search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டு கொட்டகை தீ பிடித்து வாகனங்கள் எரிந்து நாசம்
    X

    வீட்டு கொட்டகை தீ பிடித்து வாகனங்கள் எரிந்து நாசம்

    • வீட்டு கொட்டகை தீ பிடித்து வாகனங்கள்-தானியங்கள் எரிந்து நாசமானது.
    • வாசல் வழியாக வெளியேறி உயிர் தப்பினர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் 3-வது வார்டு மேற்கு தண்ணீர்தொட்டி தெருவை சேர்ந்தவர் நீதி (வயது 50). விவசாயி. இவரது மனைவி லட்சுமி(47). இவர்களது மகன் பிரபாகரன்(34), மகள் பிரியா(33). இதில் பிரியாவுக்கு திருமணமாகி கூகையூரில் தனது கணவர் முருகனுடன் வசித்து வருகிறார். பிரபாகரனுக்கு திருமணமாகி பெற்றோருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று பிரபாகரன் அவரது மனைவியுடன் களரம்பட்டிக்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் நீதி, லட்சுமி ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் நீதியின் வீட்டையொட்டி முன்புறம் கல்நார் வேயப்பட்டு அமைக்கப்பட்டிருந்த கொட்டகை தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து கண் விழித்த நீதி, கொட்டகை கொழுந்துவிட்டு எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரும், லட்சுமியும் உடனடியாக வீட்டின் பின்புற வாசல் வழியாக வெளியேறி உயிர் தப்பினர். இதில் பைக் மற்றும் தானியங்கள் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×