search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A. Raasa"

    • மத, இன ரீதியாக மக்களை பிரித்து அதை ஓட்டுக்களாக மாற்றும் விதமாக நீலகிரி எம்.பி., ஆ.ராசா தொடர்ந்து பேசி வருகிறார்.
    • இந்து மதம் தவிர, தனி மனிதர்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. மாநில பார்வையாளர் செல்வகுமார் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத, இன ரீதியாக மக்களை பிரித்து அதை ஓட்டுக்களாக மாற்றும் விதமாக நீலகிரி எம்.பி., ஆ.ராசா தொடர்ந்து பேசி வருகிறார். தற்போதைய அவரது பேச்சு, இந்து மதம் தவிர, தனி மனிதர்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளது. மிகவும் அநாகரீகமான பேச்சு.இதை அவர் ஒரு தொழிலாகவே செய்து வருகிறார். அடுத்த பாராளுமன்ற தேர்தலில், நீலகிரி தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிட்டால், அவரை டெபாசிட் கூட வாங்க விட மாட்டோம். அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை கண்டித்து போராட்டம் நடத்துவதோடு சட்டரீதியாக வழக்கு தொடரப்படும். எம்.பி.,யாக இருக்க கூட அவருக்கு தகுதியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மனுவில் கூறியிருந்தனர்.
    • பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில், பாஜக நகர தலைவர் ஆர்.அருண்குமார் மற்றும் நிர்வாகிகள், இந்து முன்னணி சார்பில் மாவட்ட செயலாளர் ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள், விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மாவட்ட இணை செயலாளர் டி.சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆ. ராசா எம்.பி., இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மனுவில் கூறியிருந்தனர்.

    பல்லடம் வடக்கு ஒன்றிய பாஜக. தலைவர் பூபாலன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ரமேஷ் குமார், மற்றும் பாஜ.க நிர்வாகிகள் நித்யா,பூபதி,மகேஷ், குருமூர்த்தி, உள்ளிட்ட நிர்வாகிகள் ஆ.ராசா எம்.பி., மீது பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    ×