search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchamirtham"

    • வணிகம் மற்றும் குடியிருப்புகளில் முறையாக வாடகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
    • இந்த பகுதியில் தொடர்ந்து அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் கண்டறிந்து, அவற்றை கோவில் நிர்வாகம், வருவாய்த்துறையினர், போலீசார் அகற்ற வேண்டும்.

    மதுரை:

    திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், கடந்த 2018-ம் ஆண்டில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    பழனி மலையின் கிரிவலப்பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்தது. பின்னர் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்களுக்கு தடை விதிப்பது, பக்தர்களுக்கு பேட்டரி கார் வசதி செய்வது, சுற்றுலா வாகனங்களுக்கு தனி இடவசதி செய்து தருவது என்பன உள்பட பல்வேறு உத்தரவுகளை ஏற்கனவே ஐகோர்ட்டு பிறப்பித்தது.

    இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது கோவில் தரப்பில் ஆஜரான வக்கீல், "கிரிவலப்பாதைகளில் 80-க்கும் மேற்பட்ட கடைகள் தற்போதுவரை அகற்றப்பட்டு உள்ளன. 134 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. அதில் வணிகம் மற்றும் குடியிருப்புகளில் முறையாக வாடகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.

    மேலும் அவர் கூறுகையில், "பழனி மலை கிரிவலப்பாதையில் வாகனங்கள் செல்ல முடியாதபடி, தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. கொடைக்கானல் சாலை பகுதியில் இருந்து கிரிவலப்பாதைக்கு அரசு வாகனங்கள், ஆம்புலன்ஸ் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்," என்றார்.

    இதையடுத்து நீதிபதிகள், "இந்த பகுதியில் தொடர்ந்து அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் கண்டறிந்து, அவற்றை கோவில் நிர்வாகம், வருவாய்த்துறையினர், போலீசார் அகற்ற வேண்டும். கிரிவலப்பாதைகளில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்வது உள்ளிட்ட எந்தவித வணிக நோக்க நடவடிக்கைகளும் இருக்கக்கூடாது.

    ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை கோவில் இணை ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்குவது சம்பந்தமான நடவடிக்கை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பதில் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.

    • கடந்த மாதம் பழனியில் தைப்பூசத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • கோசாலையில் காலாவதியான பஞ்சாமிர்த டப்பாக்கள் கொட்டி அழிக்கப்பட்டன.

    திண்டுக்கல்:

    முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    இவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் பிரசாதமாக பஞ்சாமிர்தத்தை கண்டிப்பாக தங்கள் வீடுகளுக்கு வாங்கிச் செல்வது வழக்கம். இது தவிர ஆன்லைன் மூலமும் பணம் கட்டினால் வீடுகளுக்கே பஞ்சாமிர்தம் அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் பழனியில் தைப்பூசத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கூடுதலாக பஞ்சாமிர்தம் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது.

    இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் தயாரித்து வைக்கப்பட்டு இருந்த பஞ்சாமிர்தம் தேக்கமடைந்தது. குறிப்பிட்ட நாளுக்கு மேல் பஞ்சாமிர்தத்தை விற்பனைக்கு வைக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததால் தைப்பூசத் திருவிழாவுக்காக தயாரித்து வைக்கப்பட்டு இருந்த பஞ்சாமிர்தத்தை அழிக்க உணவு பாதுகாப்புத்துறையினர் உத்தரவிட்டனர்.

    அதன்படி ரூ.40க்கு விற்பனைக்காக வைத்திருந்த பஞ்சாமிர்த டின்கள் 55 ஆயிரம் டப்பாக்கள் கொட்டி அழிக்க முடிவு செய்யப்பட்டது. கள்ளிமந்தயத்தில் பழனி கோவிலுக்கு உட்பட்ட கோசாலை செயல்பட்டு வருகிறது.

    அந்த கோசாலையில் காலாவதியான பஞ்சாமிர்த டப்பாக்கள் கொட்டி அழிக்கப்பட்டன. கடந்த வாரம் கோவில் பிரசாதம் தரமற்ற முறையில் இருப்பதாக வந்த புகாரையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பிரசாத மாதிரிகள் மற்றும் பஞ்சாமிர்தத்தை ஆய்வுக்கு எடுத்துச் சென்றபோது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    • கோவிலில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பஞ்சாமிர்த விற்பனை தொடங்கப்பட்டது.
    • பஞ்சாமிர்தம் 250 கிராம் 30 ரூபாய்க்கும், 500 கிராம் 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

    மதுரை:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 6-வது படை வீடாக சிறப்பு பெற்றது பழமுதிர்சோலை முருகன் கோவில். பிரசித்தி பெற்ற அழகர் மலையில் உள்ளதால் இங்கு பக்தர்களின் வருகை எப்போதும் அதிகமாக இருக்கும்.

    அத்துடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இக்கோவிலில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பஞ்சாமிர்த விற்பனை தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 5 மாதங்களில் ரூ. 13 லட்சத்திற்கு பஞ்சாமிர்தம் விற்பனை ஆனது. இந்த ஆண்டு அதே கால கட்டத்தில் பஞ்சாமிர்த விற்பனை ரூ.20 லட்சத்தை எட்டியுள்ளது. பஞ்சாமிர்தம் 250 கிராம் 30 ரூபாய்க்கும், 500 கிராம் 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

    முருகப்பக்தர்கள், ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டினரும் பஞ்சாமிர்தத்தை விரும்பி வாங்குவதால் விற்பனை அதிகரித்துள்ளதாக கோவில் நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேன் - இனிய குரல்வளம் தரும் நெய் - வீடுபேறு அடைய உதவும்
    • பன்னீர் - புகழ் சேர்க்கும் சந்தனம் - செல்வம் உண்டாகும்

    சந்தனாதித் தைலம் - சுகம் தரும்

    நல்எண்ணை - விஷசுரம் நிவர்த்தி

    பால் - தீர்க்காயுள் தரும்

    தயிர் - நன்மக்கட்பேறு

    தேன் - இனிய குரல்வளம் தரும்

    நெய் - வீடுபேறு அடைய உதவும்

    சர்க்கரை - எதிரிகள் தொல்லை நீங்குதல்

    பஞ்சாமிர்தம் - உடல் வலிமை தரும்

    மாம்பழம் - வெற்றியைத் தரும்

    கரும்புசாறு - நல்ல உடல் நலம்

    இளநீர் - போகம் அளிக்கும்

    எலுமிச்சம் பழம் - சகல பகையை அழிக்கும்

    அன்னம் - சகல பாக்கியங்களும் தரும்

    பன்னீர் - புகழ் சேர்க்கும்

    சந்தனம் - செல்வம் உண்டாகும்

    நறுமணப்பொடி - கடன், நோய் தீரம்

    ஆண் தெய்வமூர்த்திக்கு நறுமணப் பொடியும், பெண் தெய்வமூர்த்திக்கு நறுமணப் பொடியும், மஞ்சள்தூளும் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    மஞ்சள் தூள் - மங்களம் அளித்திடும்

    விபூதி - கர்மவினைகளை நீக்கி மோட்சம் அளிக்கும்

    சொர்ணாபிஷேகம் - ஐஸ்வர்யம் வரும்

    ஒவ்வொரு அபிஷேகத்தின் இடையிலும் சுத்தநீர் - சாந்தி தரும்.

    தில்லை தீர்த்தங்கள் பத்து

    1. சிவகங்கை

    2. பரமானந்த கூபம் (சித்சபைக்கு கிழக்குப் பக்கத்தில் கிணறு வடிவில் சக்தி வடிவம் பொருந்தியது)

    3. வியாக்கிரபாத தீர்த்தம் (இளமையாக்கினர் கோவில்)

    4. அனந்த தீர்த்தம் (திருஅனந்தேஸ்சுரத்துக்கு முன்பு உள்ளது)

    5. நாகச்சேரி (திருஅனந்தேஸ்சுரத்துக்கு மேற்பாங்கான உள்ள திருக்குளம்)

    6. பிரமதீர்த்தம்

    7. சிவப்பிரியை

    8. புலிமடு

    9. குய்ய தீர்த்தம்

    10. திருப்பாற்கடல்

    பிரபஞ்சத்தின் மையம்

    பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாதர், திருமூலர் ஆகியோரால் பூஜிக்கப் பெற்ற சுயம்புலிங்கம்தான் ஆதிமூலநாதர். இதுதான் பிரபஞ்சங்களின் மையமாகும்.

    ஆதியந்த மற்றது. ஆகாயத்தின் மையம் இதுவேயாகும். ஒரு காலத்தில் பெரும் வனமான தில்லை மரங்கள் அடர்ந்த காட்டில் ஊடே வியாக்ரபாதரால் பூஜிக்கப்பட்ட சுயம்புலிங்கம் தில்லை மரங்கள் நிறைந்த வனம்தான் இன்றைய சிதம்பரம்.

    எனவே சிதம்பரத்திற்கு தில்லை என்ற பெயரே பிரசித்தி பெற்று விளங்குகிறது.

    ஆதிமூலநாதர் சன்னதி இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும் நடராஜர் சன்னதி இரவு 10 மணிக்கே அர்த்தஜாம பூஜை நடைபெறும் முதலாவது அர்த்தஜாம பூஜையும், கடைசியாக அர்த்தஜாம பூஜையும் நடக்கும் இடம் தில்லையில் மட்டுமே.

    தில்லையம்பலவாணன் தினசரி பூஜைகள்

    தில்லை திருத்தலத்தில் திருநடனம் புரிந்தருளும் நடராஜ மூர்த்திக்கு நாள்தோறும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை மூன்று, மாலையில் மூன்று பூஜைகள் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பள்ளியறையில் பால், பொரி, பழம் முதலியன நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்து சுவாமியின் பாதுகையை வெள்ளி, தங்க பல்லக்கில் எழுந்தருளச் செய்து கொண்டு வந்து நடராஜரின் அருகில் வைத்து, நடராஜருக்கும் சிவகாமசுந்தரியம்பாளுக்கும் பால், பொரி, பழம் முதலியன நைவேத்தியம் செய்து தீபாராதனை செய்தும் வருகின்றனர். இது `திருவனந்தல்' என்றும், பால் நைவேத்தியம் என்றும் அழைக்கப்படும் இது ஆறு கால பூஜைகளில் சேர்ந்தல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

    ×