் மற்றொரு தேர்தல் ஆணையராக அனுப் சந்திர பாண்டே பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் புதிய தேர்தல்ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.1985 பஞ்சாப் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆன, கோயல், மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சக செயலாளராக பதவி வகித்து வந்தார். விருப்ப ஓய்வின் கீழ் அண்மையில் அவர் ஓய்வு பெற்றார்.

    இந்தியாவின் முக்கிய அமைப்புகளின் புனிதத்தை அழிக்கிற பணியை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டுள்ளார் என காங். கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    தேர்தல் கமிஷனில் எழுந்துள்ள பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அந்த கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று கூறுகையில், “தேர்தல் கமிஷன் விதிகள் ஒருமித்த முடிவுக்குத்தான் முன்னுரிமை தெரிவிக்கின்றன. ஆனால் ஒருமித்த முடிவு இல்லை என்கிறபோது பெரும்பான்மை முடிவை ஏற்கச்சொல்கிறது. அரசியல் சாசன அமைப்பு என்கிற வகையில், சிறுபான்மை முடிவும் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் மோடியையும், அமித் ஷாவையும் பாதுகாக்க இது மிதிபடுகிறது” என்று குறிப்பிட்டார்.

    மேலும், “பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவும் தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறியதாக காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது. ஆனால் அவை குப்பைத்தொட்டியில் போடப்பட்டு விட்டன. இந்தியாவின் முக்கிய அமைப்புகளின் புனிதத்தை அழிக்கிற பணியை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டுள்ளார்” எனவும் கூறினார்.
    தேர்தல் ஆணையர்களுக்குள் கடந்த காலங்களிலும் கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளதால் அசோக் லவாசா தெரிவித்த கருத்து சகஜமானதுதான் என தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா குறிப்பிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் புகாரில்  தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்  அசோக் லவாசா இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரியவந்தது.

    எனது கருத்தை அரோரா ஏற்காததால் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் கடந்த 4-ம் தேதி ஒரு கடிதம் எழுதி இருந்தார்.



    அதில் ‘‘பிரதமர் மோடி, அமித்ஷா தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளனர். பிரதமர் மோடி அமித் ஷாவுக்கு எதிரான 6 தேர்தல் விதிமுறை மீறல்களில் எனது கருத்து ஏற்கப்படவில்லை.

    அமித் ஷா மற்றும் பிரதமருக்கு எதிரான 11 நடத்தை விதிமீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு எனக்கு ஏற்புடையதல்ல. எனது கருத்துக்களை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏற்றுக்கொள்ளவில்லை. எனது கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமின்றி, எனது எதிர்ப்புகளும் பதிவு செய்யப்படாததால் இனிவரும் தேர்தல் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை’’ என்று அசோக் லவாசா குறிப்பிட்டிருந்தார்.

    கடிதத்தின் நகலுடன் இந்த தகவல் ஊடகங்களில் வெளியான பின்னர் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று பிற்பகல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 14-ம் தேதி நடைபெற்ற ஆணையத்தின் கூட்டத்தில் 13 விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்கு ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. அவற்றில் ஒன்று நடத்தை விதிமீறல் தொடர்பானது.

    தேர்தல் கமிஷனில் ஆணையாளர்களாக பதவி வகிக்கும் மூன்று பேருமே மற்றவர்களின் ‘குளோனிங்’ (நகல்) ஆக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. இதற்கு முன்னரும் பல முறை சில விவகாரங்களில் ஆணையாளர்களுக்குள் மாறுபட்ட கருத்துகள் இருந்துள்ளன. இதுபோன்ற முரண்பாடுகள் இருக்கக்கூடியது, இருக்க வேண்டியதும்கூட. ஆனால், அவை அனைத்துமே தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பாப்பிரெட்டிபட்டி, பூந்தமல்லி, கடலூர் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமி‌ஷனர் பரிந்துரை செய்துள்ளார். #Electioncommissioner

    சென்னை:

    தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிபட்டி உள்பட 8 வாக்குச்சாவடிகளில் ஓட்டு போட வந்தவர்களுக்கு கைவிரலில் ‘மை’ வைத்த பிறகு ஓட்டு போட விடாமல் விரட்டி விட்டு அங்குள்ளவர்களே கள்ள ஓட்டு போட்டனர். இது தொடர்பாக வீடியோ ஆதாரங்கள் சமூக வலை தளங்களில் வெளி வந்தது.

    இதேபோல் பூந்தமல்லி தொகுதியிலும் ஒரு வாக்குச் சாவடியிலும், கடலூரில் ஒரு வாக்கு சாவடியிலும் கள்ள ஓட்டு போட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், பொது பார்வையாளர்களும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு நேற்று அறிக்கை அனுப்பி இருந்தனர்.


    இந்த 10 தொகுதிகளிலும் முறைகேடு நடந்துள்ளதால் மறு வாக்குபதிவு நடத்த வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.

    இந்த அறிக்கையை ஆதாரமாக வைத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மத்திய தேர்தல் கமி‌ஷனுக்கு இன்று பரிந்துரை செய்துள்ளார். அதில் 10 தொகுதியிலும் மறு வாக்குப்பதிவு நடத்த வலியுறுத்தி உள்ளார்.

    இதன்படி நாளை அல்லது நாளை மறுநாள் இந்த 10 வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என எதிபார்க்கப்படுகிறது. #Electioncommissioner

    வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு விட்டால் அந்த 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்தி விடலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #ElectionCommissioner #Byelection

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 21 இடங்கள் காலி இடங்களாக உள்ளன.

    திருவாரூர், திருப்பரங்குன்றம், பூந்தமல்லி, ஆம்பூர், ஆண்டிப்பட்டி, ஓட்டப்பிடாரம், பெரம்பூர், பாப்பி ரெட்டிபட்டி, பெரியகுளம், திருப்போரூர், அரூர், சாத்தூர், அரவக்குறிச்சி, சோளிங்கர், நிலக்கோட்டை, பரமக்குடி, தஞ்சாவூர், குடியாத்தம், மானாமதுரை, விளாத்திக்குளம், ஓசூர் ஆகியவையே அந்த 21 தொகுதிகளாகும்.

    இந்த 21 தொகுதிகளுக்கும் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 18-ந்தேதி தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் போது 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் தள்ளி வைத்துள்ளது. தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்த 3 தொகுதிகளிலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

    3 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருப்பதற்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதில் உள்நோக்கம் இருப்பதாக சென்னையில் நேற்று நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்த கூடாது என்று எந்த கோர்ட்டும் தேர்தல் ஆணையத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. எனவே 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தாதது மக்கள் விரோத நடவடிக்கை என்று தி.மு.க. குற்றம்சாட்டி உள்ளது. தேர்தல் ஆணையம் இதில் உரிய முடிவு எடுக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று தி.மு.க. எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதற்கிடையே சென்னையில் நேற்று மாலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களை சுமூகமாக நடத்துவது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. பிரதிநிதிகள் 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் 3 தொகுதி இடைத்தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.

     


    அதற்கு பதில் அளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, “3 தொகுதிகளின் தேர்தல் பற்றி கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால்தான் இடைத்தேர்தலை நடத்த இயலவில்லை. அந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு விட்டால் அந்த 3 தொகுதிகளிலும் இடைத் தேர்தலை நடத்தி விடலாம்” என்றார்.

    இதைத் தொடர்ந்து அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சரவணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் ஏ.கே. போஸ் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து தன்னை எம்.எல்.ஏ. ஆக அறிவிக்க கோரி சரவணன் புதிய மனுதாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. இந்த வழக்கு காரணமாகவே திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலை நடத்த இயலாத நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்ததும், இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக சரவணன் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நேற்று சரவணன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

    இதுபோல அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளின் தேர்தல் வழக்குகளையும் திரும்பப் பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. #ElectionCommissioner #Byelection

    ×