search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Candidates"

    • தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. பங்கேற்று தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை வழங்க உள்ளார்.
    • கூட்டத்தில் வேட்பாளர் அல்லது அவரது முகவர், மாவட்ட கழக செயலாளர்கள், வழக்கறிஞர் அணி அமைப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களாக போட்டியிடுபவர்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை வழங்க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நாளை காலை 11 மணியளவில் (22-ந்தேதி) காணொலி காட்சி வாயிலாக கூட்டம் நடத்தப்படுகிறது.

    இதில் தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. பங்கேற்று தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை வழங்க உள்ளார்.

    கூட்டத்தில் வேட்பாளர் அல்லது அவரது முகவர், மாவட்ட கழக செயலாளர்கள், வழக்கறிஞர் அணி அமைப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்றது.
    • 35 தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் நடத்தப்பட்டது.

    திமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று காலை தொடங்கியது.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு அளித்துள்ளவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.

    அதன்படி, மார்ச் 10ம் தேதி காலை 9 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்றது.

    நேர்காணலின்போது, தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    இந்நிலையில், 35 தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் நடத்தப்பட்டது.

    நாமக்கல், விழுப்புரம், சிதம்பரம், ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி தொகுதிகளுக்கு மட்டும் நேர்காணல் நடைபெறவில்லை.

    • தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிய உள்ளார்.
    • பரிந்துரையாளர்கள், ஆதரவாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிப்பு.

    திமுக வேட்பாளர்கள் நேர்காணல் வரும் மார்ச் 10ம் தேதி முதல் தொடங்குவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு அளித்துள்ளவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் செய்ய உள்ளா்.

    அதன்படி, மார்ச் 10ம் தேதி காலை 9 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெறும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    மேலும், நேர்காணலின்போது, தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிய உள்ளார்.

    நேர்காணலில், அந்தந்த நாடாளுமன்ற தொகுதி மாவட்ட செயலாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும், பரிந்துரையாளர்கள், ஆதரவாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

    • வேட்பாளர்களை தனித்தனியாக அழைத்து வெற்றி வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.
    • இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    வெலிங்டன் கண்டோன்மென்ட் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள தி.மு.க.வினரிடம் மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றது. நேர்காணலின்போது, ஒவ்வொரு வேட்பாளர்களையும் தனித்தனியாக அழைத்து வெற்றி வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தனர். நேர்காணல் நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் ரவிகுமார், தமிழ்செல்வன், லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்க்கான், குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சதகத்துல்லா, செல்வம், ஷீலாகேத்ரின், முரசொலி வெங்கடேஷ், நகரிய செயலாளர் மார்ட்டின், ஜெகதளா பேரூர் செல்லாளர் சஞ்சீவ்குமார், உலிக்கல் பேரூர் செயலாளர் ரமேஷ்குமார், குன்னூர் ஒன்றியத்திற்கு நிர்வாகிகள் ராமசாமி, மூர்த்தி, தவமணி, ஜோசப், மகேஸ்வரி, கருணாநிதி, வினோத் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய நிலவரப்படி சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர்.
    சென்னை:

    சென்னையில் தி.மு.க. வேட்பாளர்கள் 3 பேரும் முன்னிலையில் உள்ளனர்.

    வடசென்னையில் டாக்டர் கலாநிதி வீராசாமி முன்னிலையில் உள்ளார். பா.ம.க. வேட்பாளர் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே இருந்து வந்தார்.

    மத்திய சென்னை தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் சாம்பால் குறைந்த ஓட்டுகள் வாங்கி பின் தங்கினார்.

    தென்சென்னை தொகுதியில் ஆரம்பத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் முன்னிலை வகித்தார். பின்னர் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவரை முந்தினார்.

    தற்போதைய நிலவரப்படி சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர்.
    தமிழகத்தில் மே 19ம் தேதி நடைபெற உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். #DMKCandidates #Assemblybypoll
    சென்னை:

    தமிழகத்தில் காலியாக இருந்த 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளில் மட்டும், பாராளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 18ம்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தேர்தல் வழக்குகள் காரணமாக திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் (தனி) ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. பின்னர், கோவை மாவட்டம் சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் காலமானதால், அந்த தொகுதியும் காலியானது.

    அதன்பின்னர், தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்ததையடுத்து திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சமீபத்தில் காலியான சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கும் மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. எனவே, இந்த 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன.


    இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் 4 தொகுதிகளுக்கான வேட்பார்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். சூலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஒட்டப்பிடாரம் தொகுதியில் எம்.சி. சண்முகையா, திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சமீபத்தில் தான் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். டாக்டர் சரவணன் ஏற்கனவே திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. #DMKCandidates #Assemblybypoll
    தி.மு.க. வேட்பாளர் பட்டியலை வருகிற 17-ந்தேதி மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்றும் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #LSPolls #DMK #DMKCandidates
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 8 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

    காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், ம.தி.மு.க., ஐ.ஜே.கே., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 20 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.

    இந்த கூட்டணியில் எந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்ற விபரம் நேற்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் பிரசாரம் காரணமாக நேற்று தொகுதி பட்டியல் வெளியாகவில்லை.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற கட்சிகள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து கையெழுத்திட்டு உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று அறிவாலயம் சென்று தொகுதி பங்கீட்டில் கையெழுத்திடுகிறார்.



    அதன் பிறகு கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்ற பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

    இந்த தேர்தலில் தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுவதால் அதற்கான வேட்பாளர்களையும் நேர்காணல் மூலம் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுத்து வைத்துள்ளார்.

    தி.மு.க. வேட்பாளர் பட்டியலை வருகிற 17-ந்தேதி (ஞாயிறு) மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த தேர்தலில் தி.மு.க.வில் 10-க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.

    தி.மு.க. வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    வடசென்னை- டாக்டர் கலாநிதி (ஆற்காடு வீராசாமி மகன்)

    மத்திய சென்னை- தயாநிதிமாறன்

    தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்

    தூத்துக்குடி- கனிமொழி

    ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு

    அரக்கோணம்- ஜெகத்ரட்சகன்

    காஞ்சிபுரம்- மூர்த்தி

    கள்ளக்குறிச்சி - பொன்.கவுதம சிகாமணி (பொன்முடி மகன்)

    வேலூர்- கதிர் ஆனந்த் (துரைமுருகன் மகன்)

    கடலூர் - கதிரவன் (எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மகன்). #LSPolls #DMK #DMKCandidates
    ×