என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்"

    • 1987 முதல் 1992 வரை ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமன் 45 கருணை மனுக்களை நிராகரித்தார்.
    • அவருக்கு அடுத்தபடியாக பிரணாப் முகர்ஜி தான் அதிக மனுக்களை நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து வருகிற 18-ந்தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளில் தனது பதவி காலத்தில் ராம்நாத் கோவிந்த் 6 பேரின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை நிராகரித்து உள்ளார்.

    பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜகத்ராய். இவர் ராம்பூர் ஷியாம் சந்திரா கிராமத்தை சேர்ந்த விஜயேந்திர மகோத்தா மனைவி மற்றும் 5 குழந்தைகள் வீட்டுக்கு தீ வைத்து உயிரோடு எரித்துக்கொன்றார்.

    கடந்த 2006-ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக ஜகத் ராய் கைது செய்யப்பட்டார். அவருக்கு 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இதையடுத்து அவர் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். இந்த கருணை மனுவை தான் முதன் முதலாக ராம்நாத் கோவிந்த் பதவிக்கு வந்ததும் நிராகரித்தார்

    இதன் தொடர்ச்சியாக நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் கருணை மனுக்களை கடந்த 2020-ம் ஆண்டு நிராகரித்தார்.

    2012-ம் ஆண்டு டெல்லியில் நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஓடும் பஸ்சில் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக முகேஷ்சிங், வினய் சர்மா, அக்‌ஷய்குமார் சிங், பவன்குப்தா உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதில் முக்கிய குற்றவாளியாக இருந்த ராம்சிங் விரைவு கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது திகார் ஜெயிலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதில் ஒருவர் சிறார் என்பதால் சிறார் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

    மற்ற 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் 4 பேரும் தனித்தனியாக ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்பினர். இந்த மனுக்களையும் 2020-ம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

    இதேபோல கடைசியாக 2006-ம் ஆண்டு தூக்கு தண்டணை பெற்ற சஞ்சய் என்பவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டது.

    கடந்த 2012 முதல் 2017 வரை ஜனாதிபதியாக பதவி வகித்த பிரணாப் முகர்ஜி மொத்தம் 30 கருணை மனுக்களை நிராகரித்தார்.

    1987 முதல் 1992 வரை ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமன் 45 கருணை மனுக்களை நிராகரித்தார். அவருக்கு அடுத்தபடியாக பிரணாப் முகர்ஜி தான் அதிக மனுக்களை நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் 2 மனுக்களையும், இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் 5 கருணை மனுக்களையும் நிராகரித்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடலூர் அருகே ஆற்றில் உள்ள தடுப்பணையில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்கும் சோகமாகும்.
    • துயர் மிகுந்த வேளையில், அவர்களின் குடும்பங்கள் மன சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

    புதுடெல்லி:

    கடலூர் அருகே ஏ.குச்சி பாளையத்தில் கெடிலம் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் நீரில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்தனர்.

    இந்த துயர சம்பவத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில், 'தமிழகத்தில் கடலூர் அருகே ஆற்றில் உள்ள தடுப்பணையில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்கும் சோகமாகும். இந்த சம்பவம் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. பலியானவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

    மோடி டுவிட்டரில் தமிழில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில், ஏழு சிறுமியர் ஆற்றில் மூழ்கி உயிரிழத்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். இந்த துயர் மிகுந்த வேளையில், அவர்களின் குடும்பங்கள் மன சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    கடந்த ஆண்டு சீனாவுடன் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் வீர மரணமடைந்த 20க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு இன்று விருதுகள் வழங்கப்பட்டது.
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இரண்டாவது நாளாக பாதுகாப்பு துறை சார்ந்த விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட தலைவர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் வீரதீர செயல்களில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விமானப்படை குரூப் கேப்டன் கமாண்டர் அபிநந்தனுக்கு நாட்டின் மூன்றாவது உயரிய விருதான வீர் சக்ரா விருது நேற்று வழங்கப்பட்டது.

    வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனி

    இந்நிலையில், கடந்த ஆண்டு சீனாவுடன் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் உயிரிழந்த 20க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு இன்று விருதுகள் வழங்கப்பட்டது. வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

    இந்த விழாவில், சீன தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. பழனி சார்பில் அவரது மனைவி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து விருதை பெற்றுக் கொண்டார்.

    இதேபோல், சீன தாக்குதலில் உயிரிழந்த கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு மகாவீர் சக்ரா விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார்.

    இதையும் படியுங்கள்.. மறைந்த சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் படத்திற்கு டிஜிபி சைலேந்திர பாபு மரியாதை

    வங்காளதேசமும் இந்தியாவும் அடுத்த மாதம், மைத்ரி திவாஸ் (நட்பு தினம்) மற்றும் வங்காளதேசத்தின் வெற்றி நாள் என இரண்டு முக்கிய நிகழ்வுகளை நடத்த உள்ளன.
    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வங்காளதேச பிரதமர் அப்துல் ஹமீதின் அழைப்பின் பேரில் டிசம்பர் மாதம் 16 மற்றும் 17-ம் தேதிகளில் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

    கிழக்கு பாகிஸ்தானில் 1971-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் துருப்புக்களால் நடத்தப்பட்ட திடீர் ஒடுக்குமுறைக்குப் பிறகு , வங்காளதேசத்தின் விடுதலைப் போர் தொடங்கி டிசம்பர் 16-ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த நாளை வங்காளதேசம் வெற்றி தினமாக கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முதல் முறையாக வங்காளதேசத்திற்கு பயணம் செய்கிறார்.

    வங்காளதேசமும் இந்தியாவும் அடுத்த மாதம், இரண்டு மெகா நிகழ்வுகளை - மைத்ரி திவாஸ் (நட்பு தினம்) மற்றும் வங்காளதேசத்தின் வெற்றி நாள் - முறையே டிசம்பர் 6 மற்றும் டிசம்பர் 16 ஆகிய தேதிகளில் நடத்துகின்றன.

    வங்காளதேசமும் இந்தியாவும் இணைந்து டிசம்பர் 6 ஆம் தேதி மைத்ரி திவாஸைக் குறிக்கும் வகையில் லோகோ வடிவமைப்பு போட்டியை நடத்துகின்றன. இதைத்தவிர, பல்வேறு முக்கிய நிகழ்வுகளிலும் ஜனாதிபதி பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்த மாதம் வங்காளதேசம் பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 16 மற்றும் 17-ந்தேதிகளில் நடைபெற உள்ள விழாக்களில் கலந்து கொள்கிறார்.
    புதுடெல்லி:

    பாகிஸ்தானுடன் வங்காள தேசம் நடத்திய போரின் 50-வது வெற்றி தினம், நாடு உதயமான 50-வது ஆண்டு கொண்டாட்டம் ஆகியவை டாக்கா நகரில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

    இதில் பங்கேற்க வரும்படி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வங்காளதேசம் நாட்டில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 16 அல்லது 17-ந்தேதியில் இந்த விழா நடைபெற இருக்கிறது.

    பிரதமர் மோடி


    அழைப்பை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வங்காளதேசம் சென்று இந்த விழாக்களில் கலந்து கொள்கிறார். வங்கதேச தந்தை முஜிபூர் ரகுமானின் 100-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி சென்று வந்தார்.

    அப்போது இரு நாட்டு தரப்பிலும் பல்வேறு வி‌ஷயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தன. அதன் தொடர்ச்சியாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டாக்கா செல்கிறார்.

    அப்போது வர்த்தகம் மற்றும் முதலீடு, கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் தொடர்பாக ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்றன.


    மாநிலங்கள் உருவான நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கர்நாடக, கேரளா உள்ளிட்ட மாநில மக்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    இந்தியா சுதந்திரம் பெற்றபோது, நாட்டின் பல பகுதிகள் மாகாணங்களாக ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தன. பின்னர், 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி அன்று சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் உருவாகின. இதேபோல், வட இந்தியாவில் மத்திய பிரதேசம், அரியானா, பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் ஒருங்கிணைந்த சமஸ்தானத்தில் இருந்து உதயமானது.

    இதனால், நவம்பர் 1-ம் தேதியை மாநிலங்கள் உருவான நாளாக, ஆண்டுதோறும் அந்தந்த மாநில அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த மாநில மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டுவிட்டரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதிவிட்டிருப்பதாவது:-

    மொழிவாரியாக மாநிலங்களாக உருவான நாளன்று ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், அரியானா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், பஞ்சாப், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வசிப்பவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும் வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    மோடி தலைமையிலான புதிய அரசு தனது முதல் பட்ஜெட்டை ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையில் புதிய மந்திரி சபையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுபற்றி மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

    17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர், ஜூன் 17-ம் தேதி தொடங்கி ஜூலை 26ம் தேதி வரை நடைபெறும். கூட்டத் தொடரின் முதல்நாளான ஜூன் 17-ம் தேதி புதிய எம்பிக்கள் பதவியேற்கிறார்கள். ஜூன் 19-ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஜூன் 20-ம் தேதி பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார்.

    ஜூலை 4-ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. ஜூலை 5-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்றதை, அவரது தாயார் தன் வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சி மூலம் கண்டுகளித்தார்.
    அகமதாபாத்:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. 

    ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற கோலாகலமான பதவியேற்பு விழாவில், புதிய அரசு பொறுப்பேற்றது. நாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்து, வாழ்த்து தெரிவித்தார். 

    இந்நிலையில் மோடியின் தாயார் ஹீராபென், குஜராத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சியில் பதவியேற்பு விழாவை கண்டுகளித்தார். தன் மகன் மீண்டும் பிரதமராக பதவியேற்றதை பார்த்து, உற்சாகமாக கைதட்டி மகிழ்ந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது. 
    டெல்லி ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை 30-ம் தேதி மாலை 7 மணிக்கு பதவியேற்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து மத்தியில் ஆட்சியமைக்க வரும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தார். 

    இதையடுத்து, டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை 30-ம் தேதி மாலை 7 மணிக்கு பதவியேற்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகியுள்ளது.

    ஜனாதிபதி மாளிகையில் அன்று நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் புதிய மந்திரிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்புறுதி பிரமாணம் செய்து வைப்பார்.
    மத்தியில் ஆட்சியமைக்க வரும்படி மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து 30-ம் தேதி மோடி பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், இக்கூட்டத்தில் பாராளுமன்ற பாஜக தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

    இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்ததும், பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார். எம்பிக்களின் ஆதரவு கடிதத்தையும் வழங்கினார். அதனை ஏற்று மோடியை ஆட்சியமைக்க வரும்படி ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். 



    இந்த சந்திப்புக்குப் பின் மோடி பேசுகையில், “ஜனாதிபதியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினேன். அதனை ஏற்று புதிய அரசு அமைக்கும்படி என்னை கேட்டுக்கொண்டார். அதுவரை காபந்து பிரதமராக என்னை நியமித்துள்ளார். விரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியலை ஜனாதிபதியிடம் வழங்க உள்ளேன். புதிய அரசு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தும். ” என்றார்.

    ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று வரும் 30-ம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என்றும், பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    பாராளுமன்ற தேர்தலில் வென்றவர்களின் பட்டியலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா இன்று வழங்கினார்.
    புதுடெல்லி:

    ஏழு கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மை இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

    இதையடுத்து, 16வது மக்களவையை கலைக்கும் தீர்மானம் அமைச்சரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மக்களவையை கலைத்து உத்தரவிட்டார்.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வென்ற எம்.பி.க்களின் பட்டியலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா இன்று வழங்கினார்.
    டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் மோடி.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 349 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றது. 

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. அதில் அமைச்சரவை மற்றும் மக்களவை முடிவுக்கு வருவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் மோடி.

    பிரதமர் மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், புதிய அரசு அமையும் வரை பிரதமராக நீடிக்குமாறு மோடியை கேட்டுக் கொண்டார்.
    ×