என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kedarnath Temple"

    • ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
    • கவுரிகுண்ட் பகுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த பல பக்தர்கள் இந்த நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் ஆலயம் தேசிய அளவில் புகழ்பெற்றது. குளிர்காலத்தில் மூடப்பட்டிருக்கும் இந்த கோவில் மே முதல் நவம்பர் வரை திறந்திருக்கும். இந்த காலத்தில் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோவில் அமைந்துள்ள ருத்ரபிரயாக் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. நேற்று கேதார்நாத் கோவிலுக்குச் செல்லும் சன்பிரயாக் நகரின் சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையில் முன்கதியா பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக நேற்று நிறுத்தப்பட்டது. கவுரிகுண்ட் பகுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த பல பக்தர்கள் இந்த நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர். மாநில பேரிடர் மீட்பு படையினர் அவர்களை பத்திரமாக மீட்டு சன்பிரயாக் நகருக்கு அழைத்து வந்தனர்.

    • உத்தரகாண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
    • குளிர் காலத்தில் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும்.

    உத்தரகாண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. குளிர் காலத்தில் இந்த கோவில்கள் மூடப்பட்டிருக்கும்.

    கோடை காலத்தில் மட்டுமே 4 கோவில்களும் திறக்கப்படும். இந்த கோவில்களுக்கு பக்தர்கள் செல்லும் யாத்திரை, 'சார்தாம்' யாத்திரை என அழைக்கப்படுகிறது.

    ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசிக்க முடியும். குளிர் காலத்தில் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும்.

    அதன்படி இந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு ஏப். 30-ந்தேதி 'சார்தாம்' யாத்திரை தொடங்கியது. நேற்று கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்களின் நடைகள் திறக்கப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் கேதார்நாத் கோவில் நடை இன்று காலை 7 மணிக்கு திறக்கப்பட்டது. உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியின்போது இந்திய ராணுவத்தின் கர்வால் ரைபிள்ஸின் இசைக்குழு பக்தி பாடல்களை இசைத்தது.

    கேதார்நாத் கோவிலில் திறக்கப்பட்டதையடுத்து தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.

    • இமயமலை பகுதியில் அமைந்துள்ளது கேதார்நாத் கோவில்.
    • பத்ரிநாத் கோவில், நவம்பர் 19-ந்தேதி மூடப்படுகிறது.

    டேராடூன் :

    உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை பகுதியில் அமைந்துள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோவில்கள், குளிர்காலத்தில் பனியால் சூழப்பட்டு இருக்கும். எனவே, குளிர்காலத்தையொட்டி, இக்கோவில்கள் 6 மாதங்களுக்கு மூடப்படுவது வழக்கம். அதன்படி, கேதார்நாத் கோவில் நேற்று காலை 8.30 மணிக்கு மூடப்பட்டது. அதற்கு முன்பு, வேத மந்திரங்கள் முழங்க வழிபாடு நடத்தப்பட்டது.

    அப்போது, 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களும், மாவட்ட அதிகாரிகளும், கோவில் கமிட்டி நிர்வாகிகளும் இருந்தனர். இந்திய ராணுவத்தின் மராத்தி ரெஜிமெண்ட் படைப்பிரிவினர், பக்தி பாடல்களை இசைத்தனர். யமுனோத்ரி கோவிலும் நேற்று மூடப்பட்டது. கங்கோத்ரி கோவில் நேற்று முன்தினம் மூடப்பட்டது. பத்ரிநாத் கோவில், நவம்பர் 19-ந்தேதி மூடப்படுகிறது.

    • தீவிர காலநிலை காரணமாக இக்கோவில் ஏப்ரல் மாதம் முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும்.
    • தற்போது உள்ள கட்டிடம் காஞ்சி மடாதிபதிகளால் கி.பி. 8ம் நுற்றாண்டில் உருவாக்கப்பட்டது.

    கேதார்நாத் கோவில் இந்தியாவிலுள்ள மிகப் புனிதமானதாகக் கருதப்படும் சிவன் கோவில்களுள் ஒன்றாகும். இது உத்தராகாண்டத்தில் உள்ள, உருத்ர பிரயாக் மாவட்டத்தில், கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரையில் கார்வால் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் தீவிர காலநிலை காரணமாக இக்கோவில் ஏப்ரல் மாதம் முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும். இக்கோவிலைச் சாலை வழியாக நேரடியாக அணுக முடியாது. கௌரிகுண்டம் என்னுமிடத்திலிருந்து 14 கிமீ தொலைவு மலை ஏறியே இக்கோவிலுக்குச் செல்ல முடியும். ஆதிசங்கராச்சாரியாரால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இக்கோவில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும்.

    கோயிலின் முக்கியத்துவம்

    இக்கோவில் ஒரு கவர்ச்சியான கல் கட்டடம் ஆகும். இதன் தொடக்கம் பற்றி அறியக்கூடவில்லை. இக்கோவில் முகப்பில் உள்ள முக்கோண வடிவக் கல்லில் மனிதத் தலை ஒன்று செதுக்கப்பட்டிருப்பது ஒரு வழமைக்கு மாறான அம்சம் ஆகும்.

    தொடர் கனமழை, வெள்ளப் பெருக்கு / இமயமலை சுனாமி 11.06.2013ல் இப்பகுதியில் வரலாறு காணாத அளவில் கொட்டி தீர்த்த கனமழையினால் உண்டான மழை நீர் வெள்ளப் பெருக்கினால் கேதார்நாத் கோவில் தவிர சுற்றுப்புறப்பகுதிகள் கடுஞ்சேதம் அடைந்தது. இக்கோவில் மதிற்சுவர்கள், ஆதிசங்கரர் சமாதி மற்றும் கோவில் கடைவீதிகள் மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. மழை வெள்ளப் பெருக்கினால் குறைந்தது ஐந்தாயிரம் பேர் இறந்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு இனி கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்திரி, யமுனோத்திரி எனும் நான்கு புனித தலங்களுக்கான பயணம் நிறுத்தப்பட்டுள்ளதாக உத்தராகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.

    கடுஞ்சேதத்திற்கு காரணம் கேதார்நாத் கோவில் மூன்று புறங்களிலும் மலைத்தொடர்களால் சூழப்பட்டது. அதில் ஒரு மலையில் முகட்டை மூடியிருந்த மிகப்பெரிய பனிகட்டி, கேதார்நாத் கோயிலுக்கு மேற்புறத்தில் இருந்த நீர் தேக்கப் பகுதியில் விழுந்து, அதனால் நீர்தேக்க அணை உடைந்து கடுமையான மழை வெள்ளத்த்துடன், அணைக்கட்டு நீரும் சேர்ந்து கேதார்நாத் பகுதிகளை மிகக் கடுமையாக பாதித்துள்ளது.

    கோயிலின் வரலாறு

    இந்தக் கோவில் புராண காலத்தில் பாண்டவர்களால் கட்டப்பட்டது எனக்கூறப்பட்டாலும், இக்கோவிலின் முதன்மை அமைப்பு 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது உள்ள கட்டிடம் காஞ்சி மடாதிபதிகளால் கி.பி. 8ம் நுற்றாண்டில் உருவாக்கப்பட்டது.

    இக்கோவில் ஈசனைப் பற்றி சைவக் குரவர்கள் பாடி இருக்கின்றார்கள்.

    "கேதாரம் மேவி னானை" எனவும் "கேதாரம் மாமேருவும்" எனவும் திருநாவுக்கரசர் பாடியிருக்கின்றார். பன்னிரண்டாம் திருமுறையில், "வடகயிலை வணங்கிப் பாடிச் செங்கமல மலர்வாவித் திருக்கேதாரம் தொழுது..." என்றும் பாடியுள்ளார்கள்.

    • கேதர்நாத் கோவிலில் வைத்து இளம்பெண் ஒருவர் தனது காதலனிடம் ‘புரபோஸ்’ செய்த காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    • இளம்பெண் தனது காதலன் முன்பு முழங்கால் இட்டு அவரிடம் தனது காதலை முன்மொழிவது போன்று காட்சிகள் உள்ளது.

    வரலாற்று சிறப்பு மிக்க நினைவிடங்கள் அல்லது சுற்றுலா தளங்கள், பூங்காக்களில் இளம்ஜோடியினர் தங்கள் இணையர்களுக்கு வித்தியாசமான பரிசு வழங்கி காதலை வெளிப்படுத்தி புரபோஸ் செய்வது போன்ற காட்சிகளை பார்த்திருப்போம். ஆனால் தற்போது டுவிட்டரில் வைரலாகி வரும் வீடியோவில், கேதர்நாத் கோவிலில் வைத்து இளம்பெண் ஒருவர் தனது காதலனிடம் 'புரபோஸ்' செய்த காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    எல்லா பெரிய கோவில்களிலும் 'ஸ்மார்ட் போன்கள்' ஏன் தடை செய்ய வேண்டும்? என்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று என்ற தலைப்பில் பகிரப்பட்ட வீடியோவில், இளம்ஜோடி ஒன்று மஞ்சள் நிற ஆடை அணிந்து கோவில் முன்பு வைத்து சாமி தரிசனம் செய்வது போன்றும், பின்னர் அந்த இளம்பெண் தனது காதலன் முன்பு முழங்கால் இட்டு அவரிடம் தனது காதலை முன்மொழிவது போன்றும் காட்சிகள் உள்ளது.

    இந்த காட்சி வைரலாகி வரும் நிலையில், டுவிட்டர் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் சிலர், இதில் தவறாக எதுவும் இல்லை என பதிவிட்டுள்ளனர். ஆனால் பெரும்பாலானோர் கோவிலில் வைத்து இதுபோன்று செய்வதால் கோவிலின் புனிதம் பாதிக்கப்படுவதாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேதார்நாத் கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு நிலவி வரும் சூழலில் கோவிலின் கதவுகள் புதன்கிழமை காலை சாத்தப்பட்டன.
    • கோவிலின் நடைசாத்தப்பட்ட பிறகு கேதார்தாத் சிவனின் பஞ்சமுக விக்கிரகம் பல்லக்கில் எடுத்துச் செல்லப்பட்டது.

    உத்தரகாண்ட் மாநிலத்தின் இமயமலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை புதன்கிழமை சாத்தப்பட்டது. குளிர்காலத்தில் கேதார்நாத் கோவில் முழுவதும் பனியால் சூழப்பட்டுவிடும் என்பதால் ஆறு மாதங்களுக்கு நடை சாத்தப்படுவது வழக்கம்.

    கேதார்நாத் கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு நிலவி வரும் சூழலில் கோவிலின் கதவுகள் புதன்கிழமை காலை சாத்தப்பட்டன.

    இந்நிகழ்வின்போது கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 2,300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, சிவபெருமானை வழிபட்டதாக பத்ரிநாத்-கேதார்நாத் கோவில் கமிட்டி தலைவர் அஜேந்திர அஜய் தெரிவித்துள்ளார். கோவிலின் நடைசாத்தப்பட்ட பிறகு கேதார்தாத் சிவனின் பஞ்சமுக விக்கிரகம் பல்லக்கில் எடுத்துச் செல்லப்பட்டது. உகிமடம் பகுதியில் உள்ள ஓம்காரேஸ்வர் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும் இந்த விக்கிரகம், குளிர்காலம் முழுவதும் அங்கு வழிபடப்படும்.

    கேதார்நாத் கோவிலில் நடப்பாண்டில் 19.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டதாக அஜேந்திர அஜய் தெரிவித்தார்.

    • தில்லியில் ஒரு கேதார்நாத் கோவில் கட்ட திட்டம் போடுகிறார்கள்.
    • இன்னொரு மோசடி நடக்கவிடாமல், நாம் இவர்களை தடுக்க வேண்டும்

    கேதார்நாத்கோவிலில் 228 கிலோ தங்கம் காணாமல் போனதாக உத்தராகண்டில் உள்ள ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியாரான அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "சிவபுராணத்தில் 12 ஜோதிர்லிங்க தலங்கள் குறித்த விவரங்கள் உள்ளன. அதில் இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் கோவில் பற்றிய குறிப்புகள் உள்ளன. இமயமலையில் கேதார்நாத் கோவில் இருக்கும் போது டெல்லியில் எப்படி கேதார்நாத் கோவிலை கட்டமுடியும். இதற்கு பின்னர் அரசியல் காரணங்கள் உள்ளது. அரசியல்வாதிகள் நமது மத வழிபாட்டு தலங்களுக்கும் நுழைய பார்க்கிறார்கள்.

    கேதார்நாத் கோவில் கருவறை சுவர்களில் தங்கத் தகடு பொருத்தப்பட்டிருந்தது. இதில் 228 கிலோ தங்கத் தகடு காணாமல் போனதாக எழுந்துள்ள புகார் குறித்து ஏன் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இப்போது டெல்லியில் ஒரு கேதார்நாத் கோவில் கட்ட திட்டம் போடுகிறார்கள். இன்னொரு மோசடி நடக்கவிடாமல், நாம் இவர்களை தடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாங்கள் துறவிகள், அரசியல் விவகாரங்களை நாங்கள் பேசக்கூடாது.
    • மதத்தில் தலையிடுவதை அரசியல்வாதிகள் நிறுத்தினால், அரசியலில் தலையிடுவதை நானும் நிறுத்துவேன்

    கேதார்நாத் கோவிலில் 228 கிலோ தங்கம் காணாமல் போனதாக உத்தராகண்டில் உள்ள ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியாரான அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி குற்றம் சாட்டினார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "சிவபுராணத்தில் 12 ஜோதிர்லிங்க தலங்கள் குறித்த விவரங்கள் உள்ளன. அதில் இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் கோவில் பற்றிய குறிப்புகள் உள்ளன. இமயமலையில் கேதார்நாத் கோவில் இருக்கும் போது டெல்லியில் எப்படி கேதார்நாத் கோவிலை கட்டமுடியும். இதற்கு பின்னர் அரசியல் காரணங்கள் உள்ளது. அரசியல்வாதிகள் நமது மத வழிபாட்டு தலங்களுக்கும் நுழைய பார்க்கிறார்கள்.

    கேதார்நாத் கோவில் கருவறை சுவர்களில் தங்கத் தகடு பொருத்தப்பட்டிருந்தது. இதில் 228 கிலோ தங்கத் தகடு காணாமல் போனதாக எழுந்துள்ள புகார் குறித்து ஏன் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இப்போது டெல்லியில் ஒரு கேதார்நாத் கோவில் கட்ட திட்டம் போடுகிறார்கள். இன்னொரு மோசடி நடக்கவிடாமல், நாம் இவர்களை தடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், மத விவகாரங்களில் அரசியல் தலைவர்கள் தலையிடுவது குறித்து பேசிய அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, "நாங்கள் துறவிகள், அரசியல் விவகாரங்களை நாங்கள் பேசக்கூடாது என்பது முற்றிலும் சரியானது. ஆனால் அதே சமயம் அரசியல்வாதிகள் கூட மதத்தில் தலையிடக்கூடாது. அரசியல்வாதிகளே, மதத்தில் தலையிடுவதை நிறுத்துங்கள். மதத்தில் தலையிடுவதை நீங்கள் நிறுத்தினால், அரசியலில் தலையிடுவதை நானும் நிறுத்துவேன்" என்று பேசியுள்ளார்.

    • தற்போது சோன்மார்க்கில் இருந்து கேதார்நாத் வரை உள்ள தூரத்தை கடக்க 8 முதல் 9 மணி நேரம் ஆகிறது.
    • கேபிள் கார் அமைந்தால் பயண நேரம் 36 நிமிடங்களாக குறையும்.

    புதுடெல்லி:

    டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-

    விவசாயிகளுக்கு உயர்தர மற்றும் மலிவு விலையில் பொதுவான கால்நடை மருந்துகளை வினியோகிக்கும் வகையில் ரூ.3,880 கோடி மதிப்புள்ள கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டு திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நல்ல தரமான மற்றும் மலிவு விலையில் பொது கால்நடை மருத்துவத்தை வழங்குவதற்கும், பசு ஆஷாதி திட்டத்தின் கீழ் மருந்துகளை விற்பனை செய்வதற்கான ஊக்கத்தொகையை வழங்குவதற்கும் ரூ.75 கோடி ஒதுக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    மேலும் பஞ்சாப், அரியானா, உத்தரகாண்ட், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 9 மாநிலங்கள் பொது நோய் தொற்று இல்லாத மண்டலங்களாக அறிவிக்கப்படும்.

    இதையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை கூட்டத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கோவிந்த்காட்டில் இருந்து ஹேம்குண்ட் சாஹிப் வரை 12.4 கிலோமீட்டர் தொலைவு 'ரோப் கார்' அமைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் ரூ.2,730.13 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

    இதுபோல் உத்தரகாண்ட் மாநிலம் சோன்மார்க் முதல் கேதார்நாத் வரை 12.9 கி.மீட்டர் நீளத்துக்கு ரூ.4 ஆயிரத்து 81 கோடி செலவில் 'ரோப் கார்' திட்டத்தைச் செயல்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது சோன்மார்க்கில் இருந்து கேதார்நாத் வரை உள்ள தூரத்தை கடக்க 8 முதல் 9 மணி நேரம் ஆகிறது. இந்த கேபிள் கார் அமைந்தால் பயண நேரம் 36 நிமிடங்களாக குறையும்.

    இவ்வாறு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

    இந்தியர்கள் வெளிநாடு செல்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. அதேவேளையில் இந்தியாவில் உள்ள விதவிதமான இடங்களை சுற்றிப் பார்க்க வேண்டும் என மோடி தெரிவித்துள்ளார்.
    பிரதமர் மோடி நேற்று கேதார்நாத் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் புனித குகையில் தியானத்தை மேற்கொண்டார். இன்று காலை தியானத்தை முடித்து, மீண்டும் சாமி தரிசனம் செய்தார். மோடி வருகையையொட்டி அங்கு ஏராளமான பக்கதர்கள் குவிந்தனர். அவர்களை பார்த்து பிரதமர் மோடி உற்சாகமாக கையசைத்தார்.



    பின்னர் மோடி கூறுகையில் ‘‘நம்முடைய நாட்டு மக்கள் நமது நாட்டை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்வது குறித்து எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அவர்கள் நம்முடைய நாட்டில் உள்ள விதவிதமான இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டும்’’ என்றார்.
    கேதார்நாத் புனித குகையில் தியானத்தை முடித்த பிரதமர் மோடி, எனக்கும் கேதார்நாத்துக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது என்று கூறினார்.
    பிரதமர் மோடி நேற்று கேதார்நாத் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் புனித குகையில் தியானத்தை மேற்கொண்டார். இன்று காலை வரை தியானம் இருப்பார் என்று கூறப்பட்டது.

    அதன்படி இன்று காலை வரை தியானம் இருந்த பிரதமர், தியானத்தை முடித்த பின்னர் மீண்டும் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ‘‘கேதார்நாத்தில் வழிபட்டதை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். கேதார்நாத்துக்கும் எனக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது.



    கேதார்நாத் வளர்ச்சிக்காக நான் பணியாற்றி வருகிறேன். காணொலி காட்சி மூலம் எனக்கான தகவல்களை நான் சேகரித்து வருகிறேன். கொடுப்பதற்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம். எடுப்பதற்காக அல்ல. நாட்டில் நடப்பதில் இருந்து விலகி ஆன்மீக பயணமாக கேதார்நாத் வந்துள்ளேன்’’ என்றார்.
    சூறாவளி தேர்தல் பிரசாரத்தை முடித்துள்ள பிரதமர் மோடி இன்று கேதார்நாத் சென்று சாமி தரிசனம் செய்ய இருக்கிறார்.
    டேராடூன்:

    இமயமலைத் தொடரில் புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோவில் அமைந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள இந்த கோவில், கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

    அவ்வகையில் குளிர்காலம் முடிவடைந்துள்ள நிலையில், 6 மாதத்திற்குப் பிறகு கடந்த 9-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது.  ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



    பிரமதர் மோடி பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். நேற்றுடன் ஒட்டுமொத்த தேர்தல் பிரசாரமும் நிறைவடைந்துள்ளது. பிரசாரம் முடிந்துவிட்டதால் நான் சற்று ஓய்வெடுக்கலாம் என்று பிரதமர் கூறியிருந்தார்.

    இந்நிலையில் அவர் இன்று கேதார்நாத் சென்று சாமி தரிசனம் செய்ய இருக்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    ×