search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ISKCON"

    • சாமியார் சின்மோய் கிருஷ்ணதாஸ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
    • இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

    வங்கதேச மக்கள் தொகையில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு எதிராக இந்துக்களை ஒருங்கிணைத்து போராட்டங்களும் நடத்தப்பட்டன. வங்கதேச சனாதானி விழிப்புணர்வு இயக்கம் சார்பிலும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளராக இருந்த இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த இந்து சாமியார் சின்மோய் கிருஷ்ணதாஸ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.

    இவர் மீது வங்கதேச கொடியை அவமதித்து இந்துக்களைப் போராட்டத்துக்குத் தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த மாதம் 25-ம் தேதி சின்மோய் தாஸ் கைது செய்யப்பட்டார்.

    வங்கதேசத்தில் தொடர்ந்து இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்கள் மீதும், அவர்களது வழிபாட்டு தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. டாக்காவில் நமஹட்டா மையத்தில் உள்ள இஸ்கான் கோவிலை சூறையாடிய மர்ம நபர்கள், அங்கிருந்த கடவுள் சிலைகளுக்கும் தீவைத்தனர்.

    இந்த நிலையில், வங்கதேசத்தில் இந்துகள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதும், அவர்களின் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து சிம்லாவில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், "வங்கதேச இந்துக்களை காப்பாற்றுங்கள்," இந்துக்கள் மீதான அடாவடியை நிறுத்துங்கள்" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கண்டனக்குரல் எழுப்பினர்.

    "வங்கதேச இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் அடாவடிகளை உலகமே பார்த்துக் கொண்டு இருக்கிறது. இந்துக்கள் கொலை செய்யப்படுகின்றனர், பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகின்றனர். எங்களது கோவில்கள் அழிக்கப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபை, இந்திய அரசு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்டவை இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்," என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர் தெரிவித்துள்ளார். 

    • டாக்கா விமானநிலையத்தில் கடந்த 25-ம் தேதி சின்மோய் தாஸ் கைதுசெய்யப்பட்டார்.
    • வங்கதேசத்தில் இந்துக் கோவில்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.

    டாக்கா:

    வங்கதேச மக்கள் தொகையில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதற்கு எதிராக இந்துக்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்பட்டன. வங்கதேச சனாதானி விழிப்புணர்வு இயக்கம் சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    இந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளராக இருந்த இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த இந்து சாமியார் சின்மோய் கிருஷ்ணதாஸ் மீது வங்கதேச கொடியை அவமதித்து இந்துக்களைப் போராட்டத்துக்குத் தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது. டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த மாதம் 25-ம் தேதி சின்மோய் தாஸ் கைது செய்யப்பட்டார்

    வங்கதேசத்தில் தொடர்ந்து ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்கள் மீதும், அவர்களது வழிபாட்டு தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், டாக்காவில் நமஹட்டா மையத்தில் உள்ள இஸ்கான் கோவிலை சூறையாடிய மர்ம நபர்கள், அங்கிருந்த கடவுள் சிலைகளுக்கும் தீவைத்தனர். அதில் அங்கிருந்த லட்சுமி நாராயணர் சிலை மற்றும் பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

    டாக்காவின் புறநகர் பகுதியான தோவூர் கிராமத்தில் ஹரே கிருஷ்ணா நம்ஹட்டா சங்கம் நிர்வகித்து வந்த ஸ்ரீஸ்ரீ மகாபாக்யா லட்சுமிநாராயணன் கோவில் மற்றும் ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ணா கோவிலையும் சூறையாடிய மர்ம நபர்கள் அங்கிருந்த சிலைகளுக்கு தீவைத்தனர். அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது என கொல்கத்தா இஸ்கான் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.

    • டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த நவம்பர் 25ம் தேதி சின்மோய் தாஸ் கைது செய்யப்பட்டார்.
    • மத கடமைகளை வீட்டுக்குள்ளேயே அல்லது கோயிலுக்குள்ளேயே வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினோம்

    கடந்த ஆகஸ்ட் மாதம் சஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசு கவிழ்ந்ததிலிருந்து வங்கதேசத்தில் மக்கள் தொகையில் 22 சதவீதம் இருக்கும் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிராக இந்துக்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்பட்டன.

    வங்கதேச சனாதானி விழிப்புணர்வு இயக்கம் சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த இயக்கத்தில் செய்தி தொடர்பாளராக இருந்த இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த இந்து சாமியார் சின்மோய் கிருஷ்ண தாஸ் மீது வங்கதேச கொடியை அவமதித்து இந்துக்களைப் போராட்டத்துக்குத் தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது.

     

    டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த நவம்பர் 25ம் தேதி சின்மோய் தாஸ் கைது செய்யப்பட்டார்.நவம்பர் 26ஆம் தேதி சட்டோகிராம் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்தது. இதனை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

     இதற்கிடையில் சின்மோய் கிருஷ்ண தாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நடந்த வன்முறையில் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆஜராக வழக்கறிஞர்கள் சங்கம் தடை விதித்தது.

     

     

    இந்நிலையில் இன்று சின்மோய் தாஸ் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த நிலையில் சின்மோய் தாஸ்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராகாத நிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜனவரி 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கு மத்தியில் சின்மோய் தாஸ்க்கு உணவு கொண்டுசென்ற ருத்ரப்ரோட்டி கேசப் தாஸ் மற்றும் ரங்கநாத் சியாமா சுந்தர் தாஸ் ஆகிய இரு இஸ்கான் இளம் சாமியார்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பான சூழல் நிலவுவதால் இஸ்கான் அமைப்பை சேர்ந்தவர்கள் தங்கள் மத அடையாளங்களை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள வேண்டாம் என்று அவ்வமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

     இதுகுறித்து பேசிய கொல்கத்தா இஸ்கான் செய்தி தொடர்பாளர் ராதாராமன் தாஸ், எங்களின் பக்தர்கள் தாக்கப்படுவது கவலையளிக்கிறது.

    வெளிப்படையாகத் தெரியும் நெற்றித் திலகங்கள் இட்டுக்கொள்ள வேண்டாம், மாலைகள் அணிய வேண்டாம், காவி உடை அணிய வேண்டாம், மத கடமைகளை வீட்டுக்குள்ளேயே அல்லது கோயிலுக்குள்ளேயே வைத்துக்கொள்ளும்படியும் தேவையில்லாத கவனத்தை ஈர்க்க வேண்டாம் எனவும் அவர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

    இதற்கிடையில் இந்திய தொலைக்காட்சி சேனல்களை தடை செய்ய வங்கதேச உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

    • இஸ்கானுடன் தொடர்புடைய 17 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
    • மத அடிப்படைவாத அமைப்பான இஸ்கானுக்கு தடை விதிக்க நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது

    வங்கதேசத்தில் இந்துக்கள் போராட்டத்தை தூண்டியதாக இந்து மத சாமியாரும் இஸ்கான் தலைவருமான சின்மோய் கிருஷ்ண தாஸ் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

     

    இந்நிலையில் வங்கதேசத்தில் 2 இந்து மத சாமியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள சின்மோய் கிருஷ்ண தாஸ்க்கு உணவு, மருத்துப்பொருட்கள் மற்றும் பணத்தை கொடுக்கச் சென்ற ருத்ரப்ரோட்டி கேசப் தாஸ் மற்றும் ரங்கநாத் சியாமா சுந்தர் தாஸ் ஆகிய இரு இஸ்கான் இளம் சாமியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த கைது குறித்து எந்த விளக்கமும் அளிக்காத வங்கதேச போலீஸ் வழக்குகள் சந்தேகத்தின் பேரில் கொத்வாலி காவல் நிலையத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்ட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் இருந்து சிறுபான்மையினரான இந்துக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவறை 200க்கும் மேற்பட்ட கோவில்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே சின்மோய் கிருஷ்ண தாஸ் கைதை எதிர்த்து போராட்டங்களும் நடந்து வருகிறது. சின்மோய் கிருஷ்ண தாஸ் உட்பட இஸ்கானுடன் தொடர்புடைய 17 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

     

    முன்னதாக மத அடிப்படைவாத அமைப்பான இஸ்கானுக்கு தடை விதிக்க கோரி வங்கதேச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உலகளாவிய அமைப்புக்கு தடை விதிப்பது சடத்தியமில்லை என நீதிமன்றம் மறுத்தது குறிப்பிடத்தக்கது. 

    • இஸ்கானில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்டார்.
    • போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல்.

    வங்காளதேசத்தில் இஸ்கான் அமைப்பின் செயல்பாடுகளை தடை செய்ய உயர் நீதிமன்றம் மறுத்து தெரிவித்துள்ளது. அந்நாட்டில் இந்து அமைப்பு தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் இஸ்கானில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்டார்.

    இதைத் தொடர்ந்து அவர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். இவரது கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்தன. இந்த சம்பவத்தின் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் வெடித்தது.

    இது தொடர்பான மோதலில் அரசு வழக்கறிஞர் சைபுல் இஸ்லாம் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து வங்காளதேசத்தில் இஸ்கான் அமைப்புக்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் மொனிருதீன் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி பராஹ் மஹ்பூப், நீதிபதி டெபாசிஷ் ராய் சவுத்ரி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வங்காளதேசத்தில் 'இஸ்கான்' அமைப்பிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர்.

    மேலும், வங்காளதேசத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் அரசு கவனமாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    • துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் அதிபர் டிரம்ப் காதில் இருந்து இரத்தம் சிந்தியது.
    • நியூயார்க்கில் நடந்த ஜெகந்நாதரின் முதல் ரத யாத்திரையில் பக்தர்களுக்கு ட்ரம்ப் உதவி செய்தார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த நபர் டொனால்ட் டிரம்ப்-ஐ சுட்டார். இந்த சம்பவத்தால் பரபர சூழல் உருவானது.

    துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் அதிபர் டிரம்ப் காதில் இருந்து இரத்தம் சிந்தியது. இதைத் தொடர்ந்து டிரம்ப்-ஐ பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிக்கொண்டு அவரை அங்கிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எஃப்பிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    துப்பாக்கி சூடு நடத்திய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்-ஐ பாதுகாவலர்கள் சம்பவ இடத்தில் வைத்தே சுட்டுக் கொன்றனர். இவர் ஏன் டிரம்ப்-ஐ சுட முயன்றார் என்பது பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், கடவுள் ஜெகந்நாதரின் அருளால் தான் சிறு காயங்களுடன் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் உயிர் தப்பினார் என்று "சர்வதேச கிருஷ்ணர் விழிப்புணர்வுக்கான சமூக அமைப்பு" (ISKCON) தெரிவித்துள்ளது.

    48 ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க்கில் நடந்த ஜெகந்நாதரின் முதல் ரத யாத்திரையில் பக்தர்களுக்கு ட்ரம்ப் உதவி செய்தார். தற்போது ஜெகந்நாதரின் 9 ஆவது ரத யாத்திரை நடைபெறவுள்ள நிலையில், அதன் பிரதிபலனாக தற்போது ட்ரம்பின் உயிரை ஜெகந்நாதர் காப்பற்றியுள்ளார்" என்று இஸ்கான் செய்தித் தொடர்பாளர் ராதாரமன் தாஸ் தெரிவித்துள்ளார்.

    • பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரால் ஸ்ரீபக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதர் என்பவரால் நிறுவப்பட்டது இஸ்கான்
    • கோசாலை அமைக்க அரசாங்கத்திடமிருந்து உதவிகளை பெறுகிறார்கள்

    மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் மறைந்த மூத்த மகனான சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தி. இவர் தீவிர வனவிலங்கு உரிமை ஆர்வலராகவும் சுற்றுபுற சூழல் ஆர்வலராகவும் செயல்படுபவர். தற்போது ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்த மக்களவை உறுப்பினராக இருக்கும் இவர் பல முறை மக்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.

    இந்துக்கள் வழிபடும் தெய்வமான பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரால் இந்தியாவை சேர்ந்த இந்து மதகுரு 'ஸ்ரீபக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதர்' என்பவரால் தொடங்கப்பட்ட இயக்கம், இஸ்கான் எனும் "சர்வதேச கிருஷ்ணர் விழிப்புணர்வுக்கான சமூக அமைப்பு" (ISKCON). "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா" இயக்கம் எனவும் வழங்கப்படும் இந்த இயக்கத்திற்கு, அமெரிக்கா உட்பட பல்வேறு மேற்கத்திய நாடுகளிலும் கிளைகள் உள்ளது. தங்கள் கோட்பாடுகளில் ஒன்றாக சைவ உணவு பழக்கத்தை பிரச்சாரம் செய்யும் இவர்கள் உணவில் பாலை முக்கிய பொருளாக சேர்த்து கொள்ளும் பழக்கமுள்ளதால் பசுக்களை வளர்ப்பதில் ஈடுபாடுடையவர்கள். அதற்காக பசுக்களை வளர்க்கும் கோசாலைகளை அதிகளவில் பராமரித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், மேனகா காந்தி, இந்த அமைப்பின் மீது குற்றம்சாட்டி வீடியோ பதிவிட்டுள்ளார்.

    அவர் கூறியிருப்பதாவது:

    இஸ்கான் நாட்டிலேயே மிக பெரிய மோசடி அமைப்பு. அவர்கள் கோசாலை அமைக்க அரசாங்கத்திடமிருந்து உதவிகளை பெற்று பெரிய நிலபரப்புகளை பெற்று கொள்கிறார்கள். பால் மற்றும் பசு வளர்ப்பை ஊக்கப்படுத்தி பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், அவர்களை போல் பசுக்களை இறைச்சிக்கு அதிகளவில் விற்பனை செய்பவர்கள் யாருமில்லை. ஆந்திராவிலுள்ள அனந்தபூர் கோசாலைக்கு சென்றிருந்தேன். அங்கு பால் தருவதை நிறுத்தியதால் பராமரிக்கப்படும் பசுக்கள் ஒன்றை கூட என்னால் காண முடியவில்லை. அனேகமாக அவர்கள் பசுக்களை கசாப்பு கடைக்காரர்களுக்கு விற்று விடுகிறார்கள்.

    இவ்வாறு மேனகா தெரிவித்திருந்தார்.

    இக்குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து இஸ்கான் இயக்க செய்தி தொடர்பாளர் யுதிஷ்டிர் கோவிந்தா தாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அவர் அதில் கூறியதாவது;

    மேனகா காந்தியின் இந்த கருத்து ஆச்சரியத்தை அளிக்கிறது. மாட்டிறைச்சியை பெருமளவில் உண்ணும் பல நாடுகளில் கூட இஸ்கான் பசுக்களை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் 60க்கும் மேற்பட்ட கோசாலைகளை அமைத்து பசுக்களையும், எருதுக்களையும் அவை பால் சுரப்பதை நிறுத்திய பிறகும் கூட அதன் வாழ்நாள் முழுவதும் இஸ்கான் பராமரித்து வருகிறது. விபத்தில் காயமடைந்த பசுக்களையும், கசாப்பு கடைக்கு கொண்டு செல்லப்படும் பசுக்களையும் மீட்டு வளர்த்து வருகிறது. எங்கள் அமைப்பின் கோசாலைகளை நேரில் கண்டு பலர் பாராட்டியுள்ளனர். உள்ளூர் அதிகாரிகளால் தரப்பட்ட சில கோப்புகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றை பரிசீலித்தால் உண்மை விளங்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 7-ந்தேதி கிருஷ்ணர் அவதரித்த மதுரா முறைப்படியும் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெறுகிறது.
    • கிருஷ்ணன், ராதை அலங்காரம் செய்து வரும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது.

    நெல்லை:

    பாளை வண்ணார்பேட்டை இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிற 6, 7-ந்தேதிகளில் நடக்கிறது. 6-ந்தேதி தமிழக முறைப்படியும், 7-ந்தேதி கிருஷ்ணர் அவதரித்த மதுரா முறைப்படியும் விழா நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் சிறப்பு தரிசனம், சிறப்பு பூஜைகள், மகா ஆரத்தி, ஹரிநாம சங்கீர்த்தனம் நடைபெறுகிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. கிருஷ்ணன், ராதை அலங்காரம் செய்து வரும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

    • பக்தர்கள் கிருஷ்ணன் புகழ் பாடும் சங்கீர்த்தனம் பாடினர்.
    • பக்தர்கள் தயாரித்த 1008 உணவு பதார்த்தங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

    கோவை கொடிசியாக அருகே புகழ்பெற்ற இஸ்கான் ஜெகநாதர் கோவில் உள்ளது. இங்கு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஜெக நாதர், பலதேவர், சுபத்ரா தேவியருக்கு திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த பந்தல் மேடையில் ஜெகநாதர், பலதேவர், சுபத்ராதேவி எழுந்தருளினர்.

    அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கிருஷ்ணன் புகழ் பாடும் சங்கீர்த்தனம் பாடினர். அதை்தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர், மலர் களை கொண்டு விக்ரகங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என்று பக்தி முழுக்கங்களை எழுப்பினர்.

    அதைத்தொடர்ந்து சுவாமிக்கு பக்தியுடன் பக்தர்கள் தயாரித்த 1008 உணவு பதார்த்தங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. நாட்டின் கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக பாரம்பரிய தென்னிந்திய மற்றும் வடஇந்திய உணவு வகைகள் ஜெகநாதருக்கு படைக்கப்பட்டன. இதையடுத்து பக்தி வினோத சுவாமி ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.இதுகுறித்து இஸ்கான் அமைப்பினர் கூறுகையில், ஒடிசா மாநிலத் தில் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலில் ஆண்டு தோறும் தேரோட்டத்திற்கு முன்பு மூலவருக்கு திருமஞ்சன அபிஷேகம் நடைபெறும். அதை பின்பற்றி கோவை இஸ்கான் கோவிலில் ஜெகநாதருக்கு திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. இஸ்கான் அமைப்பு சார்பில் கோவையில் வருகிற 24-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது என்றனர்.

    • ஜூலை 1 முதல் ஜூலை 10 வரை ரத யாத்திரை கொண்டாட்டம்.
    • ஊர்வலப் பாதை முழுவதும் பிரசாதம் வழங்கப்படும்.

    சென்னை : நாளை (ஞாயிற்றுக்கிழமை) 39-வது ஸ்ரீ ஜகந்நாதர் ரத யாத்திரை விழாவைக் கொண்டாடுகிறது. இது இஸ்கானின் நிறுவனர்-ஆச்சார்யா ஸ்ரீல பிரபுபாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டது, அவருடைய 125 வது பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. பூரி ஜெகநாதர் கோயில் நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி, இந்த ஆண்டு முதல், இந்தியாவில் உள்ள அனைத்து இஸ்கான் கோயில்களும் ஜூலை 1 முதல் ஜூலை 10 வரை ரத யாத்திரையைக் கொண்டாடும்.

    தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரத யாத்திரை திருவிழா மீண்டும் தொடங்குகிறது, மேலும் குடிமக்களின் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக ஆசீர்வதிக்க இறைவன் கோவிலை விட்டு வெளியே வருகிறார். ஆளும் குழுவின் (ஜிபிசி) தலைவர் எச்.எச்.பானு சுவாமி மகராஜ் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து ஆசிர்வதிப்பார்.

    ஸ்ரீ எம்.கே. சிறப்பு விருந்தினராக அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ., மோகன்குமார், சிறப்பு விருந்தினராக திருமால் திருமகள் மண்டப உரிமையாளர் ஸ்ரீ கே.கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    ரத யாத்திரைக்கு திட்டமிடப்பட்ட பகுதி மற்றும் பாதை மற்ற ஆண்டுகளில் இருந்து வேறுபட்டது.

    ரதம் பிற்பகல் 3 மணியளவில் விஜயாஸ்ரீ மஹாலில் இருந்து புறப்படும், 3-வது அவென்யூ அண்ணாநகர், கே4 காவல் நிலைய சாலை, 6வது அவென்யூ, 13வது மெயின் ரோடு, 18வது மெயின் ரோடு, 100 அடி சாலை, வடக்கு மெயின் ரோடு, பார்க் ரோடு வழியாக செல்லும். பாடி மேம்பாலம் சேவை பாதை வழியாக திருமால் திருமகள் மண்டபத்தில் முடிவடையும்.

    பக்தர்கள் ரதம் இழுத்தும், பாடியும், கீர்த்தனையும் ஆடியபடி ஊர்வலம் வண்ணமயமான காட்சியாக இருக்கும். திருமால் திருமகள் மண்டபத்தில் ஆரத்தி நடைபெறும். சிறப்பு விருந்தாக, ஸ்ரீல பிரபுபாதா தியேட்டர்ஸ் வழங்கும் தமிழ் நாடகம் "ஸ்ரீ நீல மாதவர்". ஊர்வலப் பாதை முழுவதும் பிரசாதம் வழங்கப்படும், மேலும் மண்டபத்தில் கூடியிருந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்.

    அனைவரும் கலந்து கொண்டு ஜெகநாதரின் அருளைப் பெறுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.

    மேலும் தகவலுக்கு, 044-24530921/23 என்ற எண்ணில் அழைக்கவும், www.iskconchennai.org ஐப் பார்க்கவும்.

    ×