search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைக்கோல் போர் எரிந்து நாசம்
    X

    வைக்கோல் போர் எரிந்து நாசம்

    • சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கரும்புகை மண்டலம் போல காட்சியளித்தது.
    • தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அகரவெளி சுப்பிரமணியன் என்பவரது வீட்டு கொல்லையிலுள்ள வைக்கோல் போர் திடீரென தீப்பிடித்து எறிய துவங்கியது.

    இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக நீரை கொண்டு தீயை அணைக்க முயற்சித்தனர் இருப்பினும் தீ மளமளவென பரவி சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கரும்புகை மண்டலம் போல காட்சியளித்தது.

    தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேளாங்கண்ணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் நீரை பீச்சு அடித்து தீயை அணைக்க முற்பட்டனர்.

    தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிய நிலையில் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மின் கம்பியில் அந்த பகுதியில் உள்ள தென்னை மரத்தில் உரசியதில் ஏற்பட்ட தீ வைக்கோல் போரில் பற்றியதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து மின் கசிவு ஏற்பட்ட இடத்தில் திருக்குவளைத் துணை மின் நிலைய பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருக்குவளை அருகே மின் கசிவு காரணமாக வைக்கோல் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×