search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bangaladesh"

    வங்காளதேசமும் இந்தியாவும் அடுத்த மாதம், மைத்ரி திவாஸ் (நட்பு தினம்) மற்றும் வங்காளதேசத்தின் வெற்றி நாள் என இரண்டு முக்கிய நிகழ்வுகளை நடத்த உள்ளன.
    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வங்காளதேச பிரதமர் அப்துல் ஹமீதின் அழைப்பின் பேரில் டிசம்பர் மாதம் 16 மற்றும் 17-ம் தேதிகளில் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

    கிழக்கு பாகிஸ்தானில் 1971-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் துருப்புக்களால் நடத்தப்பட்ட திடீர் ஒடுக்குமுறைக்குப் பிறகு , வங்காளதேசத்தின் விடுதலைப் போர் தொடங்கி டிசம்பர் 16-ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த நாளை வங்காளதேசம் வெற்றி தினமாக கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முதல் முறையாக வங்காளதேசத்திற்கு பயணம் செய்கிறார்.

    வங்காளதேசமும் இந்தியாவும் அடுத்த மாதம், இரண்டு மெகா நிகழ்வுகளை - மைத்ரி திவாஸ் (நட்பு தினம்) மற்றும் வங்காளதேசத்தின் வெற்றி நாள் - முறையே டிசம்பர் 6 மற்றும் டிசம்பர் 16 ஆகிய தேதிகளில் நடத்துகின்றன.

    வங்காளதேசமும் இந்தியாவும் இணைந்து டிசம்பர் 6 ஆம் தேதி மைத்ரி திவாஸைக் குறிக்கும் வகையில் லோகோ வடிவமைப்பு போட்டியை நடத்துகின்றன. இதைத்தவிர, பல்வேறு முக்கிய நிகழ்வுகளிலும் ஜனாதிபதி பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆசிய கோப்பை போட்டியில் கை விரலில் ஏற்பட்ட காயத்தால் நாட்டுக்காக ஒரு கையால் மட்டுமே பேட் செய்து விளையாடிய தமிம் இக்பாலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. #AsiaCup2018 #TamimIqbal
    துபாய் :

    14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் தொடங்கியது.
      
    துபாயில் தொடங்கிய முதல் போட்டியில் இலங்கை, வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இலங்கை அணியின் சுரங்கா லக்மல் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசி பந்தை தமிம் இக்பால் எதிர்கொண்டார். அந்த பந்து அவரது இடது கையை பதம் பார்த்தது. வலியில் துடித்த அவர் (2 ரன்) ரிட்டையர்டு ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார்.

    ஆட்டத்தின் இறுதியில் தமிம் இக்பால் மீண்டும் களமிறங்கினார். கை விரல் காயத்தால் அவதிப்பட்ட அவர், ஒரு கையால் மட்டுமே ஆடினார். கடைசி விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிமுடன் ஜோடி சேர்ந்த தமிம் இக்பால் 32 ரன்கள் சேர்த்தார்.

    நாட்டுக்காக வலியை பொறுத்துக் கொண்டு ஒரு கையால் மட்டும் பேட் பிடித்து விளையாடிய தமிம் இக்பாலுக்கு பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    டாக்டர்கள் குறைந்தது 6 வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதால் ஆசிய கோப்பை தொடரில் இருந்து தமிம் இக்பால் வெளியேறியுள்ளார். #AsiaCup2018 #TamimIqbal
    வங்காளதேசம் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறினார். #AsiaCup2018 #TamimIqbal
    துபாய் :

    14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் தொடங்கியது.
      
    துபாயில் தொடங்கிய முதல் போட்டியில் இலங்கை, வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இலங்கை அணியின் சுரங்கா லக்மல் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசி பந்தை தமிம் இக்பால் எதிர்கொண்டார். அந்த பந்து அவரது இடது கையை பதம் பார்த்தது. வலியில் துடித்த அவர் (2 ரன்) ரிட்டையர்டு ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார்.

    கடைசி விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிமுடன் ஜோடி சேர்ந்த தமிம் இக்பால் 32 ரன்கள் சேர்க்க காரணமானார். ஒரு கையால் மட்டும் பேட் பிடித்து ஆடியது குறிப்பிடத்தக்கது.   

    ஆட்டம் முடிந்ததும் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் குறைந்தது 6 வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதையடுத்து, ஆசிய கோப்பை தொடரில் இருந்து தமிம் இக்பால் வெளியேறினார்.

    முன்னணி வீரரான தமிம் இக்பால் ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது வங்காளதேசம் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. #AsiaCup2018 #TamimIqbal
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது வங்காளதேசம். #AsiaCup2018 #BANvSL
    துபாய் :

    14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நேற்று தொடங்கியது.
      
    துபாயில் தொடங்கிய முதல் போட்டியில் இலங்கை, வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால், லிடன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர்.  

    முதல் ஓவரில் தொடக்க ஆட்டக்காரர்களை வெளியேற்றி வங்காளதேசத்தினருக்கு அதிர்ச்சி அளித்தார் மலிங்கா. முதல் ஓவரின் 5-ம் பந்தில் லிடன் தாஸ், கடைசி பந்தில் சகிப் அல் அசன் ஆகியோரை அவுட்டாக்கினார்.

    லக்மல் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசி பந்து தமிம் இக்பாலின் இடது கையை பதம் பார்த்ததால், வலியில் துடித்த அவர் (2 ரன்) ரிட்டையர்டு ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார்.

    இதையடுத்து ஜோடி சேர்ந்த முஷ்பிகுர் ரஹிம், மொகமது மிதுன் ஆகியோர் 133 ரன்கள் சேர்த்தனர். மிதுன் (63), மகமதுல்லா (1), உசைன் (1), மிராஜ் (15), மோர்தாசா (11), ருபேல் (2), ரஹ்மான் (10) ரன்களில் ஆட்டமிழந்தனர். ரஹீம் 4 சிக்சர்கள், 11 பவுண்டரிகள் அடித்து 144 ரன்களை குவித்து இறுதியில் ஆட்டமிழந்தார்.

    தமிம் இக்பால் (2) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் வங்காளதேச அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்கள் எடுத்தது.

    இலங்கை அணி சார்பில் மலிங்கா 4 விக்கெட்டும், தனஞ்செயா டி சில்வா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.



    இதைத்தொடர்ந்து, 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக உபுல் தரங்காவும், குசால் மெண்டிசும் இறங்கினர்.

    வங்காளதேச அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இலங்கை அணி வீரர்களை விரைவில் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தனர்.

    உபுல் தரங்கா 27 ரன்னிலும், குசால் பெராரா 11 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 16 ரன்னிலும் அவுட்டாகினர். மற்றவர்கள் ஒற்றை இலக்க எண்ணில் அவுட்டாகினர். 19வது ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்து இலங்கை அணி தத்தளித்தது.

    இறுதியில், கடைநிலை வீரர்கள் ஓரளவு போராடினர். தில்ருவான் பெராரா 29 ரன்னிலும், சுரங்கா லக்மல் 20 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், இலங்கை அணி 35.2 ஓவரில் 124 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனால் வங்காளதேசம் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    வங்காளதேசம் அணி சார்பில் மோர்டசா, முஸ்டாபிஜுர் ரஹ்மான், மெஹிதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். #AsiaCup2018 #BANvsSL
    ×