search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RamNath Kovind"

    • ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • சிறப்பு குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் சேர்த்து தேர்தல் நடத்துவது பற்றி ஆய்வு செய்ய மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழுவுக்கு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக 8 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதில் மத்திய மந்திரி அமித் அஷா, காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், என்.கே.சிங், சுபாஷ் சி. காஷ்யப், ஹரிஷ் சால்வே, சஞ்சய் கோதாரி ஆகியோர் அடங்கிய குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தக் குழுவில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அறிவித்திருந்தார்.

    பாராளுமன்ற தேர்தல், மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து இந்த சிறப்புக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் சிறப்பு குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நாட்டின் கூட்டாட்சி முறைக்கு அச்சுறுத்தல் என இந்தியா கூட்டணி கடுமையாக விமர்சனம் செய்திருந்தது.

    • ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு 8 பேர் கொண்ட சிறப்புக்குழு ஒன்றை அமைத்துள்ளது.
    • குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு 8 பேர் கொண்ட சிறப்புக்குழு ஒன்றை அமைத்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தல், மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா? என்பது குறித்து இந்த சிறப்புக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இந்த குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் செலவுகளை கணிசமாக குறைக்க முடியும் என்று கருதப்பட்டது.
    • இந்திய அரசியலமைப்பு மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

    புதுடெல்லி:

    நாட்டில் உள்ள முக்கிய துறைகள் ஒரே நிர்வாக அமைப்பின்படி செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு தீவிரமாக உள்ளது.

    இதற்காக ஏற்கனவே பல்வேறு துறைகளில் மத்திய அரசு ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்னும் முறையை மத்திய அரசு கொண்டுவர இருப்பதாக கடந்த ஆண்டு முதல் அடிக்கடி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. பெரும்பாலான மாநில கட்சிகள் மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்தியாவில் அரசியலமைப்பு சட்டப்படி பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 1967-ம் ஆண்டு வரை பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே காலகட்டத்தில்தான் தேர்தல்கள் நடத்தப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் சில மாநிலங்களில் ஆட்சி கலைப்பு மற்றும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி கவிழ்ப்பு போன்றவை காரணமாக சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால் பாராளுமன்றத்துக்கு ஒரு தடவையும், மாநில சட்டசபைகளுக்கும் அந்தந்த மாநிலங்களின் சட்டசபை காலம் முடிவடைவதை பொருத்தும் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தனித்தனி தேர்தல் நடத்தும் போது அதிக செலவு ஏற்படுவதாக கூறப்பட்டது. நிர்வாக ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நாடு முழுவதும் ஒரே தேர்தல் முறையை அமல்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்து இருக்கின்றன. இதேபோல மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்கும்போதும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகி உள்ளது.

    பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் இந்த செலவுகளை கணிசமாக குறைக்க முடியும் என்று கருதப்பட்டது. இதையடுத்து இரு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது பற்றி மத்திய அரசு கடந்த சில மாதங்களாக ஆலோசித்து வந்தது.

    இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) மத்திய அரசு இந்த விவகாரத்தில் அதிரடியாக ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது. அதன்படி 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் சேர்த்து தேர்தல் நடத்துவது பற்றி ஆய்வு செய்ய குழு அமைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

    இந்த குழுவுக்கு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தலைமையிலான குழுவினர் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி விரிவான ஆய்வு மேற்கொள்வார்கள்.

    இந்த ஆய்வுகளில் தெரியவரும் கருத்துக்களை தொகுத்து மத்திய அரசிடம் அறிக்கையாக தாக்கல் செய்வார்கள். அதன் அடிப்படையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி இருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் இன்று 2-வது நாளாக கூடி முக்கிய முடிவுகளை அறிவிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    ஆனால் அவர்களது சிந்தனையை திசை திருப்பும் வகையில் மத்திய அரசின் இன்றைய நடவடிக்கை அமைந்துள்ளது. இதற்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக கம்யூனிஸ்டு கட்சியினர் ஆவேசமாக கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

    இந்திய அரசியலமைப்பு மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தேர்தல் நடத்துவதில் கடும் குளறுபடிகள் ஏற்படும் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து உள்ளன.

    குறிப்பாக ஒரே நேரத்தில் பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவதாக இருந்தால், இந்திய அரசியலமைப்பு சட்டங்களில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பது முக்கியமாகும். இதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி உள்ளன.

    ஆனால் வருகிற 18-ந்தேதி பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நடக்கும்போது இதற்கான தீர்மானம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, இடது சாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.

    • மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் நினைவு பரிசு கொடுத்து வரவேற்றார்.
    • சுற்றுலா பயணிகளை ராம்நாத் கோவிந்த் அருகில் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    மாமல்லபுரம்:

    முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் பாறை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தார். முன்னதாக கடற்கரை கோயில் நுழைவுவாயில் பகுதியில் மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், அவருக்கு நினைவு பரிசு கொடுத்து வரவேற்றார்.

    சுற்றுலா பயணிகள் யாரையும் தடுத்து நிறுத்தாமல் ராம்நாத் கோவிந்த், மக்களோடு மக்களாக புராதன சின்னங்களை சுற்றி பார்த்தார்.

    அவரை அடையாளம் கண்ட வடமாநில சுற்றுலா பயணிகள் சிலர் அவருடன் நின்று புகைப்படம் எடுக்க விரும்பினார்கள். அவர்களை அருகில் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், வருவாய்த்துறை மற்றும் தொல்லியல்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
    • ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்மு நாளை பதவியேற்கிறார்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவர் இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

    ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்மு நாளை பதவியேற்கிறார்.

    • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.
    • திரவுபதி முர்மு வரும் திங்கட்கிழமை நாட்டின் 15ஆவது புதிய குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொள்கிறார்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது.

    இதையடுத்து, பிரதமர் மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நேற்று தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா பாராளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

    இந்த விழாவில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்களும் இதில் பங்கேற்றனர்.

    திரவுபதி முர்மு வரும் திங்கட்கிழமை நாட்டின் 15ஆவது புதிய குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொள்கிறார்.

    • மகாராஷ்டிர முதல் மந்திரி, துணை முதல் மந்திரி ஆகியோர் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தனர்.
    • ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளனர்.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று சந்தித்துப் பேசினர்.

    தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது மகாராஷ்டிராவின் தற்போதைய நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியிருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

    மேலும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரையும் சந்தித்தனர்.

    ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளனர்.

    • கட்டிட இடிபாடுகளில் இருந்து ஒரு பெண்ணை உயிருடன் மீட்டபோது அங்கிருந்தோர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
    • குர்லாவில் கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் இடிபாடுகளில் இருந்து 2 புறாக்கள் உயிருடன் மீட்கப்பட்டன.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் குர்லாவின் கிழக்கு பகுதியில் உள்ள நாயக் நகரில் 4 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடம் நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது.

    தகவலறிந்து தீயணைப்புப் படையினரும், போலீசாரும் சம்பவ இடம் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 20க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர்.

    இதற்கிடையே, குர்லா கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    குர்லாவில் கட்டிட இடிபாடுகளில் இருந்து ஒரு பெண்ணை உயிருடன் மீட்டபோது அங்கிருந்தோர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மேலும், 2 புறாக்களும் உயிருடன் மீட்கப்பட்டன.

    இந்நிலையில், மும்பை கட்டிட விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் நடைபெறும் ஆளுநர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.
    புதுடெல்லி:

    மாநில ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களுக்கான மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 
    கடந்த 2019-ம் ஆண்டு 50-வது மாநாடு நடந்தது. அதன்பின், கொரோனா பரவலால் கடந்த ஆண்டு இந்த மாநாடு நடக்கவில்லை. 
    இந்தியாவில் கடந்த சில மாதமாக கொரோனா தொற்று குறைந்து வருவதால் இந்த மாநாடு இந்த ஆண்டு நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுக்கான 51-வது மாநாடு டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நாளை நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குகிறார். அவரது தலைமையில் நடைபெறும் 4-வது மாநாடு இது.

    தலைநகர் டெல்லியில் நடந்த பத்ம விருது வழங்கும் விழாவில் 16 பேர் மரணத்திற்குப் பின் விருது பெற்றவர்கள்.
    புதுடெல்லி:

    கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

    இதற்கிடையே, 2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 119 பேருக்கு வழங்கப்பட்டது. இந்தப் பட்டியலில் 7 பத்ம விபூஷன், 10 பத்ம பூஷன் மற்றும் 102 பத்மஸ்ரீ விருதுகள் உள்ளன. 

    இந்நிலையில், டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கினார். 
    விருது பெற்றவர்களில் கங்கனா ரணாவத், அட்னான் சாமி, ஏக்தா கபூர், கரண் ஜோஹர் மற்றும் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோரும் அடங்குவர்.

    பாராளுமன்ற தேர்தலில் வென்றவர்களின் பட்டியலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா இன்று வழங்கினார்.
    புதுடெல்லி:

    ஏழு கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மை இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

    இதையடுத்து, 16வது மக்களவையை கலைக்கும் தீர்மானம் அமைச்சரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மக்களவையை கலைத்து உத்தரவிட்டார்.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வென்ற எம்.பி.க்களின் பட்டியலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா இன்று வழங்கினார்.
    உச்ச நீதிமன்றத்திற்கு இன்று 4 புதிய நீதிபதிகளை ஜனாதிபதி நியமித்துள்ளார். இதன்மூலம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 31 நீதிபதிகள் பணியாற்றவேண்டும். இதில் 4 நீதிபதி இடங்கள் காலியாக இருந்தன. இதற்கு தகுதியான நீதிபதிகளை, தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் அமைப்பு தேர்வு செய்து பரிந்துரை செய்தது.

    நீதிபதிகள் அனிருத்தா போஸ், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கும்படி, மத்திய அரசுக்கு கொலிஜியம் முதலில் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது. அந்த நீதிபதிகளுக்கு போதிய சீனியாரிட்டி இல்லை என்று கூறி பரிந்துரையை மீண்டும் கொலிஜியத்துக்கே அனுப்பி வைத்தது. ஆனால், அவர்கள் பெயர்களையே மீண்டும் கொலிஜியம் பரிந்துரை செய்தது.



    இதேபோல், நீதிபதிகள் பி.ஆர்.கவாய் (பூஷண் ராமகிருஷ்ண கவாய்), சூரியகாந்த் ஆகியோரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும்படி பரிந்துரைத்தது.

    இந்த பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். நீதிபதிகள் அனிருத்தா போஸ், போபண்ணா, கவாய், சூரியகாந்த் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம், உச்ச நீதிமன்றத்தில் உள்ள 31 நீதிபதிகள் பணியிடங்களும் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது. 
    ×