என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பா.ஜ.க."
- கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
- கூட்டத்தின்போது தொகுதி வாரியாக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில், மாவட்ட தலைமை அலுவலகத்தில், பாராளுமன்ற தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுசெயலாளர் பாலகுருநாதன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட பார்வையாளர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தல் தயாரிப்பு பணி சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. சட்டமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- அனைத்து திருடர்களின் பெயர்களும் ஏன் "மோடி" என உள்ளது என்றார் ராகுல்
- 2023 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை ராகுல் எம்.பி. பதவியை இழந்திருந்தார்
கடந்த 2019ல் இந்திய பாராளுமன்றத்திற்கான பொது தேர்தல் நடைபெற்றது. அப்போது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரச்சார கூட்டம் ஒன்று கர்நாடகாவில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "அனைத்து திருடர்களின் பெயர்களும் மோடி, மோடி, மோடி என ஏன் உள்ளது? நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி..." என கருத்து தெரிவித்திருந்தார்.
ராகுலின் கருத்து தங்கள் மோடி இனத்தையே அவமதிப்பதாக கூறி 2019, ஏப்ரல் 16 அன்று பா.ஜ.க.வை சேர்ந்த பூர்ணேஷ் மோடி (58) எனும் குஜராத் மாநில சட்டசபை உறுப்பினர், கிரிமினல் அவமதிப்பு வழக்கு ஒன்றை குஜராத் கீழமை நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இதில் ராகுல் குற்றவாளி என தீர்ப்பானது.
அதனை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அங்கும் அவர் குற்றவாளி என தீர்ப்பு உறுதியாகி 2 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டு அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் பறி போனது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு இடைக்கால தடை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் ராகுல் பாராளுமன்ற உறுப்பினரானார். இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கினால், 2023 மார்ச் 24 முதல் 2023 ஆகஸ்ட் 7 வரை ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியை இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தாத்ரா நகர் மற்றும் ஹவேலி யூனியன் பிரதேசத்திலும், கோவா, டமன் மற்றும் டியு யூனியன் பிரதேசத்திலும் உள்ள பா.ஜ.க.வின் அரசியல் விவகாரங்களுக்கான தலைமை பொறுப்பாளராக பூர்ணேஷ் மோடியை பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார்.
இப்பதவி பூர்ணேஷ் இதுவரை ஆற்றிய பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரம் என பா.ஜ.க.வினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
- தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. தீவிரமாக களம் இறங்கியுள்ளன
- காங்கிரசார் ஏதோ மன வியாதியில் உள்ளனர் என பிரதமர் மோடி விமர்சித்தார்
ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் கெலாட் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நவம்பர் 25 அன்று அம்மாநில சட்டசபையில் உள்ள 200 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.
இத்தேர்தலில் வெற்றி பெற தேசிய கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க.வும் தீவிரமாக களமிறங்கி உள்ளன.
முன்னதாக, மத்திய பிரதேசத்தில் ஒரு பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி, மக்கள் அனைவரும் சீனாவில் தயாரிக்கப்படும் மொபைல்களையே பயன்படுத்துகின்றனர் என்றும் இதனை மாற்றி மத்திய பிரதேசத்திலேயே மொபைல் தயாரிப்பை ஊக்குவித்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிப்பதையே காங்கிரஸ் விரும்புகிறது என்றும் அறிவித்திருந்தார்.
நேற்று இது குறித்து தனது பிரசாரத்தில் பிரதமர் மோடி பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஒரு காங்கிரஸ் தலைவர் (ராகுல் காந்தி) சீனாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை மட்டுமே மக்கள் வைத்துள்ளதாக கூறுகிறார். அட அறிவில்லாதவர்களின் தலைவரே, எந்த உலகில் இருக்கிறீர்கள்? இந்தியாவின் வளர்ச்சியை மறைக்கும் அளவு எந்த வெளிநாட்டு கண்ணாடியை அணிந்து கொண்டு நிலைமையை பார்க்கிறீர்கள்? இந்தியாவின் சாதனைகளை புறக்கணிக்கும் அளவிற்கு ஏதோ மன வியாதியில் காங்கிரசார் உள்ளனர்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக "அறிவில்லாதவர்களின் தலைவன்" என விமர்சித்திருப்பதற்கு ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் கருத்து தெரிவித்தார்.
அவர் இது குறித்து தெரிவித்ததாவது:
"இது வருந்தத்தக்க செயல். பிரதமர் பதவிக்கு என்று ஒரு மரியாதை (dignity) உள்ளது. பிரதமரை அதிகம் விமர்சிக்கும் போது, அப்பதவிக்கான மரியாதை குறைந்து விடும். ஆனால், அத்தகைய ஒரு மரியாதைக்குரிய பதவியை வகிக்கும் ஒருவரே (மோடி) இவ்வாறு பேச தொடங்கினால், அவரிடமிருந்து வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?"
இவ்வாறு அசோக் கெலாட் கருத்து தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன் மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சியான சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் சஞ்சய் ராவத், "அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆக போவது உறுதி என்பதால் மோடி ராகுலை கண்டு அஞ்சுகிறார்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- பாராளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கலானது
- வெற்றி வாய்ப்பை மனதில் வைத்தே வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றனர்
இந்தியாவில், இம்மாதம் 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தல்களை அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அரசியல் கட்சிகள் கருதுவதால் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள வேட்பாளர்களையே களத்தில் இறங்கியுள்ளனர்.
அனைத்து கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவருகின்றன. இவற்றில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரு தேசிய கட்சிகளின் பட்டியல்களில் ஆண்களே பெரும்பான்மை வகிக்கின்றனர்.
சமீபத்தில் இந்திய பாராளுமன்றத்திற்கான புதிய கட்டிடத்தில் முதல் சிறப்பு கூட்டத் தொடர் நடைபெற்றது. அதில் நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் பெண் வேட்பாளர்களுக்கு கட்டாயம் 33 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், இரண்டு தேசிய கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் 12 சதவீதத்திற்கும் குறைவாகவே பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் மொத்தம் உள்ள 679 சட்டசபை தொகுதிகளுக்கு, பா.ஜ.க. 643 வேட்பாளர்களையும், காங்கிரஸ் 666 வேட்பாளர்களையும் களம் இறக்கியுள்ளன.
போட்டியில் களம் இறங்கி உள்ள இந்த வேட்பாளர்களில் பா.ஜ.க. 80 சார்பில் பெண் வேட்பாளர்களும், காங்கிரஸ் கட்சி சார்பில் 74 பெண் வேட்பாளர்களும் களம் இறங்கியுள்ளனர்.
நாரி ஷக்தி வந்தன் அதிநியம் (Nari Shakti Vandan Adhiniyam) எனும் பெயரில் பா.ஜ.க. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை தாக்கல் செய்தது. பெண்கள் இட ஒதுக்கீட்டிற்கு தங்கள் கட்சிதான் முதலில் பாடுபட்டதாகவும் தங்கள் முயற்சியில் பா.ஜ.க. நற்பெயர் வாங்கி கொள்ள முயல்வதாகவும் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்து வந்தது.
ஆனால், இரண்டு கட்சிகளுமே வெற்றி வாய்ப்பை மனதில் வைத்துத்தான் வேட்பாளர் தேர்வை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த விஷயத்தில் இரண்டு கட்சிகளுமே பரஸ்பர விமர்சனத்தையும் தவிர்த்து விட்டதை சுட்டி காட்டும் பெண்ணுரிமை ஆர்வலர்கள், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசியல் கட்சிகள் உண்மையில் ஆர்வம் காட்டவில்லை என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.
- மாலையில் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து பா.ஜ.க. கொடியை நாட்ட வந்தார்கள்.
- 60 ஆண்கள், 5 பெண்கள் உட்பட மொத்தம் 65 பேர் மீது திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருவட்டார் :
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவிப்பின்படி நேற்று குமரி மாவட்டம் முழுவதும் பா.ஜ.க. கொடிக்கம்பம் நாட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. திருவட்டார் அருகே சாமியார்மடம் பகுதியில் நேற்று மாலையில் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து பா.ஜ.க. கொடியை நாட்ட வந்தார்கள்.
அதற்கு போலீஸ் அனுமதி வழங்கபட வில்லை. அனுமதியை மீறி அந்த பகுதியில் கொடிக்கம்பம் நட முயற்சி செய்தாக திருவட்டார் மேற்கு ஒன்றிய தலைவர் ராஜேஸ், செறுகோல் ஊராட்சி மன்ற தலைவர் அனுசன் அய்யப்பன், திருவட்டார் ஒன்றிய பார்வை யாளர் சுவாமிதாஸ், திருவட்டார் கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜ்குமார், ஏற்றக்கோடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணசிங், காட்டாத்துறை பகுதியை சேர்ந்த ஸ்ரீ உண்ணி சுரேஷ், செறுகோல் பகுதியை சேர்ந்த பிராங்கிளின், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஷீபா, திருவட்டார் பேரூராட்சி வார்டு உறுப்பினர் ராகிலா, காட்டாத்துறை பகுதியை சேர்ந்த மகேஷ் உட்பட 60 ஆண்கள், 5 பெண்கள் உட்பட மொத்தம் 65 பேர் மீது திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- காங்கிரஸை எதிர்த்து பா.ஜ.க. தீவிரமாக களம் இறங்கி உள்ளது
- 5 வருடங்களில் காங்கிரஸார் என்ன சாதனை செய்தார்கள் என கேட்டார் மோடி
சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டசபையில் உள்ள 90 இடங்களுக்கு இம்மாதம் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.
கடந்த சட்டசபை காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகேல் தலைமையில் ஆட்சி நடைபெற்றது. இதனால், மீண்டும் தொடர்ந்து ஆட்சிக்கு வர காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பா.ஜ.க.வும் தீவிரமாக களம் இறங்கியுள்ளன.
பா.ஜ.க.வை வெற்றியடைய செய்ய இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் இன்று அம்மாநில கன்கெர் நகரத்தில் பா.ஜ.க. ஏற்பாடு செய்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
காங்கிரஸ் இருக்கும் இடத்தில் வளர்ச்சி இருக்காது. மாநில மக்களும், பா.ஜ.க.வும் இணைந்து சத்தீஸ்கர் மாநிலம் உருவாக பாடுபட்டனர். காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போது, இங்குள்ள பா.ஜ.க.வுடன் சண்டையிட்டு கொண்டே இருந்தது. இது ஒரு எம்.எல்.ஏ.வையோ அல்லது முதல்வரையோ தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அல்ல. இது உங்கள் குழந்தைகளின் வருங்காலத்தை குறித்து நீங்கள் முக்கிய முடிவெக்க வேண்டிய தேர்தல். சத்தீஸ்கரின் அடையாளத்தை வலிமைப்படுத்த பா.ஜ.க. உழைக்கிறது. கடந்த 5 வருடங்களில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் சொத்து மதிப்பு கூடியதை தவிர அவர்கள் என்ன சாதனை செய்தார்கள்? ஏழைகள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு என்ன கிடைத்தது? இம்மாநில அரசாங்க அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதில் புது சாதனை படைத்து விட்டனர். மக்களுக்கு தரமில்லாத சாலைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகளே கிடைத்தன.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
- கண்டன ஊர்வலமாக புறப்பட்டு பழைய பஸ் நிலையம் முன்பு சென்றடைந்தனர்.
- ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
மதுக்கூர் அருகே ஆலத்தூரில் பா.ஜ.க. சார்பில் கொடியேற்ற போலீசார் அனுமதி மறுத்ததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மாநில செயலாளர் அஸ்வத்தாமன், மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் உள்பட கட்சியினர் ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் விநாயகம் தலைமையில் மாநகர தலைவர்கள் சதீஷ் (வடக்கு), பாலா (கிழக்கு), வெங்கடேசன் (மேற்கு), மேற்கு மாநகர பொதுச்செயலாளர் மாயக்கண்ணன், கொள்கை பரப்பு பிரிவு மாவட்ட தலைவர் பொன்.மாரியப்பன், மாவட்ட மகளிரணி தலைவி கவிதா, சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் பாரத்ரவீந்திரன், தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், கூட்டுறவு பிரிவு தலைவர் நவீன் உள்பட கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து கண்டன ஊர்வலமாக புறப்பட்டு பழைய பஸ் நிலையம் முன்பு சென்றடைந்தனர். இதையடுத்து ஆலக்குடியில் கைதான பா.ஜ.க.வினரை விடுவிக்கக்கோரியும், கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- பா.ஜ.க. பிரமுகரின் மகள்
- தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்
இரணியல் :
இரணியல் அருகே குருந்தன்கோடு பட்டன் விளை பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 49), மரவேலை செய்து வருகிறார். இவரது மனைவி சிவந்திகனி. பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சிவந்திகனி குருந்தன்கோடு யூனியன் கவுன்சிலராக இருந்து வருகிறார்.
இவரது மகள் சஜித்ரா (19). இவர் வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். சிறு வயதில் இருந்தே உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர் அதற்காக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி காலை வீட்டு மாடி அறையில் சஜித்ரா உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்த நிலையில் தீ காயங்க ளுடன் கிடந்துள்ளார். உட னடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஆசா ரிப்பள்ளம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்த்த னர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி சஜித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இலஞ்சி குமாரர் கோவிலில் பூஜை செய்து புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் சில்லரைபுரவு ஊராட்சி தலைவர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
டெல்லியில் அமைய உள்ள நினைவிடத்திற்கு என் மண் என் தேசம் என்கின்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் தென்காசி தெற்கு ஒன்றியம் சார்பில் இலஞ்சி குமாரர் கோவிலில் பூஜை செய்து புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சில்லரைபுரவு ஊராட்சி மன்ற தலைவரும், தென்காசி தெற்கு ஒன்றிய பா.ஜ.க. பொதுச்செயலாளருமான குமார் தலைமை தாங்கினார். ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் மற்றும் தென்காசி தெற்கு ஒன்றிய பார்வையாளர் செந்தூர்பாண்டியன் முன்னிலை வகித்தார்.
தென்காசி தெற்கு ஒன்றிய பொருளாளர் அய்யப்பன், மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் ராஜ குலசேகர பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன், குற்றாலம் பேரூராட்சி மன்ற முன்னாள் கவுன்சிலர் அசோக்பாண்டியன், குற்றாலம் கிளை தலைவர் செல்வராஜ், குத்துக்கல்வலசை ராம்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கவுன்சிலர் அய்யப்பன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்து கொண்டனர்
- குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க புதியதாக மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி வேண்டுமென கோரிக்கை
என்.ஜி.ஓ.காலனி :
பா.ஜ.க. மாவட்ட தலைவர் தர்மராஜ் அறிவு றுத்தலின் பேரில் நாகர் கோவில் மாநகராட்சிக்குட் பட்ட பொட்டல்விளை பிரதீஷ், சிவகுமார் ஆகியோர்கள் ஏற்பாட்டில் பொட்டல்விளை பா.ஜ.க தொண்டர்கள் அறிமுக கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் பா.ஜ.க.வில் இணையும் நிகழ்ச்சி பா.ஜ.க. பொரு ளாதார பிரிவு குமரி மாவட்ட தலைவரும், நாகர் கோவில் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினருமான ஜவான் அய்யப்பன் தலைமையில் நாகர்கோவில் மாநகராட்சி 50-வது வார்டுக்குட்பட்ட பொட்டல்விளை அம்மன் கோவில் அருகே நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கவுன்சிலர் அய்யப்பன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து இணைந்து கொண்ட அனைவரும் கவுன்சிலர் அய்யப்பனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.
மேலும் வார்டு மக்கள் பயன்பெறும் வகையில் பாரதிய மஸ்தூர் சங்கம் மூலம் கன்னியாகுமரி மாவட்ட தொழிலாளர் நலவாரிய அட்டை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கவுன்சிலர் அய்யப்பன் அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கும் விதமாக புதியதாக மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலா ளர் வக்கீல் ஜெகநாதன் கலந்துகொண்ட அனை வரையும் சால்வை அணி வித்து வரவேற்று பேசினார். ராஜாக்கமங்கலம் ஒன்றிய பார்வையாளர் சொக்க லிங்கம், ராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜேஷ், தோவாளை ஒன்றிய பார்வையாளர் வக்கீல் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. மாநில பிரசார பிரிவு செயலாளர் எஸ்.எஸ்.மணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முரளி மனோகர்லால், ஒன்றிய தரவு மேலாண்மை பிரிவு தலைவர் பிரவின், 50-வது வார்டு தலைவர் ஆறுமுகம், கிளை தலைவர்கள் கணேஷ், அச்சுதன் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.