என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veer chakra award"

    • பைட்டர் பைலட்கள் உட்பட ஒன்பது விமானப்படை அதிகாரிகளுக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பாகிஸ்தானின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக விமானப்படை தளபதி அமர்பிரீத் சிங் தெரிவித்தார்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற  பைட்டர் பைலட்கள் உட்பட 36 விமானப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.  

    ஆபரேஷன் சிந்தூரில் சிறப்பாக பணியாற்றிய 9 இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு நாட்டின் மிக உயர்ந்த மூன்றாவது வீரதீர பதக்கமான 'வீர் சக்ரா' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    வீர் சக்ரா விருது  பெறும் அதிகாரிகளில், குரூப் கேப்டன் ரஞ்சித் சிங் சித்து, குரூப் கேப்டன் மணீஷ் அரோரா, குரூப் கேப்டன் அனிமேஷ் பட்னி, குரூப் கேப்டன் குணால் கல்ரா, விங் கமாண்டர் ஜாய் சந்திரா, ஸ்க்வாட்ரான் லீடர் சர்தக் குமார், ஸ்க்வாட்ரான் லீடர் சித்தாந்த் சிங், ஸ்க்வாட்ரான் லீடர் ரிஸ்வான் மாலிக் மற்றும் ஃப்ளைட் லெப்டினன்ட் அர்ஷ்வீர் சிங் தாக்கூர் ஆகியோர் அடங்குவர். ஒருவருக்கு கீர்த்தி சக்ரா விருதும், மேலும் 26 பேருக்கு வாயு சேனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானின் பயங்கரவாத தளங்களை குறிவைத்த ஆபரேஷன் சிந்தூரில் இவர்களின் பங்களிப்புக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    தாக்குதலின்போது பாகிஸ்தானின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக விமானப்படை தளபதி அமர்பிரீத் சிங் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டு சீனாவுடன் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் வீர மரணமடைந்த 20க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு இன்று விருதுகள் வழங்கப்பட்டது.
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இரண்டாவது நாளாக பாதுகாப்பு துறை சார்ந்த விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட தலைவர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் வீரதீர செயல்களில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விமானப்படை குரூப் கேப்டன் கமாண்டர் அபிநந்தனுக்கு நாட்டின் மூன்றாவது உயரிய விருதான வீர் சக்ரா விருது நேற்று வழங்கப்பட்டது.

    வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனி

    இந்நிலையில், கடந்த ஆண்டு சீனாவுடன் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் உயிரிழந்த 20க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு இன்று விருதுகள் வழங்கப்பட்டது. வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

    இந்த விழாவில், சீன தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. பழனி சார்பில் அவரது மனைவி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து விருதை பெற்றுக் கொண்டார்.

    இதேபோல், சீன தாக்குதலில் உயிரிழந்த கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு மகாவீர் சக்ரா விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார்.

    இதையும் படியுங்கள்.. மறைந்த சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் படத்திற்கு டிஜிபி சைலேந்திர பாபு மரியாதை

    ×