என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து மக்கள் கட்சி"

    • தமிழகத்தில் அண்மைக் காலமாக கள்ளச்சாராய விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
    • திமுக தோ்தல் அறிக்கையின்படி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பாலாஜி அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- தமிழகத்தில் அண்மைக் காலமாக கள்ளச்சாராய விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. அண்மையில் கள்ளச்சாராயம் குடித்த 23 போ் உயிரிழந்துள்ளனா். தமிழக அரசு டாஸ்மாக் கடைகளிலும் போலி மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது. போலி மதுபானம் தயாரிக்கும் ஆலைகளை அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டு காவல் துறையினா் 'சீல்' வைத்து வருகின்றனா். திமுக தோ்தல் அறிக்கையின்படி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கள்ளச்சாராயம் விற்பனை செய்பவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்யவும், தமிழக விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் கள் விற்பனை செய்யவும் அனுமதி அளிக்க வேண்டும்.

    பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரையில் விவசாயிகளிடம் இருந்து கள்ளை தமிழக அரசு கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    • 3 ஆண்டுகள் ஆகியும் வீட்டுமனையும், பணத்தையும் திருப்பித் தராமாலும் காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.
    • பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உழைப்பாளி பூபாலை கைது செய்தனர்.

    திருப்பூர் :

    பெருமாநல்லூா் அருகே காளிபாளையம் குருவாயூரப்பன் நகரைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் மஞ்சுநாதன் (33), கட்டடத் தொழிலாளி. இவரிடம், தைலாம்பாளையத்தில் வீட்டுமனை வாங்கித் தருவதாக கூறி கடந்த 2020ஆம் ஆண்டு, திருப்பூா் செட்டிபாளையம், அய்யங்காளிபாளையம் பகுதியைச் சோ்ந்த வீராசாமி மகன் பாலு (எ) உழைப்பாளி பூபாலு (57) (இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு பொதுச்செயலாளா்) என்பவா் ரூ.5 லட்சம் பெற்றுள்ளாா்.

    இருப்பினும் 3 ஆண்டுகள் ஆகியும் வீட்டுமனை வாங்கித் தராமலும், பணத்தையும் திருப்பித் தராமாலும் காலம் தாழ்த்தி வந்துள்ளாா். இது குறித்து மஞ்சுநாதன் அளித்த புகாரின்பேரில், பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாலு (எ) உழைப்பாளி பூபாலை கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

    • நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் அமைந்துள்ள தபால் நிலையத்தில் ஜனாதிபதிக்கு தபால் தலை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் உடையார் தலைமையில் வண்ணார்பேட்டை சாலை தெருவில் உள்ள தபால் நிலையத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினர்.

    நெல்லை:

    இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல செயலாளர் ராஜா பாண்டியன் தலைமையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் அமைந்துள்ள தபால் நிலையத்தில் ஜனாதிபதிக்கு தபால் தலை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

    இதில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மும்மொழி கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தமிழகம் முழுவதும் நவோதயா பள்ளிகளை திறந்திட வேண்டும் என்று மாநில அரசை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினர்.

    தொடர்ந்து தமிழகத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வழங்கும் சலுகைகளை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி அதனை வழங்கி வரும் அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் உடையார் தலைமையில் வண்ணார்பேட்டை சாலை தெருவில் உள்ள தபால் நிலையத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினர்.

    • இந்துக்களை தாக்கிய காலிஸ்தான் பயங்கரவாதிகளை அடக்க கனடா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட இருந்தது.
    • இந்திய தூதரக அதிகாரிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கனடா கூறியது.

    கனடாவில் இந்து கோவிலுக்குள் பக்தர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் போராட்டம் நடத்த இருந்தார்.

    இந்துக்களை தாக்கிய காலிஸ்தான் பயங்கரவாதிகளை அடக்க கனடா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட இருந்தது.

    இந்நிலையில் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போராட்டத்திற்கு முன்பே அர்ஜூன் சம்பத் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக, கனடாவில் வசித்த காலிஸ்தான் அமைப்பு தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    சமீபத்தில் இவ்விவகாரத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கனடா கூறியது.

    இதற்கிடையே கனடாவின் பிரம்ப்டன் நகரில் இந்து கோவிலுக்குள் காலிஸ்தான் ஆதரவாளர்கள் புகுந்து பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐகோர்ட்டை விட்டு வெளியே வந்த ஓம்கார் பாலாஜியை கோவை போலீசார் கைது செய்தனர்.
    • தடையை மீறி போராட்டம் நடத்த வந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

    கோவை:

    ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாக கோவையில் கடந்த மாதம் 27-ந்தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் நக்கீரன் கோபால் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக ஓம்கார் பாலாஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு ஓம்கார் பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது ஓம்கார் பாலாஜியை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 13-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதற்கு ஓம்கார் பாலாஜி மன்னிப்பு கேட்க மறுத்ததால் அவரை கைது செய்ய ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டிக்க நீதிபதி மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து ஐகோர்ட்டை விட்டு வெளியே வந்த ஓம்கார் பாலாஜியை கோவை போலீசார் கைது செய்தனர்.

    ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.

    தடையை மீறி போராட்டம் நடத்த வந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத்தை கோனியம்மன் கோவில் அருகே போலீசார் கைது செய்தனர். மொத்தம் 25 பேர் கைதானார்கள். அவர்களை அங்குள்ள தனியார் மண்டபத்தில் போலீசார் தங்க வைத்துள்ளனர்.

    இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தால் கோவையில் இன்று பரபரப்பு நிலவியது.

    • பெரிய கடைவீதி போலீஸ் நிலையத்தில் தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி சரவணன் என்பவர் புகார் செய்தார்.
    • இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது கலகம் உண்டாக்குதல், வதந்தி பரப்புதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் பெரிய கடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை:

    கோவை கெம்பட்டி காலனியில் இந்து மக்கள் கட்சியின் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கிருக்கும் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகள், அக்கட்சியின் சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கடந்த 7-ந்தேதி வீடியோ வெளியிட்டனர்.

    இது குறித்து பெரிய கடைவீதி போலீஸ் நிலையத்தில் தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி சரவணன் என்பவர் புகார் செய்தார். புகாரின் பேரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது கலகம் உண்டாக்குதல், வதந்தி பரப்புதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் பெரிய கடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கட்சியின் முக்கியப் பொறுப்புகள் புதிதாக கட்சியில் இணைந்தவா்களுக்கு வழங்கப்பட்டது.
    • பா.ஜ.க.கட்சி அலுவலகமும் கலைக்கப்பட்டு இந்து மக்கள் கட்சி திருப்பூா் மாவட்ட அலுவலகம் என்ற புதிய பெயா் பலகை முகப்பில் வைத்து பூட்டப்பட்டுள்ளது.

    தாராபுரம் :

    திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைமை அலுவலகம் மத்திய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வந்தது. திருப்பூா் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவா் பொன்.ருத்ரகுமாா் தலைமையில் கட்சிப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இந்த காலகட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவராக இருந்த எல்.முருகன் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா். இதன் பின்னா் பா.ஜ.க. மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற அண்ணாமலை, திருப்பூா் தெற்கு மாவட்ட பா.ஜ.க.தலைவராக அ.தி.மு.க.இருந்து வெளியேறிய மங்கலம் ரவி என்பவரை நியமித்தாா்.

    இந்நிலையில் அண்மையில் திருப்பூா் தெற்கு மாவட்ட, வட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பா.ஜ.க.நிா்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில்,கட்சியின் முக்கியப் பொறுப்புகள் புதிதாக கட்சியில் இணைந்தவா்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிகிறது.

    இதைத்தொடா்ந்து திருப்பூா் தெற்கு மாவட்ட பா.ஜ.க. அலுவலக செயலாளராக இருந்த ஈஸ்வரன் தனது முகநூலில் சிலரது பெயா்களை குறிப்பிட்டு முக்கிய நிா்வாகிகள் பா.ஜ.க.வில் இருந்து விலகி இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜுன் சம்பத் முன்னிலையில் அக்கட்சியில் இணைத்து கொண்டோம் என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளாா்.

    இதையடுத்து அவரது பொறுப்பில் இருந்த பா.ஜ.க.கட்சி அலுவலகமும் கலைக்கப்பட்டு இந்து மக்கள் கட்சி திருப்பூா் மாவட்ட அலுவலகம் என்ற புதிய பெயா் பலகை முகப்பில் வைத்து பூட்டப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருப்பூா் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவா் மங்கலம் ரவி கூறுகையில், கட்சியின் வளா்ச்சிக்காக இளைஞா்கள் பலரை இணைத்துள்ளோம். இதுபிடிக்காத சிலா் கட்சியை விட்டு வெளியேறுவதாக கூறுகின்றனா். மேலும் 5 போ் விலகிவிட்டு 60 போ் என்கின்றனா் என்றாா்.

    ×