இந்து மதத்தை அவமரியாதை செய்வதை யாரும் பொறுக்க மாட்டார்கள்-நடிகை குஷ்பு

மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் மதித்தல்.நான் இஸ்லாத்தை பின்பற்றும் ஒரு பிறவி முஸ்லீம்.
இந்து மதத்தை அவமரியாதை செய்வதை யாரும் பொறுக்க மாட்டார்கள்-நடிகை குஷ்பு
Published on

சென்னை:

நடிகை குஷ்பு திருப்பதி பெருமாள் பக்தை. அவ்வப்போது அங்கு சென்று வழிபடுவார். தற்போது வெளியாகி உள்ள திருப்பதி லட்டு சர்ச்சை அவரை வருத்தம் அடைய வைத்துள்ளது.

இது தொடர்பாக அவர் தனது வலைத்தள பதிவில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

திருப்பதி லட்டு பற்றி ஏராளமாக பேசப்படுகிறது. இதில் நான் கவனித்த தெல்லாம் எப்போதெல்லாம் இந்து மதம் குறி வைக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அமைதியாக நடந்து கொள ளும் மனோபாவத்தோடு இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறோம். அது ஏன்?

ஒரு குறிப்பிட்ட மதத்தை அதாவது இந்து மதத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களிடம் நான் கேட்கிறேன்.

இஸ்லாம் அல்லது கிறிஸ்தவம் பற்றி அதே மொழியில் அதே வார்த்தையில் பேச உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? வேறு எந்த மதத்தை பற்றி தவறாக பேச நினைத்தாலே உங்கள் முதுகெலும்பு நடுங்குகிறது.

மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் மதித்தல். பாரபட்சம் காட்டுவது அல்ல. நான் இஸ்லாத்தை பின்பற்றும் ஒரு பிறவி முஸ்லீம். ஆனால் நான் கடவுள் மீது பக்தியும், நம்பிக்கையும் கொண்ட இந்து குடும்பத்தில் திருமணம் செய்து கொண்ட ஒரு இந்து. எனக்கு எல்லா மதங்களும் ஒன்றுதான்.

இந்து மதத்தை அவமதிக்கவோ, சாதாரணமாகவோ எடுத்து கொள்ளவோ கூடாது. எந்த விதமான அவமரியாதையையும் பொறுத்து கொள்ள முடியாது.

கலப்படம் செய்யப்பட்ட திருப்பதி லட்டு உலகெங்கிலும் வாழும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளையும், நம்பிக்கையையும் புண்படுத்துகிறது.

இதற்கு பொறுப்பானவர் யாராக இருந்தாலும் அதற்கான விலையை கொடுத்தே தீர வேண்டும். எல்லாவற்றையும் வெங்கடேச பெருமான் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com