search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ISKCON"

    • பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரால் ஸ்ரீபக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதர் என்பவரால் நிறுவப்பட்டது இஸ்கான்
    • கோசாலை அமைக்க அரசாங்கத்திடமிருந்து உதவிகளை பெறுகிறார்கள்

    மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் மறைந்த மூத்த மகனான சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தி. இவர் தீவிர வனவிலங்கு உரிமை ஆர்வலராகவும் சுற்றுபுற சூழல் ஆர்வலராகவும் செயல்படுபவர். தற்போது ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்த மக்களவை உறுப்பினராக இருக்கும் இவர் பல முறை மக்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.

    இந்துக்கள் வழிபடும் தெய்வமான பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரால் இந்தியாவை சேர்ந்த இந்து மதகுரு 'ஸ்ரீபக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதர்' என்பவரால் தொடங்கப்பட்ட இயக்கம், இஸ்கான் எனும் "சர்வதேச கிருஷ்ணர் விழிப்புணர்வுக்கான சமூக அமைப்பு" (ISKCON). "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா" இயக்கம் எனவும் வழங்கப்படும் இந்த இயக்கத்திற்கு, அமெரிக்கா உட்பட பல்வேறு மேற்கத்திய நாடுகளிலும் கிளைகள் உள்ளது. தங்கள் கோட்பாடுகளில் ஒன்றாக சைவ உணவு பழக்கத்தை பிரச்சாரம் செய்யும் இவர்கள் உணவில் பாலை முக்கிய பொருளாக சேர்த்து கொள்ளும் பழக்கமுள்ளதால் பசுக்களை வளர்ப்பதில் ஈடுபாடுடையவர்கள். அதற்காக பசுக்களை வளர்க்கும் கோசாலைகளை அதிகளவில் பராமரித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், மேனகா காந்தி, இந்த அமைப்பின் மீது குற்றம்சாட்டி வீடியோ பதிவிட்டுள்ளார்.

    அவர் கூறியிருப்பதாவது:

    இஸ்கான் நாட்டிலேயே மிக பெரிய மோசடி அமைப்பு. அவர்கள் கோசாலை அமைக்க அரசாங்கத்திடமிருந்து உதவிகளை பெற்று பெரிய நிலபரப்புகளை பெற்று கொள்கிறார்கள். பால் மற்றும் பசு வளர்ப்பை ஊக்கப்படுத்தி பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், அவர்களை போல் பசுக்களை இறைச்சிக்கு அதிகளவில் விற்பனை செய்பவர்கள் யாருமில்லை. ஆந்திராவிலுள்ள அனந்தபூர் கோசாலைக்கு சென்றிருந்தேன். அங்கு பால் தருவதை நிறுத்தியதால் பராமரிக்கப்படும் பசுக்கள் ஒன்றை கூட என்னால் காண முடியவில்லை. அனேகமாக அவர்கள் பசுக்களை கசாப்பு கடைக்காரர்களுக்கு விற்று விடுகிறார்கள்.

    இவ்வாறு மேனகா தெரிவித்திருந்தார்.

    இக்குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து இஸ்கான் இயக்க செய்தி தொடர்பாளர் யுதிஷ்டிர் கோவிந்தா தாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அவர் அதில் கூறியதாவது;

    மேனகா காந்தியின் இந்த கருத்து ஆச்சரியத்தை அளிக்கிறது. மாட்டிறைச்சியை பெருமளவில் உண்ணும் பல நாடுகளில் கூட இஸ்கான் பசுக்களை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் 60க்கும் மேற்பட்ட கோசாலைகளை அமைத்து பசுக்களையும், எருதுக்களையும் அவை பால் சுரப்பதை நிறுத்திய பிறகும் கூட அதன் வாழ்நாள் முழுவதும் இஸ்கான் பராமரித்து வருகிறது. விபத்தில் காயமடைந்த பசுக்களையும், கசாப்பு கடைக்கு கொண்டு செல்லப்படும் பசுக்களையும் மீட்டு வளர்த்து வருகிறது. எங்கள் அமைப்பின் கோசாலைகளை நேரில் கண்டு பலர் பாராட்டியுள்ளனர். உள்ளூர் அதிகாரிகளால் தரப்பட்ட சில கோப்புகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றை பரிசீலித்தால் உண்மை விளங்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 7-ந்தேதி கிருஷ்ணர் அவதரித்த மதுரா முறைப்படியும் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெறுகிறது.
    • கிருஷ்ணன், ராதை அலங்காரம் செய்து வரும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது.

    நெல்லை:

    பாளை வண்ணார்பேட்டை இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிற 6, 7-ந்தேதிகளில் நடக்கிறது. 6-ந்தேதி தமிழக முறைப்படியும், 7-ந்தேதி கிருஷ்ணர் அவதரித்த மதுரா முறைப்படியும் விழா நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் சிறப்பு தரிசனம், சிறப்பு பூஜைகள், மகா ஆரத்தி, ஹரிநாம சங்கீர்த்தனம் நடைபெறுகிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. கிருஷ்ணன், ராதை அலங்காரம் செய்து வரும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

    • பக்தர்கள் கிருஷ்ணன் புகழ் பாடும் சங்கீர்த்தனம் பாடினர்.
    • பக்தர்கள் தயாரித்த 1008 உணவு பதார்த்தங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

    கோவை கொடிசியாக அருகே புகழ்பெற்ற இஸ்கான் ஜெகநாதர் கோவில் உள்ளது. இங்கு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஜெக நாதர், பலதேவர், சுபத்ரா தேவியருக்கு திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த பந்தல் மேடையில் ஜெகநாதர், பலதேவர், சுபத்ராதேவி எழுந்தருளினர்.

    அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கிருஷ்ணன் புகழ் பாடும் சங்கீர்த்தனம் பாடினர். அதை்தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர், மலர் களை கொண்டு விக்ரகங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என்று பக்தி முழுக்கங்களை எழுப்பினர்.

    அதைத்தொடர்ந்து சுவாமிக்கு பக்தியுடன் பக்தர்கள் தயாரித்த 1008 உணவு பதார்த்தங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. நாட்டின் கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக பாரம்பரிய தென்னிந்திய மற்றும் வடஇந்திய உணவு வகைகள் ஜெகநாதருக்கு படைக்கப்பட்டன. இதையடுத்து பக்தி வினோத சுவாமி ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.இதுகுறித்து இஸ்கான் அமைப்பினர் கூறுகையில், ஒடிசா மாநிலத் தில் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலில் ஆண்டு தோறும் தேரோட்டத்திற்கு முன்பு மூலவருக்கு திருமஞ்சன அபிஷேகம் நடைபெறும். அதை பின்பற்றி கோவை இஸ்கான் கோவிலில் ஜெகநாதருக்கு திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. இஸ்கான் அமைப்பு சார்பில் கோவையில் வருகிற 24-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது என்றனர்.

    • ஜூலை 1 முதல் ஜூலை 10 வரை ரத யாத்திரை கொண்டாட்டம்.
    • ஊர்வலப் பாதை முழுவதும் பிரசாதம் வழங்கப்படும்.

    சென்னை : நாளை (ஞாயிற்றுக்கிழமை) 39-வது ஸ்ரீ ஜகந்நாதர் ரத யாத்திரை விழாவைக் கொண்டாடுகிறது. இது இஸ்கானின் நிறுவனர்-ஆச்சார்யா ஸ்ரீல பிரபுபாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டது, அவருடைய 125 வது பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. பூரி ஜெகநாதர் கோயில் நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி, இந்த ஆண்டு முதல், இந்தியாவில் உள்ள அனைத்து இஸ்கான் கோயில்களும் ஜூலை 1 முதல் ஜூலை 10 வரை ரத யாத்திரையைக் கொண்டாடும்.

    தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரத யாத்திரை திருவிழா மீண்டும் தொடங்குகிறது, மேலும் குடிமக்களின் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக ஆசீர்வதிக்க இறைவன் கோவிலை விட்டு வெளியே வருகிறார். ஆளும் குழுவின் (ஜிபிசி) தலைவர் எச்.எச்.பானு சுவாமி மகராஜ் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து ஆசிர்வதிப்பார்.

    ஸ்ரீ எம்.கே. சிறப்பு விருந்தினராக அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ., மோகன்குமார், சிறப்பு விருந்தினராக திருமால் திருமகள் மண்டப உரிமையாளர் ஸ்ரீ கே.கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    ரத யாத்திரைக்கு திட்டமிடப்பட்ட பகுதி மற்றும் பாதை மற்ற ஆண்டுகளில் இருந்து வேறுபட்டது.

    ரதம் பிற்பகல் 3 மணியளவில் விஜயாஸ்ரீ மஹாலில் இருந்து புறப்படும், 3-வது அவென்யூ அண்ணாநகர், கே4 காவல் நிலைய சாலை, 6வது அவென்யூ, 13வது மெயின் ரோடு, 18வது மெயின் ரோடு, 100 அடி சாலை, வடக்கு மெயின் ரோடு, பார்க் ரோடு வழியாக செல்லும். பாடி மேம்பாலம் சேவை பாதை வழியாக திருமால் திருமகள் மண்டபத்தில் முடிவடையும்.

    பக்தர்கள் ரதம் இழுத்தும், பாடியும், கீர்த்தனையும் ஆடியபடி ஊர்வலம் வண்ணமயமான காட்சியாக இருக்கும். திருமால் திருமகள் மண்டபத்தில் ஆரத்தி நடைபெறும். சிறப்பு விருந்தாக, ஸ்ரீல பிரபுபாதா தியேட்டர்ஸ் வழங்கும் தமிழ் நாடகம் "ஸ்ரீ நீல மாதவர்". ஊர்வலப் பாதை முழுவதும் பிரசாதம் வழங்கப்படும், மேலும் மண்டபத்தில் கூடியிருந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்.

    அனைவரும் கலந்து கொண்டு ஜெகநாதரின் அருளைப் பெறுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.

    மேலும் தகவலுக்கு, 044-24530921/23 என்ற எண்ணில் அழைக்கவும், www.iskconchennai.org ஐப் பார்க்கவும்.

    ×