search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP Executive"

    • திடீரென துரைராமலிங்கம் தனது இடது கை ஆள்காட்டி விரலை துண்டித்துக் கொண்டார்.
    • உடனடியாக அவரை மீட்டு கோவை கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    கோவை:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆண்டாள் முள்ளிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் துரை ராமலிங்கம் (வயது 55). இவர் கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா துணை தலைவராக பதவி வகித்து வருகிறார்.

    கோவை தொகுதியில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் கடந்த 10 நாட்களாக கோவையில் முகாமிட்டு அவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில் நேற்று ஹோப் கல்லூரி அருகே திடீரென துரைராமலிங்கம் தனது இடது கை ஆள்காட்டி விரலை துண்டித்துக் கொண்டார். இதை பார்த்து அருகில் நின்ற பா.ஜ.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு கோவை கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கைவிரலை துண்டித்தது குறித்து துரைராமலிங்கம் கூறியதாவது:-

    நான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதிய ஜனதா கட்சியில் உள்ளேன். 10 நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்து அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டி பிரசாரம் செய்தேன். நேற்று ஹோப் கல்லூரி பகுதியில் பிரசாரம் செய்தபோது அருகில் நின்ற சிலர் அண்ணாமலை தோல்வியை சந்திப்பார் என்று கூறினர். இது எனக்கு மிகுந்த மனவேதனையை தந்தது. இதனால் அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எனது விரலை வெட்டிக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாஜக நிர்வாகி வெங்கடேஷ் மீது 59 குற்ற வழக்குகள் இருப்பதுடன் அவரது பெயர் சரித்திர குற்றவாளிகள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளது
    • வெங்கடேஷுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தால் அது தவறான முன் உதாரணமாக ஆகிவிடும்

    பா.ஜ.க பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷ் தன்னுடைய உயிருக்கும் உடமைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், "தான் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வருகிறேன். கல்வி சார்ந்த அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். தன்னுடைய உறவினர் ஒருவரை முத்துசரவணன் என்பவர் படுகொலை செய்தார். இந்த வழக்கில் கடந்த 2023 ம் ஆண்டு முத்துச்சரவணை காவல்துறை என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த என்கவுண்டருக்கு தான்தான் காரணம் என சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பரவியுள்ளன. இதனால், தனக்கு கொலை மிரட்டல் வருவதால், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

    அந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணையில், வெங்கடேஷ் செம்மரக்கடத்தல், துப்பாக்கி வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது என பல சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர் என்பதால் இவருக்கு போலீஸ் பாதுகாப்பு முடியாது" என அரசு தரப்பில் இருந்து வழக்கறிஞர் வாதம் முன்வைத்தார்.

    இதனையடுத்து பேசிய நீதிபதி, பாஜக நிர்வாகி வெங்கடேஷ் மீது 59 குற்ற வழக்குகள் இருப்பதுடன் அவரது பெயர் சரித்திர குற்றவாளிகள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளது. ஆகவே பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் வெங்கடேசுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என தெரிவித்தார்.

    வெங்கடேஷுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தால் அது தவறான முன் உதாரணமாக ஆகிவிடும். குற்றச் செயலில் ஈடுபடும் பலரும் போலீஸ் பாதுகாப்பு கேட்கும் சூழல் உருவாகும். அது நீதித்துறையின் மீது நம்பிக்கை இழக்க வைக்கும் என்று கூறி பா.ஜ.க பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷின் மனுவை அவர் தள்ளுபடி செய்தார். 

    • பிரதமர் மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை முழுவதும் தொண்டர்கள் சூழ்ந்தனர்.
    • அப்போது, அஸ்வந்த் பிஜய் என்ற பாஜக தொண்டர் மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.

    மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தியா முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும், நிறைவு பெற்ற திட்டங்களையும் புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.

    அந்தவகையில் சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த பிரதமர் மோடி கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள 500 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய ஈணுலை திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து உரையாற்றினார்.

    இத்தகு முன்னதாக, பிரதமர் மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை முழுவதும் தொண்டர்கள் சூழ்ந்தனர். அப்போது, அஸ்வந்த் பிஜய் என்ற பாஜக நிர்வாகி மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.

    இது தொடர்பாக மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில்,

    "சென்னை விமான நிலையத்தில், நமது கட்சி நிர்வாகிகளில் ஒருவரான அஸ்வந்த் பிஜய் அவர்கள் என்னை வரவேற்க காத்திருந்தார். சற்றுமுன் தான், அவரது மனைவி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார் என்றும், ஆனால் அவர் இன்னும் அவர்களை சந்திக்கவில்லை என்றும் என்னிடம் கூறினார். இந்த நேரத்தில் அவர் இங்கு வந்திருக்கக் கூடாது என்றும், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆசிகளையும் தெரிவித்தேன்.

    நமது கட்சியில் கடமை மற்றும் அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது கட்சியினரின் இத்தகைய அன்பையும் பாசத்தையும் பார்க்கும்போது நான் உணர்ச்சிவசப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த பதிவை அடுத்து யார் இந்த அஸ்வந்த் பிஜய் என பாஜகவினர் மட்டுமில்லாமல் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவை பூர்விகமாக கொண்ட அஸ்வந்த் பிஜய் தனியார் விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார் என தெரியவந்தது. மேலும் இவர் சென்னையில் வேளச்சேரியில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிரதமர் மோடியிடம் கூறியது போல் அஸ்வந்த் பிஜய்க்கு குழந்தை எதுவும் பிறக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பிரதமர் மோடியிடம் நன்மதிப்பை பெறவேண்டும் என்பதற்காக அவரிடம் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அஸ்வந்த் பிஜய் பொய் சொல்லியுள்ளார். பிரதமரிடம் சொன்ன தகவல் யாருக்கும் தெரியாது என நினைத்திருந்த நிலையில், பிரதமர் மோடியே இந்த நிகழ்வை தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவாக வெளியிட்டதால் அஸ்வந்த் பிஜய் மாட்டிக்கொண்டுள்ளார்.

    இதனையடுத்து தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு அவர் தலைமறைவாகியுள்ளார். இதனை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். அதே சமயம் பிரதமரிடம் பொய் சொன்ன அஸ்வந்த் பிஜய் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    • நகர போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
    • வாரம் 2 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி, கனகசபை மீது பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாகவும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்தும் சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாக பாஜக மாநிலச் செயலர் எஸ்.ஜி.சூர்யா, அந்த கட்சி நிர்வாகி கவுசிக் சுப்ரமணியம் ஆகியோர் மீது சிதம்பரம் கிராம நிர்வாக அலுவலர் ஷேக் சிராஜூதின் அளித்த புகாரின்பேரில், நகர போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற மேற்கண்ட இருவரும் சிதம்பரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண் 2-ல் ஆகஸ்ட் 9-ம் தேதி நீதிபதி சக்திவேல் முன்பு ஆஜராகினர். அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா வாரம் 2 நாட்கள் கையெழுத்திட வேண்டும். என உத்தரவு பிறப்பித்ததை அடுத்து சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் முன்னிலையில் நிபந்தனை ஜாமீன் கையேட்டில் எஸ்.ஜி.சூர்யா கையெழு த்திட்டார். அவருடன் பாஜக முன்னாள் ராணுவவீரப் பிரிவு செயலாளர் பால சுப்பிரமணியன், விவசாயி அணி தலைவர் ரகுபதி உள்ளிட்டோர் உடன் வந்தனர்.

    • சந்திரலேகாவிற்கும், முத்துசெல்விக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.
    • இந்நிலையில் நேற்று பூலம் தொடக்கப்பள்ளியில் நடந்த பெற்றோர்-ஆசிரியர் ஆலோசனை கூட்டத்தில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள பூலம், மேலத்தெருவை சேர்ந்தவர் ஊய்க்காட்டான் மனைவி சந்திரலேகா (வயது37). இவர் நாங்குநேரி மேற்கு ஒன்றிய பா.ஜனதா துணை தலைவியாகவும், திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் மருந்தாளுனராகவும் உள்ளார். அதே ஊரை சேர்ந்தவர் முத்துராஜ் மனைவி முத்து செல்வி (50). இவர் பூலம் பஞ்சாயத்து தலைவியாக உள்ளார்.

    தாக்குதல்

    சந்திரலேகாவிற்கும், முத்துசெல்விக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று பூலம் தொடக்கப் பள்ளியில் நடந்த பெற்றோர்-ஆசிரியர் ஆலோசனை கூட்டத்தில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து முத்து செல்வியும், அவரது கணவர் முத்துராஜும் (55) சேர்ந்து, சந்திரலேகாவை தாக்கிய தாகவும், இதுபோல சந்திர லேகா, முத்துராஜை தாக்கிய தாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து இருவரும் தனித்தனியாக மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தனர். நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜு, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் இது தொடர்பாக சந்திரலேகா, முத்துசெல்வி, அவரது கணவர் முத்துராஜ் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே சந்திர லேகாவை தாக்கிய பஞ்சாயத்து தலைவி முத்து செல்வி மற்றும் அவரது கணவர் முத்துராஜை கைது செய்ய கோரி, நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தலைமையில் பா.ஜ.க.வினர் மூன்றடைப்பு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

    • இளையான்குடியில் பா.ஜ.க. நிர்வாகி கார் உடைக்கப்பட்டது.
    • டீக்கடை முன்பு காரை விட்டு இறங்கியபோது 50-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வேலூர் இப்ராஹிம் கார் மற்றும் அவருடன் வந்த கார்களை தாக்கி கண்ணாடியை உடைத்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பா.ஜ.க. மாநில சிறுபான்மை பிரிவு செயலாளராக இருப்பவர் வேலூர் இப்ராஹிம். இவர் நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளையான்குடி வழியாக ராமநாதபுரம் வந்தார்.

    அப்போது இளை யான்குடி கண்மாயக்கரை பகுதியில் அவருக்கு நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர். அதன்பின் ஒரு டீக்கடை முன்பு காரை விட்டு இறங்கியபோது 50-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வேலூர் இப்ராஹிம் கார் மற்றும் அவருடன் வந்த கார்களை தாக்கி கண்ணாடியை உடைத்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவத்திற்கு இடத்துக்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் இதுபற்றி சாலை கிராமம் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் போலீசார் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பின்னர் வேலூர் இப்ராஹிம் சாலைகிராமத்தில் இருந்து போலீசார் பாதுகாப்புடன் ராமநாதபுரம் சென்றார்.

    ×