search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "destroyed"

    • கடந்த மாதம் பழனியில் தைப்பூசத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • கோசாலையில் காலாவதியான பஞ்சாமிர்த டப்பாக்கள் கொட்டி அழிக்கப்பட்டன.

    திண்டுக்கல்:

    முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    இவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் பிரசாதமாக பஞ்சாமிர்தத்தை கண்டிப்பாக தங்கள் வீடுகளுக்கு வாங்கிச் செல்வது வழக்கம். இது தவிர ஆன்லைன் மூலமும் பணம் கட்டினால் வீடுகளுக்கே பஞ்சாமிர்தம் அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் பழனியில் தைப்பூசத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கூடுதலாக பஞ்சாமிர்தம் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது.

    இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் தயாரித்து வைக்கப்பட்டு இருந்த பஞ்சாமிர்தம் தேக்கமடைந்தது. குறிப்பிட்ட நாளுக்கு மேல் பஞ்சாமிர்தத்தை விற்பனைக்கு வைக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததால் தைப்பூசத் திருவிழாவுக்காக தயாரித்து வைக்கப்பட்டு இருந்த பஞ்சாமிர்தத்தை அழிக்க உணவு பாதுகாப்புத்துறையினர் உத்தரவிட்டனர்.

    அதன்படி ரூ.40க்கு விற்பனைக்காக வைத்திருந்த பஞ்சாமிர்த டின்கள் 55 ஆயிரம் டப்பாக்கள் கொட்டி அழிக்க முடிவு செய்யப்பட்டது. கள்ளிமந்தயத்தில் பழனி கோவிலுக்கு உட்பட்ட கோசாலை செயல்பட்டு வருகிறது.

    அந்த கோசாலையில் காலாவதியான பஞ்சாமிர்த டப்பாக்கள் கொட்டி அழிக்கப்பட்டன. கடந்த வாரம் கோவில் பிரசாதம் தரமற்ற முறையில் இருப்பதாக வந்த புகாரையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பிரசாத மாதிரிகள் மற்றும் பஞ்சாமிர்தத்தை ஆய்வுக்கு எடுத்துச் சென்றபோது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    • தீயணைப்பு போலீசார் வருவதற்குள் கடை தீக்கிரையானது
    • கடைக்கு யாராவது தீவைத்தார்களா என விசாரணை

    வடவள்ளி,

    கோவை வடவள்ளி அருகே உள்ள பெரியார் நகர் 3-வது வீதியைச் சேர்ந்தவர் பிரபா (வயது 65). இவரது வீட்டின் முன்பு ஆறுச்சாமி என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக துணி அயர்ன் செய்யும் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

    இன்று அதிகாலை திடீரென அந்த அயர்ன் கடை தீப்பிடித்து எரிந்தது. அந்த வழியாகச் சென்றவர்கள் இதுபற்றி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்குள் கடை முற்றிலும் எரிந்து நாசமானது. கடையில் இருந்த துணிகளும் தீக்கிரையானது.

    இதுபற்றி வடவள்ளி போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்த கடைக்கு யாராவது தீவைத்தார்களா, அல்லது விபத்து காரணமாக தீப்பிடித்ததா என்பது பற்றி விசாரணை நடக்கிறது.  

    • சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கரும்புகை மண்டலம் போல காட்சியளித்தது.
    • தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அகரவெளி சுப்பிரமணியன் என்பவரது வீட்டு கொல்லையிலுள்ள வைக்கோல் போர் திடீரென தீப்பிடித்து எறிய துவங்கியது.

    இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக நீரை கொண்டு தீயை அணைக்க முயற்சித்தனர் இருப்பினும் தீ மளமளவென பரவி சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கரும்புகை மண்டலம் போல காட்சியளித்தது.

    தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேளாங்கண்ணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் நீரை பீச்சு அடித்து தீயை அணைக்க முற்பட்டனர்.

    தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிய நிலையில் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மின் கம்பியில் அந்த பகுதியில் உள்ள தென்னை மரத்தில் உரசியதில் ஏற்பட்ட தீ வைக்கோல் போரில் பற்றியதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து மின் கசிவு ஏற்பட்ட இடத்தில் திருக்குவளைத் துணை மின் நிலைய பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருக்குவளை அருகே மின் கசிவு காரணமாக வைக்கோல் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கரும்புகை மண்டலம் போல காட்சியளித்தது.
    • தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அகரவெளி சுப்பிரமணியன் என்பவரது வீட்டு கொல்லையிலுள்ள வைக்கோல் போர் திடீரென தீப்பிடித்து எறிய துவங்கியது.

    இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக நீரை கொண்டு தீயை அணைக்க முயற்சித்தனர் இருப்பினும் தீ மளமளவென பரவி சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கரும்புகை மண்டலம் போல காட்சியளித்தது.

    தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேளாங்கண்ணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் நீரை பீச்சு அடித்து தீயை அணைக்க முற்பட்டனர்.

    தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிய நிலையில் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மின் கம்பியில் அந்த பகுதியில் உள்ள தென்னை மரத்தில் உரசியதில் ஏற்பட்ட தீ வைக்கோல் போரில் பற்றியதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து மின் கசிவு ஏற்பட்ட இடத்தில் திருக்குவளைத் துணை மின் நிலைய பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருக்குவளை அருகே மின் கசிவு காரணமாக வைக்கோல் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • தேத்தாகுடி தெற்கு கீழவெளியில் முகமது அப்துல்நாசர் என்பவா் சாராயம் விற்றுக்கொண்டிருந்தார்.
    • பறிமுதல் செய்யப்பட்ட புதுச்சேரி சாராயம் 110 லிட்டரை போலீசார் கொட்டி அழித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வேதாரண்யம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இங்கா்சால் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கோடியக்காடு மீனாட்சித்தெருவைச் சேர்ந்த ஐயப்பன் (வயது 28), கோடியக்கரை காளிதாஸ் (40) ஆகியோர் பூநாரை இல்லம் பகுதியிலும், செம்போடை அன்பரசன் (42) என்பவர் அப்பகுதியில் உள்ள மறைவான இடத்திலும், தேத்தாகுடி தெற்கு கீழவெளியில் முகமதுஅப்துல்நாசர் (38) என்பவா் அப்பகுதியிலும் மற்றும் வேதாரண்யம் நகர் பகுதி மோட்டாண்டிதோப்பு பகுதியில் சாராயம் விற்ற ராஜா (32) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட புதுச்சேரி சாராயம் 110 லிட்டரை கொட்டி அழித்தனர்.

    • களக்காடு பம்பன்குளம் பகுதியில் கடந்த 2 நாட்களாக காட்டு பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன.
    • பன்றிகள் அட்டகாசத்தால் 400-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மேலவடகரை பம்பன்குளம் பத்துக்காட்டில் கடந்த 2 நாட்களாக காட்டு பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. நேற்று இரவில் வனப்பகுதியில் இருந்து வெளிவந்த காட்டு பன்றிகள் கூட்டம் பம்பன்குளம் விளைநிலங்களுக்குள் புகுந்தது.

    இதைப்பார்த்த விவசாயிகள் அவைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பன்றிகள் அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த வாழைகளை நாசம் செய்தன. பன்றிகள் அட்டகாசத்தால் 400க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானது.

    இவைகள் 3 மாதமான ஏத்தன் ரக வாழைகள் ஆகும். பன்றிகள் சேதப்படுத்திய வாழைகள் மேலவடகரையை சேர்ந்த முருகபெருமாள் (40), அய்யா (40), பண்டாரம் (45), பாண்டி (30), நம்பிநாராயணன் ஆகியோர்களுக்கு சொந்தமானது ஆகும். இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

    வாழைகள் நாசமானதால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே விளைநிலங்களுக்குள் புகும் காட்டு பன்றிகளை விரட்டவும், பன்றிகளால் நாசமான வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    ஏற்கனவே சிதம்பரபுரம் மலையடிவாரத்தில் ஒற்றை யானை அட்டகாசம் செய்து வரும் வேளையில் காட்டு பன்றிகளும் விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

    களக்காடு மலையடிவார பகுதிகளில் வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் உயிரை பணயம் வைத்து பெரும் போராட்டமே நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை விவசாயிகளுக்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை.

    வனத்துறையினரிடம் மனு கொடுத்தும், அவர்கள் இழப்பீடும் வழங்காமல், வனவிலங்குகளை விரட்டவும் நடவடிக்கை எடுக்காமல் பாராமுகமாக இருந்து வருவதாக களக்காடு பா.ஜனதா பிரமுகர் சேர்மன்துரை புகார் தெரிவித்தார்.

    • வீட்டு கொட்டகை தீ பிடித்து வாகனங்கள்-தானியங்கள் எரிந்து நாசமானது.
    • வாசல் வழியாக வெளியேறி உயிர் தப்பினர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் 3-வது வார்டு மேற்கு தண்ணீர்தொட்டி தெருவை சேர்ந்தவர் நீதி (வயது 50). விவசாயி. இவரது மனைவி லட்சுமி(47). இவர்களது மகன் பிரபாகரன்(34), மகள் பிரியா(33). இதில் பிரியாவுக்கு திருமணமாகி கூகையூரில் தனது கணவர் முருகனுடன் வசித்து வருகிறார். பிரபாகரனுக்கு திருமணமாகி பெற்றோருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று பிரபாகரன் அவரது மனைவியுடன் களரம்பட்டிக்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் நீதி, லட்சுமி ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் நீதியின் வீட்டையொட்டி முன்புறம் கல்நார் வேயப்பட்டு அமைக்கப்பட்டிருந்த கொட்டகை தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து கண் விழித்த நீதி, கொட்டகை கொழுந்துவிட்டு எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரும், லட்சுமியும் உடனடியாக வீட்டின் பின்புற வாசல் வழியாக வெளியேறி உயிர் தப்பினர். இதில் பைக் மற்றும் தானியங்கள் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாழைகளின் குருத்துக்களை குரங்குகள் முறித்து போட்டுள்ளன.
    • விவசாயிகளுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    களக்காடு:

    திருக்குறுங்குடியில் இருந்து வனத்துறை சோதனை சாவடிக்கு செல்லும் சாலையில் செட்டியாபத்து பகுதியில் குரங்குகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்த குரங்குகள் 100-க்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்துள்ளன. வாழைகளின் குருத்துக்களை குரங்குகள் முறித்து போட்டுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நாசமான வாழைகள் 3 மாதமே ஆன மட்டி ரக வாழைகள் ஆகும். எனவே நாசமான வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • மலைவாழ் குடியிருப்பு பகுதிகளின் அருகே, 25க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் உள்ளன.
    • கல்திட்டைகள் குறித்த தகவல் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

    உடுமலை,

    தமிழகத்தின் வரலாற்று ஆதாரங்களில் முக்கியமாக கருதப்படுவது கல்திட்டைகள் ஆகும். கற்களை கருவியாக மாற்றி பயன்படுத்திய பின்னர் மனிதனின் நாகரீக வளர்ச்சிக்கு உதாரணமாக இருப்பது கல்திட்டைகள் ஆகும்.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த கல்திட்டைகள் மற்றும் கல்பதுக்கைகள் வரலாற்று சின்னமாக வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

    சமவெளிப்பகுதிகளில் மட்டும் காணப்படும் கல்திட்டைகள், மலைத்தொடரில் அரிதாகவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.அவ்வகையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு இடங்களில் கல்திட்டைகள் கண்டறியப்பட்டு அம்மலைத்தொடருக்கும், மனிதனின் நாகரீக வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தி வருகின்றன.

    உடுமலை அருகே கோடந்தூர், ஈசல்திட்டு, தளிஞ்சி உட்பட மலைவாழ் குடியிருப்பு பகுதிகளின் அருகே, 25க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் உள்ளன. ஆனால், இவற்றின் வரலாறு தெரியாமல் படிப்படியாக அவை அழிந்து வருகின்றன.கல்திட்டைகள் குள்ளமனிதர்கள் வாழ்ந்த வீடு உட்பட பல்வேறு வதந்திகள் காரணமாக, அங்குள்ள பெரிய கற்களை அழிப்பது வழக்கமாகி விட்டது.வனப்பகுதியில் மலைத்தொடரில் அரிதாக காணப்பட்ட, பல்வேறு கல்திட்டைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டன. மேலும் சுற்றுலா பயணிகள் கல்திட்டைகளின் உள்பகுதியிலுள்ள உருவங்களை அழிக்கும் வகையில், தங்களின் பெயர்களை எழுதுவது போன்ற அவலங்களும் தொடர்கதையாக உள்ளது.உடுமலை, அமராவதி வனச்சரக பகுதியிலுள்ள கல்திட்டைகளை பாதுகாக்க வேண்டும் என்ற வரலாற்று ஆய்வாளர்களின் கோரிக்கைக்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்நிலையில்கேரள மாநில அரசு மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள வரலாற்று சின்னங்களை பாதுகாக்க, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.மேற்குத்தொடர்ச்சி மலையில் மறையூர் உட்பட பகுதிகளிலுள்ள கல்திட்டைகளை பாதுகாக்க, கம்பி வேலி அம்மாநில அரசினால் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பாறை ஓவியங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிடவும் அவற்றிற்கு பாதுகாப்பாகவும், பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கல்திட்டைகள் குறித்த தகவல் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.இதனால், அங்குள்ள வரலாற்றுச்சின்னங்கள் பாதுகாப்பாக இருப்பதுடன், சுற்றுலா பயணிகளுக்கு வரலாறு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.இம்முறையை தமிழக அரசும் பின்பற்றினால் முன்னோர்கள் வரலாறு பாதுகாக்கப்பட்டு இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என வரலாற்று ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்துள்ளது. #IAFAttack #LoC
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் வந்த வாகன வரிசையின்மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.



    இந்த தாக்குதல் இந்திய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். புல்வாமா தாக்குதலுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசும் கூறியிருந்தது. எனவே, சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்று எல்லைப்பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் தொடங்கி உள்ளது. இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இந்திய விமானப்படை விமானங்கள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து குண்டுகளை வீசின.

    இந்திய விமானப்படையின் 12 போர் விமானங்கள் (மிராஜ் 2000) இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 1000 கிலோ எடை கொண்ட குண்டுகள் வீசப்பட்டதில், பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  #IAFAttack #LoC

    தலீபான் பயங்கரவாதிகளை குறி வைத்து அமெரிக்க கூட்டுப்படைகள் நிகழ்த்திய வான் தாக்குதலில் 7 தலீபான் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். #Taliban #FactoryDestroyed #Airstrike
    காந்தஹார்:

    ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஒரு பக்கம் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தாலும், அவர்கள் தாக்குதல்களை நிறுத்தவில்லை.

    இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் படைகளும், அங்குள்ள அமெரிக்க கூட்டுப்படைகளும் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

    இந்த நிலையில், அங்கு காந்தஹார் மாகாணத்தில், மேவான்ட் மாவட்டம், பேண்ட் இ டெமர் பகுதியில் தலீபான் பயங்கரவாதிகளை குறி வைத்து அமெரிக்க கூட்டுப்படைகள் வான் தாக்குதல் நடத்தின.

    இந்த தாக்குதலில் 7 தலீபான் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். அவர்களில் தலீபான் பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் தலைவர் ரகமதுல்லாவும் ஒருவர். 2 தலீபான் பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்தனர் எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    தலீபான் பயங்கரவாதிகளின் ஆயுத தொழிற்சாலையும், சக்தி வாய்ந்த வெடிகுண்டு கருவிகளும், கண்ணிவெடிகளும் அழிக்கப்பட்டதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

    அமெரிக்க கூட்டுப்படை தாக்குதல் பற்றி தலீபான் பயங்கரவாதிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
    வேடசந்தூர் பகுதியில் கஜா புயலால் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விசாய நிலங்கள் நாசமடைந்தன. #GajaCyclone
    வேடசந்தூர்:

    நாகப்பட்டினம் அருகே கரையை கடந்த கஜா புயல் திண்டுக்கல் மாவட்டத்திலும் பெரும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது. குறிப்பாக கொடைக்கானல் மலைப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதே போல் மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் சூறைக் காற்றுக்கு பயிர்கள் நாசமடைந்தன.

    வேடசந்தூர் அருகே வடுகம்பாடி, புளியம்பட்டி, சுப்பிரமணியபிள்ளை புதூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் வாழை, தென்னை சாகுபடி செய்தனர். சூறைக்காற்று பலமாக வீசியதால் 10 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன. பல இடங்களில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது.

    எரியோடு அருகே நாகையன்கோட்டை, பாகாநத்தம் ஆகிய பகுதிகளில் 350-க்கும் மேற்பட்ட ஏக்கரில் கண்வலி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு இருந்தது கஜா புயலால் கடும் சேதமடைந்துள்ளது.

    இதே போல் வடமதுரை பகுதியில் கரும்பு, வாழை சேதமடைந்தன. குஜிலியம்பாறை பகுதியில் கரிக்காலி, கூம்பூர், கோம்பை, வடுகம்பாடி குளம் உள்ளிட்ட இடங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது.

    குச்சிக்கிழங்கு, 15 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வாழை, உள்ளிட்டவை சேதமடைந்தன. மேலும் பல வீடுகளில் மேற்கூரைகள் பறந்து பொதுமக்கள் வீடு இன்றி தவித்து வருகின்றனர். மேலும் மின் கம்பங்களும் சேதமடைந்துள்ளதால் பல இடங்களில் பொதுமக்கள் இருளில் சிரமப்பட்டு வருகின்றனர்.

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு சீரமைப்பு பணிகளை துரிதமாக செயல்பட அறிவுறுத்தினர். இதே போல் அரசு அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். ஆசையாக வளர்த்த தென்னை மரங்கள் மற்றும் வாழைகள் நாசமடைந்ததை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். #GajaCyclone
    ×