search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அபிஷேக பொருட்களும் பலன்களும்
    X

    அபிஷேக பொருட்களும் பலன்களும்

    • தேன் - இனிய குரல்வளம் தரும் நெய் - வீடுபேறு அடைய உதவும்
    • பன்னீர் - புகழ் சேர்க்கும் சந்தனம் - செல்வம் உண்டாகும்

    சந்தனாதித் தைலம் - சுகம் தரும்

    நல்எண்ணை - விஷசுரம் நிவர்த்தி

    பால் - தீர்க்காயுள் தரும்

    தயிர் - நன்மக்கட்பேறு

    தேன் - இனிய குரல்வளம் தரும்

    நெய் - வீடுபேறு அடைய உதவும்

    சர்க்கரை - எதிரிகள் தொல்லை நீங்குதல்

    பஞ்சாமிர்தம் - உடல் வலிமை தரும்

    மாம்பழம் - வெற்றியைத் தரும்

    கரும்புசாறு - நல்ல உடல் நலம்

    இளநீர் - போகம் அளிக்கும்

    எலுமிச்சம் பழம் - சகல பகையை அழிக்கும்

    அன்னம் - சகல பாக்கியங்களும் தரும்

    பன்னீர் - புகழ் சேர்க்கும்

    சந்தனம் - செல்வம் உண்டாகும்

    நறுமணப்பொடி - கடன், நோய் தீரம்

    ஆண் தெய்வமூர்த்திக்கு நறுமணப் பொடியும், பெண் தெய்வமூர்த்திக்கு நறுமணப் பொடியும், மஞ்சள்தூளும் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    மஞ்சள் தூள் - மங்களம் அளித்திடும்

    விபூதி - கர்மவினைகளை நீக்கி மோட்சம் அளிக்கும்

    சொர்ணாபிஷேகம் - ஐஸ்வர்யம் வரும்

    ஒவ்வொரு அபிஷேகத்தின் இடையிலும் சுத்தநீர் - சாந்தி தரும்.

    தில்லை தீர்த்தங்கள் பத்து

    1. சிவகங்கை

    2. பரமானந்த கூபம் (சித்சபைக்கு கிழக்குப் பக்கத்தில் கிணறு வடிவில் சக்தி வடிவம் பொருந்தியது)

    3. வியாக்கிரபாத தீர்த்தம் (இளமையாக்கினர் கோவில்)

    4. அனந்த தீர்த்தம் (திருஅனந்தேஸ்சுரத்துக்கு முன்பு உள்ளது)

    5. நாகச்சேரி (திருஅனந்தேஸ்சுரத்துக்கு மேற்பாங்கான உள்ள திருக்குளம்)

    6. பிரமதீர்த்தம்

    7. சிவப்பிரியை

    8. புலிமடு

    9. குய்ய தீர்த்தம்

    10. திருப்பாற்கடல்

    பிரபஞ்சத்தின் மையம்

    பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாதர், திருமூலர் ஆகியோரால் பூஜிக்கப் பெற்ற சுயம்புலிங்கம்தான் ஆதிமூலநாதர். இதுதான் பிரபஞ்சங்களின் மையமாகும்.

    ஆதியந்த மற்றது. ஆகாயத்தின் மையம் இதுவேயாகும். ஒரு காலத்தில் பெரும் வனமான தில்லை மரங்கள் அடர்ந்த காட்டில் ஊடே வியாக்ரபாதரால் பூஜிக்கப்பட்ட சுயம்புலிங்கம் தில்லை மரங்கள் நிறைந்த வனம்தான் இன்றைய சிதம்பரம்.

    எனவே சிதம்பரத்திற்கு தில்லை என்ற பெயரே பிரசித்தி பெற்று விளங்குகிறது.

    ஆதிமூலநாதர் சன்னதி இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும் நடராஜர் சன்னதி இரவு 10 மணிக்கே அர்த்தஜாம பூஜை நடைபெறும் முதலாவது அர்த்தஜாம பூஜையும், கடைசியாக அர்த்தஜாம பூஜையும் நடக்கும் இடம் தில்லையில் மட்டுமே.

    தில்லையம்பலவாணன் தினசரி பூஜைகள்

    தில்லை திருத்தலத்தில் திருநடனம் புரிந்தருளும் நடராஜ மூர்த்திக்கு நாள்தோறும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை மூன்று, மாலையில் மூன்று பூஜைகள் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பள்ளியறையில் பால், பொரி, பழம் முதலியன நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்து சுவாமியின் பாதுகையை வெள்ளி, தங்க பல்லக்கில் எழுந்தருளச் செய்து கொண்டு வந்து நடராஜரின் அருகில் வைத்து, நடராஜருக்கும் சிவகாமசுந்தரியம்பாளுக்கும் பால், பொரி, பழம் முதலியன நைவேத்தியம் செய்து தீபாராதனை செய்தும் வருகின்றனர். இது `திருவனந்தல்' என்றும், பால் நைவேத்தியம் என்றும் அழைக்கப்படும் இது ஆறு கால பூஜைகளில் சேர்ந்தல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×