search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Woman Missing"

    • கணவன், மனைவி இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இவர்கள் கோர்ட்டில் விவாகரத்து பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
    • கோவிலில் தேடி கொண்டிருந்தபோது, அங்கு தாரணியின் கைப்பை செல்போன், செருப்புகள் கிடந்தது.

    கோவை:

    கோவை கருமத்தம்பட் டியை சேர்ந்தவர் தாரணி (29). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் ஆனது. சுரேஷ்குமார் அமெரிக்காவில் வேலை பார்த்து வந்தார்.

    இதையடுத்து திருமணம் ஆனதும், தனது மனைவியை அழைத்துக்கொண்டு சுரேஷ்குமார் அமெரிக்கா சென்றார். அங்கு 2 பேரும் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் தாரணிக்கு உடல்நலனில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் கணவன், மனைவி இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இவர்கள் கோர்ட்டில் விவாகரத்து பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தாரணி அமெரிக்காவில் இருந்து தனது சொந்த ஊரான கோவை மாவட்டம் கருமத்தம்பட்டிக்கு வந்தார்.

    இங்கு தனது தாய், தந்தையுடன் வசித்து வந்தார். இங்கிருந்தபடியே தனது உடல்நலன் பாதிப்புக்கு சித்தாபுதூரில் உள்ள சித்தா மருத்துவமனை ஒன்றில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்த பின்னர் தனது வீட்டில் வந்து தங்கி இருந்தார்.

    கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி தனது பெற்றோரிடம் சென்னியாண்டவர் கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.

    ஆனால் அதன்பின்னர் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடினர். கோவிலுக்கு சென்றும் தேடி பார்த்தனர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

    கோவிலில் தேடி கொண்டிருந்தபோது, அங்கு தாரணியின் கைப்பை செல்போன், செருப்புகள் கிடந்தது. அதனை அவர்கள் எடுத்தனர். இதுகுறித்து தாரணியின் தாய் கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். ஆனால் எங்கு தேடியும் இதுவரை அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் போலீசார் அந்த வழக்கை கைவிட்டு விட்ட னர்.

    இந்த நிலையில், தாரணியின் தாய் சாந்தாமணி, தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரியும், இந்த வழக்கினை கோவை மாவட்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் ஒப்படைக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    மனுவை விசாரித்த ஐகோர்ட்டு மாயமான பெண் வழக்கினை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து 9 ஆண்டுகளுக்கு பிறகு இளம்பெண்ணை தேடும் பணியை சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடங்கினர்.

    கோவை சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி சிவக்குமார் மேற்பார்வையில் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் இளம்பெண்ணின் கணவர், கோவில் பூசாரி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அன்றைய தினம் பதிவாகி இருந்த காட்சிகளை கேட்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதவிர கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் காணாமல் போன பெண்களின் விவரங்களை கேட்டும் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

    • உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செய்யாறு:

    வெம்பாக்கம் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி. இவரது 21 வயதுடைய மகள் பிளஸ் 2 முடித்து விட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 29-ந் தேதி இளம் பெண் கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    நீண்ட நேரம் ஆகியும் இளம் பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர்.

    அவர் கிடைக்காததால் இது குறித்து பிரம்ம தேசம் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • அபர்ணா அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசி வந்தார்.
    • மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    குனியமுத்தூர்,

    கோவை போத்தனூரை சேர்ந்த சியாம்குமார். இவரது மனைவி அபர்ணா (24). இவர்களுக்கு ஆயுஷ் (2) என்ற மகன் உள்ளார். அபர்ணா அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசி வந்தார். இதனை அவரது கணவர் கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவர் தனது கணவரிடம் பேசாமல் இருந்தார்.

    சம்பவத்தன்று சியாம்குமார் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அபர்ணா தனது 2 வயது மகனுடன் ஓட்டம் பிடித்தார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அவர், வீட்டில் மனைவி மற்றும் மகன் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் 2 பேரையும் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை. இதுகுறித்து சியாம்கு மார் போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து மகனுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    சவுரிபாளையம் உப்பிலி பாளையம் ரோட்டை சேர்ந்தவர் மார்ட்டின். இவரது மகள் மெர்லின் ஜெசிகா (19). இவர் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மெர்லின் ஜெசிகா தனது பெற்றோரிடம் வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.

    • அம்பிகா, 5வயது மகனுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மகனுடன் மாயமான இளம்பெண்ணை தேடிவருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த வாயலூரை சேர்ந்த சுதாகர். இவரது மனைவி அம்பிகா (வயது30). கடந்த 14-ந் தேதி அம்பிகா, 5வயது மகனுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை. உறவினர்கள், வீடுகளில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து சுதாகர் சதுரங்கபட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மகனுடன் மாயமான இளம்பெண்ணை தேடிவருகிறார்கள்.

    • புதுமணத்தம்பதி ஈஷா யோகா மையத்துக்கு சென்று சுற்றி பார்த்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    கோவை:

    மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் மனோஜ் (25). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் தாரணிபிரியா (வயது 25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    இவர்கள் 2 பேரும் கடந்த மாதம் 24-ந் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தேனிலவிற்காக கடந்த 3-ந் தேதி புதுமண தம்பதி மதுரையில் இருந்து கோவைக்கு வந்தனர். கோவை ராம்நகரில் உள்ள விடுதியில் தங்கியிருந்தபடி சுற்றுலா தலங்களுக்கு சென்று வந்தனர்.

    சம்பவத்தன்று புதுமணத்தம்பதி ஈஷா யோகா மையத்துக்கு சென்று சுற்றி பார்த்தனர். அங்கு இரவில் நடைபெறும் லேசர் ஷோ முடிந்து விபூதி வாங்குவதற்காக மனோஜ் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அவரது மனைவி தாரணிபிரியா மாயமாகி இருந்தார். அவரை மனோஜ் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடிய வில்லை.

    பின்னர் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அவர் ஷேர் ஆட்டோவில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது தெரியவந்தது. இது குறித்து மனோஜ் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி ஆலாந்துறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    காதல் திருமணம் செய்து கொண்ட பெண் எதற்காக மனோஜிடம் சொல்லாமல் அங்கிருந்து சென்றார், அவர்களுக்குள் எதாவது தகராறு ஏற்பட்டு கோபத்தில் புறப்பட்டுச் சென்றாரா என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நெல்லை சந்திப்பு சி.என்.கிராமம் ராஜாஜி தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி குப்பம்மாள் என்ற ராஜி (வயது 39).
    • இவர் கடந்த 24-ந்தேதி தனது உறவினர் ஒருவருடன் ஜவுளி எடுப்பதற்காக காரில் சென்றுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு சி.என்.கிராமம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி குப்பம்மாள் என்ற ராஜி (வயது 39). இவர் கடந்த 24-ந்தேதி தனது உறவினர் ஒருவருடன் ஜவுளி எடுப்பதற்காக காரில் சென்றுள்ளார்.

    அன்று மாலை வீடு திரும்பிய ராஜி மகளை மட்டும் வீட்டில் இறக்கி விட்டு விட்டு மீண்டும் காரில் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி யடைந்த சுப்பிர மணியம் பல இடங் களில் தேடிப் பார்த்தும் ராஜியை காண வில்லை.

    அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது 'சுவிட்ச்-ஆப்' ஆகி இருந்தது. எனவே மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு சுப்பிரமணியன் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மாயமான ராஜியை தேடி வருகிறார்கள்.

    • பத்மாவதி (வயது 38). இவர் கடந்த 28-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
    • இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் திருவாக்க வுண்டனூர் வசந்தம் நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி பத்மாவதி (வயது 38). இவர் கடந்த 28-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜோதி பின்னர் திரும்பி வரவில்லை.
    • பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்யப்பட்டது.

    சென்னை:

    பெரிய கோவிலம்பாக்கம், 1-வது தெருவை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி ஜோதி (வயது 32).

    கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜோதி பின்னர் திரும்பி வரவில்லை. இது குறித்து பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜோதியை தேடி வருகிறார்கள்.

    • திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் காதல் திருமணம் செய்த இளம் பெண் திடீர் மாயமானார்
    • இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருச்சி:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நாடார் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சுகந்தி மீரியம்(வயது 30 ). இவர் ராஜேசை கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு செல்வதற்காக திருச்சிக்கு வந்துள்ளனர். மத்திய பஸ்நிலையத்தில் சுகந்தி மீரியம் கழிவறைக்குச் சென்றார்.பின்னர் திரும்பி வரவில்லை இது குறித்து அவரது கணவர் ராஜேஷ் கன்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


    • தேன்மொழி கடந்த மாதம் 26-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
    • உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

    கடலூர்:

    கோண்டூர் ராதா கிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் தேன்மொழி. இவர் கடந்த மாதம் 26-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. தேன் மொழியை அவரது மகள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. தேன்மொழியை கண்டு பிடிக்கும்படி அவரது மகள் கடலூர் புதுநகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • அரியமங்கலம் நேருஜி நகர் செல்லையா தெருவை சேர்ந்தவர் கார்த்திகா(24).
    • கார்த்திகாவிற்கு அவருடைய பெற்றோர் திருமண நிச்சயம் செய்த நிலையில் கடந்த 13 ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    திருச்சி

    அரியமங்கலம் நேருஜி நகர் செல்லையா தெருவை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது42) இவரது மகள் கார்த்திகா(24) பிஎஸ்சி படித்து முடித்துவிட்டு தஞ்சாவூரில் உள்ள ஒரு துணிக்கடையில் கடந்த ஐந்து மாதங்களாக பணியாற்றி வந்துள்ளார்.

    இந்நிலையில் கார்த்திகாவிற்கு அவருடைய பெற்றோர் திருமண நிச்சயம் செய்த நிலையில் கடந்த 13 ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து கார்த்திகாவின் தந்தை மகேந்திரன் அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி கருமண்டபம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் பழனி அம்மாள். இவரது மகன் மணிகண்டன் (வயது38) கொத்தனாராக பணியாற்றி வருகிறார். கடந்த 15ந்தேதி மணிகண்டன் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து பழனியம்மாள் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏரல் நட்டாத்தியைச் சேர்ந்தவர் கதிரேசன் சென்னை வானகரத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார்
    • குலசேகரன்பட்டினத்தில் நடந்த தசரா திருவிழாவிற்கு மனைவி அதிர்ஷ்டலட்சுமி, மகள் ராஜேஷ்வரி ஆகியோருடன் கோவிலுக்கு வந்துள்ளனர்.

    உடன்குடி:

    ஏரல் நட்டாத்தியைச் சேர்ந்தவர் கதிரேசன் (வயது 51) சென்னை வானகரத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 5-ந்தேதி குலசேகரன்பட்டினத்தில் நடந்த தசரா திருவிழாவிற்கு மனைவி அதிர்ஷ்டலட்சுமி, மகள் ராஜேஷ்வரி ஆகியோருடன் கோவிலுக்கு வந்துள்ளனர். ராஜேஸ்வரி (21) எம்.ஏ. பட்டதாரி.

    இந்நிலையில் தசரா திருவிழாவிற்கு வந்தவர்கள் குலசேகரன்பட்டினத்தில் உள்ள தங்கும் விடுதியில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். திடீரென அதிகாலையில் கண் விழித்துப் பார்க்கும் போது மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கதிரேசன் அளித்த புகாரின் பேரில் குலசே கரன்பட்டினம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    ×