என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "dussehra"
- காய்கறிகளால் வீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் அரண்மனை
மைசூரு தசரா விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. 11 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியை 5 லட்சம் பேர் வரை கண்டு ரசித்து வருகிறார்கள். இந்த ஆண்டு 15-ந்தேதி (அதாவது நேற்று) முதல் வருகிற 25-ந்தேதி வரை தசரா மலர் கண்காட்சி நடக்கிறது. இந்தநிலையில் நேற்று தசரா மலர் கண்காட்சி மைசூரு நஜர்பாத் குப்பண்ணா பூங்காவில் தொடங்கியது. இந்த கண்காட்சியை மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.சி.மகாதேவப்பா, ஸ்ரீவத்ஷா எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
நஜர்பாத் குப்பண்ணா பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் பல்வேறு வடிவமைப்புகளில் மலர் கண்காட்சி ஏற்படுத்தி உள்ளது. இங்கு, 60 ஆயிரத்திற்கும் அதிகமான பூந்தொட்டிகளில் வைத்து வண்ண வண்ண செடிகள் வளர்க்கப்பட்டது. இந்த ஆண்டு பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் 24 அடி உயரத்திற்கு சந்திரயான்-3 விண்கலம் மற்றும் லேண்டர், ரோவர் 6 லட்சம் வெள்ளை, சிகப்பு ரோஜா பூக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலை
துர்கா தேவி சிலை, விநாயகர் சிலை, இந்தியா மற்றும் கிரிக்கெட் பேட், ஸ்டம்ப்ஸ், அரசு பஸ் ஜீப், அரசியலமைப்பு சாசன புத்தகம் பூக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. காய்கறிகளால் வீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் வண்ண வண்ண மலர்களால் பூக்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சி வடிவமைப்புக்காக 30 தனியார் தொழிற்சாலைகள், 41 தனியார் விடுதிகள், 13 அரசு அலுவலகங்கள், 22 கல்வி மையங்கள், 6 மருத்துவமனைகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
5 நாட்களுக்கு ஒரு முறை பூக்கள் மாற்றப்படுகிறது. மழை பெய்தால் மாற்ற வேண்டிய தேவை இல்லை. வெயில் அடித்தால் மட்டுமே மாற்ற 5 நாட்களுக்கு ஒரு முறை பூக்களை மாற்ற வேண்டும். தசரா மலர் கண்காட்சி வருகிற 25-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 5 லட்சத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மல்யுத்த போட்டி
இதேபோல், தசரா கண்காட்சி அருகே உள்ள மைதானத்தில் நேற்று மல்யுத்த போட்டி தொடங்கியது. இந்த போட்டியை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வீரர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர். இந்த போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
மேலும், மைசூரு பழைய கலெக்டர் அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள ஸ்கவுட் அண்ட் கைட் மைதானத்தில் உணவு மேளா தொடங்கியது. இதனை மந்திரி கே.எச்.முனியப்பா தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன.
புத்தக கண்காட்சி
மைசூரு பல்கலைக்கழகத்தின் எதிரே உள்ள ஓவல் மைதானத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. மைசூரு தசரா கண்காட்சியை மந்திரி சிவராஜ் தங்கடகி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி 90 நாட்கள் வரை நடைபெற உள்ளது.
தசரா மின்விளக்கு அலங்காரம், ஜம்பு சவாரி ஊர்வலம் செல்லும் ராஜபாதை சயாஜி ராவ்ரோடு பச்சை (கிரீன்) மண்டபத்தில் மந்திரி கே.ஜே. ஜார்ஜ் தொடங்கி வைத்தார். மின்விளக்கு அலங்காரத்ைத பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

மின்விளக்கு அலங்காரம்
மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் அரண்மனைக்கு மத்தியில் தசரா கலாசார நிகழ்ச்சியை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார். அவர் சிறந்த சங்கீத வித்வான்களுக்கு கர்நாடக அரசின் சங்கீத வித்வான் விருது வழங்கி பாராட்டினார். பாட்டு கச்சேரி, பரதநாட்டியம், நடன நிகழ்ச்சிகள் இரவு 11 மணி வரை நடைபெற்றது. தசரா விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சி தொடங்கி நடந்து வருவதால் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
- முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழாவாகும்.
- இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற அக்டோபர் மாதம் 15 -ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
உடன்குடி:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோருக்கு குலசேகரன்பட்டினம் தசரா பக்தர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
முத்தாரம்மன் கோவில்
திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் மிகவும் புகழ்பெற்ற கோவில்கள் ஒன்று ஆகும். இங்கு ஆண்டுதோறும் நடை பெறும் தசரா பெரும் திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழாவாகும். இந்தியாவில் மைசூருக்கு அடுத்து 2-வது இடம் வகிக்கும் இக்கோவிலில், இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற அக்டோபர் மாதம் 15 -ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
24-ந்தேதி மகிஷாசுர சம்ஹாரம் நடக்கிறது. பல லட்சம் பக்தர்கள் குடும்பத்துடன் கூடி பல்வேறு வேடமனிந்து தங்களது வேண்டுதல்களை செலுத்தும் தசரா விழாவாகும். ஆண்டுக்கு ஆண்டு பக்தர்கள் கூட்டம் கூடுவது ஆண்டுக்கு ஆண்டு கோடிக்கணக்கான உண்டியல் வருமானம் வருவது இக்கோவிலின் சிறப்பு ஆகும்.
அறங்காவலர்கள் நியமனம்
இக்கோவிலுக்கு பல ஆண்டுகளாக அறங்காவ லர்கள் நியமிக்கப்பட்ட வில்லை. இதனால் தசரா பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை பணிகள் மற்றும் பல்வேறு திருப்பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே உடனடியாக அறங்காவ லர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஏரல் நட்டாத்தியைச் சேர்ந்தவர் கதிரேசன் சென்னை வானகரத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார்
- குலசேகரன்பட்டினத்தில் நடந்த தசரா திருவிழாவிற்கு மனைவி அதிர்ஷ்டலட்சுமி, மகள் ராஜேஷ்வரி ஆகியோருடன் கோவிலுக்கு வந்துள்ளனர்.
உடன்குடி:
ஏரல் நட்டாத்தியைச் சேர்ந்தவர் கதிரேசன் (வயது 51) சென்னை வானகரத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 5-ந்தேதி குலசேகரன்பட்டினத்தில் நடந்த தசரா திருவிழாவிற்கு மனைவி அதிர்ஷ்டலட்சுமி, மகள் ராஜேஷ்வரி ஆகியோருடன் கோவிலுக்கு வந்துள்ளனர். ராஜேஸ்வரி (21) எம்.ஏ. பட்டதாரி.
இந்நிலையில் தசரா திருவிழாவிற்கு வந்தவர்கள் குலசேகரன்பட்டினத்தில் உள்ள தங்கும் விடுதியில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். திடீரென அதிகாலையில் கண் விழித்துப் பார்க்கும் போது மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கதிரேசன் அளித்த புகாரின் பேரில் குலசே கரன்பட்டினம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் தசரா விழாவின் போது ஏற்பட்ட ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மேலும், இந்த தசரா கொண்டாட்டம் குறித்து எந்த வித தகவலும் ரெயில்வே துறைக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும், எந்த அனுமதியும் ரெயில்வே துறையிடம் பெறப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #AmritsarTrainAccident

தசரா விழா என்பது ஒவ்வொரு ஆண்டும் ராவணனின் உருவ பொம்மையை எரித்து கொண்டாடப்படும் விழா ஆகும். ராமருக்கும், ராவணனுக்கும் ஏற்பட்ட போரின் நினைவாய் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாட்னி பிதிட் புருஷ் சங்கத்னா என்ற அமைப்பானது மனைவிமார்களால் அதிகம் பாதிக்கப்பட்ட ஆண்கள் இணைந்து உருவாக்கிய அமைப்பு ஆகும். இந்த அமைப்பு வருடந்தோறும் ராவணன் உருவ பொம்மைக்கு பதிலாக சூர்ப்பனகையின் உருவ பொம்மையை எரித்து தசரா கொண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் பரத் புலாரே பேசுகையில், இந்தியாவில் உள்ள அனைத்து சட்டங்களும் பெண்களுக்கு ஆதரவாகவும், ஆண்களுக்கு எதிராகவும் இருப்பதாகவும், அதனை பலரும் துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த கொடுமையை கண்டிப்பதன் ஒரு பகுதியாகவே சூர்ப்பனகையின் உருவபொம்மையை எரித்து தசரா கொண்டாடப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். #Dussehra #Maharashtra
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
