search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ajar"

    • சிறப்பு புலனாய்வு குழு போலீசாருடன் ஆலோசனை.
    • பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக `புளூ கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்க பரிந்துரை.

    பாலியல் புகாரில் சிக்கி உள்ள பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. விசாரணைக்கு ஆஜராக கூறி ஏற்கனவே ஒருமுறை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

    ஆனால் ஜெர்மனியில் இருப்பதால் தன்னால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று சமூக வலைதள பதிவு மூலம் தகவல் தெரிவித்த பிரஜ்வல் ரேவண்ணா, அவரது வக்கீல் மூலம் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக 7 நாட்கள் கால அவகாசம் கேட்டார். அதை ஏற்காத சிறப்பு புலனாய்வு குழு போலீசார், தேடப்படும் நபராக பிரஜ்வல் ரேவண்ணாவை அறிவித்து லுக்-அவுட் நோட்டீஸ் வழங்கினர்.

    இவ்வழக்கில் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையா, சிறப்பு புலனாய்வு குழு போலீசாருடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சி.பி.ஐ. 'புளூ கார்னர்' நோட்டீஸ் வழங்கினால் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் பிரஜ்வல் ரேவண்ணா எங்கு இருக்கிறார் மற்றும் அவரது நடவடிக்கைகள் குறித்து எளிதில் தெரிந்து கொள்ள முடியும் என்று அதிகாரிகள் கூறினர்.

    இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக 'புளூ கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்க மத்திய உளவுத்துறை (இன்டர்போல்) உடன் நேரடி தொடர்பில் உள்ள சி.பி.ஐ.யிடம் கர்நாடக அரசு மூலம் பரிந்துரைத்துள்ளனர். இதன் மூலம் பிரஜ்வல் ரேவண்ணாவை வெளிநாட்டில் வைத்து கைது செய்து அழைத்து வர நடவடிக்கை எடுக்க திட்டமிட்டனர்.

    இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா துபாயில் இருந்து இன்று பிற்பகல் பெங்களூரில் உள்ள தேவனஹள்ளி விமான நிலையத்துக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து சிறப்பு புலனாய்வு படையினர் பெங்களூர் தேவனஹள்ளி விமான நிலையத்துக்கு விரைந்துள்ளனர். அங்கு வைத்து அவரை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

    • நகர போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
    • வாரம் 2 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி, கனகசபை மீது பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாகவும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்தும் சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாக பாஜக மாநிலச் செயலர் எஸ்.ஜி.சூர்யா, அந்த கட்சி நிர்வாகி கவுசிக் சுப்ரமணியம் ஆகியோர் மீது சிதம்பரம் கிராம நிர்வாக அலுவலர் ஷேக் சிராஜூதின் அளித்த புகாரின்பேரில், நகர போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற மேற்கண்ட இருவரும் சிதம்பரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண் 2-ல் ஆகஸ்ட் 9-ம் தேதி நீதிபதி சக்திவேல் முன்பு ஆஜராகினர். அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா வாரம் 2 நாட்கள் கையெழுத்திட வேண்டும். என உத்தரவு பிறப்பித்ததை அடுத்து சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் முன்னிலையில் நிபந்தனை ஜாமீன் கையேட்டில் எஸ்.ஜி.சூர்யா கையெழு த்திட்டார். அவருடன் பாஜக முன்னாள் ராணுவவீரப் பிரிவு செயலாளர் பால சுப்பிரமணியன், விவசாயி அணி தலைவர் ரகுபதி உள்ளிட்டோர் உடன் வந்தனர்.

    ×