என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shankaracharya"

    • தில்லியில் ஒரு கேதார்நாத் கோவில் கட்ட திட்டம் போடுகிறார்கள்.
    • இன்னொரு மோசடி நடக்கவிடாமல், நாம் இவர்களை தடுக்க வேண்டும்

    கேதார்நாத்கோவிலில் 228 கிலோ தங்கம் காணாமல் போனதாக உத்தராகண்டில் உள்ள ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியாரான அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "சிவபுராணத்தில் 12 ஜோதிர்லிங்க தலங்கள் குறித்த விவரங்கள் உள்ளன. அதில் இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் கோவில் பற்றிய குறிப்புகள் உள்ளன. இமயமலையில் கேதார்நாத் கோவில் இருக்கும் போது டெல்லியில் எப்படி கேதார்நாத் கோவிலை கட்டமுடியும். இதற்கு பின்னர் அரசியல் காரணங்கள் உள்ளது. அரசியல்வாதிகள் நமது மத வழிபாட்டு தலங்களுக்கும் நுழைய பார்க்கிறார்கள்.

    கேதார்நாத் கோவில் கருவறை சுவர்களில் தங்கத் தகடு பொருத்தப்பட்டிருந்தது. இதில் 228 கிலோ தங்கத் தகடு காணாமல் போனதாக எழுந்துள்ள புகார் குறித்து ஏன் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இப்போது டெல்லியில் ஒரு கேதார்நாத் கோவில் கட்ட திட்டம் போடுகிறார்கள். இன்னொரு மோசடி நடக்கவிடாமல், நாம் இவர்களை தடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாங்கள் துறவிகள், அரசியல் விவகாரங்களை நாங்கள் பேசக்கூடாது.
    • மதத்தில் தலையிடுவதை அரசியல்வாதிகள் நிறுத்தினால், அரசியலில் தலையிடுவதை நானும் நிறுத்துவேன்

    கேதார்நாத் கோவிலில் 228 கிலோ தங்கம் காணாமல் போனதாக உத்தராகண்டில் உள்ள ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியாரான அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி குற்றம் சாட்டினார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "சிவபுராணத்தில் 12 ஜோதிர்லிங்க தலங்கள் குறித்த விவரங்கள் உள்ளன. அதில் இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் கோவில் பற்றிய குறிப்புகள் உள்ளன. இமயமலையில் கேதார்நாத் கோவில் இருக்கும் போது டெல்லியில் எப்படி கேதார்நாத் கோவிலை கட்டமுடியும். இதற்கு பின்னர் அரசியல் காரணங்கள் உள்ளது. அரசியல்வாதிகள் நமது மத வழிபாட்டு தலங்களுக்கும் நுழைய பார்க்கிறார்கள்.

    கேதார்நாத் கோவில் கருவறை சுவர்களில் தங்கத் தகடு பொருத்தப்பட்டிருந்தது. இதில் 228 கிலோ தங்கத் தகடு காணாமல் போனதாக எழுந்துள்ள புகார் குறித்து ஏன் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இப்போது டெல்லியில் ஒரு கேதார்நாத் கோவில் கட்ட திட்டம் போடுகிறார்கள். இன்னொரு மோசடி நடக்கவிடாமல், நாம் இவர்களை தடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், மத விவகாரங்களில் அரசியல் தலைவர்கள் தலையிடுவது குறித்து பேசிய அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, "நாங்கள் துறவிகள், அரசியல் விவகாரங்களை நாங்கள் பேசக்கூடாது என்பது முற்றிலும் சரியானது. ஆனால் அதே சமயம் அரசியல்வாதிகள் கூட மதத்தில் தலையிடக்கூடாது. அரசியல்வாதிகளே, மதத்தில் தலையிடுவதை நிறுத்துங்கள். மதத்தில் தலையிடுவதை நீங்கள் நிறுத்தினால், அரசியலில் தலையிடுவதை நானும் நிறுத்துவேன்" என்று பேசியுள்ளார்.

    • ராமர் கோவில் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம், அது கட்டப்பட வேண்டும் என்று இந்துக்கள் கருதினார்கள்
    • இந்துக்களின் தலைவராவதற்காக சிலர் இந்த பிரச்சனைகளை எழுப்புவதாக மோகன் பகவத் கூறுகிறார்.

    இந்து ஆன்மிக சேவை அமைப்பு சார்பாக இந்து சேவா மஹோத்சவ் நிகழ்ச்சி புனேவில் தொடங்கியது. இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது பேசிய அவர், "ராமர் கோவில் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம், அது கட்டப்பட வேண்டும் என்று இந்துக்கள் கருதினார்கள். இதை முன்மாதிரியாக கொண்டு பல்வேறு இடங்களில் சர்ச்சைகளை எழுப்பும் இந்து தலைவர்களின் போக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது. அதன் மூலம் இந்துக்களின் தலைவர்களாக மாறலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். இது ஏற்கத்தக்கதல்ல" என்று தெரிவித்தார்.

    உத்தரபிரதேசம், ராஜஸ்தானில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களின் தோற்றம் குறித்து இந்து அமைப்பினர் சர்ச்சைகள் ஏற்படுத்திய நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆர்.எஸ்.எஸ்.தலைவரின் பேச்சு முக்கியத்துவம் பெற்றது.

    இந்நிலையில் இந்துக்களின் அவலநிலை மோகன் பகவத்திற்கு புரியவில்லை என்று சங்கராச்சாரியார் ஸ்வாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "பல இந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. இதுதான் உண்மை. மோகன் பகவத்திற்கு இந்துக்களின் வலி புரியவில்லை. இந்துக்களின் அவலநிலை அவருக்கு புரியவில்லை என்பது அவரது பேச்சிலிருந்தே தெரிகிறது.

    இந்துக்களின் தலைவராவதற்காக சிலர் இந்த பிரச்சனைகளை எழுப்புவதாக மோகன் பகவத் கூறுகிறார். ஆனால் சாதாரண இந்துக்கள் தலைவராக ஆசை படுவதில்லை என்பதை நான் அவருக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.

    தசரா விழாவின்போது ராவணன் கொடும்பாவிகளை எரிக்கும் பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு பூரி சங்கராச்சாரியார் அதோக்‌ஷஜானந்த் தேவ் திர்த்த் மஹராஜ் வேண்டுகோள் வைத்துள்ளார். #Abolishpractice #Ravanaeffigy #PuriShankaracharya
    லக்னோ:

    பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜோடா பதக் பகுதியருகே ராவணன் கொடும்பாவி எரிக்கப்படுவதை நின்று வேடிக்கை பார்த்த மக்கள் மீது சமீபத்தில் ரெயில் மோதிய விபத்தில் சுமார் 60 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், இந்த கோர விபத்து தொடர்பாக மதுரா நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பூரி சங்கராச்சாரியார் அதோக்‌ஷஜானந்த் தேவ் திர்த்த் மஹராஜ், 'தசரா விழாவின்போது ராவணன் கொடும்பாவிகளை எரிக்கும் பழக்கத்தை ஒழிக்க வேண்டும்’ என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

    இதுபோன்ற கொடும்பாவி எரிக்கும் பழக்கத்தை பழமைவாதம் என்று குறிப்பிட்ட அவர், அடிப்படையான இந்து கலாச்சாரத்துக்கு எதிரான இந்த பழக்கம் பஞ்சாப்பில் நிகழ்ந்தது போன்ற சோகத்துக்கும் வழி வகுத்து விடுகிறது என்று தெரிவித்தார். 

    இந்து புராணத்தின்படி, இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகள் ஒரே ஒருமுறை மட்டுமே செய்யப்பட வேண்டும். அவ்வகையில், ராவணனின் இறுதிச் சடங்குகளை ராமபிரான் முன்னிலையில் விபீஷணன் செய்து முடித்து விட்டார். 

    எனவே, தசரா விழாக்களின்போது இதுபோல் கொடும்பாவிகளை கொளுத்துவதால் பெரிய அளவில் சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுகிறது. எனவே, இந்த பழக்கம் ஒழிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். #Abolishpractice  #Ravanaeffigy #PuriShankaracharya  
    ×