என் மலர்
நீங்கள் தேடியது "பாஜக நிர்வாகி கொலை"
- வாரச்சந்தை அருகே உள்ள நகராட்சி கட்டிடத்தில் மெக்கானிக் கடை நடத்தி வந்தார்.
- தலைமறைவான ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை நகர் காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 51). மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான இவர் அங்குள்ள வாரச்சந்தை அருகே உள்ள நகராட்சி கட்டிடத்தில் மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். சதீஷ் பா.ஜ.க. கட்சியின் நகர் வர்த்தகப்பிரிவு தலைவராகவும் இருந்தார்.
இவர் வேலை முடித்து விட்டு தினமும் நண்பர்களை சந்தித்து மது அருந்துவது வழக்கம். அதன்படி நேற்று இரவு வேலை முடித்துவிட்டு சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் மெக்கானிக் கடையில் சந்தித்து மது அருந்தினர். அதே பகுதியில் தாரை தப்பட்டை குழுவினர் சிலர் தங்கியிருந்தனர். அவர்களும் மது அருந்தினர் போதை தலைக்கேறிய நிலையில் அந்த குழுவை சேர்ந்த சிலர் சதீஷ் தரப்பை சேர்ந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இது கைகலப்பாக மாறிய நிலையில் ஒருவரையொருவர் சரமாரியமாக தாக்கி கொண்டனர். இதில் சதீஷின் நண்பர் மணிபாரதி என்பவர் படுகாயமடைந்தார். அவரை அந்த கும்பல் தாக்கியபோது சதீஷ் தடுக்க முற்பட்டார். உடனே எதிர்தரப்பினர் அவரை தாக்கி கீழே தள்ளினர். இதில் தவறி விழுந்ததில் அவர் மயங்கினார்.
மோதல் குறித்து தகவலறிந்த சிவகங்கை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்திருந்த மணி பாரதி மற்றும் சதீஷை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்தில் சதீஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மணிபாரதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.
சிவகங்கையில் பா.ஜ.க. நிர்வாகி அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அந்த கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- முன்விரோதம் காரணமாக ஜெகன் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
- ஜெகன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரது உறவினர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர்.
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள மூளிக்குளம் விரல் மீண்ட நாயனார் தெருவை சேர்ந்தவர் செல்லையா. இவருடைய மகன் ஜெகன் (வயது 34). இவர் பா.ஜனதா மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளராக இருந்தார்.
இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் பாளையில் இருந்து மூளிக்குளத்திற்கு வந்தார். பின்னர் அங்குள்ள சுடலை மாடசாமி கோவில் அருகில் உள்ள வாய்க்கால் பாலத்துக்கு சென்ற ஜெகன் தனது நண்பர்களிடம் பேசிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கும்பல் ஜெகனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப், பாளை இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட ஜெகன் மீது நெல்லை மாநகர பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளதால் முன்விரோதம் காரணமாக ஜெகன் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
தொடர்ந்து இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் தலைமையில் தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கொலை கும்பலை தேடியது. அதன் அடிப்படையில் 6 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட ஜெகன் பா.ஜனதாவில் நிர்வாகியாக இருப்பதால் சமீப காலமாக தன்னை ஒரு பிரமுகராக வெளிக்காட்டி கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இது எதிர்தரப்பினருக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கடந்த 2002-ம் ஆண்டு அதே பகுதியில் நடந்த கொலை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூளிக்குளத்தில் நடைபெற்ற கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் மோதல் உள்ளிட்ட காரணங்களால் அவர் முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்று பிடிபட்ட 6 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெகன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரது உறவினர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். தகவல் அறிந்து பா.ஜனதா நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் நிர்வாகிகளும் அங்கு வந்தனர். கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் அரசியல் பிரமுகர் ஒருவரின் தூண்டுதலின்பேரில் தான் இந்த கொலை நடந்துள்ளதாகவும், அவரையும் இந்த வழக்கில் சேர்க்கவேண்டும் எனவும் ஜெகன் தரப்பினர் போலீசாரிடம் கூறினர். அதுவரை உடலை வாங்க போவதில்லை என்று போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.
- முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தி.மு.க பிரமுகர் பிரபு தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
- பிரபுவுக்கு சொந்தமான பால் பண்ணை உள்ளிட்டவற்றை ஜெகனின் உறவினர்கள் அடித்து நொறுக்கினர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாளை மூளிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 34). இவர் நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி பொதுச்செயலாளராக இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு மூளிக்குளத்தில் இருந்து வெள்ளக்கோவில் செல்லும் ரோட்டில் நின்று கொண்டிருந்த ஜெகனை 6 பேர் கும்பல் சுற்றி வளைத்து வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்றது.
இது தொடர்பாக பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாளை பகுதியை சேர்ந்த அனீஸ் (28 ), அஜித்குமார்( 24), மூளிக்குளத்தை சேர்ந்த சந்துரு( 22), பாஸ்கர்( 22 ), ராஜா குடியிருப்பைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஸ்வரன்( 27), வி.எம். சத்திரத்தை சேர்ந்த வள்ளிக்கண்ணு (21)ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைதான 6 பேரும் வெவ்வேறு காரணங்களை வாக்குமூலமாக போலீசாரிடம் கூறி வருகின்றனர். இதில் கைதான முதல் குற்றவாளியான விக்கி கூறுகையில், என்னிடம் ஜெகன் அடிக்கடி தொந்தரவு செய்யும் விதமாக பேசி வந்தார். இதனால் கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார். அனீஸ் கூறுகையில், என்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கு காரணமாக ஜெகன் இருந்து வந்தார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் அவரை கொலை செய்தேன் என கூறி உள்ளார்.
மற்ற 4 பேரும் கூறுகையில், எங்கள் ஊரில் யார் பெரியவர் என்பது தொடர்பாக எங்களுக்குள் பிரச்சனை நடந்து வந்தது. மேலும் டாஸ்மாக் பார் தொடர்பாக பிரபுவிடம் அடிக்கடி ஜெகன் இடைஞ்சல் செய்யும் விதமாக நடந்து வந்தார். மேலும் ஜெகன் வேகமாக வளர்ந்து வருவது பிரபுவுக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக அவருடன் சேர்ந்து கொலை செய்தோம் என்றனர். இவ்வாறாக கைதான 6 பேரும் முரண்பாடான தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த கொலை சம்பவத்துக்கு தூண்டுதலாக செயல்பட்ட தி.மு.க. பிரமுகர் பிரபுவை பிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர்கள் முருகன், காசி பாண்டியன், வாசிவம் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தி.மு.க பிரமுகர் பிரபு தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்த பின்னரே கொலைக்கான முழு காரணமும் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பிரபுவை கைது செய்யும் வரை உடலை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கூறி ஜெகனின் உறவினர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பிரபுவுக்கு சொந்தமான பால் பண்ணை உள்ளிட்டவற்றை ஜெகனின் உறவினர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- கடந்த 30-ந்தேதி மூளிக்குளம் பகுதியில் வைத்து ஜெகனை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
- தனிப்படை போலீசார், பிரபுவை தீவிரமாக தேடி வந்தனர்.
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை மூளிக்குளம் விரல்மீண்ட நாயனார் தெருவை சேர்ந்தவர் ஜெகன் (வயது 34). பா.ஜனதா மாநகர இளைஞரணி செயலாளர். திருமணம் ஆகாதவர்.
கடந்த 30-ந்தேதி மூளிக்குளம் பகுதியில் வைத்து ஜெகனை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே ஊரைச் சேர்ந்த பாஸ்கர், சந்துரு, மாரிச்செல்வம், பாளையங்கோட்டையை சேர்ந்த அனீஸ், அஜித்குமார், ராஜாகுடியிருப்பு விக்கி என்ற விக்னேஷ்வரன், வி.எம்.சத்திரம் வசந்த், பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த இசக்கிமுத்து, திம்மராஜபுரம் மாணிக்கராஜா, தச்சநல்லூர் முத்துபாண்டி ஆகிய 10 பேரை கைது செய்தனர். நேற்று காலையில் வழக்கில் தொடர்புடைய பாளையங்கோட்டையை சேர்ந்த பரமராஜ் (27) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக மூளிக்குளத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் பிரபுவை கைது செய்யக்கோரி ஜெகனின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார், பிரபுவை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலையில் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் பிரபு (46) சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு உத்தரவின்பேரில் தி.மு.க. பிரமுகர் பிரபு சிறையில் அடைக்கப்பட்டார்.
- போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பிரபு உள்பட 12 பேர் கும்பலை கைது செய்தனர்.
- கடந்த சில ஆண்டுகளாக ஜெகன் தரப்பினருக்கும், பிரபு தரப்பினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டு அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது.
நெல்லை:
பாளை மூளிக்குளத்தை சேர்ந்தவர் ஜெகன்(வயது 34). இவர் நெல்லை மாவட்ட பா.ஜனதா இளைஞரணி பொதுச்செயலாளராக இருந்து வந்தார்.
கடந்த மாதம் 30-ந்தேதி இரவு மூளிக்குளத்தில் வைத்து ஜெகனை ஒரு கும்பல் அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை செய்தது. இதுதொடர்பாக பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மூளிக்குளத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் முன்விரோதத்தில் கொலை செய்தது தெரியவந்தது.
இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்யும்வரை உடலை வாங்க மாட்டோம் என பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பிரபு உள்பட 12 பேர் கும்பலை கைது செய்தனர்.
இந்நிலையில் நெல்லை சரக டி.ஐ.ஜி.யும், நெல்லை மாநகர கமிஷனருமான(பொறுப்பு) பிரவேஷ்குமார், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் காசிபாண்டியனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக ஜெகன் தரப்பினருக்கும், பிரபு தரப்பினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டு அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக உளவுத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வந்துள்ளனர்.
அதே நேரத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாளை போலீஸ் இன்ஸ்பெக்டராக காசிபாண்டியன் பொறுப்பேற்ற நிலையில், அவருக்கும், உதவி கமிஷனர் பிரதீப்புக்கும் இந்த பிரச்சினை தொடர்பாக உளவுப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதுதொடர்பாக கொலை நடந்த அன்று காலை தான் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் விசாரணை நடத்தியதாகவும், அதற்கு முன்பாகவே முறையாக விசாரணை நடத்தியிருந்தால் கொலையை தடுத்திருக்கலாம் எனவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் குற்றம் நடைபெறும் என முன்கூட்டியே தெரிந்திருந்தும், அதனை தடுக்க தவறிவிட்டதாக கூறி இன்ஸ்பெக்டர் காசிபாண்டியனை டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
பைக்கில் வந்த 3 பேர் பாலசந்திரனை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து, கொலை வழக்கில் தொடர்புடையதாக பிரதீப், அவனது கூட்டாளிகளான கலைவாணணன், ஜோதி, பிரதீப் சகோதரர் சஞ்சய் ஆகிய 4 பேரை சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், பாஜக நிர்வாகி பாலசந்தர் கொலையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத புகாரில் சிவசுப்பிரமணியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியனை சஸ்பெண்ட் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்.. டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பா.ஜ.க. பிரமுகர் பாலச்சந்தர் (வயது 30). நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த கொலை தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச்சேர்ந்த பிரதீப், சஞ்சய், கலைவாணன் மற்றும் ஜோதி ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கொலையாளி பிரதீப் தலைமையில் தான் கொலை திட்டம் தீட்டப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.
சஞ்சய், பிரதீப்பின் தம்பி ஆவார். கலைவாணன், பிரதீப்பின் உறவினர். ஜோதி, பிரதீப்பின் நண்பர். கொலையாளி பிரதீப் கொடுத்த வாக்குமூலத்தில், என்னையும், என் குடும்பத்தையும் ஒழித்துக்கட்டும் நோக்கத்தோடு பாலச்சந்தர் செயல்படத்தொடங்கினார். முதலில் என்னை சிறைக்கு அனுப்பினார். அடுத்து சிந்தாதிரிப்பேட்டை கிழக்கு கூவம் சாலையில் வசிக்கும், வசந்தா என்ற பெண்ணின் வீட்டை அபகரிக்க முயற்சி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில், என் தந்தை தர்கா மோகன், மைத்துனர் தினேஷ் ஆகியோரை ஜெயிலில் அடைக்க பாலச்சந்தர் பின்னணியில் இருந்தார். எந்த வகையிலும் எங்களை வாழ விடாததால், பாலச்சந்தரை தீர்த்துக்கட்டினோம் என்று தெரிவித்தார். கைதான 4 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
வசந்தா என்ற பெண்ணின் வீட்டை அபகரிக்க முயற்சிப்பதாக, கொடுக்கப்பட்ட புகாரில்தான் பிரதீப்பின் தந்தை தர்கா மோகனும், மைத்துனர் தினேசும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொலைக்கு இதுதான் முக்கிய காரணமாக அமைந்தது. இதற்கிடையில் கிழக்கு கூவம் சாலையில் வசிக்கும் வசந்திபாய் என்ற பெண்ணுக்கு, வசந்தா என்று நினைத்துக்கொண்டு சிலர் மிரட்டலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
வசந்திபாய் என்ற பெண்ணுக்கும், இந்த பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கிழக்கு கூவம் சாலையில் வசிப்பவர்களுக்கு, இது போல் தொல்லை கொடுப்பவர்களிடமிருந்து போலீசார் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும், என்றும் அந்த பகுதியில் போலீஸ் ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும், என்றும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ரவுடிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறியதாக வந்த புகார் அடிப்படையில், சிந்தாதிரிப்பேட்டை சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் பாலச்சந்தர் கொலை வழக்கில் தினேஷ் என்ற புளிமூட்டை தினேஷ் (26), அவரது தம்பி விக்னேஷ் (22) ஆகியோரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களும் ரவுடிகள்தான் என கூறப்படுகிறது. பாலச்சந்தரின் பாதுகாப்பு போலீசை மிரட்டியதாக இவர்கள் ஏற்கனவே சிறைக்கு சென்று வந்துள்ளனர்.






