search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசியாபாத்"

    • வளர்ப்பு நாய் திடீரென சைக்கிள் ஓட்டிய சிறுமி மீது பாய்ந்து கடித்தது.
    • பாதுகாவலர் ஓடிச்சென்று நாயிடம் இருந்து சிறுமியை காப்பாற்ற உதவினார்.

    உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் அஜ்னாரா இன்டக்ரிட்டி ஹவுசிங் சொசைட்டி சாலை பகுதியில் 6 வயது சிறுமி சைக்கிள் ஓட்டி சென்று கொண்டு இருந்தார். அவருடன் சிறுமியின் தாய் நடந்து சென்றார்.

    அப்போது ஜெர்மன் ஷெப்பர்ட் வளர்ப்பு நாய் ஒன்றுடன் இளம்பெண் ஒருவர் அந்த வழியாக சென்று கொண்டிருந்தார்.

    இந்நிலையில் அந்த வளர்ப்பு நாய் திடீரென சைக்கிள் ஓட்டிய சிறுமி மீது பாய்ந்து கடித்தது. உடனே அந்த நாயின் உரிமையாளரான இளம் பெண் கயிற்றை இழுத்து நாயை கட்டுப்படுத்த முயன்றார். மேலும் அந்த நாய் மீண்டும் கடிக்க பாய்ந்தது.



    அப்போது அங்கு நின்ற சிறுமியின் தாய் ஓடி வந்து நாயை விரட்டி மகளை காப்பாற்ற முயன்றார். ஆனாலும் நாயை கட்டுப்படுத்த முடிய வில்லை. பின்னர் இதை கவனித்த அப்பகுதி பாதுகாவலர் ஒருவர் ஓடிச்சென்று அந்த நாயிடம் இருந்து சிறுமியை காப்பாற்ற உதவினார்.

    இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது இணைய தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.




    இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் நமிதா சவுகான் காசியாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.அதில் சிறுமியை கடித்த நாய்க்கு முகமூடி அணிந்திருக்க வில்லை என்றும் அவர் தனது புகாரில் கூறி உள்ளார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காசியாபாத்தில் தற்போது நாய்க்கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

    • வீட்டில் தங்கியிருந்தவர் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு ஆலையை நடத்தி வந்துள்ளார்.
    • விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

    உத்திர பிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்தை அடுத்த லோனி பகுதியில் இருந்த இரண்டு மாடிகள் கொண்ட வீட்டின் கட்டிடம் இடிந்து விழுந்ததில், மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் பலத்த காயமுற்றனர்.

    இடிந்து விழுந்த வீட்டை அதன் உரிமையாளர் வாடகைக்கு விட்டிருந்ததாக தெரிகிறது. வீட்டில் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தவர், அதில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு ஆலையை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட விபத்து காரணமாகவே வீடு இடிந்து விழுந்துள்ளது.

    குடியிருப்பு பகுதியில் வீடு இடிந்து விழுந்த சத்தத்தை கேட்டு அங்கு விரைந்த அக்கம்பக்கத்தினர், இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசாருடன், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஏழு பேரை மீட்டனர். மீட்கப்பட்ட ஏழு பேரும் கடுமையாக காயமுற்றனர் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ×