search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ஆ.ராசா எம்.பி.,பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - பா.ஜ.க. மாநில பார்வையாளர் பேட்டி
    X

    பா.ஜ.க. மாநில பார்வையாளர் செல்வகுமார்.

    இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ஆ.ராசா எம்.பி.,பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - பா.ஜ.க. மாநில பார்வையாளர் பேட்டி

    • மத, இன ரீதியாக மக்களை பிரித்து அதை ஓட்டுக்களாக மாற்றும் விதமாக நீலகிரி எம்.பி., ஆ.ராசா தொடர்ந்து பேசி வருகிறார்.
    • இந்து மதம் தவிர, தனி மனிதர்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. மாநில பார்வையாளர் செல்வகுமார் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத, இன ரீதியாக மக்களை பிரித்து அதை ஓட்டுக்களாக மாற்றும் விதமாக நீலகிரி எம்.பி., ஆ.ராசா தொடர்ந்து பேசி வருகிறார். தற்போதைய அவரது பேச்சு, இந்து மதம் தவிர, தனி மனிதர்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளது. மிகவும் அநாகரீகமான பேச்சு.இதை அவர் ஒரு தொழிலாகவே செய்து வருகிறார். அடுத்த பாராளுமன்ற தேர்தலில், நீலகிரி தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிட்டால், அவரை டெபாசிட் கூட வாங்க விட மாட்டோம். அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை கண்டித்து போராட்டம் நடத்துவதோடு சட்டரீதியாக வழக்கு தொடரப்படும். எம்.பி.,யாக இருக்க கூட அவருக்கு தகுதியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×