என் மலர்
நீங்கள் தேடியது "Doctors Team"
- வங்காளதேசத்துக்கு தீக்காய சிறப்பு டாக்டர்கள், நர்சுக்கள் குழுவை அனுப்புவதாக இந்தியா அறிவித்துள்ளது.
- நோயாளிகளின் நிலையை மதிப்பீடு செய்து தேவைப்பட்டால் இந்தியாவில் சிறப்பு சிகிச்சைக்கான பரிந்துரையை செய்வார்கள்.
வங்காளதேச தலைநகர் டாக்கா அருகே உத்தரா பகுதியில் பள்ளி மீது ராணுவத்தின் போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் 31 பேர் பலியானார்கள். 170-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விமான விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வங்காளதேசத்துக்கு தீக்காய சிறப்பு டாக்டர்கள், நர்சுக்கள் குழுவை அனுப்புவதாக இந்தியா அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, "தேவையான மருத்துவ உதவியுடன் தீக்காய சிறப்பு டாக்டர்கள் மற்றும் நர்சுக்கள் குழு விரைவில் டாக்காவிற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உள்ளது.
நோயாளிகளின் நிலையை மதிப்பீடு செய்து தேவைப்பட்டால் இந்தியாவில் சிறப்பு சிகிச்சைக்கான பரிந்துரையை செய்வார்கள்.
அவர்களின் ஆரம்ப மதிப்பீடு மற்றும் சிகிச்சையைப் பொறுத்து கூடுதல் மருத்துவக் குழுக்களும் அனுப்பப்படலாம்" என்று தெரிவித்துள்ளது.
- மழை காலத்தில் பரவக்கூடிய டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர்கள் அடங்கிய குழுவினர் மாவட்டம் தோறும் தனித்தனியாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
- 5 பேர் கொண்ட மருத்துவர் குழு தென் மாவட்டங்களில் ஆய்வு செய்வதற்காக இன்று நெல்லைக்கு வந்துள்ளனர்.
நெல்லை:
மழை காலத்தில் பரவக்கூடிய டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர்கள் அடங்கிய குழுவினர் மாவட்டம் தோறும் தனித்தனியாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த குழுவினர் அந்தந்த மாவட்டங்களில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி 5 பேர் கொண்ட மருத்துவர் குழு தென் மாவட்டங்களில் ஆய்வு செய்வதற்காக இன்று நெல்லைக்கு வந்துள்ளனர். இந்தக் குழுவினர் நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்த குழுவில் மருத்துவர்கள் வடிவேலன், சேகர், நிர்மல்சன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு தனித்தனியாக பிரிந்து மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறது.
தென்மாவட்டங்களில் மழை காலங்களில் அதிக காய்ச்சல் ஏற்படும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து இந்த குழு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு பகுதியில் ஆய்வு மேற் கொண்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். அதனை மையமாகக் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என நெல்லை மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணையில் கலெக்டர் டாக்டர். கே.எஸ். பழனிசாமி, தலைமையில் கால்நடை பரமாரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது,
அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதனால் அமராவதி அணைக்கு வரப்பெறும் நீரின் அளவு வினாடிக்கு 16,233 கன அடியாக உள்ளது. எனவே அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 15,400 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் உடுமலை வட்டத்தில் ஆற்றின் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள கல்லாபுரம், எலையமுத்தூர் மற்றும் கொழுமம் ஆற்றோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்காக கல்லாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி , ராஜேஸ்வரி திருமண மண்டபம் கொழுமம் மற்றும் கொழுமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இம்முகாம் மூலம் பொது மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, மின்சாரம், கழிப்பறை மற்றும் மருத்துவம் போன்ற சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வெள்ள அபாயம் உள்ள தாழ்வான பகுதிகளில் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கரையோர பகுதியில் உள்ள பொது மக்களிடம் வெள்ள அபாய எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறையினரால் பொது மக்களிடம் வெள்ள அபாய எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் மண்டல துணை வட்டாட்சியர் தலைமையில் 24 மணி நேரமும் தொடர்கண்காணிப்பு பணியில் களப்பணியாளர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் திருப்பூர் மாவட்டத்தின் வெள்ள அபாய பகுதிகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும், தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆணையின் படி, கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 மாவட்டங்களுக்கு கால்நடைகளுக்கு தேவையான தீவனம் மற்றும் மருந்துகள் மற்றும் கால்நடைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள இணை இயக்குநர் தலைமையில் 25 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு விரைவில் அக்குழுவினர் அங்கு சென்று மருத்துவபணியினை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அசோகன், அமராவதி அணையின் செயற்பொறியாளர் தர்மலிங்கம், உதவி பொறியாளர் சரவணன், குடிமைப் பொருள் வட்டாட்சியர் தயானந்தன், மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






