என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hinduism"

    • சிறுமிக்கு முன்பாக எருமையை பலியிடுவார்கள். அதனைக் கண்டு அஞ்சாத சிறுமி அடுத்த குமாரியாகத் தேர்வு செய்யப்படுகிறார்.
    • குமாரி ஒரு வருடத்துக்கு 13 முறை மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுகிறார்.

    நேபாள தலைநகர் காத்மாண்டுவில் தலேஜு பவானி திருக்கோயிலில் பருவமடையாத சிறுமிகள் வழிபாட்டுத் தெய்வமாகப் போற்றும் முறை நடைமுறையில் உள்ளது. இவர்கள் குமாரி என்று அழைக்கப்படுவர்.

    இந்நிலையில் தசரா (தசேன்) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்யதாரா சாக்யா என்ற 2 வயது சிறுமி புதிய குமாரியாக தேர்தெடுக்கப்பட்டார்.

    பருவமடைந்தவுடன், குமாரி ஒரு சாதாரண மனிதராகக் கருதப்படுவார் என்பது மரபு.

    எனவே 2017 ஆம் ஆண்டு குமாரியாகப் பதவியேற்ற முன்னாள் குமாரி திரிஷ்ணா சாக்யா (வயது 11) பேருவமடைந்ததன் காரணமாக ஆர்யதாரா சாக்யா புதிய குமாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    புதிய குமாரி ஆர்யதாரா சாக்யா காத்மாண்டுவில் உள்ள அவரது வீட்டிலிருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    ஆர்யதாரா சாக்யாவின் தந்தை, தனது மனைவி கர்ப்பமாக இருந்தபோது தெய்வமாக கனவு கண்டதாகவும், தனது மகள் சிறப்புமிக்கவராக இருப்பார் என்று நம்பியதாகவும் கூறியுள்ளார்.

    குமாரி தேர்வு செய்யப்படும் முறை

    2 முதல் 4 வயதுக்குள் உள்ள சிறுமிகள் குமாரிகளாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    குமாரியாக தேர்வு செய்யப்படுவதற்கு பல கட்ட சோதனைகள் நடைபெறும். குறிப்பாக அவரது மனதும், உடலும் வலிமையானதாக இருப்பதைச் சோதனை செய்வர்.

    இறுதியாக சிறுமிக்கு முன்பாக எருமையை பலியிடுவார்கள். அதனைக் கண்டு அஞ்சாத சிறுமி அடுத்த குமாரியாகத் தேர்வு செய்யப்படுகிறார்.

    குமாரிகள் அரண்மனைக் கோவிலுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்வார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கல்வி கற்பிக்கப்படும்.

    குமாரி ஒரு வருடத்துக்கு 13 முறை மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுகிறார்.

    குமாரியின் கால்கள் தரையில் படுவது பாவச் செயலாகக் கருதப்படுகிறது. எனவே பல்லக்கில் வைத்துச் சுமந்து செல்லப்படுவார்.

    ஓய்வுபெறும் குமாரிகளுக்கு அரசு மாத ஓய்வூதியம் வழங்கும். குராமரியாக இருந்து ஓய்வுபெற்ற பெண்களை திருமணம் செய்பவர் விரைவில் இறந்துவிடுவார் என்ற நம்பிக்கை இருப்பதால் பல முன்னாள் குமாரிகள் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்வர். 

    • அணு ஆயுதங்களால் கூட அழிக்க முடியாதது இந்தியாவில் உள்ள சாதிய கட்டமைப்பு.
    • தன்னைச் சங்கராச்சாரியராக ஆக்க வேண்டாம் என்றும், சகோதரனாக ஏற்றுக்கொள்ளவே தான் கேட்பதாகவும் தெரிவித்தார்.

    2025 ஆம் ஆண்டுக்கான விசிக விருது வழங்கும் விழாவில் நேற்று, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார்.

    திருமாவளவன் தனது உரையில், சனாதன சக்திகள் தமிழ் மண்ணை விஷமாக்க அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

    தமிழ்நாட்டு அரசியல் களம், "சனாதன சக்திகளா அல்லது விடுதலைச் சிறுத்தைகளா" என்ற இரு துருவங்களுக்கு இடையே உள்ள போராட்டத்தை மையமாகக் கொண்டுள்ளது எஎன்று கூறிய அவர், மதவாத அரசியலை நோக்கித் தமிழ்நாட்டைத் திசை திருப்பப் பலர் முயல்வதாக குற்றம்சாட்டினார்.

    மேலும், "மதச்சார்பின்மைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக செயல்படுவதால், அது மதச்சார்பின்மையை மேலும் கூர்மைப்படுத்துகிறது . நாட்டில் அமையவிருக்கும் அரசு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும், ஆனால் பாஜகவோ அரசமைப்பை அழிக்க நினைக்கிறது.

    நமது இயக்கம் சட்டமன்ற, நாடாளுமன்ற சீட்டு பேரங்களுக்காக இல்லை, ஒருநாள், தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று கூட அறிவிக்கக்கூடும். இருக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை, பிளாஸ்டிக் சேர் அல்லது தரையில் கூட அமரத் தயங்க மாட்டேன்.

    இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது; ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகே இந்து மதம் உருவானது. பிற மதங்களில் சகோதரத்துவம் உள்ளது, ஆனால் இந்து மதம் அடிப்படையிலேயே பாகுபாடு கொண்டது. அணு ஆயுதங்களால் கூட அழிக்க முடியாதது இந்தியாவில் உள்ள சாதிய கட்டமைப்பு" என்று திருமாவளவன் தெரிவித்தார்.

    திருநீறை அழித்தது குறித்துப் பேசுபவர்கள் தன்னை மேல்பாதி கோயிலுக்குள் அழைத்துச் செல்ல முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

    புண்ணியம் கிடைக்கும் என்ற நோக்கில் திருநீறு பூசவில்லை என்றும், அதை அவமதிக்கும் நோக்கில் அழிக்கவும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார். தன்னைச் சங்கராச்சாரியராக ஆக்க வேண்டாம் என்றும், சகோதரனாக ஏற்றுக்கொள்ளவே தான் கேட்பதாகவும் திருமாவளவன் தெரிவித்தார். 

    • திருக்கோவில் பாதுகாப்பு கமிட்டி கண்டனம்
    • புதுவை மாநிலம் அமைதியாக இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி பொதுச்செயலாளர் தட்சணா மூர்த்தி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்து மக்கள் திருமணம் என்பது வாழ்க்கையில் ஒருமுறை நடைபெறும் முக்கிய நிகழ்வு. மதுபானம் கொடுத்து திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் குடிகாரர்களாக மதுபாட்டில் கொடுத்து திருமண வரவேற்பிற்கு வந்தவர்கள் அனைவரையும் கேவலப்படுத்தியது சட்டப்படி குற்றமாகும். மேலும் புதுவை அரசு கலால் துறை சட்டப்படி இந்த செயல் மிகவும் தவறாகும்.

    இது போன்ற மோசமான நிகழ்ச்சிகள் புதுவை மாநிலத்தில் நடக்காமல் புதுவை மாநிலம் அமைதியாக இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • இந்துக்களின் வழிபாட்டு தலங்களான தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களுக்கு வருகின்ற வருமானத்தை வைத்து தான் தமிழக அரசே இயங்கி கொண்டு இருக்கிறது.
    • இந்து சமய அடையாளங்களை அழிக்க நினைக்கும் வகையில் கோபுர சின்னத்தை நீக்க உத்தரவிட்ட இந்து விரோத அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பூர்:

    சிவசேனா கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் முத்திரை சின்னமான கோபுர சின்னம் வேண்டாம் என்று இந்துசமய அறநிலையத்துறை மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து துறை உள்பட தமிழக அரசு துறைகளில் தற்பொழுது அறிமுகப்படுத்தி உள்ள மொபைல் ஆப்ஸ் லோகோவில் உள்ள முதல் பக்கத்தில் தமிழக அரசின் கோபுரம் சின்னம் நீக்கப்பட்டு அதனை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மொபைல் ஆப்ஸ் லோகோவில் அரசின் கோபுரம் சின்னம் மீண்டும் அமைக்கப்பட்டது.

    ஆனால் கோபுரத்துக்கு உரிமை பட்ட இந்துசமய அறநிலையத்துறை மட்டும் மொபைல் ஆப்ஸ் லோகோவில் கோபுரம் சின்னம் மீண்டும் அமைக்காமல் கோபுரம் சின்னம் வேண்டாம் என்ற எண்ணத்தில் அலட்சியமாக இருக்கிறது. இதற்காக இந்துசமயஅறநிலைய துறையை சிவசேனா வன்மையாக கண்டிக்கிறது.

    இந்துக்களின் வழிபாட்டு தலங்களான தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களுக்கு வருகின்ற வருமானத்தை வைத்து தான் தமிழக அரசே இயங்கி கொண்டு இருக்கிறது.தமிழக அரசு 1949ம் ஆண்டுகளில் இருந்தே கோபுர சின்னத்தை உபயோகித்து வந்த சூழ்நிலையில் திடீரென்று கோபுர சின்னத்தை அகற்றியது பல்வேறு சந்தேகத்தை உண்டாக்குகிறது.வருங்காலத்தில் தமிழக அரசு துறைகளில் எக்காரணத்தை கொண்டும் கோபுர சின்னத்தை மாற்றக்கூடாது.இந்து சமய அடையாளங்களை அழிக்க நினைக்கும் வகையில் கோபுர சின்னத்தை நீக்க உத்தரவிட்ட இந்து விரோத அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இல்லையெனில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் இச்செய்தி இந்துக்கள் மத்தியில் எதிரொலிக்கும்.ஜனநாயகம் மற்றும் சட்டரீதியாகவும் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்பதை இந்த அறிக்கையின் மூலமாக தமிழக அரசுக்கு தெரியப்படுத்தி கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

    • இந்த விவகாரம் தொடர்பாக நீங்கள் கேட்க வேண்டியது அரசாங்கத்திடம்தான் நீதிமன்றத்திடம் அல்ல.
    • உங்களின் பிரசாரத்தை மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று எப்படி நீங்கள் முடிவு செய்யலாம்?

    புதுடெல்லி:

    இந்துத்துவா தொடர்பான விவகாரங்களை பள்ளி பாடத்திட்டங்களில் சேர்ப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் பாதுகாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக நீங்கள் கேட்க வேண்டியது அரசாங்கத்திடம்தான் நீதிமன்றத்திடம் அல்ல எனக்கூறி இந்த மனுவை ஏற்க முடியாது என தெரிவித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    மேலும் உங்களின் பிரசாரத்தை மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று எப்படி நீங்கள் முடிவு செய்யலாம்? என்று கேள்வி எழுப்பினர்.

    • திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • கணவர் சாஹீர் இஸ்லாமிய மதத்தைச் சேர்நதவர் என்பதால் சோனாக்ஷி இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறுவாரா என்ற கேள்வி எழுந்தது.

    கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் பல வருடங்களாக சாஹீர் இஃபால் என்ற நடிகரை காதலித்து வந்தார். இந்நிலையில் இன்று மாலை இருவருக்கும் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் நடந்து முடிந்துள்ளது.

    மும்பையில் உள்ள சோனாக்ஷியின் பாந்திரா அபார்ட்மெண்ட் குடியிருப்பில் பாரம்பரிய சடங்குபிகள் ஏதுமின்றி எளிய முறையில் நடந்த இந்த திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

     

     

    காதலித்து கரம் கோர்த்துள்ள சோனாக்ஷி - சாஹீர் இஃபால் ஜோடிக்கு திரபிரபலங்களும், ரசிகர்களும், இணையவாசிகளும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கணவர் சாஹீர் இஸ்லாமிய மதத்தைச் சேர்நதவர் என்பதால் சோனாக்ஷி இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறுவாரா என்ற கேள்வி எழுந்தது.

     

    இதற்கு பதிலளித்த சோனாக்ஷியின் தந்தையும் மூத்த நடிகருமான சத்ருகன் சின்ஹா, சோனாக்ஷி மதம் மாறப்போவதில்லை என்று தெளிவுபடுத்தியிருந்தார். தபாங், ரவுடி ராதோர் ஆகிய படங்களில் நடித்துள்ள சோனாக்ஷி சின்ஹா கடைசியாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய ஹீரமந்தி வெப் சீரிஸில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

     

    • காதலித்து கரம் கோர்த்துள்ள சோனாக்ஷி - சாஹீர் இஃபால் ஜோடிக்கு திரபிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • இஸ்லாமியர் ஒருவரை சோனாக்ஷி திருமணம் செய்துள்ளதை வலதுசாரி அமைப்பினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

    கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் பல வருடங்களாக சாஹீர் இஃபால் என்ற நடிகரை காதலித்து வந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் நடந்து முடிந்துள்ளது.

    மும்பையில் உள்ள சோனாக்ஷியின் பாந்திரா அபார்ட்மெண்ட் குடியிருப்பில் பாரம்பரிய சடங்குகள் ஏதுமின்றி எளிய முறையில் நடந்த இந்த திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    காதலித்து கரம் கோர்த்துள்ள சோனாக்ஷி - சாஹீர் இஃபால் ஜோடிக்கு திரபிரபலங்களும், ரசிகர்களும், இணையவாசிகளும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கணவர் சாஹீர் இஸ்லாமிய மதத்தைச் சேர்நதவர் என்பதால் சோனாக்ஷி இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறுவாரா என்ற கேள்வி எழுந்தது.

    இதற்கு பதிலளித்த சோனாக்ஷியின் தந்தையும் மூத்த நடிகருமான சத்ருகன் சின்ஹா, சோனாக்ஷி மதம் மாறப்போவதில்லை என்று தெளிவுபடுத்தியிருந்தார்.

    ஆனால், இஸ்லாமியர் ஒருவரை சோனாக்ஷி திருமணம் செய்துள்ளதை வலதுசாரி அமைப்பினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக சோனாக்ஷி - சாஹீர் இஃபால் ஜோடி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த திருமண புகைப்படங்களில் பலரும் மோசமாக கமெண்ட் செய்து வந்தனர். இதனால் அந்த பதிவில் யாரும் கமெண்ட் செய்யமுடியாதபடியும் கமெண்ட்களை படிக்க முடியாத படியும் மாற்றியுள்ளனர்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஸ்ரீநாத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "7 வருட காதலுக்கு பின்பு ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்கள் அன்பை எதிர்பார்த்தனர். ஆனால் தங்கள் மீது வீசப்பட்ட வெறுப்பை தவிர்க்க பதிவின் கமெண்ட் பகுதியினை தடை செய்துள்ளனர். உங்கள் இருவரையும் நான் வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பராமரிப்பாளர்கள் யானைகளை வழிக்கு கொண்டுவர வாலை பிடித்து இழுத்தால் அவை பயந்துள்ளது என்று கூறப்படுகிறது.
    • மக்கள் அலறியடித்து பயந்து சிதறிய இந்த சம்பவதின் வீடியோ இணையதளத்தில் பரவி வைரழகை வருகிறது

    இலங்கை தலைநகர் கொழும்பு -வுக்கு தெற்கே 280 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கதிர்காமம் பகுதியில் நேற்று நடந்த இந்து மத கோவில் நிகழ்ச்சியில் யானைகள் அழைத்துவரப்பட்டன.  இரவு கொண்டாட்டங்களின்போது திடீரென பாகனின் கட்டுப்பாட்டை இழந்த யானைகள் அச்சத்தில் பிளிறியதால் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தினர்

    இதனால் ஏற்பட்ட நெரிசலில் 12 பேர் காயமடைந்துள்ளனர். சிவப்பு, நீல ஆடைகளுடன் அலங்கரிக்கப்பட்டு நிகழ்ச்சிக்கு அழைத்து  அழைத்துவரப்பட்ட  யானைகள் மணி இசையாலும், பராமரிப்பாளர்கள் அதை வழிக்கு கொண்டுவர வாலை பிடித்து இழுத்தாலும் யானை பயந்துள்ளது என்று கூறப்படுகிறது.

    மக்கள் அலறியடித்து பயந்து சிதறிய இந்த சம்பவதின் வீடியோ இணையதளத்தில் பரவி வைரழகை வருகிறது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யானை துன்புறுத்தப்பட்டதற்கு விலங்குகள் நல ஆர்வர்களிடமிருந்து கண்டங்கள் குவிந்து வருகிறது.

    • 'கடவுள் சிவன் தனது நெற்றிக் கண்ணை திறத்தால் தான் சாம்பலாகி விடுவோம் என்று பைத்தியக்காரருக்கு [ராகுல் காந்திக்கு] தெரியாது'
    • பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியின் குரைப்புக்கெல்லாம் இங்கிருந்து சென்ற உள்ளூர் தலைவர்கள் தங்களின் வாலை ஆட்டுகின்றனர்.

    கர்நாடக மாநிலத்தின் வடக்கு மங்களூரு தொகுதி பாஜக எம்.எல்.ஏ பரத் செட்டி, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பாராளுமன்றதுக்குள் பூட்டி வைத்து கன்னத்தில் அறைய வேண்டும் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'ராகுல் காந்தி மகளூருக்குள் வந்தாலும் அவருக்கு அதே கதிதான்' என்றும் பரத் செட்டி தெரிவித்துள்ளார்.

     

    பாராளுமன்றத்தில் இந்து மதக் கடவுள் சிவனின் படத்தை ராகுல் காந்தி கையில் ஏந்தி பஜகவினர் முன் காட்டியது குறித்து  பேசும்போது பரத் செட்டி இவ்வாறு தெரிவித்துள்ளார். அதுகுறித்து தொடர்ந்து அவர் பேசுகையில், 'கடவுள் சிவன் தனது நெற்றிக் கண்ணை திறத்தால் தான் சாம்பலாகி விடுவோம் என்று பைத்தியக்காரருக்கு [ராகுல் காந்திக்கு] தெரியாது. ஹிந்துக்களை குறித்து என்ன சொன்னாலும் அவர்கள் கேட்டுக்கொண்டிருப்பார்கள் என்று அவர் நினைக்கிறார். பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியின் குரைப்புக்கெல்லாம் இங்கிருந்து சென்ற உள்ளூர் தலைவர்கள் தங்களின் வாலை ஆட்டுகின்றனர்.

    இந்து மதத்தையும், கோவில்களையும் பாதுகாப்பதை பாஜக  கடமையாக பார்க்கிறது. ஆனால் காங்கிரஸ், இந்து மதமும் இந்துத்துவாவும் வேறு வேறு என்று சொல்லி வருகிறது. இதுபோன்ற தலைவர்களால் வருங்காலத்தில் இந்துக்கள் ஆபத்தை சந்திக்க நேரிடும். இந்து மதம் குறித்த தனது நிலைபாட்டை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கும் ராகுல் காந்தி, குஜராத்துக்கு சென்றால் மட்டும் கடவுள் சிவனின் தீவிர பக்தராக மாறிவிடுகிறார்.

     

    மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து வெறும் 99 இடங்களில் ஜெயித்துள்ள நிலையில் எதோ மிகப்பெரிய சாதனையை செய்தததாக ராகுல் காந்தி கூறி வருகிறார்' என்று பரத் செட்டி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி குறித்த பரத் செட்டி பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில் அவர் மீது காங்கிரஸ் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

    • மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் மதித்தல்.
    • நான் இஸ்லாத்தை பின்பற்றும் ஒரு பிறவி முஸ்லீம்.

    சென்னை:

    நடிகை குஷ்பு திருப்பதி பெருமாள் பக்தை. அவ்வப்போது அங்கு சென்று வழிபடுவார். தற்போது வெளியாகி உள்ள திருப்பதி லட்டு சர்ச்சை அவரை வருத்தம் அடைய வைத்துள்ளது.

    இது தொடர்பாக அவர் தனது வலைத்தள பதிவில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

    திருப்பதி லட்டு பற்றி ஏராளமாக பேசப்படுகிறது. இதில் நான் கவனித்த தெல்லாம் எப்போதெல்லாம் இந்து மதம் குறி வைக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அமைதியாக நடந்து கொள ளும் மனோபாவத்தோடு இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறோம். அது ஏன்?

    ஒரு குறிப்பிட்ட மதத்தை அதாவது இந்து மதத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களிடம் நான் கேட்கிறேன்.

    இஸ்லாம் அல்லது கிறிஸ்தவம் பற்றி அதே மொழியில் அதே வார்த்தையில் பேச உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? வேறு எந்த மதத்தை பற்றி தவறாக பேச நினைத்தாலே உங்கள் முதுகெலும்பு நடுங்குகிறது.

    மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் மதித்தல். பாரபட்சம் காட்டுவது அல்ல. நான் இஸ்லாத்தை பின்பற்றும் ஒரு பிறவி முஸ்லீம். ஆனால் நான் கடவுள் மீது பக்தியும், நம்பிக்கையும் கொண்ட இந்து குடும்பத்தில் திருமணம் செய்து கொண்ட ஒரு இந்து. எனக்கு எல்லா மதங்களும் ஒன்றுதான்.

    இந்து மதத்தை அவமதிக்கவோ, சாதாரணமாகவோ எடுத்து கொள்ளவோ கூடாது. எந்த விதமான அவமரியாதையையும் பொறுத்து கொள்ள முடியாது.

    கலப்படம் செய்யப்பட்ட திருப்பதி லட்டு உலகெங்கிலும் வாழும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளையும், நம்பிக்கையையும் புண்படுத்துகிறது.

    இதற்கு பொறுப்பானவர் யாராக இருந்தாலும் அதற்கான விலையை கொடுத்தே தீர வேண்டும். எல்லாவற்றையும் வெங்கடேச பெருமான் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

    • திருமணமான 8 மாதங்களிலேயே கணவர் மால் சிங் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.
    • இந்துமத வழக்கப்படி ரூப் கவுர் மால் சிங் எரியூட்டப்பட்ட சிதையில் உயிருடன் உடன்கட்டை ஏற்றப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.

    உடன்கட்டை எனும் சதி 

    ராஜஸ்தானில் உள்ள திவராலா பகுதியில் 37 ஆண்டுகளுக்கு முன்னர் ரூப் கவுர் என்ற 18 வயது பெண் உயிரிழந்த கணவனுடன் உடன்கட்டை ஏற்றி கொல்லப்பட்டார். அதாவது, கணவனின் சடலம் எரிந்துகொண்டிருக்கும் சிதைத்தீயில் ரூப் கவுரை இறக்கி அவ்வூர் மக்கள் கொலை செய்தனர்.

    இந்து தர்மப் படி இதற்கு உடன்கட்டை ஏறுதல் என்று பெயர். சதி [sathi] என்ற பெயரில் சமஸ்கிருதத்தில் இது குறிப்பிடப்படுகிறது. கணவன் இறந்தால் மனைவியும் விரும்பி உடன்கட்டை ஏறவேண்டும் என்ற வழக்கம் இந்துமதத்திலிருந்து வந்தது.

    பழமைவாதம் 

    மனைவி விரும்பாவிட்டாலும் வலுக்கட்டாயமாக அவர்கள் தீயில் கருகப்படுவார்கள். இந்த கொடுமையான வழக்கத்தை ஒழிக்க சமூக சீர்திருத்தவாதி ராஜாராம் மோகன்ராய் உள்ளிட்டோர் நடத்திய தொடர் போராட்டங்களை அடுத்து 1829 ஆம் ஆண்டு அப்போதைய வைஸ்ராய் வில்லியம் பெண்டிங் பிரபு சதி வழக்கத்தை முற்றிலுமாக தடை செய்தார்.

    ஆனாலும் தீவிர பழமைவாத இந்துக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் இருந்தனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக சட்டத்தை மீறி சதி பின்பற்றப்பட்டுவந்தது. தடை செய்யப்பட்டு சுமார் ஒரு நூற்றாண்டு கடந்தும் இந்த கொடூர வழக்கத்தை பழமைவாதம் பேசும் இந்துக்கள் கைவிடுவதாக இல்லை. அப்படி 1987 செப்டம்பர் 4 ஆம் தேதி கணவனின் எரியும் சிதையில் ஏற்றப்பட்டவரே 18 வயது ரூப் கவுர். இவரே இந்தியாவில் சதியால் உயிரிழந்த கடைசி பெண் என்று நம்பப்படுகிறது.  

     எரிக்கப்பட்ட ரூப் கவுர் 

     ரூப் கவுர் 18 வயதை எட்டியதும் 1987 ஜனவரி 18 ஆம் தேதி ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அருகே சிகாரா திவராலாவை சேர்ந்த மால் சிங் என்பவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். ஆனால் திருமணமான 8 மாதங்களிலேயே கணவர் மால் சிங் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.

     

    எனவே இந்துமத வழக்கப்படி ரூப் கவுர் மால் சிங் எரியூட்டப்பட்ட சிதையில் உயிருடன் உடன்கட்டை ஏற்றப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சரூப் கன்வரின் மாமனார், மைத்துனர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கே இந்தியாவின் கடைசி சதி வழக்காகும்.

    விடுதலை 

    1996 ஆம் ஆண்டு அக்டோபரில் மாமனார் - மைத்துனர் இருவருக்கும் எதிராக ஆதாரம் இல்லை என்று விடுவிக்கப்பட்டனர். அதன்பின் 2004 ஆம் ஆண்டு நடந்த விசாரணையில் ஆதாரங்கள் இல்லை என கூறி 25 பேர் விடுவிக்கப்பட்டனர். மேலும் 6 பேர் சிறையிலேயே உயிரிழந்தார்கள்.

    6 பேர் ஜாமீன் வாங்கிக்கொண்டு தலைமறைவாகினர். இந்த வழக்கில் கைதானவர்களில் சிறையில் மீதமிருந்தது 8 பேர் மட்டுமே. மகேந்திர சிங், ஷ்ரவன் சிங், நிஹால் சிங், ஜிதேந்திர சிங், உதய் சிங், தஸ்ரத் சிங், லக்ஷ்மண் சிங் மற்றும் பன்வர் சிங் என்ற இந்த 8 பேருக்கும் எதிராக எந்த ஆதாரமும் இல்லை என கூறி சதி நிவாரண நீதிமன்றம் கடந்த புதன்கிழமை அன்று விடுதலை செய்து உத்தரவிட்டது.

     

    புத்துயிர் 

    பெண் சிசுக் கொலை, கௌரவக் கொலை உள்ளிட்டவை இன்னும் இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் நிலையில் இவர்களின் விடுதலை வருங்காலங்களில் இந்துமத பழமைவாத கொடுமையான சதி மீண்டும் புத்துயிர் பெற ஊக்குவிக்கக்கூடும் என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 

    • ஒரு நல்ல இந்துவாக இருக்க நான்கு வழிகள் உள்ளன.
    • நீங்கள் என் அணியை ஆதரிக்கவில்லை, நான் உங்கள் தலையில் அடிக்கப் போகிறேன் என்று கூறுகிறார்கள்.

    காங்கிரஸ் திருவனநாதபுர எம்.பி. சசி தரூர் இந்து மதத்துக்கும், இந்துத்துவாவுக்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டி உள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இலக்கிய விழாவில், எழுத்தாளரும் காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர் பேசுகையில், "ஒரு நல்ல இந்துவாக இருக்க நான்கு வழிகள் உள்ளன. ஞான யோகம் இருக்கிறது, அது வாசிப்பு மற்றும் அறிவு மூலம் கிடைப்பது, ஆன்மீகக் கருத்துக்களைப் பற்றி நீங்கள் படித்துணர்வது. அதை தான் நான் முயற்சிக்கிறேன்.

    பக்தி யோகம் இருக்கிறது, அதுதான் பெரும்பாலான மக்கள் செய்கிறார்கள். பின்னர் ராஜ யோகம் இருக்கிறது, உள்நிலை, தியானம், உங்களுக்குள் உண்மையைத் தேடுவது அது.

    இறுதியாக மகாத்மா காந்தி கடைபிடித்த கர்ம யோகம், அதாவது உங்கள் சக மனிதர்களுக்கு சேவை செய்வதன் மூலம் மனிதகுலத்திற்கு சேவை செய்து அதன்மூலம் மூலம் கடவுளை வணங்குவது.

    இந்து ஒருபோதும் வெறுப்பு என்னும் தீயை பற்றவைக்க மாட்டார்கள் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். நம்முடையது [ இந்து மதம் ] மட்டுமே ஒரே வழி என்று சொல்வதற்கு இடமில்லை.

    துரதிர்ஷ்டவசமாக இந்து மதத்தை சிலர், ஒரு அடாவடியான பிரிட்டிஷ் கால்பந்து குழு போன்ற சிறு அடையாளமாக குறைக்கிறார்கள். மேலும் அவர்கள், நீங்கள் என் அணியை ஆதரிக்கவில்லை, நான் உங்கள் தலையில் அடிக்கப் போகிறேன் என்று கூறுகிறார்கள்.

    நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லவில்லையானால் உங்களை சவுக்கால் அடிக்க போகிறேன் என்று மிரட்டுகிறார்கள். அது இந்து மதம் இல்லை. அதற்கும் இந்து மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று தெரிவித்தார். 

    ×